Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்துலக சமூகத்தை திருப்திப்படுத்தும் தீர்வை வழங்க முடியாது - ஐ.நாவில் மகிந்த அறிவிப்பு

Featured Replies

[ சனிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2011, 00:17 GMT ] [ கார்வண்ணன் ] MR-UN%20speech.jpgசிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாடு பாரபட்சமாக அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சிறிலங்கா அதிபர், சிறிலங்காவைப் பாதித்த பிரச்சினைகளுக்கு அனைத்துலக சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையில் தீர்வுகளை வழங்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஐ.பொதுச்சபையின் 66 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று உரையாற்றியுள்ளார். இந்த உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

MR-UN%202011.jpg

“அபிவிருத்தி அடைந்து வரும் உலகிலுள்ள சிறிய நாடுகளைப் பாதுகாப்பதற்கு மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதே அவசியமான தேவையாக உள்ளது.

இந்தக் கூட்டத்தொடரின் போது பலஸ்தீனத்தை தனிநாடாகப் பிரகடனப்படுத்துமாறு பல உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அதனை அங்கீகரிக்க முடியாமற் போயுள்ளது மிகவும் கவலையளிக்கிறது.

ஆனால் பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதற்குரிய வாய்ப்புகள் இப்போதும் உள்ளன. உலக நாடுகள் தாமதிக்காது அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

சிறிலங்கா மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள போதியளவு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும்.

முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கிலிருந்து கொண்டு சர்வதேச சமூகம் இலங்கை விடயத்தை அணுகக் கூடாது.

தொலைதூரத்திலுள்ள நாடுகளில் உள்ள நண்பர்கள், முன்கூட்டியே நீதியைத் தீர்மானிக்கும் சிந்தனைப் போக்கை கைவிட வேண்டும்.

முப்பதாண்டு காலமாக சிறிலங்காவைப் பாதித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் போது அது அனைத்துலக சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்க முடியாது.

சிறிலங்கா விவகாரத்தில் பக்கச்சார்பு தன்மை மிகவும் அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.

சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாடு பாரபட்சமான வகையில் அமைந்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

பலம்பொருந்திய நாடுகள் நீதி நிலை நாட்டப்படுவதனை தடுக்கக் கூடாது.

முப்பதாண்டு காலப் போரின் பின்னர் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக வட மாகாணத்தில் 22 வீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

30 மாதகால இடைவெளிக்குள் போர் இடம்பெற்ற பிரதேசங்களில் பாரியளவிலான அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 669 தமிழ் பேசும் காவல்துறையினர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். தற்போது 1143 தமிழ் பேசும் காவல்துறையினர் கடமையில் உள்ளனர். எதிர்காலத்தில் மேலும் பலரை இணைக்கவுள்ளோம்.

வடக்கில் பயங்கரவாதிகளினால் அழிக்கப்பட்ட உட்கட்டுமான வசதிகளை சீரமைக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஆயுதப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் பற்றிய உள்நோக்கத்துடன் தவறான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால் வடக்கில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான படையினரே நிலை கொண்டுள்ளனர்.

எமது பிரச்சினைக்கு உள்ளக ரீதியான தீர்வே பொருத்தமானது என்று நாம் நம்புகிறோம்.

நாடு எதிர்நோக்கி வரும் சவால்களை சரியாக புரிந்து கொண்டு அனைத்துலக சமூகம் செயற்பட வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும்.

அபிவிருத்தி அடைந்து வரும் உலகில் சிறிய நாடுகளை பாதுகாப்பதற்கு கூடுதல் முனைப்பு காட்டப்பட வேண்டும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான சமூக, கலாச்சார மற்றும் மத விழுமிய அடையாளங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடக் கூடாது.

மனிதஉரிமைகள் என்ற பெயரில் நாடுகளின் தனித்துவமான அடையாளங்களில் தலையீடு செய்வதோ கலாச்சார மற்றும் மத விவகாரங்களில் தலையீடு செய்வதோ ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மரபு ரீதியான கலாச்சார மற்றும் சமய சார்பான விவகாரங்களை மனிதஉரிமை என்ற போர்வையில் மாற்றியமைக்கக் கூடாது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதனால் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர் இதனால் எதிர்கால சந்ததியினரும் பாதிக்கப்படக் கூடும்.

பயங்கவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளின் போது ஒரே விதமான அணுகுமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம்.

உலகின் சகல நாடுகளும் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்.

பயங்கரவாதம் தொடர்பாக பக்கச்சார்பான அல்லது மாறுபட்ட கருத்துக்கள் நிலவக் கூடாது.

செல்வந்த நாடுகளிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகின்றன.

அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையில் பயங்கரவாத அமைப்புக்கள் நடவடிக்கைகளை தொடர்கின்றன என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

உலகப் பயங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத இல்லாதொழிப்பு குறித்து வலுவானதும், நடைமுறைச் சாத்தியமானதுமான ஓர் தீர்வை ஒருமித்த குரலில் உலகத்துக்கு அறிவிக்க வேண்டும்.

பயங்கரவாதத்தை தோற்கடித்ததைப் போலவே சமாதானத்தை வென்றெடுப்பது மிகவும் கடினமான சவால் என்பது எனக்கு நன்கு தெரியும்.“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

http://www.puthinappalakai.com/view.php?20110924104743

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.