Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானிய மாவீரர் தினம் தொடர்பாக உணர்வாளர் சீமானுக்கும் பல அழுத்தங்கள் !

Featured Replies

பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் மாவீரர் தினம் தொடர்பாக உணர்வாளர் சீமானுக்கும் பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அதிர்வு இணையம் அறிகிறது.

கடந்த வாரம் இந்தியா சென்றிருந்த குழு ஒன்று உணர்வாளர் சீமான் அவர்களைச் சந்தித்து தாம் நடத்தவிருக்கும் மாவீரர் தினத்துக்கு ஆதரவு தரும்படி கூறியுள்ளனராம்.

அதாவது தேசிய செயல்பாட்டாளர்களால் கடந்த 21 வருடமாக லண்டனில் மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு போட்டியாக ஒரு மாவீரர் தினத்தை எக்ஸ் எல் மண்டபத்தில் நடத்த புதிதாக வந்த சிலர் முனைப்புக்காட்டி வருவது யாவரும் அறிந்ததே.

இந் நிலையில் தாங்கள் நடத்தும் மாவீரர் தினத்தை ஆதரிக்கவேண்டும் என இவர்களில் சிலர் உணர்வாளர் சீமான் அவர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானியாவில் இருந்து இந்திய விசாவை பெற்று இவர்கள் எவ்வாறு இந்தியா செல்லமுடிகிறது என்று தெரியவில்லை என பலர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். அதிலும் குறிப்பாக சந்திரிக்கா என்று அழைக்கப்படும் ஒரு பெண் (முன்னர் பிரித்தானிய தமிழர் பேரவையின் செயல்பாட்டாளராக இருந்து பின்னர் அதில் இருந்து விலகியிருந்தார்) அவர் பிற்காலத்தில் உணர்வாளர் சீமானுடன் தொடர்புகளைப் பேணிவந்துள்ளார். தாம் தேசிய தலைவரின் மனைவியின் தூரத்துச் சொந்தக்காரர் என இவர் உணர்வாளர் சீமானிடம் தன்னை அறிமுகப்படுத்தியும் உள்ளார்.

தேசிய தலைவரின் மனைவி மதிவதனி அக்காவுக்கு எந்த முறையில் இவர் சொந்தம் என்று கேட்டால் நீங்கள் நிச்சயம் தலைசுற்றி கீழே விழுந்துவிடுவீர்கள். காரணம் மதிவதனி அக்காவின் மாமாவின் சித்தப்பாவின் ஒண்ணுவிட்ட தப்பியின் தாயும், எனது அம்மாவின் சகோதரியின் அப்பாவும் சொந்தக்காரர் என்று சொல்லுவார். அப்படிப் பார்த்தால் ஒரு கிராமத்தில் பிறந்த ஏன் யாழில் கூட அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சொந்தக்காரர் தான். இப்படிச் சொல்லியே இவர் பல காரியங்களைச் சாதித்துவருகிறார். இவர் 2010ம் ஆண்டு மே மாதம் இந்தியா சென்றபோது அங்கிருந்து அவர் திருப்பி அனுப்பப்பட்டார். காரணம் அவர் உணர்வாளர் சீமான் அவர்களின் கட்சி (நாம் தமிழர்) தொடங்கப்பட்ட ஆண்டு விழாவுக்குச் சென்றதே. அப்படி இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்பட்ட ஒருவர் தற்போது எப்படி இந்தியாவுக்கு மத்திய அரசின் துணையின்றி இந்தியா செல்லமுடியும் ?

குறிப்பாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் அடிகளாரை இந்தியா திருப்பி அனுப்பியது இன்னும் பெயர் குறிப்பிட முடியாத பல செயல்பாட்டாளர்களை இந்தியா திருப்பி அனுப்பியது. நிலை இப்படி இருக்க இவர் மட்டும் எப்படி திரும்பவும் இந்தியாவுக்குள் நுழைய முடிந்தது என்பதில் பல சந்தேகங்கள் தோன்றியுள்ளது.

இந் நிலையில் போட்டி மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தவிருக்கும் அணியின் முக்கிய பிரமுகர்களும் இந்தியா சென்றுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இச் செயல்களானது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் பல காலமாகச் செயல்பட்டு வருவதும், அவர்களே மாவீரர் நாளை தேசிய நினைவெளுச்சி நாளாக அனுஷ்டித்து வருவதும் யாவரும் அறிந்ததே.

இக் கட்டமைப்புகளை கலைப்பதையோ இல்லை சிதைக்க நினைப்பதையோ மக்கள் அனுமதிக்கக்கூடாது. மக்கள் தேசிய செயல்பாட்டாளர்களின் கரங்களை வலுப்படுத்தவேண்டும் ! குறை நிறைகள் இருப்பின் சுட்டிக்காட்ட முடியும் இல்லை விவாதிக்க முடியும். ஆனால் அதற்காக ஒரு கட்டமைப்பே பிழையானது எனச் சொல்வது எந்தவகையிலும் ஞாயம் ஆகாது !

இங்கு அதிர்விலிருந்து கொண்டு வந்து கொட்டியதோ, எரிமலையில் இருந்து தள்ளியதோ அல்ல பிரட்சனை ... இந்த குறிப்பிட்ட பெண் ... மாவீரர் நாளை பயன்படுத்தும் ஆழ ஊடுருவும் கும்பலை சேர்ந்தவர் என நம்பப்படுபவர் ...

1. இந்தியா சென்றாரா?

2. சென்றாராயின் எவ்வாறு இந்திய விசாவைப் பெற்றார்?

3. இவரது பகிரங்க கடந்த கால செயற்பாடுகள் இந்திய தூதரகத்துக்கு தெரியாதா?

4 சீமான், அங்கு 24 மணி நேரமும் றோ அதிகாரிகளினால் கண்காணிக்கப்படுபவர், அப்படி ஒருவரை இந்த புலிப்பெண் எவ்வாறு சந்திக்க முடிந்தது???

5 ....

.... நூறு கேள்விகளுக்கு பதிலை அழித்து விட்டு ... அதிர்வோ, இடிமுழக்கமோ தேடுங்கள்!!!!!

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

... இதில் கூறப்பட்டவர் மட்டுமல்ல, முள்ளிவாய்க்காலில் இறுதிவரை தலைவரோடு நின்று விட்டு ஐரோப்பாவிற்கு இறக்குமதியோ/ஏற்றுமதி செய்யப்பட்டு வந்து உலாபுபவர்களும், இங்கு மாவீரர் நாளை கணக்கு காட்டி செய்ய வெளிக்கிடும் கூட்டங்களும் கிரமமாக இந்தியாவிற்கு தங்கு தடையின்றி சென்று வருகிறார்களாம்!!!!!!!!! ... ஆனால் பாவம் உந்த பாதிரியார் இமானுவேல் அடிகளார் போன்றவர்களை இந்தியாவிற்கு நெருங்கவே விடுகிறார்களில்லை!!!!!!!!!????????

... நாங்களும் இந்தியா கண் திறந்தால் தான் விடிவு என நம்புபவர்கள், வாழ்வோ, சாவோ இந்தியாவினால்தான் என நினைப்பவர்கள், அதற்காக இந்திய கொள்கை எமக்காக மாற வேண்டும் என தவமிருப்பவர்கள் .... ஒருவேளை இந்த புதுப்புலிகளை இந்தியா ஏற்று விட்டதா???? நடப்பவைகளைப் பார்க்க/ யோசிக்க அப்படித்தான் தெரிகிறது?????

... என்ன புலத்தில் இந்த தடவை கணக்கு வழக்கு சொல்லப்போகும், பல நாடுகளில் நடக்க இருக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு இந்தியா தான் main sponsors என்கிறார்கள்!!!????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்களை உண்மையாக வணங்குவோர் எங்கும் வணங்கலாம். வீட்டு குசினிக்குள்ளும் நின்று கொண்டு அவர்களை நினைத்து நன்றி செலுத்தலாம்.

அவர்களை போற்றி புகழ் பாடுவதிலும் பார்க்க அந்த நேரத்தை அவர்களின் பேரால் உணவு வங்கிகளில் உணவு தானம் பண்ணியோ, உதவி பண்ணியோ அல்லது பூங்காவை சுத்தம் பண்ணியோ நாம் இன்னும் அவர்களை கவுரவிக்கலாம்.

நான் எனது உற்ற நண்பனும் மாவீரனும் ஆன அய்யனின் பெயரில் ஒரு தேவாலய உணவு வங்கியில் கூழ் தானம் கொடுப்பேன்.

பெட்டியில் அடைத்த அல்லது தகரத்தில் அடைத்த உணவுகளையே அங்கே பெற்றுவருவோருக்கு, சூடான வாய்க்கு ருசியானா சூப் என்பது ஒரு பெரிய விடயம். ஒவ்வொருவரும் சந்தோசமாக வாங்கி கொண்டே சொல்வது "God Bless Ayyan".

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.