Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்று வா மகளே சென்று வா

Featured Replies

சமõதான தேவதையாகத் தன்னை இனம் காட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. அரசியலைவிட்டு ஒதுங்கி நீண்ட காலம் வெளிநாட்டில் தங்கியிருந்த அவர் இலங்கை திரும்பியதும் திடீரென அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டார். மிக விரைவிலேயே பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் ஆகிக் கொண்டார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் தன்னை மக்களின் நெருங்கிய நண்பி போன்று காட்டிக் கொள்வதில் சந்திரிகா முழு மூச்சுடன் செயற்¬பட்டார். சூரிய கந்தையில் போய் நின்று புதைகுழி தோண்டினார். கிராமங்களிற்குள் இறங்கி மக்களைச் சந்தித்தார். அவற்றை அடித்தளமாக வைத்துக்கொண்டு சமாதானச் சாயத்தையும் பூசி ஜனாதிபதியானார்.

ஆட்சிபீடம் ஏறியதும், எல்லா அரசியல்வாதிகள் போன்று சந்திரிகாவும் நடந்துகொண்டார். மக்களை மறந்தார்; தான் ஓர் அரசி போன்று நடந்து¬கொண்டார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என நாட்டு மக்களுக்¬குச் சத்தியம் செய்த அவர், தனது 11 வருட பதவிக் காலத்தில் அந்தக் கதிரை தந்த சொகுசான கதகதப்பை முழுமையாக அனுபவித்தார். தன் வாக்குறுதியை மறந்துவிட்டுப் போகும்போது மற்றொருவரிடம் கையளித்துவிட்டும் போய்விட்டார்.

சந்திரிகா ஆட்சியிலிருந்தபோது அவர் பற்றிய கதைகளுக்கு எப்படிக் குறைவில்லையோ அதேபோன்று அவர் பதவி விலகிய பின்னும் செய்திகளுக்குக் குறைவில்லை. அந்த வகையில் ஆட்சியிலிருந்த சந்திரிகா பற்றிய தொடர் இது.

சந்திரிகா அரசியலுக்குள் மீள நுழைந்தபோது அவருக்கு ஆதரவாக இருந்து, அவரது வெற்றிக்கு வழிவகுத்தவர்ளில் ஒருவர் விக்டர் ஐவன். பிரபல அரசியல் ஆய்வாளரும், "ராவய' வார இதழின் ஆசிரியருமான அவர் ஒரு காலத்தில் சந்திரிகாவுக்கு உற்ற நண்பர்.

கருத்து முரண்பாடுகளால் பின்னர் சந்திரிகாவிடமிருந்து விலகினார் விக்டர் ஐவன். அவரே இந்தத் தொடரை வரைந்துள்ளார். சந்திரிகாவின் வீரதீரங்கள், துணிவு, பொய், புரளி, பித்தலாட்டம் என்பன பற்றிய பல சுவையான அம்சங்களை அவர் இதில் திரட்டித் தந்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்தத் தொடர் எழுதப்பட்டிருந்தது. அதனை அப்படியே மொழியாக்கம் செய்து சூரியகாந்தியில் தொடர் கட்டுரையாக வெளிவந்தது அதை உங்களுக்கு தருகின்றேம்

சந்திரிகா அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விலை மட்டும் 20 இலட்சம் ரூபா

ஜனாதிபதி சந்திரிகா, ஜனாதிபதிப் பதவி யிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னர் அவர் தொடர்¬பான எனது அனுபவங்களைத் தொகுத்து நூல் ஒன்றை எழுதவேண்டும் என்ற எண்ணம் 1999 இல் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த நேரத்தில் உதயமாயிற்று. அந்த நூலை எழுதுவதற்காகப் பெரு¬மளவிலான நேரத்தைச் செலவிட்டதுடன், நான் எதிர்பார்த்தபடி அந்தநூலின் 90 சதவீதமான வேலை¬கள் முடிவடைந்தன. அவ்வாறு தொகுக்கப்பட்ட விவரங்கள் 500 இற்கும் குறையாத தாள்களில் தட்டச்சிடப்பட்டன.ஆனால், எஞ்சியுள்ள 10 சதவீதப் பணிகளை ஏதோ காரணங்களால் என்னால் செய்துமுடிக்க முடியவில்லை.

சந்திரிகா பற்றிய நூல் தொடர்பாக 90சதவீதப் பணிகள் முடிவுற்றிருந்த வேளையிலேயே பிரதம¬ நீதியரசர் குறித்த நூலை எழுதியிருந்தேன். பிரதம நீதியரசர் பற்றிய நூலை எழுதி என்னால் வெளியிட முடிந்தபோதிலும் சந்திரிகா பற்றிய நூலை எழுதி முடிக்க இன்றுவரை என்னால் முடியாமற்போயிற்று. இருப்பினும், தற்போது சந்திரிகா தனது பதவிக்காலத்தின் இறுதிநாள்களிலுள்ளார். அவர் பதவி துறப்பதற்கு முன்னராவது அவர் பற்றிய நூலை எழுதி வெளியிட என்னால் முடியாமல் உள்ளது. அந்தக் குறையை இட்டு நிரப்பவே இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன். அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் சிலவற்றை அவருக்கு நினைவூட்டுவது எனது கடமையும் பொறுப்புமென நான் நம்புகிறேன்.

சந்திரிகா ஆட்சி அதிகாரத்திற்கு வந்த விதத்தை விமர்சிக்கும்போது சில விமர்சகர்கள் அதில் எனக்குள்ள பங்களிப்புக் குறித்தும் விமர்சித்துள்ளனர். சந்திரிகா பதவிக்கு வருவதற்கான சூழலை ஏற்படுத்தியமை தொடர்பாக என்மீது எனது ஒரு சில நண்பர்கள் இன்றும் குற்றம் சுமத்துகின்றனர். சந்திரிகா ஆட்சிக்கு வருவதற்குவழி அமைத்தவர் களில் நானும் ஒரு முக்கிய பங்காளியாகவே இருந்துள்ளேன் என்பது எனது நம்பிக்கை. இந்த விடயத்தில் நான் எனது பங்களிப்பை வழங்கியதற்கான காரணம், எனக்கு நன்கு தெரிந்தவரை பதவியில் அமர்த்தி அதன்மூலம் தவறான வழிகளில் லாபங்களைப் பெற்று குறுகிய நோக்கங்களை நிறை¬வேற்று¬வது அல்ல. நாட்டிற்கு நன்மைகள் கிடைக்கும் என்பதாலேயேயாகும்.

நான் சந்திரிகா மீது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பு¬களையும் கொண்டிருந்தேன் என்பது உண்மையே. இருப்பினும், நான் சந்திரிகாவைப் பற்றி நினைத்திருந்தது "கனவுமாளிகை தானா' என்ற பிரச்சினை எழுந்தது அவர் பதவிக்கு வந்த பிறகு அல்ல. அவர் பதவிக்கு வருவதற்கு முதல் நாளிலேயே ஆகும்.

அவர் பதவிக்கு வருவதற்கு முதல்நாள் அவரின் ஆதரவாளரும் அதைவிட பண்டாரநாயக்க குடும்பத்திற்கு மிக நெருங்கியவருமான ஒருவர் சந்திரிகா குறித்து என்னுடன் கதைத்தார். 1994 தேர்தலுக்கு முதல்நாளிரவு அவர் என்னுடன் நீண்டநேரம் இதுபற்றி உரையாடிக்கொண்டிருந்தார். ""தொடர்ந்து 17 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஐ.தே.கட்சி அரசைத் தோற்கடிப்பது தவறு அல்ல. அந்த நோக்கத்தில் சந்திரிகா தேர்தல் களத்தில் நிற்பதும் தவறு அல்ல. இருப்பினும், சந்திரிகா மீது தேவைக்கு அதிகமான விதத்தில் நம்பிக்கை வைப்பது புத்திசாலித்தனமானது அல்ல''. என அந்த நபர் தெரிவித்தார்.

தனக்கு எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.