Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தாவின் அங்கீகரிக்கப்பட்ட உண்மைகள் காணொளி: எல்லாமே பூசி மெழுகப்பட்டுள்ளது;ஐசிசி விமர்சனம்

Featured Replies

சிறிலங்காவில் கொலைக்களம் எனும் சனல் 4 காணொளிக்கு எதிராக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட லைஸ் அக்ரே அபோன் காணொளியில் எதுவுமே இல்லை என சர்வதேச நெருக்கடிகள் குழு விமர்சித்துள்ளது.

.

சனல்4 காணொளியில் குறிப்பிடபப்ட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பொய் என நிரூபிப்பதற்கு பதிலாக வேறுவகையான பிரச்சினைகலை புகுத்தியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக புலிகளைப்பற்றி அவர்களின் பயங்கரவாத செயல்களைப்பற்றியே கூடுதலாக விபரித்துள்ளார்கள்.

.

சனல்4 காணொளியிலும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுக்களான வைத்தியசாலைகள் மீது எறிகனைத்தாக்குதல்கள், விமானத்தாக்குதல்கள், சிவிலியன்கள் கொல்லப்பட்டமை, கேணல் ரமேஸ் மற்றும் இசைப்பிரியா ஆகியோரை மோசமாக கொலை செய்தது, சரணடைந்த புலி வீரர்களை சுட்டுக்கொன்றது போன்ற குற்றச்சாட்டுக்களை புறம்தள்ளுவதற்கான ஆதாரங்களை பாதுகாப்பு அமைச்சு தயாரித்துள்ள ஆவணத்தில் காணோம்.

.

மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்திய விதங்கள் வினோதமானவை. அதாவது கேணல் ரமேஸ் அவர்களையும் இசைப்பிரியாவையும் கொலை செய்தது சரியே என்பதுபோல அவர்களை பயங்கரவாதிகள் என காட்டுகின்றார்கள்.

.

வைத்தியசாலைகள் மீது குண்டு போட்டதற்கு காரணமாக புலிகளும் அந்த இடத்தில் இருந்திருக்கலாம் என காரணம் கூறுகின்றார்கள்.இவை எல்லாம் பொய்களை மறைப்பதற்கான காரணங்களே தவிர ஆதாரங்கள் அல்ல.

.

அடுத்ததாக 40, 000 பொதுமக்கள் எப்படி கொல்லப்பட்டுள்ளார்கள் அது பொய் என தமது பொய்யான புள்ளிவிபரம் மூல நிரூபிக்க முயன்று மீண்டும் மீண்டும் பொய்களைக்கூறுகின்றார்கள்.

அதாவது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கூறுகின்றது அங்கு 305,000 மக்கள் இருந்தார்களாம். போரின் பின்னர் 293,000 பேர் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டார்களாம். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் 2009 புள்ள்விவிபரம் கூறுகின்றது. ஏன் அரச அதிகாரிகளின் புள்ளிவிபரங்களும் கூறுகின்றது என்னவெனில் அங்கு 330,000 மக்கள் இருந்துள்ளார்கள் என்று. சரி ஐ. நா பொய் கூறுகின்றது என்றால் சிறிலங்கா அரசாங்கம் போர் நடக்கும் போது என்ன கூறியது? முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சம் மக்கள்தான் இருக்கின்றார்கள் என்று கூறியதல்லவா? இது திட்டமிட்ட பொய்தானே என கேள்வி எழுப்பியுள்ளது சர்வதேச நெருக்கடிகள் குழு.

.

அரசாங்கம் தனது ஆதாரத்திற்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ள கைதிகளான விடுதலைப்புலி போராளிகள் மற்றும் முள்ளிவாய்க்காலில் கடமையாற்றிய வைத்தியர்களின் ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட தடுப்பில் உள்ளோர்களின் வாக்கு மூலங்கள் மூலம் புலிகள் முள்ளிவாய்க்காலில் ஆயுத முனையில் வைத்தே தவறான புள்ளீவிபரங்களை கொடுக்க கூறியதாகவும் காட்ட முயற்சி செய்கின்றார்கள். சரி அதனைத்தான் நாமும் கூறுகின்றோம். அதாவது புலிகளின் கட்டுப்பாட்டில் அவர்கள் பீதியில் தவறாக கூறினார்கள் என்றால் இப்போ உங்களின் தடுப்பில் இருக்கும் போது அவர்கள் சரியாக கூறுவார்கள் என்பதனை எவ்வாறு நம்ப முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது ஐசிசி எனப்படும் சர்வதேச நெருக்கடிகள் குழு.

.

அடுத்ததாக புலிகள் மக்களை தமது கட்டுப்பாட்டிற்குள் பலாத்காரமாக வைத்திருந்தார்கள் என கூறுகின்றது, அதனை சனல் 4 குறிப்பிடவில்லையாம் உண்மைதான் ஆனால் அது பொதுவான விடயம் மட்டுமல்ல ஏன் அரசாங்கம் கூட மக்களை தமது கட்டுப்பாட்டுப்பிரதேசங்களுக்கு வரவளைக்க படை பலத்தினை பிரயோகித்துள்ளது என்பதற்கும் வலுவான ஆதாரங்கள் உள்ளனவே.

ஈழ நாதம்

  • தொடங்கியவர்

தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கைகளின் போது நாளொன்றுக்கு சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

.

யுத்த வலயத்திலும் அதற்கு வெளியேயும் உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு இந்தத் தகவலை அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

.

2009 ஜனவரி 20ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி வரையில் 4ஆயிரத்து 164 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஒ பிளக் ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

.

இந்தக் காலப்பகுதியில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். எவ்வாறெனினும், நம்பகமான தரவு மூலங்களின் ஊடாக கிடைக்கப் பெற்ற பொதுமக்கள் இழப்பு குறித்த தகவல்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு பகிர்ந்துகொள்ளவில்லை என விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

.

ஜனவரி மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 33 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், பெப்ரவரி மார்ச் மாதங்களில் இந்த எண்ணிக்கை 63 வரையில் உயர்வடைந்ததாகவும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

.

ஜனவரி மாததில் நாள் ஒன்றுக்கு சாசரியாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 184 எனவும், பெப்ரவரியில் இந்த எண்ணிக்கை 145ஆகவும், மார்ச்சில் அந்த எண்ணிக்கை 115 ஆகவும் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

பிராந்திய மருத்துவர்கள், மதகுருமார், உதவி அரசாங்க அதிபர்கள், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் கடமையாற்றிய 213 உள்நாட்டு பணியாளர்கள் போன்ற தரப்பினரிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல்களைப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவை நம்பகமானவை எனவும் ரொபர்ட் ஓ பிளக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

.

முல்லைத்தீவு கரையோரப் பகுதி வழியான இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தை அரசாங்கம் அறிவித்த பெப்ரவரி 12ம் திகதி வரையில் 2452 பேர் கொல்லப்பட்டதுடன், 5000த்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.