Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர் கொல்லப்படுவது உள்ளூர் பிரச்சனையல்ல - மதுரையில் அத்வானி ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02.jpg 03.11.11 ஹாட் டாபிக்

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அத்வானியின் ரத யாத்திரை, இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவது, கூடங்குளம் அணுமின் நிலையம் என சென்சிடிவ் பிரச்னைகளை தமிழகத்தில் கையில் எடுக்க, பரபரப்பு அதிகரித்துள்ளது.

லஞ்சம், ஊழலை எதிர்த்து அத்வானியின் நாடு தழுவிய ‘ஜன் சேத்னா யாத்ரா’ என்ற ‘மக்கள் விழிப்புணர்வு யாத்திரை’ பீகார் மாநிலத்தில், ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த சாப்ரா நகரில் கடந்த 11-ம் தேதி தொடங்கி 38 நாட்கள் நடக்கிறது. இந்த யாத்திரை 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமார் 100 மாவட்டங்கள் வழியாக 7,600 கி.மீ. பயணித்து நவம்பர் 20-ம் தேதி டெல்லியில் நிறைவடைகிறது.

அத்வானி மேற்கொள்ளும் ஆறாவது யாத்திரை இது. 1990-ம் ஆண்டு குஜராத் மாநிலம் சோம்நாத்தில் தொடங்கியது, அவரது முதல் ராமரத யாத்திரை. பீகார் மாநிலம் சமஸ்திபூரில் அத்வானி கைது செய்யப்பட்டதால் அது பாதியில் முடிந்தது. 1993-ம் ஆண்டு ‘ஜன ஆதேஷ் யாத்திரை’, 1997-ல் ‘ஸ்வர்ண ஜெயந்தி யாத்திரை’, 2004-ம் ஆண்டு ‘உதய யாத்திரை.’ 2006-ல் ‘சுரக்ஷா யாத்திரை’ தற்போது 2011-ல் ‘ஜன சேத்னா யாத்திரை.’

தமிழக, கேரள மாநிலங்களுக்கான யாத்திரை மற்றும் பிரசாரத்தை மதுரையில் துவங்கலாம் என அத்வானிதான் முடிவு செய்தாராம். 1999 தேர்தலில் தி.மு.க.வுடன் பா.ஜ. கூட்டணி வைத்திருந்தபோது தற்போது கூட்டம் நடந்த அதே இடத்தில்தான் பொதுக்கூட்டத்தில் கருணாநிதியுடன் கலந்து கொண்டு பேசினார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மதுரையில் அவரது பொதுக்கூட்டம் நடக்கிறது. என்றாலும் இடைப்பட்ட ஆண்டுகளில் இரண்டு முறை அவர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந் திருக்கிறார். அதுபோல மதுரை வந்து திண்டுக்கல், ராமேஸ்வரம் சென்றிருக்கிறார்.

தமிழக மற்றும் கேரள யாத்திரையை மதுரையில் துவக்குவதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை (27-ம் தேதி) மாலை ஆறு மணியளவில் மதுரை விமானநிலையம் வந்தார் அத்வானி. அவரது மகள் பிரதீபா, கட்சியின் பொதுச்செயலாளர் ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர். விமான நிலையத் திலிருந்து மதுரையிலுள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றனர். மழை கொட்டிக்கொண்டிருந்தது. தமிழக பா.ஜ. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் ‘மீட்டிங் நடக்கும் இடம் எப்படியிருக்கிறது?’ எனக் கேட்டார் அத்வானி. “போய் பார்த்தால்தான் தெரியும்’’ என பதிலளித்திருக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். பொதுக்கூட்ட மேடைக்கு ஏழரை மணிக்கு அத்வானி வரும்போதும் மழை வெளுத்து வாங்கியது. மழையைப் பொருட்படுத்தாமல் உட்கார்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்து திகைத்தும், நெகிழ்ந்தும் போனார் அத்வானி.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

அந்த நெகிழ்ச்சி பேச்சிலும் தெரிந்தது. “எனக்கு தமிழ் தெரியாது என்றாலும் நான் வீரபாண்டிய கட்டபொம்மன் சினிமா பார்த்திருக்கிறேன். சிவாஜிகணேசனுடன் அறிமுகமாகியிருக்கிறேன். இன்றைக்கு மருது பாண்டியர் நினைவு தினம். அதே நாளில் இந்த யாத்திரை மதுரையிலிருந்து துவங்குவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந் தியாவின் முதல் தேர்தலில் இருந்து 2009 -ல் நடந்த மக்களவைத் தேர்தல் வரையிலான அனைத்துத் தேர்தல்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களையும் ஆட் சியையும் அறிவேன். ஆனால் இந்த ஆட்சி போல் வேறெந்த ஆட்சியிலும் மிக மோசமான ஊழல் நடந்ததுமில்லை; மன்மோகன் சிங்கைப் போல பலவீனமான பிரதமர் இருந்ததுமில்லை’ என தேசியப் பிரச்னை தொடர்பாக பேசிய அத்வானி சட்டென தமிழக பிரச்னைகளுக்கு மாறினார்.

“இலங்கைப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்கள். அது என்னாயிற்று? உலக நாடுகளெல்லாம் அணுமின் நிலையங்களை நிராகரித்து வரும் நிலையில், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட மத்திய அரசு அக்கறை காட்டுவது ஏன்? இதையெல்லாம் விட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இது உள்ளூர் பிரச்னை அல்ல. ஒரு தேசத்தின் பாதுகாப்புப் பிரச்02a.jpgனை. ‘தமிழக மீனவர்களைக் காக்கவேண்டியது நம் கடமை’ என ஏன் மத்திய அரசு கருதவில்லை? இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்...’’ என காட்டமாகச் சொன்னார் அத்வானி.

அத்வானி மட்டுமில்லாமல் அவருக்கு முன்னதாகப் பேசிய தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, கட்சியின் தேசிய இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பலர் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுடப்படுவதைக் கண்டித்தனர். “வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நான்கு மீனவர்கள் சுடப்பட்டார்கள். அதில் ஒருவர் இறந் தார். இதையடுத்து, அப்போதைய இலங்கை அதிபரை கூப்பிட்டு எச்சரித்தார் வாஜ்பாய். அந்த தைரியமும் அக்கறையும் இன்றைய பிரதமருக்குக் கிடையாது. மத்திய அரசு இந்தப் பிரச்னையைத் தட்டிக் கழிக்கிறது.’’ எனப் பேசியவர்களெல்லாம் கோபப்பட, அதற்கு வரவேற்பு அதிகம் இருந்ததைக் காண முடிந்தது.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை விட அதிக அளவில் நகர் மன்றத் தலைவர் பதவிகளை பா.ஜ. கைப்பற்றியிருப்பதை பூரிப்புடன் சொன்னார் மாநில பா.ஜ. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன். ஆலயங்களை விட்டு அரசு முதலில் வெளியேற வேண்டும் என்றும் ஆவேசப்பட்டார்.

பொதுக்கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சோதனைக்குப் பிறகே பார்வையாளர்கள் கூட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையின் கெடுபிடிக்கு கட்சியினரும் விலக்காகவில்லை. இதுகுறித்து மதுரை மாவட்ட பா.ஜ. தலைவர் ராஜரத்தினம் கூறுகையில்,

‘‘அத்வானியின் யாத்திரை மற்றும் இந்தப் பொதுக்கூட்டம் என்பது ஊழலுக்கும் கறுப்புப்பணத்துக்கும் எதிரானது. அரசே முன்வந்து ஏற்பாடும் ஒத்துழைப்பும் தந்திருக்க வேண்டும். ஆனால் இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்யவிடாமல் மதுரை காவல்துறை பல தொந்தரவுகளைத் தந்தது. பொதுக்கூட்ட மேடைகூட கூட்டத்துக்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பாகத்தான் போட முடிந்தது.. இந்த யாத்திரையும் பொதுக்கூட்டமும் வெற்றியடைந்து விடக்கூடாது என மாநில அரசு, காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறதோ என்ற சந்தேகம் கூட ஏற்பட்டது’’ என்றார் ராஜரத்தினம்.

அத்வானியின் கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய வெளிமாநில சேனல்கள் ‘அவுட்சைட் பிராட்காஸ்டிங்’ வேனுடன் வந்திருந்தன. அதுபோல கணிசமான எண் ணிக்கையில் வெளிமாநில பத்திரிகையாளர்களும் வந்திருந்தார்கள். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.வினர் அத்வானியிடம் ஆசி பெற்றனர். மலர்கிரீடம், வீரவாள், வெள்ளியிலான மீனாட்சி அம்மன் சிலை ஆகியவை அத்வானிக்கு பரிசாக வழங்கப்பட்டன.

அத்வானி தனது பேச்சின் இடையே ‘கறுப்புப்பணம்‘ என்ற சினிமா குறித்து குறிப்பிட்டு அதைத் தயாரித்த மணிசங்கரை மேடையில் அறிமுகப்படுத்தினார். அத்வானி பேசி முடிந்ததும் ‘கறுப்புப் பணத்தில்’ இடம் பெற்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. பாடல் முடியும் வரை அத்வானியும் மேடையில் இருந்தார். மேடையில் இருந்தவர்கள் அதிலும் குறிப்பாக ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பாட்டு இசைக்கேற்ப ஆடி கைதட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். கூட்டமும் ஆரவாரம் செய்தது.

மறுநாள் (28-ம் தேதி) மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விசிட் செய்த அத்வானி அங்கிருந்து விருதுநகர், திருநெல்வேலி மாவட்டம் வழியாக செங்கோட்டை சென்று திரு வனந்தபுரம் சென்றார்.

மதுரையில் அத்வானியைச் சந்திக்க பலர் நேரம் கேட்டிருந்த போதும் விரல்விட்டு எண்ணும் சிலருக்கே அந்த வாய்ப்புக் கிடைத்ததாம். அதில் நடராஜன் (சசிகலா), பாரிவேந்தர் ஆகியோர் முக்கியமானவர்கள். இந்த ரத யாத்திரையும்; சந்திப்புகளும் அடுத்த தேர்தலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை மட்டும் உணர முடிந்தது.

அத்வானி செல்லும் வழியில் வெடிகுண்டு!

மதுரையில் இருந்து விருதுநகர், தென்காசி, செங்கோட்டை வழியாக அத்வானி ரத யாத்திரையில் திருவனந்தபுரம் சென்றார். வழியெங்கும் பாதுகாப்புக்கு போலீஸார் கு விக்கப்பட்டிருந்தனர்.

மதுரையிலிருந்து சுமார் இருபத்திரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆலம்பட்டி ஓடுபாலத்தின் அடியில் ஐந்து டெட்டனேட்டர்கள், பேட்டரிகளுடன் இணைக்கப்பட்ட ஆறு அடி நீள பைப் வெடிகுண்டு பாதுகாப்பு சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வெடிகுண்டை இயக்கும் பொருட்டு, 25 மீட்டர் நீளமுள்ள வயர், அருகில் இருந்த பனைமரத்தின் அடியில் பொருத்தப்பட்டிருந்தது. இந்த வெடிகுண்டு தயார் செய்யப்படாத நிலையில் இருந்தது. ஆனால் தயாரிக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டிருந் தால் அந்தப் பாலம் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும்.

இந்தப் பாலம் வழியாகத்தான் அத்வானி செல்லத் திட்டமிட்டிருந்தார். வெடிகுண்டுக்கான பொருட்கள் கண்டறியப்பட்டதை அடுத்து திருமங்கலம் ஆலம்பட்டி வழியாக அவர் விருதுநகருக்குச் செல்லாமல், திருமங்கலத்திற்கு முன் உள்ள நான்குவழிச்சாலை வழியாக அவர் விருதுநகர் சென்றார். வெடிகுண்டு வைத்தது யார் என போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

படங்கள்: ராமசாமி

கபிலன் குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.