Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பக்கச் சார்பின்றி செயற்படுவது அவசியம்: சிங்கள அரசு

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையும் அதன் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையும் உலகின் அனைத்து நாடுகளுக்கும் சரி சமமான முறையில் செயற்பட வேண்டும். அதனைவிடுத்து சில நாடுகளுக்கு ஒரு வகையிலும் வேறு சில நாடுகளுக்கு மற்றுமொரு வகையிலும் நடந்து கொள்ளக் கூடாது. மனித உரிமை ஆணையாளர் நாயகம் என்பவர் அனைத்து நாடுகளுக்கும் ஆணையாளராவார். அதனடிப்படையில் அவர் நடந்துகொள்ளவேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையை நேற்று சந்தித்து பேச்சு நடத்திய அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினர் மேற்கண்டவாறான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இலங்கை போன்ற நாடுகள் விடயத்தில் வித்தியாசமான முறையில் நடந்து கொள்வதாக தெரிவித்த இலங்கைத் தூதுக் குழுவினர் அது தவறான விடயமென்றும் நவநீதம்பிள்ளை அனைத்து நாடுகளுக்கும் சமமான முறையில் நடந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுள்ளனர்.

அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட இலங்கைத் தூதுக் குழுவினர் நவநீதம்பிள்ளை தலைமையிலான குழுவினரை நேற்று இலங்கை நேரப்படி மூன்றரை மணியளவில் ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

முக்கியமாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசனைக் குழு தயாரித்த தருஷ்மன் அறிக்கை தனக்கு கிடைத்துள்ளதாக இந்தச் சந்திப்பின்போது ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இலங்கைத் தூதுக் குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் நிபுணர் குழுவின் அறிக்கையை நவநீதம்பிள்ளை பெற்றுக் கொண்டுள்ளதையடுத்து மேற்கொள்ளப்படவுள்ள நகர்வுகள் குறித்து நேற்றைய சந்திப்பின்போது ஆராயப்படவில்லையென்றே தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பு தொடர்பில் ஜெனிவாவிலிருந்து கேசரிக்கு தகவல் வெளியிட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க,

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தினோம். இதன்போது இலங்கை தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் முக்கியமான சில விடயங்களை அவருக்கு தெளிவாக விளக்கிக் கூறினோம்.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையும் அதன் ஆணையாளர் நாயகமும் உலகின் அனைத்து நாடுகளுக்கும் சரிசமமான முறையில் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் முன்வைத்தோம். மாறாக சில நாடுகளுக்கு ஒரு வகையிலும் வேறு சில நாடுகளுக்கு மற்றுமொரு வகையிலும் நடந்து கொள்ளக் கூடாது என்று அவருக்கு தெளிவாக எடுத்துக் கூறினோம்.

மேலும் மனித உரிமை ஆணையாளர் நாயகம் என்பவர் அனைத்து நாடுகளுக்கும் ஆணையாளராவார் என்றும் தெரிவித்தோம். மனித உரிமை ஆணையாளர் இலங்கை போன்ற நாடுகள் விடயத்தில் வித்தியாசமான வகையில் நடந்து கொள்வதாகவும் அது தவறான விடயம் என்றும் நாங்கள் சுட்டிக் காட்டினோம். இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்த தருஷ்மன் குழுவின் அறிக்கை தனக்கு கிடைத்துள்ளதாகவும் நவநீதம்பிள்ளை எம்மிடம் கூறினார்.

அமைப்புக்களுடன் சந்திப்பு

இந்நிலையில் இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கும் அமைச்சர் என்ற வகையில் நான் இன்று (நேற்று) லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேபச்சு வார்த்தை நடத்தினேன். இதன்போது தருஷ்மன் அறிக்கையை மனித உரிமை பேரவையின் அவதானத்துக்கு எடுப்பது அதன் நடைமுறைகளை மீறும் செயலாகும் என்பதை அந்த நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கிக் கூறினேன். மேலும் தருஷ்மன் அறிக்கைக்கு எந்தவொரு நாடும் அங்கீகாரத்தை வழங்கக் கூடாதென்றும் கேட்டுக் கொண்டேன்.

இது இவ்வாறிருக்க புதன்கிழமையன்று நான் உலக இஸ்லாமிய அமைப்பு, ஆசிய குழு நாடுகள், ஆபிரிக்க குழு நாடுகள் அமைப்பு ஆகியவற்றை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கவுள்ளதுடன் எமக்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுப்பேன் என்றார்.

ஜெனிவா கூட்டத் தொடரில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் நீர்ப்பாசன முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா, சுற்றாடல் இயற்கைவள அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இடம்பெறுகின்றனர்.

இதேவேளை யுத்தகாலத்தில் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு நடந்துகொண்டது என்பது தொடர்பில் ஆராய ஐ.நா. செயலாளர் நாயகம் குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.virakesar...asp?key_c=33812

Edited by இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.