Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசாரணைக்கு கூட வெளியில் வர முடியாதா ?

Featured Replies

விசாரணைக்கு கூட வெளியில் வர முடியாதா ?

திகார் ஜெயிலில் விசாரணை; நீதிபதி அதிரடி

நாட்டை உலுக்கிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை இனி திகார் ஜெயிலுக்குள்ளேயே நடக்கும் என வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி ஓ.பி.,சைனி அறிவித்துள்ளார்.

கைதிகள் கோர்ட்டுக்கு அழைத்து வரும் சிரமம் இனி போலீசாருக்கு இருக்காது என்றாலும் விசாரணை என்ற நேரத்தில் திகார் ஜெயிலில் இருந்து பாட்டியாலா சிறப்பு கோர்ட்டுக்கு வந்து செல்லும் வாய்ப்பு பறிபோனது. இந்த நேரத்திலாவது வெளி உலகை பார்க்கும் நிலை இழக்க வேண்டியிருப்பதால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜா மற்றும் கனிமொழி உள்பட கைதிகள் கோர்ட்டுக்கு வரும்‌போது உறவினர்கள் பலரும் கூடுவதாலும், இவர்கள் சந்திப்பை தவிர்க்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கோர்ட் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் நீதிபதி தரப்பில் இதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இந்த வழக்கை பொறுத்த வரையில் அனைவருக்கும் ஜாமின் மறுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிறைக்குள்ளே கோர்ட்டை நடத்த நீதிபதி எடுத்த முடிவு குற்றவாளிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நீதிபதியின் முடி‌‌வை டில்லி ஐகோர்ட்டும் ஏற்றுக்கொண்டது.

http://tamil.yahoo.c...-104000441.html

Edited by akootha

  • தொடங்கியவர்

2 ஜி வழக்கில் ஐந்து பேருக்கு பிணை

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருப்பவர்களில் ஐந்து பேருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு டெல்லி திகார் சிறைச்சாலையில் இருக்கும் பலரில, ஐந்து தனியார்துறை உயரதிகாரிகளுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி. எஸ. சிங்வி மற்றும் எச் . எல் . தத்து கொண்ட பெஞ்ச் உத்தரவிட் டுள்ளது. .

யுனிடெக் நிறுவனத்தின் மேலா ண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, சுவான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோய ங்கா, ரி லை யன்ஸ் அம்பானி குழுமத்தின் அதிகாரிகளான ஹரி நாயர், கவுதம் கோஷ் மற்றும் சுரேந்திர பிபா ரா ஆகியோருக்கே உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இவர்களை விடுவிக்க காப்புத் தொகையாக தலா பத்து லட்சம் ரூபாய்களை, இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதிக்கு திருப்தியளிக்கும் வகையில் அந்த ஐந்து பேரும் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியுள்ளனர்.

தங்களுக்கு பிணை வழங்க சிறப்பு நீதிமன்றமும், டெ ல்லி உயர்நீதிமன்றமும் மறுத்த நிலையில், இந்த ஐவரும் உச்சநீதிமன்றத் தை அணுகி னார்கள். அவர்களுக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு த் தெரிவித்த மத்திய புலனாய்வுத்துறை, அந்த ஐந்து பேரும் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தை அணுகலாம் என வாதிட்டது. எனினும ் அதை நிராகரித்த உச்சநீதிமன்றம் அவர்களுக்கு பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை 14 பேர் மீது சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வழக்கு விசாரணையும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தனக்கு இந்த வழக்கு தொடர்பில் பிணை வழங்க வேண்டும் என்று கோரிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் மனு சிறப்பு நீதிமன்றதால் நிராகரிக்கப்பட்ட நிலையில் , அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அந்த வழக்கின் விசாரணை டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது.

இதனிடையே இந்த வழக்கின் விசாரணையை, திகார் சிறைச்சாலையில் நடத்துமாறு நேற்று பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற நிர்வாக உத்தரவை நிறுத்தி வைக்க டெ ல்லி உயர்நீதிமன்ற ம் உத்தரவிட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற த்தில் கோரிக்கை விடுத்ததை அடுத்து நீதிமன்றம் தனது உத்தரவை மாற்றியமைத்ததுடன், மாற்று இடத்தைத் தேர்வு செய்யுமாறு நீதிமன்ற பதிவாளருக்கும் அறிவுறுத்தியுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/india/2011/11/111123_bail_twogcase.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.