Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விவகாரமாக மாறியுள்ள இராணுவ விவகாரம்: அமெரிக்கா,கனடா,அவுஸ்ரேலியா, ஐ.நா பொதுச்செயலர் என்று விரிந்து கொண்டு செல்லும் வட்டம்……!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

22100900122-300x183.jpg

வடக்கை இராணுவ மயப்படுத்தி நீண்டகாலத்துக்கு வைத்திருக்க முடியாதளவுக்கு சர்வதேச நெருக்கடிகள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன. அண்மையில் கொழும்பு வந்திருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் பிளேக்க ஒரு ஆலோசனை கூறியிருந்தார். வடக்கில் அதிகளவில் தமிழ்ப் பொலிசாரை நியமித்தால், நீண்டகாலத்துக்குப் படையினரை நிலை கொள்ள வைக்க வேண்டிய தேவை ஏற்படாது என்பதே அவரது ஆலோசனை.பிளேக் கூறிய கருத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத பலரும், இங்கு சிறிலங்கா பொலிஸ் தான் உள்ளதேயன்றி, தமிழ்ப் பொலிஸ்,சிங்களப் பொலிஸ் என்று கிடையாது என்று பதிலடி கொடுத்திருந்தனர். ஆனால் பிளேக் சொல்ல வந்தது தமிழ் பொலிசாரைப் பற்றியல்ல. தமிழ்ப் பொலிசாரை அதிகளவில் நியமிப்பதன் மூலம் நீண்டகாலத்துக்குப் படைகளைக் குவித்து வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்பதையே.

அதாவது நீண்டகாலம் படையினரை நிலைகொள்ள வைக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்வதற்கான மாற்று யோசனை ஒன்றே பிளேக்கிடமிருந்து வந்துள்ளது. இவையெல்லாம் வடக்கை இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கையின் மீது சர்வதேச கவனம் எந்தளவுக்கு திரும்பியுள்ளது என்பதற்கான அடையாளங்களாவே தெரிகின்றன. இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து முன்னர் உள்ளூர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் தான் கேள்வி எழுப்பின. இப்போது அமெரிக்கா, ஐ.நா பொதுச்செயலர் என்று அதன் வட்டம் விரிந்து கொண்டு போகிறது.

சர்வதேச விவகாரமாக மாறியுள்ள இராணுவ மயப்படுத்தல் விவகாரம்

வடக்குக் கிழக்கை இராணுவ மயப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை இப்போது ஒரு சர்வதேச விவகாரமாக மாறி வருகிறது. கடந்த 24ம் திகதி நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்செயலரைச் சந்திக்கச் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடமும் இதுபற்றி பான் கீ மூன் விசாரித்துள்ளார். போர் முடிவுக்கு வந்த பின்னரும் வடக்கில் இராணுவத்தினரை அதிகளவில் நிலை கொள்ள வைத்திருப்பது ஏன் என்று பான் கீ மூன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஜனாதிபதி விசித்திரமான காரணம் ஒன்றைக் கூறி சமாளித்துள்ளார். வடக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கே இராணுவத்தினரை இப்போது பயன்படுத்துகிறோம் என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

“வடக்கில் புலிகளால் அழிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீளப் புனர்நிர்மாணம் செய்வதற்கு போதிய தொழிலாளர்கள் கிடையாது. அந்தப் பணிகளை படையினரைக் கொண்டு தான் மேற்கொள்கிறோம்“

என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

ஆக, வடக்கிலுள்ள படையினர் அனைவரும் கூலி வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்பது போலுள்ளது அவரது கருத்து.

இதுபோன்ற காரணங்களை சரியானது என்று பான் கீ முன் ஏற்றுக் கொண்டிருப்பார் என்று யாராவது நம்பினால் அது அறிவீனம்.

ஐ.நா அதிகாரிகள் வடக்கில் எல்லாவற்றையும் பார்த்து அறிக்கைகளை தலைமையகத்துக்கு அனுப்புகிறார்கள். எனவே, படையினர் கூலி வேலை செய்கிறார்களா அல்லது என்ன செய்கிறார்கள் என்ற விபரம் பான் கீ மூனுக்குத் தெரியாதிருக்க வாய்ப்பில்லை.

சில நாட்களுக்கு முன்னர் தான் அரசாங்கம் வடக்கில் படையினர் நிலை கொண்டிருப்பதற்கு வேறொரு காரணம் கூறியிருந்தது.

புலிகளால் புதைக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியுள்ளது. அந்தப் பணிகளையே படையினர் மேற்கொள்கின்றனர் என்று அரசாங்கம் கூறியது. இப்போது ஜனாதிபதி, படையினரை தொழிலாளர்களாக பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக கூறியுள்ளார். அதுமட்டுமன்றி ஏனைய இடங்களில் உள்ளது போலவே வடக்கிலும் படையினர் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பிறபகுதிகளுக்கு சென்று பார்க்கும் வெளிநாட்டவர் ஒருவர் வடக்கிற்கு செல்லும் போது அதன் வேறுபாட்டை மிகச் சுலபமாகவே புரிந்து கொள்வார்.

இராணுவத்தின் பெரும்ப குதி வடக்கில் தான் நிலை கொண்டுள்ளது என்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல. ஆனால் அரசாங்கமோ இப்போது வடக்கில் அதிக படையினர் இல்லை என்று காண்பிக்க முனைகிறது.

அண்மையில் கிறீஸ்பேய் விவகாரம் யாழ்ப்பாணத்தில் சூடுபிடித்த போது, யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரம் படையினர் நிலைகொண்டிருக்க கிறீஸ் பேய்கள் எவ்வாறு நடமாட முடியும் என்று ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அரசதரப்பு, அங்கு 50ஆயிரம் படையினர் இல்லை வெறும் 27ஆயிரம் படையினர் தான் நிலைகொண்டுள்ளனர் என்று பதிலளித்திருந்தது. சரி, அவ்வாறு 27 ஆயிரம் படையினரே குடாநாட்டில் உள்ளனர் என்று வைத்துக் கொண்டால் கூட அது சாதாரணமான எண்ணிக்கை அல்ல. யாழ்ப்பாணத்தின் மொத்த சனத்தொகை சுமார் 6 இலட்சம் தான். அங்கு நிலைகொண்டுள்ள படையினர் எண்ணிக்கையோ 27 ஆயிரம். இது இலங்கையின் மொத்த படைபலத்தின் சுமார் 9 சதவீதமாகும். அதாவது இலங்கையின் மொத்த சனத்தொகையில், வெறும் 4 வீதமே கொண்ட யாழ்ப்பாணத்தில், மொத்த படைபலத்தில் 9 வீதம் குவிக்கப்பட்டுள்ளது.இன்னொரு வகையில் இலங்கையின் மொத்த பரப்பளவில் கிட்டத்தட்ட 65 இல் ஒரு பங்கு கொண்ட யாழ்ப்பாணத்தில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கு படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

இதைவிட வன்னியின் நிலை வேறு.

வடக்கில் படைகளை அதிகளவில் நிலை கொள்ள வைக்கவில்லை என்றும், ஏனைய இடங்களைப் போன்று தான் அங்கும் படையினர் நிலை கொண்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இலங்கை இராணுவத்தில் உள்ள ஆறு படைத் தலைமையகங்களில் நான்கு வடக்கில் தான் உள்ளன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி என்று நான்கு படைத்தலைமையகங்கள் வடக்கில் நிறுவப்பட்டுள்ளன.

இராணுவத்தின் மொத்தமுள்ள 21 டிவிசன்களில், 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 61, 62, 63, 64, 65,66, 67, 68 என்று 17 டிவிசன்கள் வடக்கில் தான் நிலைகொண்டுள்ளன.

ஏனைய பகுதியில் 11, 21, 22, 23 என்று மொத்தம் நான்கு டிவிசன்கள் தான் நிலைகொண்டுள்ளன.

இப்படிப் பார்க்கப் போனால், இலங்கையின் பெரும்பாலான படைபலம் வடக்கில் தான் குவிக்கப்பட்டுள்ளது என்பதை சாதாரண ஒருவராலேயே விளங்கிக் கொள்ள முடியும்.

இந்தப் படைக்குவிப்புகளுக்கு அரசாங்கம் இப்போது பல்வேறு காரணங்களைக் கூறத் தொடங்கியுள்ள போதும், அதன் அடிப்படை நோக்கம் வடக்கை எப்போதும் தமது கட்டுப்பாட்டுக்குள் – இராணுவ ஆதிக்கத்துக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதேயாகும்.

போரில் வெற்றி பெற்ற காலத்தில் இருந்து பாதுகாப்புச் செயலரும் சரி, ஜனாதிபதியும் சரி படைகளை வடக்கில் இருந்து விலக்கும் கோரிக்கைகளுக்கு காது கொடுக்கவேயில்லை. படைவிலக்கமே கிடையாது- பாதுகாப்பை உறுதிப்படுத்த நிரந்தரமான படைத்தளங்கள் அமைக்கப்படும் என்றே அவர்கள் கூறிவருகின்றனர்.

ஆனால் இப்போது பாதுகாப்பை உறுதிப்படுத்த படையினர் தேவை என்று நியாயம் கூறமுடியாத நிலைக்குள் அரசாங்கம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தான் முன்னர் பாதுகாப்புக்கு படையினர் தேவை என்று கூறிய அரசாங்கம், கண்ணிவெடிகளை அகற்றுகின்றார்கள் என்று கூறியது. இப்போது கூலி வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்று அதை மாற்றியுள்ளது.

வடக்கை இராணுவ மயப்படுத்தி நீண்டகாலத்துக்கு வைத்திருக்க முடியாதளவுக்கு சர்வதேச நெருக்கடிகள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன.

அண்மையில் கொழும்பு வந்திருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் பிளேக்க ஒரு ஆலோசனை கூறியிருந்தார். வடக்கில் அதிகளவில் தமிழ்ப் பொலிசாரை நியமித்தால், நீண்டகாலத்துக்குப் படையினரை நிலை கொள்ள வைக்க வேண்டிய தேவை ஏற்படாது என்பதே அவரது ஆலோசனை.

பிளேக் கூறிய கருத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத பலரும், இங்கு சிறிலங்கா பொலிஸ் தான் உள்ளதேயன்றி, தமிழ்ப் பொலிஸ்,சிங்களப் பொலிஸ் என்று கிடையாது என்று பதிலடி கொடுத்திருந்தனர்.

ஆனால் பிளேக் சொல்ல வந்தது தமிழ் பொலிசாரைப் பற்றியல்ல.

தமிழ்ப் பொலிசாரை அதிகளவில் நியமிப்பதன் மூலம் நீண்டகாலத்துக்குப் படைகளைக் குவித்து வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்பதையே.

அதாவது நீண்டகாலம் படையினரை நிலைகொள்ள வைக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்வதற்கான மாற்று யோசனை ஒன்றே பிளேக்கிடமிருந்து வந்துள்ளது.

இவையெல்லாம் வடக்கை இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கையின் மீது சர்வதேச கவனம் எந்தளவுக்கு திரும்பியுள்ளது என்பதற்கான அடையாளங்களாவே தெரிகின்றன.

இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து முன்னர் உள்ளூர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் தான் கேள்வி எழுப்பின.

இப்போது அமெரிக்கா, ஐ.நா பொதுச்செயலர் என்று அதன் வட்டம் விரிந்து கொண்டு போகிறது. இது அரசாங்கத்தினால் ஒருபோதும் விரும்பக் கூடிய சூழ்நிலையாக இருக்க முடியாது. தமிழ்மக்கள் தமது பகுதிகளில் படையினர் இருப்பதை விரும்பவில்லை என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்துள்ள நிலையில் அரசாங்கம் இப்படிப் போலியான காரணங்களின் மூலம் அவர்களை நம்ப வைக்கலாம் என்று நினைக்கிறது.

ஆனால் கெட்டிக்காரன் பொய் எட்டு நாளைக்குத் தான் என்ற பழமொழி அரசாங்கத்துக்கு தெரியாமல் போயிருக்காது.

கட்டுரையாளர் இன்போ தமிழின் இராணுவ ஆய்வாளர் சுபத்ரா

http://mykathiravan.com/ta-news/?p=15813

அண்மையில் கொழும்பு வந்திருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் பிளேக்க ஒரு ஆலோசனை கூறியிருந்தார். வடக்கில் அதிகளவில் தமிழ்ப் பொலிசாரை நியமித்தால், நீண்டகாலத்துக்குப் படையினரை நிலை கொள்ள வைக்க வேண்டிய தேவை ஏற்படாது என்பதே அவரது ஆலோசனை.

அதாவது நீண்டகாலம் படையினரை நிலைகொள்ள வைக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்வதற்கான மாற்று யோசனை ஒன்றே பிளேக்கிடமிருந்து வந்துள்ளது.

எப்படியாவது மோடயாகளுக்கு ஆலோசனை செய்து காப்பற்றிவிட தவிக்கிறார்.

தமிழ்ப் பொலிசாரை அதிகளவில் நியமிப்பதன் மூலம் நீண்டகாலத்துக்குப் படைகளைக் குவித்து வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்பதையே.

அதாவது நீண்டகாலம் படையினரை நிலைகொள்ள வைக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்வதற்கான மாற்று யோசனை ஒன்றே பிளேக்கிடமிருந்து வந்துள்ளது.

ஆனால் பிளேக்கிற்கு தெரியும் தந்து எந்த அறிவுரையையும் சிங்களம் தற்போதைய நிலையில் ஏற்காது என்று. போர்குற்றம் மற்றும் பொருளாதார உதவிகள் - இந்த இரண்டு துரும்புமே அவர்களிடம் இன்றுள்ளது. அவற்றை வைத்தே தமது இலக்குகளை அடையலாம், ஆனால் மகிந்தவிற்கு அதுவும் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.