Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஆழ ஊடுருவும் படையணிகளை பாதுகாப்பு வலயத்தினுள் நான் அனுப்பினோம்" அமெரிக்க அதிகாரியிடம் ரகசியத்தைப் போட்டுடைத்த மகிந்த !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"ஆழ ஊடுருவும் படையணிகளை பாதுகாப்பு வலயத்தினுள் நான் அனுப்பினோம்" அமெரிக்க அதிகாரியிடம் ரகசியத்தைப் போட்டுடைத்த மகிந்த !

வன்னியில் நடைபெற்ற இனவழிப்புப் போரின் இறுதிக்கட்டத்தில் , அங்கிருந்த பாதுகாப்பு வலயங்கள்மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக சிங்கள அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த அதே நேரம், புலிகளின் மண் அனணையை உடைத்து மக்களை வெளியேறச் செய்யும் நோக்குடன் பாதுகாப்பு வலயங்களுக்குள் தமது நீண்டதூர உளவு ரோந்து அணிகளை (ஆழ ஊடுருவும் படையணி) தாம் அனுப்பியதாக இலங்கையின் சனாதிபதியும், முப்படைகளின் பிரதான தளபதியுமாகிய மகிந்த தன்னைச் சந்தித்த முக்கிய அமெரிக்க அதிகாரியிடம் கூறியிருக்கிறான்.

பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்து, விடுதலைப் புலிகளை வென்று விட்டதாக சிங்களம் எக்காளமிட்ட இருவாரங்களுக்கு முன்னர், கொழும்பில் இடம்பெற்ற இணைத்தலமை நாடுகளின் கூட்டத்தின்போதே இந்த ரகசியத்தை அமெரிக்க அதிகாரியிடம் மகிந்த கூறியிருக்கிறான்.

பாதுகாப்பு வலயத்தினுள் தனது ஆழ ஊடுருவும் படையணிகளைச் சிங்கள அரசு அனுப்பியது தொடர்பாக விக்கிலீக்கில் வந்த விபரங்களை நோர்வேயில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்று இவ்வருட முற்பகுதியில் வெளியிட்டிருந்தது.

"சனாதிபதி மேலும் கூறியபோது," நாம் சிவிலியன்கள் மீது கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தவில்லை, ஏனென்றால், ஆள ஊடுருவும் படையணிகள்( தமிழ் பேசும் உளவாளிகள்) பாதுகாப்பு வலயத்தினுள் புலிகளால் கட்டப்பட்ட மண் அணையை உடைத்து மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள்" என்று தன்னிடம் கூறியதை ஜேம்ஸ் மூர் எனும் தூதரக அதிகாரி அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அலுவலகத்திற்கும் வெள்ளை மாளிகைக்கும் 2009 இல் அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கைச் சனாதிபதி இவ்வாறான ரகசியங்களை அமெரிக்க அதிகாரியிடம் கூறிக்கொண்டிருந்த அதேவேளை,அவனது அரசாங்கமும், இனவழிப்பில் அவனுக்கு உதவிக்கொண்டிருந்த அயல் வெளிநாடுகளும், பாதுகாப்பு வலயத்தினுள் புலிகளே மக்கள்மீது தாக்குதல் நடத்துவதாகவும், மக்கள் வெளியேறுவதைத் தடுக்கும் உத்தியாகவே இதை அவர்கள் செய்துவருவதாகவும் பாரிய பரப்புரை நடவ்டிக்கை ஒன்றில் இறங்கியிருந்தன.

சிங்கள பாதுகாப்பு அமைச்சு, இதற்கும் ஒருபடி மேலே சென்று, ஆளில்லா விமானத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒளிநாடா ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ஒரு கடற்கரைப் பகுதியில், மக்கள் கூட்டமொன்றைச் சுற்றிவளைத்த இரு ஆயுததாரிகள் அவர்கள் மேல் துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டிருந்தது காண்பிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இடம்பெயர் வைத்தியசாலையில் இறுதி நாட்களில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் இதுபற்றிக் கூறும்போது, "சனாதிபதி தமது ஆள ஊடுருவும் படையணிகள் பாதுகாப்பு வலயத்தினுள் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று சொல்வதைப் பார்க்கும்போது, சர்வதேசத்தில் தமக்கெதிராக எழுந்த அழுத்தத்தைச் சமாளிக்கும் முகமாக அந்த மக்கள் கூட்டத்தின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கூட ஆள ஊடுருவும் படையணியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் " என்று குறிப்பிட்டார்,

ராணுவ புலநாய்வுப் படையணியினதும், விசேட படைப்பிரிவினதும் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ஆள ஊடுருவும் படையணிகளுக்கு எதிரியின் வலயத்தினுள் தாக்குதல் மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கான பயிற்சியினை அமெரிக்கச் சிறப்புப் படைப்பிரிவும், இஸ்ரேலிய விசேட படைப்பிரிவும் வழங்கியிருந்ததாகக் கருதப்படுகிறது.

ஆள ஊடுருவும் படையணி, வன்னியில் புலிகளியக்க முக்கியஸ்த்தர்கள்மீதான தாக்குதல்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல்கள், அரச சாரா நிறுவங்களின் ஊழியர் மீதான தாக்குதல்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்களில் நன்கு அறியப்பட்டிருந்தது.

நோர்வே அரசாங்கத்தின் மேற்பார்வையில் சிங்கள அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடைக்கும் முகமாக இந்த ஆள ஊடுருவும் படையணிகள் சனாதிபதியும் தம்பி, கோத்தாபாய ராஜபக்‌ஷவினாலும், இராணுவ உளவுப் பிரிவின் தளபதி கெந்த பரணவித்தாரண என்பவனாலும் தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும் இறக்கப்பட்டிருந்தன.

ஆள ஊடுருவும் படையணியொன்றின் சிறப்பான முறையில் அடையாளம் காணப்பட்டு தாக்குதலுக்குள்ளான அநாதைச் சிறுவர்கள் பராமரிப்பு நிலையமான செஞ்சோலையில் நடந்த கிபிர் குண்டு வீச்சுத் தாக்குதலில் 51 அப்பாவிச் சிறுமிகளும், அவர்களைப் பராமரித்துவந்த 4 சிவிலியன் பணியாளர்களும் உடல் சிதறிக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான இன்னும் பல தாக்குதல்களில் நோயாளர் காவு ஊர்திகளில் பயணித்த காயப்பட்டோர், பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த பள்ளிச் சிறார்கள், மருத்துவ சேவகர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற பலர் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆள ஊடுருவும் படையணிகள் தம்மாலேயே பெயர் சூட்டப்பட்ட "பாதுகாப்பு வலயங்களுக்குள்" தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்று சனாதிபதியே சொல்லும்போது, அவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகள் ஏற்கனவே போரினால் சிதறுப்பட்டிருந்த மக்கள்மீதுளேற்படுத்திய அழிவுகளின் அளவை இலகுவில் கணித்துவிட முடியாது.

பாதுகாப்பு வலயத்தினுள் சிங்கள ராணுவத்தின் நாசகார ஆள ஊடுருவும் அணியின் பிரசன்னம் குறித்த செய்திகளின் வெளிப்பாடு குறித்து கொழும்இலுள்ள சட்டவாளர் ஒருவர் கருத்துக் கூறும்போது, " போரின் முதலாவது அழிவு உண்மையாக இருக்கலாம், ஆனால், அது ஒருபோதும் முற்றாக அழிந்துவிடப்போவதில்லை, என்றோ ஒருநாள் அது வெளியில் வந்தே தீரும்" என்றார்.

"பூனை இன்று பைய்யை விட்டு வெளியே வந்துவிட்டது, இந்த குற்றசாட்டுக்களும், எதிர்க் குற்றசாட்டுக்களும் சுதந்திரமாக விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் ஐ.நா உற்பட்ட சர்வதேச சமூகத்தின் காத்திரமான நடவடிக்கைகளின் மூலமே இன்றும் வாழ்ந்துவரும் திட்டமிட்ட, நிறுவனமயப்படுத்தப்பட்ட இனவழிப்பின் சாட்சிகள் எந்தவித தடையோ, மரண பயமோ இன்றி தமது சாட்சியங்களைப் பதிவுசெய்து கொள்ளமுடியும்" என்றும் அவர் மேலும் கூறினார்.

மூலம் தமிழ்நெட்.

இலங்கைச் சனாதிபதி இவ்வாறான ரகசியங்களை அமெரிக்க அதிகாரியிடம் கூறிக்கொண்டிருந்த அதேவேளை,அவனது அரசாங்கமும், இனவழிப்பில் அவனுக்கு உதவிக்கொண்டிருந்த அயல் வெளிநாடுகளும், பாதுகாப்பு வலயத்தினுள் புலிகளே மக்கள்மீது தாக்குதல் நடத்துவதாகவும், மக்கள் வெளியேறுவதைத் தடுக்கும் உத்தியாகவே இதை அவர்கள் செய்துவருவதாகவும் பாரிய பரப்புரை நடவ்டிக்கை ஒன்றில் இறங்கியிருந்தன.

யுத்தத்தை வெல்ல பொய்யுரைப்புக்கள் முக்கிய பங்காற்றின.

"பூனை இன்று பைய்யை விட்டு வெளியே வந்துவிட்டது, இந்த குற்றசாட்டுக்களும், எதிர்க் குற்றசாட்டுக்களும் சுதந்திரமாக விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் ஐ.நா உற்பட்ட சர்வதேச சமூகத்தின் காத்திரமான நடவடிக்கைகளின் மூலமே இன்றும் வாழ்ந்துவரும் திட்டமிட்ட, நிறுவனமயப்படுத்தப்பட்ட இனவழிப்பின் சாட்சிகள் எந்தவித தடையோ, மரண பயமோ இன்றி தமது சாட்சியங்களைப் பதிவுசெய்து கொள்ளமுடியும்" என்றும் அவர் மேலும் கூறினார்.

இன்னும் நிறை பூனைகளை வைத்திருக்கின்றது மேற்குலகம், தமக்கு தேவை என்றால் வெளியில் விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு வலையத்தினுள் ஆழ ஊடுருவும் படையணி: கசியவிட்டார் மஹிந்த

  • Sunday, September 18, 2011, 10:26

முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலையத்தினுள் ஒட்டுக்குழுக்களை இரகசியமாக அனுப்பி வைத்தோம். அந்த ஒட்டுக்குழுக்களும் எமது படையினரும் புலிகளின் முன்னரங்க நிலைகளை உடைக்க மக்களிற்கு உதவினார்கள் என மஹிந்த கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு அமெரிக்க துணைத்தூதருக்கு மஹிந்த இராஜபக்‌ஷ இத்தகவலை கூரியுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது. மே மாதம் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் படையினரிடம் தப்பி ஓடும் வேளை அங்கு புலிகள் தான் அவர்களை சுட்டுக்கொலை செய்தார்கள் என படையினர் கூறினர் ஆனால் அந்த நேரமே விடுதலைப்புலிகள் போல வந்த கருணாவின் ஒட்டுக்குழுக்களும் படையினரும்தான் மக்களைச்சுட்டதாகவும் விடுதலைப்புலிகளுக்கும் மக்களுக்கும் இடையே குழப்பத்தினை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் பொதுமக்கள் பலர் கூறினர். ஆனால் சர்வதேசம் அதனை நம்ப மறுத்தது.

ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி மற்றும் மே மாதம் 13 ஆம் , 14 ஆம் திகதிகளில் பொதுமக்கள் கண்ணிவெடிகள் மற்றும் இராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் முன்னரங்க நிலைகள் நோக்கி ஒடினர். இவர்களை ஓடுமாறு தூண்டி வற்புறுத்தியது விடுதலைப்புலிகள் வடிவில் இருந்த ஒட்டுக்குழுக்கள்தான் மட்டுமன்றி ஓடிய பொதுமக்களை சுட்டுக்கொன்றதும் இவர்கள்தான்.

இப்போது உண்மைகள் மெல்ல மெல்ல வரத்தொடங்குகின்றன. மஹிந்த தமது ஆள ஊடுருவும் படையும் ஒட்டுக்குழுக்களும் உள்ளே ( பாதுகாப்பு வலையத்தினுள் நுழைந்து முன்னணி காவலரண்களை உடைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியமையினை கூறியுள்ள நிலையில் அங்கு நடந்த பொதுமக்கள் மீதான நடவடிக்கைகள், காட்டுமிராண்டித்தனங்கள் போராளிகள் வடிவில் இருந்த மஹிந்தவின் ஆட்களே.

இது இவ்வாறு இருக்க சரத் பொன்சேகா போர் முடிந்த கையோடு தாம் ஓட்டுக்குழுக்கலை ஒரு போதும் படை நடவடிக்கையில் பயன்படுத்தவில்லை என பொய்கூறினார். ஆனால் மஹிந்த இராஜபக்‌ஷவோ தாம் பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.

http://www.tamilthai.com/?p=26946

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.