Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கிராம வீட்டில்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கிராம வீட்டில்

மரங்களும் பறவைகளும் இயற்கையும் அரசியலையும் உண்மைகளையும் பேசினால் !!!

(யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கிராம வீட்டில் )

அந்த முற்றத்திலே ஒரு நிழல்வாடிமரமும் பூவரசும் ஒன்றையொன்று தமது இலைகளால் தொட்டுப்பேசி கதைத்துகொண்டன , இந்த காற்று அளவாக அடிப்பதனால் நான் உன்னை தொட்டு கதைக்க இலகுவாயிருக்கின்றது என்றது நிழல்வாடி.

அது கிடக்கட்டும் இந்த முற்றத்து மண்ணிலே எத்தனை கொடூரம் எங்கள் இருவர் கண்முன்னால் நிகழ்ந்தது அதை என்னால் என்றுமே மறக்க முடியாது என்றது பூவரசு. அதைகேட்டு நிழல்வாடி அழத்தொடங்கியது. பூவரசுவும் அழுதது அப்போது மழை மேலிருந்து துளிர்த்தது இந்தா இருவரும் அழுகிறதை நிறுத்துங்கள் என்றது மழை. இப்படியே அழுது வடிந்து என்ன பயன் வலியோரின் பலத்தையெல்லாம் எங்கள் பக்கம் ஆதரவு கிடைக்கும்படி திரட்டவேண்டும் என்றது மெதுவாய் வீசிய தென்றல் ,சரிதான் அதற்கு என்ன வழி என்றது பூவரசு எங்களுடன் இருந்தவர்கள் பலர் தூர தேசத்துக்கு போய் வாழுகின்றார்கள் அவர்களின் கையில் தான் எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கின்றது என்றது தென்றல் நிழல் வாடி ஒன்றும் புரியாமல் தலைதாழ்த்தி நின்றது.

அது தான் சமயம் என்று அருகில் கட்டப்பட்டுகிடந்த நாம்பன் நிழல்வாடியின் நுனி இலைகளை மேய்ந்துவிட்டது. பூவரசு சொன்னது இப்படிதான் கொஞ்சம் குனிந்தால் பக்கத்தில் இருப்பவர்களே நம்மை தின்றுவிடுவார்கள் என்றது.நம்மை நட்டு வளர்த்தவர்களை எந்த வித காரணமுமின்றி கொன்றொழித்தவர்கள் அந்தகொடுமைகளை செய்ய ஏவியவர்கள் எல்லோரும் பிரமுகர்கள் போர்வையில் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள் நாட்டிலே என்ன செய்வது அவர்களின் கைகளிலே ஆட்சி அதிகாரம் என்று கரைந்து விட்டு சென்றது பூவரசங்கிளையில் இருந்த காகம்.

என்னுடன் சேர்ந்து கொண்டது என்பிள்ளைகளின் இரத்தம், இன்னும் அந்த கொலைவெறி பிடித்தவர்களுக்கு அடங்கவில்லை. இரத்ததாகம் மேலிடத்து உத்தரவுகளுக்கு இணங்க அன்றாடம் என்மீது என்பிள்ளைகளின் இரத்தம் கொட்டுகின்றது என்றது மண். ஒருகணம் அமைதி நிலவியது.

வானத்திலே பேரிரைச்சலுடன் கொலைகாரர்களின் உலங்குவானூர்தி பறந்து சென்றது. ஐயோ என்று நிழல்வாடி பயத்தால் அலறியது. பயபடாதே குண்டு வீசமாட்டாங்கள் என்றது பூவரசு. கொடியவர்களின் குண்டுவீச்சால் மனிதர்களுடன் எத்தனையோ மரங்களும் முறிந்து வீழ்ந்து அழிந்தனவேஎன்றது சற்று தொலைவில் நின்ற வாழைமரம்.

சங்கதி கேள்விபட்டியளோ பக்கத்து வளவெல்லாம் எல்லாத்தையும் அழிச்சுகொண்டு வாறாங்கள் கொலைகாரங்கள் பெரிய இராணுவமுகாம் அமைச்சு இஞ்சை வாழும் சனத்துக்கு பாதுகாப்பு வழங்கப்போகினமாம் என்ற செய்தியோடு பறந்து வந்தது பட்டிக்காட்டு பனங்கொத்தி.

பக்கத்தில் நின்ற பனை மரம் கொல்லென்று சிரித்தது. இஞ்சே ஏன் நீர் முப்பத்திரெண்டும் தெரிய சிரிக்கிறவை போல சிரிக்கிறீர் என்றது ஊர்க்குருவி. இல்லை கொலைகாரரே பாதுகாப்பு

கொடுக்கப்போகினமாம் மக்களுக்கு என்றதும் சிரிப்பு அடக்க முடியலே. உலகத்துக்கு ஏய்க்காட்ட கொலைகாரதலைவர் சொல்லுற சுத்துமாத்து செய்தி என்று முடித்தது பனைமரம்.

(வன்னியின் வெளியுக்குள்) எங்கள் மீது படிந்த எங்களின் பிள்ளைகளின் இரத்தம் இன்னும் சரியா காயவில்லை அதுக்குள்ளே ஆயுத கண்காட்சி காட்ட எங்களை வெட்டி கட்டிடம் கட்டப்போகிறாங்களாம் கொலைகாரங்கள்என்றது பக்கத்தில்கிடந்த மண்ணாங் கட்டியிடம் மண்ணாங் கட்டியொன்று. என்ன செய்யிறது அவங்களை தட்டி கேட்க யாருமில்லை என்றது கொத்தி தின்னவந்தகாகம். இன்னும் அந்த கூக்குரலும் அவல ஓசைகளையும் என்னால் மறக்க முடியவில்லை என்றது மாடு. எப்படி அவங்கள் செய்த அக்கிரமங்களை காட்டுமிராண்டித்தனங்களை மறக்க முடியும் என்றது காகம்.

இப்போதைக்கு இல்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் இந்த மண்ணில் வாழும் தமிழருக்கு சுதந்திரமும் நீதியும் கிடைத்தே தீரும் என்றது கோபத்தால் கனல் கக்க வீசிய வெயில். பகலவன் நிருத்திய உலகப்பேரரசன் வாக்கு பிழைக்காது என்றது எங்கிருந்தோ வந்த பேரொலி.

கற்பனையாக்கம்

(பத்திரிகை செய்திகளினடிப்படையில்)

ம.இரமேசு – பாரடெசிய.

19 -11 -2011

http://www.alaikal.com/news/?p=88391

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் அந்த கூக்குரலும் அவல ஓசைகளையும் என்னால் மறக்க முடியவில்லை என்றது மாடு. எப்படி அவங்கள் செய்த அக்கிரமங்களை காட்டுமிராண்டித்தனங்களை மறக்க முடியும் என்றது காகம்.

செத்துப்போனது நாங்களாக இருக்கும்போது எப்படி மறக்கமுடியும்...

சாம்பல் தெரியுமோ

சாமபல்.

ஊத ஊத

உள்ளே கணன்றுகொண்டிருக்கும்

(எங்கோ படித்த ஞாபகம்.அகிலனின் கவிதை ஒன்றில் என்று நினைக்கிறேன்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.