Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாயைப் பிளந்தது காங்கிரஸின் பலம்-வாய் கிழியப் பேசுவதை நிறுத்துவார்களா தலைவர்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: நாங்கள் இல்லாவிட்டால் ஒருவரும் ஆட்சியமைக்க முடியாது, எதையும் செய்ய முடியாது என்று வாய் கிழியப் பேசி வந்த காங்கிரஸாருக்கு இப்போது உள்ளாட்சித் தேர்தலில் சம்மட்டி அடி கிடைத்துள்ளது. இதுதான் காங்கிரஸின் நிஜமான பலம். காமராஜரோடு காங்கிரஸ் கரையறி விட்டது என்பதை மக்கள் ஆணித்தரமாக நிரூபித்துள்ளனர் தேர்தல் முடிவு மூலம்.

தமிழகத்தில் ஓசியிலேயே உடம்பேற்றி வந்த ஒரே கட்சி எது என்றால் அது காங்கிரஸ்தான் என்பதை கருவில் இருக்கும் சிசு கூட கரெக்டாக சொல்லி விடும். ஆனால் இதை காங்கிரஸார் மட்டும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். மாறாக, நாங்கள் யாருடன் இருக்கிறோமோ அவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். நாங்கள் ஆதரவு தரும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கோஷ்டி கோஷ்டியாக கானம் பாடி வருவார்கள்.

ஆனால் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையாகி விட்டது தமிழக காங்கிரஸின் நிலை. ஒரு நகராட்சித் தலைவர் பதவியைக் கூட பிடிக்கத் திராணியில்லாத கட்சியாக கிழிந்த வேட்டி போல காட்சி தருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்பது இதுவரை நடந்திராத ஒன்று என்றே கூறலாம். காரணம், திமுக அல்லது அதிமுக என யாருடைய முதுகிலாவது ஏறி, ஓசி சவாரி செய்வதுதான் அந்தக் கட்சிக்கு வசதியானதாக இருந்தது. ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கதர்ச் சட்டை கசங்காமல் பாலிட்டிக்ஸ் செய்து பழக்கப்பட்டவர்கள் காங்கிரஸார் (காங்கிரஸார் என்று இங்கு நாம் கூறுவது தலைவர்களை -தொண்டர்களை அல்ல).

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி, கணிசமான வாக்கு வங்கி உள்ளது என்று கூறிக் கூறியே வேண்டிய சீட்களைப் பெற்று ஓசி பலத்தில் ஊறுகாய் போட்டு வந்தவர்கள் இவர்கள். கடந்த சட்டசபைத் தேர்தலில், திமுகவிடம், 2ஜி விவகாரத்தைக் காட்டிக் காட்டியே சீட் கறந்த காங்கிரஸின் பிடிவாதப் பேரத்தைப் பார்த்து மாற்றுக் கட்சியினரும் கூட கொந்தளித்துப் போனார்கள். இப்படி நீ சோறு கொடு, நீ குழம்பு கொடு, நான் உட்கார்ந்து சாப்பிடுகிறேன் கதையாக படு சோம்பேறித்தனமாக அரசியல் செய்துவந்த காங்கிரஸ் இன்று உள்ளாட்சித் தேர்தலில் தலை முதல் பாதம் வரை படு அடியை வாங்கி பம்மிப் போய்க் கிடக்கிறது.

இதுதான் காங்கிரஸின் நிஜமான பலம் என்பதைமக்கள் காட்டி விட்டார்கள். பத்து மாநகராட்சிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட 2வது இடத்தைப் பிடிக்கவில்லை. பல இடங்களில் 3வது இடத்தைக் கூடப் பி்டிக்கவில்லை. மொத்தமே 17 கவுன்சிலர்கள்தான் இக்கட்சிக்குக் கிடைத்துள்ளனர்.

அதை விடக் கேவலமாக கொடிகாத்த குமரனைத் தந்த திருப்பூரில் ஒரு கவுன்சிலர் கூட காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. இது நிஜமான காங்கிரஸாருக்கு பெரும் வேதனை தரும் செய்தியாகும். காங்கிரஸுக்கென்று ஒரு தொண்டர் வட்டம் உள்ள மதுரையிலும் முட்டைதான். சேலத்திலும் ஒன்றும் இல்லை.

அதே போல 125 நகராட்சிகளில் தேர்தல் நடந்த 124 நகராட்சிகளில் ஒரு இடத்தில் கூட தலைவர் பதவியைப் பிடிக்கவில்லை காங்கிரஸ். காங்கிரஸின் பாரம்பரியப் பகுதிகளான ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் கூட அந்தக் கட்சியால் தனித்து வெல்ல முடியாமல் போனது கேவலத்திலும் படு கேவலமாகும்.

சரி பேரூராட்சியிலாவது ஏதாவது பெயருமா என்று பார்த்தால் மொத்தமே 24 இடங்களில்தான் வெற்றி கிடைத்துள்ளது.

இப்படி எங்குமே காங்கிரஸுக்கு சிறப்பு கிடைக்கவில்லை. மாறாக போன இடங்களில் எல்லாம் மக்களிடமிருந்து பட்டை நாமம்தான் கிடைத்துள்ளது.

வாழ்ந்தால் வாழை மரம் போல வாழ வேண்டும் என்பார்கள். வாழை மரத்தில்தான் அடி முதல் நுனி வரை அத்தனையும் பயன்படும். ஆனால் காங்கிரஸோ, பார்த்தீனியம் செடி போலத்தான் இத்தனை நாளாக இருந்துள்ளது. அதாவது மற்ற கட்சிகளின் பலத்தைப் பெற்று இது வாழ்ந்து வந்துள்ளது. இந்த கட்சியால் எந்தக் கட்சிக்கும் உண்மையில் லாபம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் கூட காங்கிரஸார் உண்மையில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பதை காங்கிரஸாரே ஒத்துக் கொள்வார்கள்.

இந்தத் தேர்தலின் மூ்லம் திராவிடக் கட்சிகளான திமுகவுக்கும் சரி, அதிமுகவுக்கும் சரி கிடைத்துள்ள முக்கியப் பாடம் என்னவென்றால் -இத்தனை காலமாக, அடிப்படையே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு அதிகப்படியான இடம் கொடுத்து வி்ட்டோம் என்பதுதான்.

தமிழர்கள் பாடுபட்டபோதெல்லாம், பரிதவித்த போதெல்லாம், துடித்து துவண்டபோதெல்லாம், உயிரை இழந்து உருக்குலைந்து போனபோதெல்லாம் உதவாமல் போனதுதான் காங்கிரஸின் கை. தமிழகத்திலும் கூட தமிழகத்தின் எந்தப் பிரச்சினைக்கும் காங்கிரஸ் உதவிக்கு வந்ததில்லை. மாறாக தமிழகத்தின் பிரச்சினைகளிலெல்லாம் நழுவிப் போனது அல்லது இரட்டை வேடம் போட்டு ஏமாற்றியது.

தமிழகத்தின் நதி நீர்ப் பிரச்சினையாகட்டும், வேறு எந்தப் பிரச்சினையாகட்டும் காங்கிரஸ் உதவியது என்பது வரலாற்றிலேயே கிடையாது. கூட்டணி சேர வேண்டும், கூட்டாஞ்சோறு ஆக்கி நாம் மட்டும் நாம் மட்டும் நன்றாக சாப்பிட வேண்டும். இதுதான் காங்கிரஸின் ஒரே குறிக்கோளாக இருந்தது.

இந்தப் படு தோல்வி இப்படியே நின்று விடக் கூடாது. பொறுப்பான, தமிழகத்திற்கு உதவக் கூடிய தமிழர்களுக்கு உறுதுணையான உண்மையான அரசியல் கட்சியாக காங்கிரஸ் மீண்டும் மாறும் வரை மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும்.

இதுதாம்ப்பா காங்கிரஸ் என்பதை மக்கள் காட்டி விட்டார்கள். இனியாவது திராவிடக் கட்சிகள் விழிப்புடன் இருந்து, காங்கிரஸை வைக்க வேண்டிய இடத்தில் வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- தட்ஸ் தமிழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15.jpg 30.10.11 மற்றவை வாசன், இளங்கோவன் என இரு முக்கியத் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தபோதும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி மாவட்டம் கைகொடுக்கவில்லை. பா.ஜ.வும், அ.தி.மு.க.வும்தான் இங்கு அதிரடியாக வெற்றிகளைக் குவித்திருக்கின்றன.

1967 சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்த ஊரான விருதுநகரில் தோல்வியைத் தழுவிய காமராஜரை, 1969 நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஜெயிக்க வைத்து அழகு பார்த்தது குமரி மாவட்டம். அந்தக் காலகட்டம் முதல் தொடர்ந்து காங்கிரஸ் கோட்டையாக விளங்கிய குமரி, முதல்முறையாக இந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ. மற்றும். திராவிடக் கட்சிகளின் வசமாகியுள்ளது.

குமரியில் மொத்தமுள்ள நான்கு நகராட்சிகளில் ஒன்றைக்கூட கைப்பற்றவில்லை காங்கிரஸ். அதுமட்டுமின்றி நாகர்கோயிலில் நான்காவது இடத்திற்கும், குளச்சலிலும், பத் மநாபபுரத்திலும் ஐந்தாவது இடத்திற்கும் பரிதாபமாக அக்கட்சி தள்ளப்பட்டிருக்கிறது. குழித்துறை நகர்மன்றத் தலைவர் தேர்தலில் மட்டும் இரண்டாவது இடத்தை எட் டிப்பிடித்த அக்கட்சியால், அங்கும் ஒரே ஒரு கவுன்சிலர் ‘சீட்’டைக்கூட கைப்பற்ற முடியவில்லை. பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட கவுன்சில் தேர்தல்களி லும் காங்கிரஸுக்குப் பலத்த அடிதான். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், பா.ஜ. ஒரு நகராட்சி (நாகர்கோயில்), பதின்மூன்று பேரூராட்சிகள், இரண்டு மாவட்ட கவுன்சில்கள் என இங்கு வலுவாக தனது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதற்குக் காரணம், மைனாரிட்டி சமூக ஓட்டுக்களை மற்ற கட்சிகள் மானாவாரியாகப் பிரித் துக்கொண்டதுதான்.

இங்குள்ள காங்கிரஸ் ஓட்டு வங்கியில் ஓட்டை போட்டிருக்கும் தி.மு.க., தன் பங்குக்கு குளச்சல் நகராட்சியையும், பதினொரு பேரூராட்சிகளையும் கைப்பற்றி காங்கிரஸ் மண்ணைக் கவ்வ முக்கிய காரணமாகியிருக்கிறது. வேறு எந்தக் கட்சிக்குமே மாநில அளவிலான தலைவர்கள் குமரிக்கு வந்து பிரசாரம் செய்யவில்லை. ஆனால், காங்கிரஸுக்கு வாசன்,

இளங்கோவன் ஆகிய இருவர் வந்து சென்றும் பலனில்லாமல் போய்விட்டது. மார்க்சிஸ்ட் கட்சி குழித்துறை நகராட்சியைக் கைப்பற்றியதன் மூலம் குமரி மேற்குப் பகுதியில் இழந்திருந்த தனது செல்வாக்கை மீட்டுக்கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க. ஒரு நகராட்சி (பத்மநாபபுரம்), பத்து பேரூராட்சிகள், நான்கு மாவட்ட கவுன்சிலர்கள் என இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் குமரியில் அறுவடைத் திருவிழாவே நடத்தியிருக்கிறது. அ.தி.மு.க.வின் சரித்திரத்திலேயே முதல்முறையாக குமரியில் நகராட்சித் தலைவர் பதவி ஒன்றை அக்கட்சி கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத் தக்கது. இதுதவிர, குமரி - கேரள எல்லையிலுள்ள தமிழகத்தின் கடைக்கோடி பேரூராட்சியான களியக்காவிளையில் அ.தி.மு.க வேட்பாளர் ஆஷா டயானா ஜெயித்திரு ப்பதுதான் பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. ம.தி.மு.க.வும்கூட இரண்டு பேரூராட்சிகளைக் கைப்பற்றிய உற்சாகத்தில் உள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில்கூட காங்கிரஸுக்கு மூன்று இடங்களை (குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு) கொடுத்த குமரி மாவட்டம், இந்த உள்ளாட்சித் தேர்தலில் பட் டைநாமம் சாற்றியிருப்பது பற்றி காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரிடமே கருத்துக் கேட்டோம். “உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட தொண்டனுக்காக அதிகம் மெனக்கெடவில்லை. குமரியில் மூன்று எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸுக்கு இருந்தபோதும், அவர்கள் ஒருங்கிணைந்து பணிசெய்யவே இல்லை. இது தான் தோல்விக்குக் காரணம்’’ என்றார்கள்

குளச்சல் எம்.எல்.ஏ.வும், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பிரின்ஸிடம் இதுபற்றிக் கேட்டபோது, “எங்கள் மாநிலத் தலைமைதான் இதற்கெல்லாம் காரணம். வேட்பாளர்களை அங்கீகாரப்படுத்தும்

‘பி ஃபார்ம்’களை மாவட்டத் தலைவரான என்னிடம் வழங்காமல், சில ஏஜெண்டுகளிடம் கொடுத்தனுப்பினார்கள். அவர்கள் அதை வியாபாரம் செய்துவிட்டனர். ஒரே பதவிக்கு இரண்டு பேருக்கு ‘பி ஃபார்ம்’ கொடுத்த கொடுமையும் நடந்தது. இந்த அளவுக்காவது வெற்றி பெற்றதே பெரிய விஷயம்தான்’’ என்றார் பிரின்ஸ்.

ச.செல்வராஜ்

-குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.