Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'உடைக்கப்பட்ட சியாரம் உரிய இடத்தில் மீண்டும் அமைக்கப்படும்'

Featured Replies

'உடைக்கப்பட்ட சியாரம் உரிய இடத்தில் மீண்டும் அமைக்கப்படும்'

அனுராதபுரம் பிரதேசத்தில் உடைக்கப்பட்ட சியாரத்தை மீண்டும் உரிய இடத்தில் அமைத்து தருவதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையிலான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகளுக்கும் என்.எம்.அமீன் தலைமையிலான முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா பிரதிநிதிகளுக்கும் இடையில் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஏற்பாட்டிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது பாதுகாப்பு செயலாளர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

அநுராதபுரம் குருணாகல் வீதியிலுள்ள அநுராதபுரம் பழைய நகரத்தில் அமைந்திருந்த மிக பழமை வாய்ந்த முஸ்லிம் ஸியாரம் கடந்த வாரம் உடைக்கப்பட்டது.

பௌத்த பிக்குகள் அணியும் காவி நிற உடையுடனான சிலரின் பங்குபற்றலுடனே இந்த சியாரம் உடைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/28085-2011-09-18-17-53-29.html

  • தொடங்கியவர்

ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை சம்பாதிக்க நடாத்தும் நாடகம் இது. இந்தியாவின் பார்பர் மசூதி உடைக்கப்பட்டதுடன் இது ஒப்பிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

  • தொடங்கியவர்

இடிக்கப்பட்ட ஸியாரத்தை மீண்டும் கட்டித்தருவதாக வாக்குறுறுதி அளிக்கவில்லை: கோட்டாபய

அநுராதரபுத்தில் இடிக்கப்பட்ட ஸியாரத்தை (தர்கா) மீண்டும் கட்டித்தருவதாக தான் வாக்குறுதி அளிக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிபிசி இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

இலங்கையின் அநுராதபுரத்தில் இம்மாதத்தில் முன்னதாக புத்த பிக்குகள் சிலரால் இடிக்கப்பட்ட முஸ்லிம் தர்கா தொடர்பில் இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியதாக வெளியாகியிருந்த செய்திகளுக்கு தற்போது கோட்டாபய விளக்கமளித்துள்ளார்.

செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்ததுபோல இந்த தர்கா மீண்டும் கட்டித்தரப்படுவதற்கு தன்னால் உத்தரவிடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தர்கா இடிப்பு தொடர்பில் இலங்கையின் பாதுகாப்புச் செயலரைச் சந்தித்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகளில் சிலர், இந்த தர்கா மீண்டும் கட்டித்தரப்படும் என்று கோட்டாபய உத்திரவாதம் வழங்கியுள்ளார் என்ற புரிதலுடன் வெளிவந்திருந்தனர்.

கோயில்களுக்கும் தர்காக்களுக்கும் பாதுகாப்பு வழங்க தன்னால் ஏற்பாடு செய்ய முடியுமே ஒழிய, இடிக்கப்பட்ட தர்கா மீண்டும் கட்டித்தரப்படுவதற்கு தன்னால் ஏற்பாடு செய்ய முடியாது என்று கோட்டாபய பிபிசியிடம் விளக்கமளித்துள்ளார்.

மீள் கட்டுமானம் பற்றி பேசவேண்டுமானால் முஸ்லிம் மற்றும் பௌத்த பிரதிநிதிகள் மதவிவகார அமைச்சிடம் அவ்விவகாரத்தை கொண்டுசெல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார்

பிக்குகள் செயலை விமர்சித்தார்

தர்கா இடிக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலர், இப்படியான செயலுக்கு யாரும் ஒப்புதல் அளித்திருக்கவில்லை என்றும், சட்டத்தை யாரும் அவரவர் கைகளில் எடுத்துகொள்ளக்கூடாது என்றும் சமூகங்கள் இடையிலான நல்லுறவை யாரும் கெடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இந்த தர்கா நூற்றாண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது.

ஆனால், பௌத்தர்கள் புனிதமாக கருதும் ஒரு இடத்தில் அது உள்ளது என அதனை இடிப்பதற்காக சென்றிருந்த குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த பௌத்த பிக்கு கூறினார். இந்த தர்காவை இடித்துவிட வேண்டும் என மத விவகார அமைச்சகத்தில் தாங்கள் முறையிட்டிருந்ததாகவும், ஆனால் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே அதனை தாங்களாக இடித்துவிட்டதாகவும் அந்த பிக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

தர்கா இடிப்புக்கு அவ்வட்டாரத்தின் முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இடித்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார். முஸ்லிம் ஓட்டுகள் அதிகமாக உள்ள கொழும்பு உள்ளிட்ட இடங்களில் அடுத்த மாத ஆரம்பத்தில் வரிசையாக உள்ளூராட்சி தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirr...4.html#comments

Edited by akootha

  • தொடங்கியவர்

ஸியாரம் உடைப்புக்கு நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்வேன்: அமைச்சர் ஹக்கீம்

அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், இந்த அரசாங்கத்திலுள்ள நீதியமைச்சர் என்பதைக் கூடப் பார்க்காமல் நிச்சயமாக நானும் நீதிமன்றம் செல்வேன். ஸியாரம் உடைக்கப்பட்டபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மருதமுனையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அநுராதபுரத்தில் ஸியாரமொன்று உடைக்கப்பட்டது. காவியுடை தரித்தவர்கள் சிலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். காக்கியுடை தரித்தவர்கள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படியானதொரு லட்சணத்தில் இந்த அரசாங்கத்தில் நான் ஓர் அமைச்சராக இருக்கின்றேன். இதைப் பார்த்துக் கொண்டு என்னால் கோபப்படாமல் இருக்க முடியாது. மு.காங்கிரசின் தலைவருக்கு இவற்றினைப் பார்த்தால் கோபம் வரத்தான் செய்யும்.

அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தவர் ஒருவருடன் இன்று காலை கடுமையான வாக்குவாதமொன்றில் ஈடுபட்டேன். அப்போது அவரிடம் நான் கூறினேன்.

இந்தியாவில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டமைக்கும், அநுராதபுரத்தில் ஸியாரம் உடைக்கப்பட்டமைக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசங்களையும் நான் காணவில்லை. பாபர் மஸ்ஜித்தினை உடைத்த காவியுடை தரித்த இந்துத் தீவிரவாதிகளும், இங்குள்ள காவியுடை தரித்தவர்களுக்கும் இடையில் எங்களால் வேறுபாடு காண முடியவில்லை.

பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்டோர் அங்கு நீதிமன்றம் சென்றனர். ஓரளவு நியாயமும் வழங்கப்பட்டது. அதேபோன்று, அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், இந்த அரசாங்கத்திலுள்ள நீதியமைச்சர் என்பதைக் கூடப் பார்க்காமல் நிச்சயமாக நானும் நீதிமன்றம் செல்வேன்.

ஸியாரம் உடைக்கப்பட்டபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன் என்று அந்த உயர் மட்டத்தவரிடம் நான் கூறிய நிலையில்தான் - அரசாங்கத்தின் செலவில் அந்த ஸியாரத்தினை மீண்டும் கட்டித்தருவதாக அறிவித்தல் வந்திருக்கின்றது.

இதுபோல இன்னுமொரு விடயமும் உள்ளது. அரசாங்கத்திலுள்ள அந்த நபர் எனக்கும் கூட்டாளிதான். ஆனால், சிலவேளைகளில் காட்டு தர்பார் நடத்துவார். ஒரு தடவை சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டினார். பிறகு தான் அவரைக் கட்டவில்லை என்றும் குறித்த உத்தியோகத்தர் தன்னைத் தானே கயிற்றால் கட்டிக் கொண்டதாகவும் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்னரும் அந்த நபர் ஓர் அறிக்கை விடுகிறார். அதாவது, மாடுகளை அறுப்பவர்களைக் கண்டால் அவர்களின் கைகளை வெட்டுவேன் என்கிறார். இந்தக் காட்டுத் தர்பார் மிகவும் மோசமானதாகும். இதைக் கேட்டுக் கொண்டு என்னால் பேசாமல் இருக்க முடியாது. இவ்வாறான கூற்றுகளும் செயற்பாடுகளும் மிகப் பெரிய விபரீதங்களை ஏற்படுத்தும். இந்த நிலையில், இவ்விடயங்களை நாமும் மிகப் பக்குவமாக அணுக வேண்டியுமுள்ளது.

இன்னும் சில நாட்களில் ஹஜ் பெருநாள் வருகின்றது. அப்போது மாடுகளை அறுத்து உழ்ஹியா எனும் மார்க்கக் கடமையினை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்போது என்ன நடக்கின்றது என்பதைப் பார்ப்போம். அதேவேளை, முஸ்லிம்களாகிய நாமும் சற்று பக்குவத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள பிரச்சினையை மேலும் ஊதி வளர்த்து விடும் வகையில் நடந்து கொள்ளாமல் உழ்ஹியாவை மேற்கொள்ளும் போது சாதுரியமாகச் செயற்பட வேண்டும்.

எது எவ்வாறினும், கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன் என்கிற காட்டுத் தர்பார்களையெல்லாம் அனுமதிக்க முடியாது. மு.கா. தலைமைத்துவம் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கவும் மாட்டாது. நமது சமூகத்துக்கு அபிவிருத்தி தேவைதான். ஆனால், முதுகெலும்புடன்தான் அதை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைவிடுத்து, அரசின் முன்னால் நாலாக எட்டாக மடிந்து வளைந்து கொண்டு, தருவதைத் தாருங்கள் நாம் எதுவும் பேச மாட்டோம் எனக் கூறி, ஒரு மூலையில் மடங்கிக் கிடக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைமையால் முடியாது.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/28154-2011-09-20-06-51-20.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.