Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூளைய மென்சவ்வு அழற்சி (Meningitis)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூளைக்கும் முண்ணானுக்கும் தெடர்பில்லாமல் எழுதுபவர்களுக்கும் இப்படி நோய் வர சாத்தியம் கூட

மூளைய மென்சவ்வு அழற்சி (Meningitis)

மூளைய மென்சவ்வு அழற்சி என்பது மூளை மற்றும் முண்ணாணினை போர்த்தியுள்ள மென்சவ்வுகளில் பற்றீரியா, வைரஸ், மற்றும் பங்கஸ் கிருமிகளின் தொற்று காரணமாக உருவாகும் அழற்சி நோயாகும். இது 90% பற்றீரியாக்களாலேயே ஏற்படுகின்றது. அத்துடன் கிருமித்தொற்றல்லாத மூளைய மென்சவ்வழற்சியும் காணப்படுகிறது.

அநேகமானோரில் மூளைய மென்சவ்வு அழற்சி உருவாகும் போது குருதியிலும் கிருமித்தொற்று உருவாகிறது.(Septicaemia). முக்கியமாக மெனிங்கோகொக்கஸ் எனும் பற்றீரியா தொற்றின் போது இந்நிலை ஏற்படுகின்றது.. பற்றீரிய கிருமிகளால் உருவாகும் மூளையமென்சவ்வு அழற்சி மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. ஆயின் இது மிகவும் மோசமான நோயென்பதால் பலராலும் அறியப்பட்டுள்ளது. முக்கிய பற்றீரியா நோய்க்கிருமிகளாக மெனிங்கோ கொக்கஸ்(Neisseria meningitidis), நியூமோ கொக்கஸ்(Streptococcus pneumoniae) என்பன காணப்படுகின்றன. ஏனைய பற்றீரியாக்கள் அரிதாகவே காணப்படுகின்றன. மற்றுமொரு மிக முக்கிய காரணியாக இலங்கை, இந்தியா போன்ற வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் காசநோய் பற்றீரியா காணப்படுகிறது

கிருமித்தொற்றல்லாத காரணிகளாக இலியுகேமியா, லிம்போமா போன்ற புற்றுநோய்கலன்கள், மூளை, முண்ணான் பாய்பொருளினுள் இடப்படும் மருந்துகள், சாகோடோசிஸ் எனும் நோய், .S.L.E எனும் நோய் என்பன அமைகின்றன.

வைரஸ் கிருமிகளால் உருவாகும் மூளையமென்சவ்வு அழற்சி பற்றீரியா கிருமிகளை விட பொதுவாக காணப்படுகிறது. இது பற்றீரியா நோய்த் தொற்றுகளை விட தீவிரம் குறைந்ததாகும். அநேகமானோர் பூரண குணமடைகின்றனர். வேறு வகை கிருமிகள் மிக அரிதாகவே மூளையமென்சவ்வு அழற்சியை ஏற்படுத்துகின்றன. நியூமோகொக்கஸ் பற்றீரியா மிக அரிதாக மூளைய மென்சவ்வு அழற்சியை உருவாக்கும் காரணி ஆகும். இதுவும் பலரின் நாசித்தொகுதியில் காவிகளாக காணப்படுகிறது. இது நிர்ப்பீடனத் தொகுதி பலவீனமடையும் (உதாரணம் எச்.ஐ.வி நோய்நிலை) போதே மூளையமென்சவ்வு அழற்சி போன்ற தீவிர கிருமித்தொற்றுகளை உருவாக்குகிறது. இது அநேகமாக 45 வயதிலும் கூடியவர்களிலும் குழந்தைகளிலும் காணப்படுகிறது. வேறுசில அரிதான வகை பற்றீரியாக்களாக ஈமோபிலஸ் இன்புளுவன்சா(Haemophillus influenzae), ஈகோலை(Escherichia coli), லிஸ்டீரியா(Listeria), காசநோய் பற்றீரியா(Tuberculosis) போன்றவை உள்ளன. இவ்வகை பற்றீரியா கிருமிகளால் உருவாகும் மூளைய மென்சவ்வு அழற்சி வெவ்வேறு பகுதிகளில் உருவாகும் கிருமித்தொற்றுக்கள் சிக்கல் நிலைக்குள்ளாகும் போது பல்வேறு காரணிகளால் உருவாகிறது. பல்வேறு வகையான வைரஸ் கிருமிகளால் மூளைய மென்சவ்வு அழற்சி உருவாகிறது. உ-ம். கூகைக்கட்டு(mumps), சின்னமுத்து (measles), பொக்களிப்பான்(chickenpox), ஹேர்பீஸ்

மேலும் மூளைய மென்சவ்வுப் பாதிப்பு அல்லது மூளை அறைகளினுள் சத்திரசிகிச்சை மூலம் குழாய்கள் இணைக்கப்பட்ட நோயாளிகள்., முண்ணான் தொடர்பான உட்புகும் சிகிச்சை முறைகள்(உ-ம் மயக்க ஊசிகள் வழங்கல்), இதய சுவர்களில் கிருமித்தொற்று, நீரிழிவு நோய், மதுபானத்துக்கு அடிமையாதல், மற்றும் ஈரல் நோய்கள், ஊசி மூலமான போதைப்பொருள் பாவனை, சிறுநீரக பாதிப்புகள், புற்று நோய்கள், தைரொயிட் ஓமோன் குறைபாடு, தலசீமியா நோய், மண்ணீரல் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்படல், நெருக்கமான வாழ்விடங்கள், இராணுவ வதிவிடங்கள் மற்றும் பாடசாலைகள் போன்றன இந்நோய்நிலையை ஏற்படுத்தவல்லன.

இந்நோய் எவ்வயதினரையும் பாதிக்கக்கூடும் ஆயின் ஐந்து வயதிலும் குறைந்த சிறுவர்களிலும், பருவ வயதினரிடையேயும் அதிகமாகக் காணப்படுகிறது.

இந்நோயின் அறிகுறிகள் தனியாகவோ சேர்ந்தோ காணப்படலாம்.. இவை யாவும் காணப்பட வேண்டிய அவசியமில்லை. உ-ம். தனித்துவமான குணங்குறிகளான கழுத்து பின்பகுதி இறுக்கமடைந்து வளைக்கும் போது வலி ஏற்படல்(Brudzinski`s sign) மற்றும் தோலில் தழும்புகள் தோன்றுதல் போன்றவை ஏற்படாது விடக்கூடும். மூளைய மென்சவ்வு அழற்சி ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் ஏற்படின் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுதல் வேண்டும்.

பொதுவாக ஆரம்ப நிலைகளில் உடல் சோர்வாகக் காணப்படும். தனித்துவமான அறிகுறிகள் தோன்ற முன் தோலில் தழும்புகள் தோன்றுவது பொதுவானது. ஆனால் இது எல்லோரிலும் ஏற்படுவதில்லை. மெனிங்கோகொக்கஸ் பற்றீரிய நோய்த் தொற்றின் போதே எடுத்துக்காட்டான/ குறிப்பிட்ட விதமான தழும்புகள் தோன்றும். இத்தழும்புகள் சிவப்பு/ அல்லது நாவல் நிறமாக காணப்படும். முதலில் சிறிய புள்ளிகளாக உருவாகி, கூட்டம் கூட்டமாக உடலின் எப் பகுதியிலும் காணப்படும். இவை பின் பரந்து சென்று பெரிய இரத்தக்கசிவு போன்ற தழும்புகளாக உருவாகும். முதலில் ஒரு சில உருவாகி பின்னர் பல உடல் முழுவதும் உருவாகலாம்.

ஏனைய அறிகுறிகளாக, நடுக்கத்துடன் கூடிய காய்ச்சல், கை கால்கள் குளிர்வடைந்து காணப்படுதல். கழுத்துத் தசைகள் இறுக்கமடைதல் – அதாவது கழுத்தினை முன்னே வளைக்க முடியாமையுடன் நோ, தீவிர தலைவலி விரைவான சுவாசம், தசைகள், மூட்டுகளில் வலி, தோல் வெளிறலாம் அல்லது நீல நிறமடையலாம்.வெளிச்சங்களை விரும்பாமை(Photophobia), மயக்கம், மனக் குழப்பம், தொடர்ச்சியான வாந்தி, சில வேளைகளில் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்றன காணப்படலாம்.. சில வேளைகளில் அறிகுறிகள் மிக மெதுவாக நாட்கணக்கிலேயே உருவாகும். ஆரம்பத்தில் அறிகுறிகள் தீவிரமற்ற நோய்க்குரியதாக காட்சியளிக்கக்கூடும். உதாரணமாக தலைவலி, வாந்தி போன்ற பொதுவான வைரஸ் கிருமித்தொற்றுக்களுக்குரிய அறிகுறிகள் தென்படலாம்.

எனவே இவை தீவிரமடைந்து செல்வது அவதானிக்கப்படின் மூளைய மென்சவ்வழற்சி போன்ற தீவிரமான தொற்றுக்கள் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். நாட்பட்ட அதாவது ஒருவாரத்துக்கு மேற்பட்டு நோயறிகுறிகள் காணப்படும் போது அது வைரஸ் தவிர்ந்த காசரோக பக்ரீரியா, சிபிலிஸ், மற்றும் பங்கசுக்களால் ஏற்பட்டதாக இருக்கக்கூடுமென சந்தேகிக்கப்படும்.

ஒருவயதுக்குட்பட்ட குழந்தைகளிலும், வயது முதிர்ந்தவற்களிலும் மெனிஞ்சையிற்றிசுக்குரிய தனித்துவமான நோயறிகுறிகள் தோன்றுவதில்லை

ஆரம்பத்தில் சுவாசப்பாதைக் கிருமித்தொற்றை ஒத்த குணங்குறிகள் ஏற்படுகின்றன. ஆரம்பத்தில் தோன்றும் எச்சரிக்கைக் குணங்குறிகளாக கால்களில் வலி, கை, கால், பாதங்கள் குளிர்வடைாதல்,தலைவலி, கழுத்து நோ,வலிப்பு, தூக்கம் வருவது போன்ற உணர்வு, அமைதியின்மை என தொடர்ந்து கோமாநிலை வரை செல்லலாம்

சிறுவர்களில் 30-40% ஆனவர்களிலும், பெரியவர்களில் 20-30% ஆனவர்களிலும் ஏற்படுகிறது சிறுகுழந்தைகள் மற்றும் சிறுவர்களில் ஆரம்ப அறிகுறிகளாக கைகள் மற்றும் பாதங்கள் குளிர்வடைதல், கால்களில் வலி, தோலில் நிறமாற்றம், ஆகாரங்கள் உள்ளெடுத்தல் குறைவடைதல்,வாந்தி, தாகம் அதிகரித்தல், வயிற்றோட்டம், சுவாசிப்பதில் சிரமம், அதிகரித்த அழுகை போன்றன காணப்படுகின்றன.மேலும் தசைகள் அதிகளவு தளர்வடைந்திருத்தல், தலையின் உச்சி மென்சவ்வு புடைத்திருத்தல், வெளிச்சத்தை விரும்பாமை, கழுத்து வலி/இறுக்கமடைதல், இரத்தக்கசிவுத் தழும்புகள் இவற்றைத் தொடர்ந்து வலிப்பு, கோமா ஏற்படுகின்றது.

இந்நோயினை கண்டறிவதற்காக பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.மூளையமுண்ணாண்பாய்பொருள் மாதிரிப் பரிசோதனை - அநேக சந்தர்ப்பங்களில் இப்பரிசோதனையானது உடனடியாக மூளைய மென்சவ்வு அழற்சியினை நோய் நிர்ணயம் செய்வதற்காக அவசர சிகிச்சை முறையாக மேற்கொள்ளப்படுகிறது. குருதிப் பரிசோதனை- ஆய்வுகூட கிருமிவளர்ப்புப் பரிசோதனை, நுண்ணுயிர் கொல்லிப்பரிசோதனை, குருதி குளுக்கோஸ் மட்டம், சிறுநீரக செயற்பாடு பற்றிய சோதனை - குருதி யூரியா, கிரியற்றினின் மற்றும் அயன்கள்,குருதி உறைதல் தொடர்பான பரிசோதனை,நெஞ்சுப் பகுதிக்குரிய X கதிர்ப் படம்,சிறுநீர் சோதனை,CT ஸ்கான் பரிசோதனை மற்றும் பிறபொருளெதிரிப் பரிசோதனை,சிபிலிசு நோய்க்குரிய சோதனையும் செய்யப்படுகின்றது.

தொற்றுக்கான காரணிகளைப் பொறுத்தே சிகிச்சை அமைகின்றது. பற்றீரிய தொற்றினால் ஏற்படுமாயின் நுண்ணுயிர்கொல்லி (Antibiotic) உடனடியாக வழங்கப்படுகிறது.மேலும் வலிப்பைத் தடுக்கும் மருந்துகளும், மூளையில் ஏற்படும் அமுக்கத்தை தடுக்கவும், காய்ச்சல், வலிகளைத் தடுப்பதற்கும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இந்நோய் நிலை சடுதியாக பாதக விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதென்பதால் அவசரசிகிச்சை அளிக்கப்படுகின்றது.மூளை முண்ணான் பாய் பொருள் பிரிசோதனையின் மூலம் எவ்வகை பற்றீரியா என அடையாளம் காணப்பட்டு அதற்கேற்ப நுண்ணுயிர் கொல்லிகள் வழங்கப்படும்.

வைரஸ் என அடையாளம் காணப்படில் நுண்ருயிர் கொல்லி வழங்கப்படமாட்டாது..

இந்நோயின் நாட்பட்ட சிக்கல்களாக கேள்திறன் குறைவடைதல்,வலிப்புக்கள், பாரிசவாதம், பார்வைக்கோளாறுகள், உடற்சமநிலை பாதிப்பு போன்ற விளைவுகள் ஏற்படலாம்.சிகிச்சை அளிக்கத்தவறின் இறக்கவும் நேரிடலாம். மூளைய மென்சவ்வு அழற்சியினால் ஏற்படும் இறப்பு குறிப்பிடத்தக்களவு உயர்வானதாகும்.. வைரஸ் கிருமியால் ஏற்படும் மூளையமென்சவ்வு அழற்சியில் அநேகமானோர் ஏறத்தாள முற்று முழுதான குணமடைவர். மிகச் சிலரில் சில மூளைப்பாதிப்புகள் ஏற்படலாம்.

சிறுகுழந்தைகளுக்கான தடுப்பூசிகளை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்வதன் மூலம் இந் நோயினைத் தடை செல்யலாம். மேலும் நோயாளியுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதன் மூலமும்,நீர்ப்பீடனம் குறைவானவர்கள் தடுப்பூசி பெறுவதன் மூலமும் இதனைத் தடை செய்ய முடியும்.

www.munainews.com

Edited by உடையார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.