Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரகசிய முகாம் இல்லை யாரும் நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவோம்: புளொட் அமைப்பின்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கு சித்தார்த்த மறுப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Siththarththan_150PL.jpg

சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா மன்றக்குழுவின் ஜெனீவா அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து இன்று ஆராயப்பட்டபோது, இந்தக்குழுவின் துணைத் தலைவரான பெலிஸ் கியர் இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தமக்கு பல புகார்கள் வந்ததாக கூறியதுடன் இலங்கையில் ஏழு ரகசிய முகாம்கள் இருப்பதாகவும் அங்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் 700பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் கல்லூரி, வவுனியா 211வது பிரிகேட்டின் தலைமையகம், வெளிக்குளம் பாடசாலை, புளொட் அமைப்பின் வவுனியா தடுப்புமையம், தர்மபுரத்திற்கு பகுதியில் கைவிடப்பட்ட ஐந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள், முல்லைத்தீவில் இரு முகாம்கள் என்பன இரகசிய தடுப்பு முகாம்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தில் புளொட் அமைப்பின்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுப் பற்றி அந்த அமைப்பின் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் ஊடகவியலாளர் ஒரவர் தொடர்புகொண்டு கேட்டபோது சித்தார்த்தன் தெரிவித்திருப்பதாவது..

அப்படியான ஒரு முகாம் நிச்சயமாக இல்லை.

முன்பு இருந்ததும் இல்லை.

அவர்கள் கூறுகின்ற வவுனியா ஹொரவப்பத்தானை வீதியில் இருக்கின்ற எங்கள் அலுவலகம் மக்கள் வந்து எங்களைச் சந்திக்கின்ற ஒரு அலுவலகமாக இருந்திருக்கின்றது.

அங்கு நானும் அடிக்கடி சென்று பணிபுரிந்திருக்கின்றேன். நான் இங்கிருந்து செல்லுகின்றபோது அங்குதான் கூடுதலாக நின்று ஆட்களைச் சந்திப்பது வழக்கம்.

யுத்தகாலத்தில் புலிகள் எங்களைத் தாக்கியபோது பாதுகாப்புக்கருதி எங்களுக்கு இராணுவத்துடன் ஒரு உறவு இருந்தது. யுத்தம் முடிந்தபின்பு இடம்பெயர்ந்த மக்கள் இருந்த முகாம்களுக்குள்கூட இராணுவம் எங்களை அனுமதிக்கவில்லை. ஆகவே இப்படியான குற்றச்சாட்டுக்களை முற்றுமுழுதாக நான் நிராகரிக்கிறேன். இதை யாராவது நிரூபிக்க முடியுமென்றால் நாங்கள் அரசியலில் இருந்துகூட ஒதுங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்."

இது குறித்து மனித உரிமை இயக்கங்களோ அல்லது தன்னார்வ இயக்கங்களோ இந்த மாதிரியான ஒரு அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு முன்பு உங்களிடம் கருத்துக் கேட்டார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சித்தார்த்தன்,

"இல்லை, கேட்கவுமில்லை. அவர்கள் அந்தப் பகுதிக்கு சென்றதாகவும் நான் நம்பவில்லை. யாரும் சொன்னதைக் கேட்டு வைத்துக்கொண்டு அது இந்த அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருக்கிறது என்றுதான் நான் நினைக்கின்றேன். வவுனியா ஹொரோவப்பத்தானை வீதியில் ஒரு அலுவலகம் இருந்தது. யுத்தம் முடிந்து சொற்ப காலங்களுக்குள் அதை நாங்கள் மூடி உரிமையாளரிடம் கையளித்துவிட்டோம். அவர்கள் அதை வேறு யாருக்கோ வாடகைக்கு கொடுத்திருக்கின்றார்கள்."

எந்த ஒரு காலகட்டத்திலும் போருக்கு பிறகு அல்லது போர்க்காலத்தில் கூட புலிகள் இயக்க உறுப்பினர்களை நீங்கள் உங்களது முகாம்களிலே வைத்து விசாரித்து இராணுவத்திடம் கையளித்தது உண்டா? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சித்தார்த்தன்,

"இல்லை, அப்படியான அனுமதிகள் என்றுமே அவர்கள் எங்களுக்கு தந்தது கிடையாது. அதை நாங்கள் விரும்பியதும் கிடையாது.

நிச்சயமாக எங்களைத் தாக்கவந்த இடங்களில் சிலவேளைகளில் எங்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் வைத்திருந்த ஆயுதங்களைப் பாவித்து தாக்குதல் நடத்தியிருக்கலாம் அதாவது எங்களைத் தாக்குகின்றபோது தற்காப்புத் தாக்குதல்கள் நடத்தியிருக்கின்றோமே தவிர இதற்கென்று தேடிப்பிடித்து அவர்களை விசாரிக்கின்ற வேலைகள் எதையும் நாங்கள் செய்யவில்லை." என தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=51778&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது வேண்டுமானால் நல்லவன் போல் வேடம் போடலாம் ஆனால் கடந்த காலங்களில் என்னத்தை தமிழருக்கு செய்தீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சும்மா பீலா விடவேண்டாம் கண்ணு

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் திரை உலகம் நடிகர்களை தேடும் போது சித்தார்த்தனையும் சேர்த்து கொள்ளுங்கள்.என்னமா நடிக்கிறாரு.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்னத்துக்காகப் போராடினார்.. தற்காத்துக் கொள்ள. சிங்களவனோட நின்றதே.. தற்காத்துக் கொள்ளவாம். அப்படி நின்று எதற்காக இவர்கள் போராடினார்கள்..?????! இப்போ.. புலிகள் இல்லையே.. அப்ப அதே தமிழீழத்திற்காகவா.. இப்ப போராடினம்..???! புலிகளை.. தமிழ் மக்களை.. காட்டிக் கொடுத்ததற்கு இப்படியும் ஒரு விளக்கம் இருக்கோ..!

புலிகள் என்றாலாவது தவறுகள் நிகழ்ந்துள்ளன என்று ஒத்துக் கொள்கிறார்கள்.. ஆனால் இவர்களோ.. 35 வருடமா இனத்துரோக காட்டிக்கொடுப்பு சித்திரவதை ஆயுத அரசியல் செய்திட்டு.. இப்ப அதையும் மறைச்சு.. நல்ல பிள்ளைக்கு நடிக்க முயலினம். இந்தப் பருப்பு வவுனியாவிலேயே வேகாது. :unsure::lol::icon_idea:

Edited by nedukkalapoovan

அயல்நாட்டு பயங்கரவாதிகள் வழங்கிய சித்தார்த்தனின் சொந்த வாகனத்தில் தான் பத்திரிகையாளர் சிவராம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதையும் இல்லை என்று சொல்லும் தைரியம் சித்தார்த்தனுக்கு இருக்கா? ஆதாரங்கள் நிறைய உண்டு. சிங்கள, ஹிந்திய அரச பயங்கரவாதிகளுடன் இணைந்து, பம்பலப்பிட்டி போலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள புளட் முகாமில் இருந்துகொண்டு சித்தர்த்தனால் செய்யப்பட்ட படுகொலை இது. இது போல் இன்னும் 100 உதாரணங்களைச் சொல்லலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.