Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

150 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்துவதை நிறுத்துமாறு அவசர கோரிக்கை :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

150 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்துவதை நிறுத்துமாறு அவசர கோரிக்கை :

23 செப்டம்பர் 2011

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் :

இன்றுள்ள சூழ்நிலையில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 150 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை எதிர்வரும் 28ஆம் திகதி தனிப்பட்ட விமானத்தில் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப பிரித்தானிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை மீளாய்வு செய்யுமாறு தமிழ் சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போர் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இலங்கையின் ஆட்சியாளர்களால் அப்பாவித் தமிழ் மக்களுடைய மனித உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டு வருகின்றது என்பதனை முழு சர்வதேச சமுதாயமுமே நன்கு அறியும். நாட்டின் வடக்கு கிழக்கின் நிலைமைகள் இன்னமும் வழமைக்குத் திரும்பவில்லை. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகின்ற போதும், அதற்கொப்பான அதிகாரங்கள் புதிய சட்டங்கள் மூலம் பாராளுமன்றில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக் காரணமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களை வசைபாடி வருகிறார்கள்.

முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மேற்குலகு தொடர்ச்சியாக சுதந்திரமான ஒரு விசாரணையைச் கோரி வருவதன் காரணமாக மேற்குலகின் மீதும் இலங்கை ஆட்சியாளர்கள் கடும் கோபமுற்றிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னமும் சிறையிலேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கையின் ஆட்சியாளர்கள் ஒரு குழப்பமடைந்த மனநிலையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் பிரித்தானியாவின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இவ்வாறு பெருந்தொகையாக நூற்றுக்கணக்கில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவது என்பது அவர்களுடைய மனித உரிமைகள் மீறப்பட்டு இலங்கை ஆட்சியாளர்களால் தண்டனைக்கு ஆளாக்கப்பட ஆட்சியாளர்களுக்கு அனுமதி வழங்கியது போல ஆகி விடும்.

அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட எவரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு இது உகந்த நேரமல்ல என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இது தொடர்பாக நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து உறுதியான நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்காது விடின் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட இந்த அப்பாவித் தமிழர்கள் இலங்கை ஆட்சியாளர்களின் கைகளுக்குள் விழுந்து துன்பப்படுவதோடு, ஆட்சியாளரின் மனித உரிமை மீறல்களுக்கும் இவர்கள் பலியாவார்கள். அது மட்டுமன்றி இந்நிலைமை நேருமானால் நாங்கள் ஒவ்வொருவரும் எமது கடமைகளிலிருந்து விலகியவர்களாவோம்.

இந்தப் பொது நோக்கிற்காக நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இலங்கையில் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவது தொடர்பாக பிரித்தானிய ஆட்சியாளர்கள் எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்வதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அந்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்விடயத்தில் நீங்கள் எல்லோரும் ஒன்றிணைவீர்கள் என நாம் நம்புகிறோம்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/67634/language/ta-IN/article.aspx

[ சனிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2011, 00:30 GMT ] [ தா.அருணாசலம் ] UK_Flag.jpgபிரித்தானியாவில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 150 அகதிகள் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகளை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் பிரித்தானியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கடந்தமாதம், தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமானோரை பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் கொழும்புக்குத் திருப்பி அனுப்பியிருந்தனர்.

இம்மாதம் 28ம் நாள் மேலும் 150 பேரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை பிரித்தானிய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக ஆங்கில ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20110924104744

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் தொடரபோகிறது இனி.

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.