Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

(கருணாநிதி)மகள்... பேரன்... அடுத்து?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

- 01.jpg 16.10.11 கவர் ஸ்டோரி

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கருணாநிதி குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசு சிக்கிக் கொண்டிருக்கிறார். இதோ அதோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாறன் சகோதரர்களின் வீடுகளில் ஒரு வழியாக ரெய்டு நடந்தே விட்டது.

2 ஜி விவகாரத்தில் ஆ.ராசாவும், கனிமொழியும் கைது செய்யப்பட்டதில் இருந்தே, தயாநிதி மாறன் சிக்குவாரா? மாட்டாரா? என்று ஊடகங்கள் பல்வேறு ஊகங்களை எ ழுப்பிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனர் அனந்தகிருஷ்ணன் மற்றும் ஆஸ்ட்ரோ நிறுவன சி.இ.ஓ. ரால்ப் மார்ஷல் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ.

இந்த வழக்கின் தொடர்ச்சியாக கடந்த திங்களன்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரின் வீடுகள், சன் டி.வி. அலுவலகம், டெல்லியில் உள்ள தயாநிதி மாறன் வீடு, அப்பல்லோ மருத்துவமனை, டாக்டர் சுனிதா ரெட்டியின் வீடு என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை போட் கிளப்பில் உள்ள தயாநிதி மாறன் வீட்டிற்கு திங்கட்கிழமை காலை சி.பி.ஐ. அதிகாரிகள் ஏழு பேர் சோதனை நடத்துவதற்காக வந்தனர். ஆனால் அவர்களை காவலாளிகள் உள்ளே விட மறுத்தனர். இருபது நிமிடம் காத்திருந்துதான் அவர்கள் உள்ளே நுழைய முடிந்தது. வீட்டில் தயாநிதியின் அம்மா மல்லிகா மாறன் மட்டுமே இருந்தார். தயாநிதியின் குழந்தைகள் இருவரும் அன்று காலைதான் டெல்லியில் இருந்து வந்து பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

01a.jpg

குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விட, கதவுகளை உட்புறமாக தாழிட்டுக் கொண்ட அதிகாரிகள், தங்கள் சோதனையை ஆரம்பித்தனர். தயாநிதி மாறனின் உதவியாளர் கௌதமுடன் தயாநிதி மாறனின் அலுவலக ஊழியர்கள் இருவரும் வீட்டிற்குள் இருந்தனர். கூடவே வீட்டில் வேலை செய்யும் நான்கு பெண்கள், டிரைவர்கள் என அனைவருக்கும் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தயாநிதி மாறனின் நண்பர் வீனஸ், வீட்டின் வெளியே நின்று கொண்டு கட்சிக்காரர்களுக்கு போன் செய்து தயாநிதி மாறனின் வீட்டிற்கு வரச்சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தார். ஆனால், கட்சிக்காரர்கள் சிலரைத் தவிர யாரும் அங்கு வரவில்லை.

பத்தரை மணியளவில் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு தயாநிதி மாறன் வீட்டிற்கு வந்தார். சி.பி.ஐ. அதிகாரி ஒருவரிடம், ‘‘நான்தான் சி.எம். மகன்’’ என ஆங்கிலத்தில் அவர் அறிமுகப்படுத்த, பதறிய தயாநிதியின் நண்பர் வீனஸ், ‘‘தலைவர் கருணாநிதியின் மகன்’’ என திருத்தினார். தான் உள்ளே செல்ல விரும்புவதாக தமிழரசு தெரிவிக்க, ‘‘உள்ளே வந்தால் ரெய்டு முடியும் வரை வெளியே செல்ல முடியாது. தேவைப்பட்டால் ஆவணங்களில் கையெழுத்துப் போட வேண்டியிருக்கும்’’ என அதிகாரிகள் தெரிவிக்க, அதற்கு ஒப்புக்கொண்டு வீட்டிற்குள் சென்றார் தமிழரசு. கொஞ்ச நேரத்திலேயே சன் நிறுவன அதிகாரிகள் தயாநிதியின் வீட்டிற்கு வந்தனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த வீட்டின் பின்னால் இருந்த கலாநிதி மாறனின் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். கூடவே சன் டி.வி. அலுவலகத்திலும், டெல்லியில் உள்ள தயாநிதி மாறனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. கடந்த ஒரு வாரமாக டெல்லியில் ‘லீலா பேலஸ்’ என்ற ஹோட்டலில் மனைவியுடன் தங்கியிருந்த கலாநிதி மாறன், தயாநிதி மாறன் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் ஹோட்டல் அறையை காலி செய்துள்ளனர். ரெய்டு நடந்தபோது, இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்கிற விவரம் தெரியவில்லை.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய மேக்சிஸ் நிறுவனத்தில் டாக்டர் சுனிதா ரெட்டியும் ஒரு பங்குதாரர். இவர் அப்பல்லோ மருத்துவமனையின் இயக்குனர்களில் ஒருவர். எனவே, சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள சுனிதாவின் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். பகல் 12 மணியளவில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சிலர் தயாநிதி மாறன் வீட்டுக்குள் சென்றனர்.

01b.jpg

தயாநிதி மாறன் மீதான இந்த நடவடிக்கைகள் மிகவும் தாமதமானவை என்பது ஸ்பெக்ட்ரம் வழக்கை கூர்ந்து கவனிப்பவர்களுக்குப் புரியும். தயாநிதி மாறன் 2ஜி விவகார த்தில் சிக்கியதே, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகுதான். 2ஜி விவகாரத்தில் மாறன் சகோதரர்களின் பங்கு குறித்து ஆரம்பத்தில் இருந்தே, உச்ச நீதிமன்றத்தில் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்துக் கொண்டிருந்தது சி.பி.ஐ.

இந்த வழக்கில் மாறன் சகோதரர்களின் பங்கு குறித்து ஊடகங்கள் ஆதாரத்தோடு கதறிக் கொண்டிருந்த நேரத்தில், ‘‘மாறன் சகோதரர்கள் சிவசங்கரனை மிரட்டி ஏர்செல் நிறுவனத்தை விற்க வைத்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை’’ என்று சொன்னது சி.பி.ஐ. இதை எதிர்த்து பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்ததும் அந்தர்பல்டி அடித்து, எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. தெரிவித்தது.

2ஜி ஊழல் குறித்து தகவல்கள் வெளிவரத் தொடங்கியதுமே,01c.jpg கடந்த பத்து வருடங்களில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்தவர்களையும் சேர்த்தே விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. 1999 முதல் 2008 வரை தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் மொத்தம் நான்கு பேர். பிரமோத் மஹாஜன் இறந்து விட, அமைச்சராக இருந்த அருண்ஷோரியை சி.பி.ஐ. விசாரித்து விட்டது. நான்காவது நபரான ஆ.ராசா திஹாரில் இருக்கிறார். மூன்றாவது நபரான தயாநிதி மாறன்தான் தற்போது சிக்கியிருக்கிறார்.

டிசம்பர் 2006-ல் ஏர்செல் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான டிஷ்நெட் வயர்லெஸ்ஸுக்கு தயாநிதி 14 புதிய லைசென்ஸுகளை ஒதுக்குகிறார். ஸ்பெக்ட்ரம் கேட்டு ஏர்செல் நிறுவனம் அளித்த விண்ணப்பத்தை, எவ்வித காரணங்களும் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் தாமதித்தார். பல்வேறு சமயங்களில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கு மாறு, தயாநிதி மாறனுக்கு கடிதம் எழுதியுள்ளார் சிவசங்கரன். ஆனாலும் பிடிவாதமாக தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யவில்லை.

ஏர்செல் நிறுவனத்தை, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸுக்கு விற்க வேண்டுமென ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனுக்கு தயாநிதி கடும் நெருக்கடி கொடுத்துள்ளார். விற்காவிட்டால் தொழிலே நடத்த முடியாது என்ற நெருக்கடியில் சிவசங்கரனும் தனது நிறுவனத்தை விற்று விட்டார். இதற்குப் பிறகு, ஏர்செல் நிறுவனத் துக்கு 14 சர்க்கிள்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும் நேரத்தில், ஐடியா மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படாமல் நிலுவையில் இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்த நான்கு மாதங்கள் கழித்து, மேக்சிஸ் நிறுவனம், மொரீஷியஸைச் சேர்ந்த தனது துணை நிறுவனம் ‘ஆஸ்ட்ரோ ஆல் ஏஷியா நெட்வொர்க்ஸ்’ மூலமாக சன் டைரக்ட் நிறுவனத்தில் 830 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.

சன் டைரக்ட் நிறுவனத்தில் ஏப்ரல் 2007-ல் 830 கோடியை ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீடு செய்யும் போது, சன் டைரக்ட் நிறுவனம் தன் செயல்பாடுகளைத் தொடங்கவேயில்லை. மேலும், சன் டைரக்ட் தொ01d.jpgடங்கி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நஷ்டம் என்றும், ஆறாவது ஆண்டு முதல்தான் லாபம் கிடைக்கும் என்றும், சன் குழுமத்தாலேயே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான், ஆஸ்ட்ரோ நிறுவனம் 830 கோடியை அங்கு முதலீடு செய்கிறது.

சன் டைரக்ட் நிறுவனத்தின் ஒரு பங்கு எழுபது ரூபாய் என்கிற கணக்கில் 20 சதவிகித பங்குகளை 830 கோடி ரூபாய் கொடுத்து வாங்குகிறது ஆஸ்ட்ரோ. மீதம் உள்ள 80 சதவிகித பங்குகளை கலாநிதி மற்றும் காவேரி கலாநிதி இருவரும் வைத்திருக்கின்றனர். இவர்கள் வாங்குகையில் ஒரு பங்கு 10 ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என்பது கு றிப்பிடத்தக்கது. இதனால் ஆஸ்ட்ரோ நிறுவனம் சன் குழுமத்தில் முதலீடு செய்த 830 கோடி ரூபாய் லஞ்சம்தான் என்று சி.பி.ஐ. கருதுகிறது.

பங்குகளை வாங்கும்போது, சன் டைரக்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 3320 கோடி ரூபாய் என்று நிர்ணயம் செய்கிறது ஆஸ்ட்ரோ. இந்த டீல் முடிந்த மறுநாள், ஸீ கு ழுமத்தின் டி.டி.எச். நிறுவனமான டிஷ் நெட்டின் ஒரு பங்கின் விலை மும்பை பங்குச் சந்தையில் ரூ.61.25. டிஷ் நெட்டின் மொத்த மதிப்பு ரூ.2622 கோடி. இந்த மதிப்பு டிஷ் நெட் தனது சேவையைத் தொடங்கிய பிறகு நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையில் எதற்காக ஆஸ்ட்ரோ நிறுவனம் இவ்வளவு அதிக தொகை கொடுத்து பங்குகளை வாங்க வேண்டும்? இது சிவசங்கரனை மிரட்டி ஏர்செல் நிறுவனத்தை விற்க வைத்ததற்காக அனந்தகிருஷ்ணன் கொடுத்த கைம்மாறு என்று சி.பி.ஐ. கருதுகிறது.

இது மட்டுமல்லாமல், ஆஸ்ட்ரோவின் அனந்த கிருஷ்ணன், மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சவுத் ஏஷியா எஃப்.எம். 01e.jpgஎன்ற நிறுவனத்தில் 2009 ஆகஸ்ட் மாதம் 20 சதவிகித பங்குகளுக்கு ஈடான தொகையாக 450 கோடியை முதலீடு செய்கிறார். இந்தியாவில் 45 நகரங்களில் எஃப்.எம். சேவையை நடத்திக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிக் எஃப்.எம். நிறுவனத்தின் மொத்த மதிப்பீடே 300 கோடி ரூபாய்தான். ஆனால் 20 சதவிகித பங்குகளுக்காக எதற்கு 450 கோடி ரூபாயை ஆஸ்ட்ரோ நிறுவனம் மாறன் சகோதரர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கேள்விகளை எழுப்புகிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

இந்த விவகாரத்தில் சிக்கும் மற்றொரு வி.ஐ.பி. அப்பல்லோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டி. பிரதாப் ரெட்டியின் மருமகன் ஏர்செல் நிறுவனத்தில் 25 சதவிகித பங்கு களை வைத்திருக்கிறார். மேக்சிஸ் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்பதால், இந்திய சட்டங்களின்படி 74 சதவிகிதத்திற்கு மேல் அந்நிறுவனம் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்தில் முதலீடு செய்ய முடியாது. இதை தவிர்ப்பதற்காக, அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனமான சிந்தியா செக்யூரிட்டீஸ் நிறுவனம், 34.17 கோடிக்கு ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

எப்படியோ, தாமதமானாலும் மாறன் சகோதரர்கள் சரியாகவே சிக்கிக் கொண்டுள்ளார்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் கருணாநிதி குடும்பத்தில் முதலில் கனிமொழி சிறைக்குச் சென்றார். அடுத்து தயாநிதி மாறன் விரைவில் சிறை செல்வார் எனத் தெரிகிறது. ஷாகித் பல்வாவுடன் கருணாநிதியின் வாரிசு ஒருவர் ஆறுமுறை நடத்திய சந்திப்பு விவரங்களும் சி.பி.ஐ. வசம் இருக்கிறதாம். கூடவே, ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெருமளவு பணம் கருணாநிதி கையில்தான் இருக்கிறது என சுப்பிரமணியன் சுவாமி வேறு கி ளப்புகிறார். இவர்களில் யாரை அடுத்து சி.பி.ஐ. வளைக்கும் என்பது தெரியவில்லை.

எனவே, இப்போதைக்கு இந்த விவகாரங்கள் கருணாநிதி குடும்பத்தை அமைதியாக இருக்க விடும் எனத் தோன்றவில்லை!

படங்கள்: ம. செந்தில்நாதன்,

ஞானமணி, கணேஷ்

நமது நிருபர்கள்

-குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.