Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர் மீதான தாக்குதல் விவகாரம் இலங்கையைக் கண்டிக்க வேண்டும்; ஜெயலலிதா மன்மோகனுக்கு காட்டமாகக் கடிதம்

Featured Replies

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகத் தலையிட்டு இலங்கையிடம் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கவேண்டும். மேலும் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதை, இந்தியர்களுக்கு எதிரான தாக்குதலாக மத்திய அரசு கருதவேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் அவர் தெரிவித்திருப்பவை வருமாறு பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையாலும், சிங்கள மீனவர்களாலும் தொடர்ந்து தாக்கப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழக மீனவர்களுக்கு பாக் ஜலசந்தி பகுதிதான் வாழ்வாதாரமாக உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நான் ஆட்சிக்கு வந்த பின் 16 தடவை தாக்குதல்

அங்கு தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையைப் பாதுகாக்கவும், மீனவர்களைப் பாதுகாக்கவும் அரசு அதிக முன்னுரிமை கொடுக்கிறது. எனது தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்ற பின்னர் இதுவரை 16 தடவை தமிழக மீனவர்கள், இலங்கையினரால் தாக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் உள்ளனர் என்பதை உங்களுக்குத் தெரிவித்து கொள்கிறேன்.

07.06.2011 அன்று இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 4 இராமேஸ்வரம் மீனவர்கள், உங்களது கவனத்துக்கு என் மூலம் கொண்டுவரப்பட்ட பின்னர் 17.6.2011 அன்று விடுவிக்கப்பட்டார்கள். அதுபோல மீண்டும் 21.06.2011 அன்று 5 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 23 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டனர். இதுபற்றி நான் மீண்டும் உங்களுக்கு 23.06.2011 அன்று கடிதத்தின் மூலம் தெரிவித்தேன்.

எனினும் இலங்கைக் கடற்படையினராலும், சிங்கள மீனவர்களாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது, துன்புறுத்தப்படுவது நீடித்தப்படி உள்ளது. இத்தகைய தாக்குதலில் ஏராளமான மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீனை, சிங்களவர்கள் மிரட்டி திருடிச் சென்று விடுகிறார்கள். மேலும் தமிழக மீனவர்களின் படகுகள், வலைகள், திசை காட்டும் கருவிகள் போன்றவைகளைச் சேதப்படுத்தி நாசமாக்கி விடுகிறார்கள்.

அச்சத்துடன் தொழிலுக்குச் செல்லும் இந்திய மீனவர்கள்

இதனால் இந்திய மீனவர்கள் குறிப்பாக நாகப்பட்டினம், இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கைக் கடற்படையால் அல்லது சிங்களவர்களால் தாக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்ச உணர்வுடனே செல்கிறார்கள். இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்ன் மாதாய் கடந்த 8 ஆம் திகதி என்னைச் சந்தித்துப்பேசியபோது அவரிடம் நான், தமிழக மீனவர்கள் கடலில் தாக்கப்படுவதைத் துன்புறுத்தப்படுவதை விளக்கமாக எடுத்துக் கூறினேன். இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி கேட்டுக் கொண்டேன்.

ஆனால் அதே தினத்தன்று அதாவது கடந்த 8 ஆம் திகதி மாலையே, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்ன் மாத்தாய், கொழும்பு போய்ச் சேருவதற்குள் இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு, தமிழக மீனவர்களை விரட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் எல்லா தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியானது. தேசியப் பிரச்சினை தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் இந்தியா உடனே தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு இலங்கையிடம் இந்தியா கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதை, இந்தியர்களுக்கு எதிரான தாக்குதலாக மத்திய அர_ கருதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய எல்லையில் பாகிஸ்தான், சீனா இராணுவம் அத்து மீறல் நடத்துவதைப்போல இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களையும் இந்தியா பார்க்க வேண்டும்.தமிழ்நாட்டு மீனவர்கள் கடலுக்குள் தாக்கப்படுவதை தமிழ்நாட்டின் பிரச்சினையாகக் கருதாமல், இதை ஒரு தேசியப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

http://184.107.230.170/News_More.php?id=29112600912458880

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.