Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஃபிஜி நாட்டைப்போல சிறிலங்காவையும் பொது நலவாய நாடுகள் புறக்கணிக்குமா?

Featured Replies

சிறிலங்காவின் செயலால் பிளவுபட்டிருக்கும் பொது நலவாய நாடுகள். இவ்வாறு கூறியவுடன் சிறிலங்காவிற்கு அவ்வளவு பலமா என யோசிக்ககூடும்.இருக்கலாம் ஏனென்றால் நடப்பு தசாப்தத்தில் மிகப்பெரிய இனப்படுகொலையினை செய்துவிட்டு ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு போல தன்பாட்டில் குஜாலாக படுத்திருக்கின்றது சிறிலங்கா. ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உட்பட பல சக்திவாய்ந்தவர்களினால் கூட அசைக்க முடியாத மன்னனாக உள்ளார் மஹிந்த.

அண்மைக்காலமாக பொது நலவாய நாடுகளின் செயற்பாட்டிலும் மேற்குலகிற்கு எதிரான செயற்பாட்டினால் இந்த கட்டமைப்பிற்குள்ளும் பிளவு ஏற்படத்தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பொது நலவாய நாடுகளின் உறுப்பு நாடுகளில் நிலவுகின்ற மனித உரிமை மீறல்கள் தான்.

பொது நலவாய நாடுகளில் கனடா, அவுஸ்ரேலியா, பிரிட்டன் ஆகியன செல்வந்த நாடுகளாகவும் மனித உரிமை விடயங்களில் கனமாக செயற்படுகின்ற நாடுகளாகவும் இருக்க ஏனைய நாடுகள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளாகவும் மனித உரிமை விடயத்தில் அசாதாரண போக்கை கடைப்பிடிக்கும் அல்லது முற்றாக புறக்கணிக்கும் நாடாக இருந்து வருகின்றன. இதற்கு எடுத்துக்காட்டு சிறிலங்கா.

பொது நலவாய நாடுகளில் மனித உரிமை மீறப்பட்டால் அந்த நாட்டை புறம் ஒதுக்க அல்லது விலக்கி வைக்க அதிகாரம் உண்டு. விதிகள் உண்டு. ஆனால் சிறிலங்காவை பொறுத்தவரை அது இன்னமும் நடைபெறவில்லை. இதற்கு காரணம் பொது நலவாய நாடுகளில் கூடுதலாக சிறிலங்கா போன்று உரிமை மீறல்களில் ஈடுபடுவதே.

ஆகவே இத்தகைய செயற்பாடுகள் அதிகரித்துப்போய்க்கொண்டு இருந்தால் பொது நலவாய நாடுகளின் கூட்டமைப்பின் விழுமியங்களையே பாதிக்கும் என கனடா, பிரிட்டன் அவுஸ்ரேலியா என்பன எச்சரித்து வந்தன. இதன் பின்னரே 2009 ஆம் ஆண்டு பொது நலவாய நாடுகளின் விழுமியங்களை மீழாய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மலேசிய அதிபர் அப்துல்லா ( Abdullah Ahmad Badawi) முன் நாள் பிரிட்டன் வெளியக அமைச்சசு செயலர் மல்கம் ( Malcolm Rifkind) முன் நாள் அவுஸ்ரேலிய நிதிபதி மைக்கல் கேர்பி ( Michael Kirby ) பாகிஸ்தானிய மனித உரிமை செயற்பாட்டாளர் அஸ்மா ஜிலானி ( Asma Jilani Jahangir) ஆகியோரைக்கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் அறிக்கை அவுஸ்ரேலியாவில் பேர்த்தில் நடக்கும் பொது நலவாய நாடுகளின் மா நாட்டில் இந்த மாதம் 29 ஆம் திகதி ஆராயப்படும்.

இந்த அறிக்கையின் முக்கிய சிபார்சாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்ற நாடுகளை புறக்கணிப்பது அல்லது அவர்களின் அங்கத்துவத்தினை தற்காலிகமாக நீக்குவதே ஆகும். இந்த அறிக்கையில் உள்ள மேற்படி சிபார்சு சிறிலங்காவையே அதிகமாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது என சிறிலங்காவின் வெளி நாட்டமைச்சர் ஜி. எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார், இந்த தீர்மாஅந்த்தினால் பொது நலவாய நாடுகளுக்குள் பிளவு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார். ஆனால் அவுஸ்ரேலியா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த நிபுணர்களின் தீர்மானத்தை வரவேற்றுள்ளன.

இந்த நிபுணர் குழுவின் அறிக்கை முறையாக ஆராயப்படுமானால் 2009 இல் ஜனனாயக விழுமியங்களையும் உரிமைகளையும் மீறியதாக ஃபிஜி என்ற நாடு பொது நலவாய நாடுகளால் நீக்கப்பட்டது போல சிறிலங்காவையும் செய்ய முடியுமா என்பதே கேள்வி?

மூலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.