Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

23 கப்பல்கள் புலிகளிடமாம்

Featured Replies

23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்படை: டெய்லி மிரர்

[புதன்கிழமை, 8 பெப்ரவரி 2006, 18:04 ஈழம்] [கொழும்பு நிருபர்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படையானது 23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அந்தக் கட்டுரையின் தமிழாக்கம்:

விடுதலைப் புலிகளின் பல கடற்புலி உறுப்பினர்கள் அண்மைக்காலமாக பயிற்சிகளை முடித்து வெளியேறுகின்றனர்.

மறவன் மற்றும் திருவடி பயிற்சி முகாம்களிலிருந்து பயிற்சிகளை முடித்து வெளியேறும் நிகழ்வில் முக்கிய கடற்புலிகளான குகன், செஞ்சீரன், விநாயகம், மோகன், மகேந்திரன், மங்களேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள நிலையில் உலகின் மிகப் பயங்கரமான கெரில்லா கடற்படையாக இருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்படைக்கு அவர்கள் பலரை இணைத்து வருகின்றனர்.

இஸ்ரேலியத் தயாரிப்பான டோராப் படகைக் கொண்டு பெண் கடற்புலியொருவர் அண்மையில் சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தி பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தார்.

பூகோள ரீதியாக தமிழீழத்தின் பாதுகாப்பானது கடலுடன் தொடர்புபட்டுள்ளது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் எண்ணுகிறார்.

தங்களின் கடற்படை பலம் வாய்ந்ததாக இருந்தாலே தங்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் தரைப் பகுதியினைப் பாதுகாக்க முடியும் என்றும் எதிரியை விரட்டியடிக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

விடுதலைப் புலிகளின் கடற்படையானது படிப்படியாக வளர்ச்சி பெற்று வருவதற்கு இதுவே காரணம்.

500182374hv.jpg

நன்றி ஈழவிசன்

பிரபாகரன் மற்றும் அவரின் சகாக்கள் பலருக்கும் கடலுடன் வரலாற்று ரீதியான பிணைப்பும் உள்ளது.

விமான ஓடுபாதையை விட பிரபாகரனின் மனதை நெருங்கியது கடலாகும்.

விடுதலைப் புலிகளிடம் தொடக்கத்தில் சில மீன்பிடி இழுவைப் படகுகளும் கண்ணாடியிழைப் படகுகளுமே இருந்தன. இவற்றைப் பயன்படுத்தியே மக்களையும் பொருட்களையும் வடக்கிலிருந்து தென்னிந்தியாவிற்கு கொண்டு சென்று கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் இன்று அவர்கள் ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ஆயுதக்கப்பல்கள் மட்டுமல்லாது சரக்குக் கப்பல்களையும் பயன்படுத்துமளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளனர். கடந்த சில வருடங்களில் அவர்கள் துரித வளர்ச்சியடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக விடுதலைப் புலிகளின் கே.பி என்பவர் உள்ளார். கப்பல்களில் விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பொருட்கள் கொண்டுவரப்படுமாயின் அதன் செயற்பாடுகளை சூசை கவனிக்கிறார்.

கே.பி. மற்றும் சூசை ஆகியோரின் செயற்பாட்டினால் இன்று விடுதலைப் புலிகளின் கடற்படையானது போராளிகள், மாலுமிகள், கப்பற் பொறியியலாளர்கள் மற்றும் கப்டன்கள் என வளர்ச்சி கண்டுள்ளது.

கடற்புலிகளின் பொறுப்பாளராக 1991 ஆம் ஆண்டு சூசை நியமிக்கப்பட்டார். இவரின் செயற்பாடுகளுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பக்கபலமாக இருந்துள்ளார்.

இதன் காரணமாக யுத்தத்தில் நீண்ட காலத்திற்கு முன்னர் ஏற்பட்ட காயத்திற்காக சூசைக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்கவும் விடுதலைப் புலிகளின் தலைமை முன்வந்தது.

விடுதலைப் புலிகளின் கப்பற் பலமானது 10 முதல் 15 வரையாக உள்ளது என்று டொக்டர் விஜய் சக்குஜா கடந் ஆண்டு மதிப்பீடு செய்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் ஆழ்கடல் செயற்பாடுகள் சிங்கப்பூரிலிருந்து சோழன் கப்பல் வாங்கப்பட்டதையடுத்தும் கேரளாவில் கடல்புறா கப்பல் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தும் 1984 ஆம் ஆண்டு தொடங்கின.

அவர்களிடம் தற்போது நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய 11 கப்பல்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடைசியாக தென்னாப்பிரிக்காவிடமிருந்த

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.