Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலை தென்னைமரவாடி தமிழ்க் கிராமத்தில் சிங்களவர் அத்துமீறி விவசாயம்

Featured Replies

திருகோணமலை தென்னைமரவாடி தமிழ்க் கிராமத்தில் சிங்களவர் அத்துமீறி விவசாயம்

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தென்னைமரவாடி தமிழ் கிராமத்தில் சிங்களவர்கள் அத்துமீறி விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதாக இக்கிராம மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

போர் காரணமாக இக்கிராமத்தில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் 1982 ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மீளக்குடியேறி விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமக்குச் சொந்தமான வயல் நிலத்தை உழுது பண்படுத்தியிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு வருகை தந்த சிங்கள விவசாயிகள் குறித்த வயல் நிலங்களில் நெல் விதைகளைத் தூவிவிட்டுச் சென்றிருப்பதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கேசரிக்குக் கருத்துத் தெரிவித்த குச்சவெளி பிரதேச சபையின் உதவி தவிசாளர் ஆதம்பாவா தௌபீக்,

"தமிழ் மக்களுக்குச் சொந்தமான இக்கிராமத்தில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியேறவும் விவசாயம் செய்யவும் முற்படுவதானது மீண்டும் இப்பிரதேசத்தில் இனங்களுக்கிடையிலான முறுகல் ஏற்பட வழிவகுக்கும்.

இடப்பெயர்வுக்கு முன்னர் இக்கிராமத்தில் 456 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இம் மக்களை மீளக்குடியேற்றுவதில் அரசாங்கம் எந்தவித அக்கறையையும் காட்டவில்லை. இம் மக்கள் தமது சொந்த முயற்சியின் காரணமாகவே மீண்டும் குடியேறி விவசாய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவோடிரவாக அத்துமீறி நுழைந்த சிங்கள விவசாயிகள் நெல்விதைகளைத் தூவிவிட்டுச் சென்றுள்ளனர்.

இச்செயற்பாடானது மீண்டும் இப்பிரதேசத்தில் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை ஏற்பட வழிவகுக்கும்" என்றார்.

http://www.virakesar...asp?key_c=34652

Edited by akootha

  • தொடங்கியவர்

'சம்பூர் மக்கள் சொந்த இடத்தில் குடியேறமாட்டார்கள்'

'இந்திய- இலங்கை அரசுகளின் ஒப்பந்தப்படி, சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்நிலையம் அமையவுள்ளதால் அங்கு குடியிருந்த மக்கள் அந்தப்பகுதியில் மீளக் குடியேற்றப்படமாட்டார்கள் என்று கிழக்கு மாகாண முதலைமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தமிழோசையிடம் கூறினார்.

சம்பூர் மக்கள் சொந்த இடத்தில் தான் குடியேற வேண்டும் என்று விரும்பினாலும் சாத்தியப்பாடு இல்லாத பட்சத்தில் அவர்கள் மாற்றிடங்களை தெரிவு செய்து குடியேறித்தான் ஆகவேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்

'ஊர்காவல் படையினருக்கு காணி கொடுக்கப்படவில்லை'

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அரச காணிகள் ஊர்காவல் படைவீரர்களுக்கு வழங்கப்படுவதாக உள்ளூர் செய்திகளில் வெளியான தகவல்களையும் முதலமைச்சர் சந்திரகாந்தன் மறுத்துள்ளார்.

ஸ்ரீமாவோ ஆட்சிக் காலத்தில் தேக்கு மர உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட காணிகளில் புதிய மர நடுகையை மேற்கொள்வதற்காகவே ஊர்காவல் படை வீரர்களுக்கு அந்தப் பகுதிகள் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறினார்.

சுமார் 3000 ஏக்கர்கள் அளவான காணிகளே 3 ஆண்டுகளுக்கு இவ்வாறு ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஏக்கர்கள் வரையான காணிகள் என்று கூறப்படுவது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2011/10/111031_easternlankd.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் பூர்வீகத்தை எவ்வளவு துரிவாக அழிக்கலாம் என்று திட்டம் போட்டு ஸ்ரீ லங்கா காரர் செயல்படுகிறார்கள். தமிழ் முதலை அமைச்சர் ஏதாவது கடத்த நாய் கிடைக்குதா என்று அலைகிறார்.

வடக்கு கிழக்கு முழுவதும் சிங்களவர்களை குடி ஏற்றி விட்டு வடகிழக்கில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை இது மொத்தத்தில் பௌத்த நாடு என்று சிங்களவன் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதை இந்த உலகம் ஏற்றுக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.