Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவில் காணி வேண்டிய புலம் பெயர் தமிழருக்கு 9 வருடம் சிறை

Featured Replies

இந்தியாவில் காணி வேண்டிய புலம் பெயர் தமிழருக்கு 9 வருடம் சிறை

இந்தியர் என்று பொய்யான தகவலைக் கொடுத்து இந்தியாவில் காணி வேண்டிய புலம் பெயர் தமிழர் இருவருக்கு ஒன்பது வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்திய பிரஜைகள் என்று கொழும்பு சென்று இந்திய நிரந்தர வீசா எடுப்போர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வழக்கு நல்லதோர் உதாரணமாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் காணிகளை வேண்டுவோர் என்ன முறையில் வேண்டியுள்ளோம் என்று சிந்திக்க வேண்டும். காணிகளை வேண்டி பணத்தை முதலிடும்போது மௌனமாக இருக்கும் இந்திய அதிகாரிகள் அதை விற்கும்போதுதான் சட்டத்தை கையில் எடுப்பர் என்பதை உணரவும் இந்த வழக்கு உதவியாக உள்ளது.

இதோ இது குறித்த செய்தி :

தாங்கள் இலங்கைப் பிரஜைகள் என்ற உண்மையை மறைத்து இந்தியர்களெனத் தெரிவித்து இந்தியாவில் சொத்துகளை வாங்கிய குற்றச்சாட்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியின் தற்காலிக விரிவுரையாளருக்கும் அவரின் பெற்றோருக்கும் மதுரை நகர நீதிமன்றம் 9 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கடவுச்சீட்டு சட்டத்தின் பிரிவு 120 “பி’ (குற்றச்சதி) மற்றும் இந்திய குற்றவியல் கோவை 476 ஆகியவற்றின் பிரகாரம் ஜக்கொப் சவரி முத்து (66 வயது) அவரின் மனைவி மேரி அக்னேஸ் (65 வயது) அவர்களின் மகன் ரொகான் சவரி முத்து ஆகியோருக்கு நீதிபதி உமாமகேஸ்வரி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் அவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஜக்கொப் சவரிமுத்துவும் அவரின் மனைவி மேரி அக்னேஸும் பெல்ஜியத்திலிருந்து 15 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். பெல்ஜியத்தில் அவர்கள் இலங்கை அகதிகளாக இருந்துள்ளனர் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

அகதி முகாமில் இருப்பதற்குப் பதிலாக மதுரையில் வாடகை வீட்டில் அவர்கள் தங்கியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடைக்கானலில் உள்ள பாடசாலையொன்றில் தங்கள் மகன் ரொகானை சேர்த்தபோது தங்களை இலங்கை அகதிகள் என்று அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் அவரை மதுரைப் பாடசாலைக்கு மாற்றியபோது தங்களை இந்தியப் பிரஜைகள் என்று தெரிவித்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 2003 இல் மேரி பிரவீணா என்ற இந்தியப் பிரஜையை ரொகான் திருமணம் செய்துள்ளார்.

அதன் பின்னர் நகரிலுள்ள அமெரிக்கன் கல்லூரியில் தற்காலிக விரிவுரையாளராக இணைந்தார். அதன் பிறகு மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கில பாட தற்காலிக விரிவுரையாளராக இணைந்தாரென்று பொலிஸார் தெரிவித்தனர்.

ரொகானின் மனைவியான மேரி பிரவீணாவை துன்புறுத்தியதாக செய்யப்பட்ட புகாரில் 2008 மேயில் ரொகானும் அவரின் பெற்றோரும் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் இந்தியப் பிரஜையெனக் கூறி அரசாங்கத்தை ஏமாற்றி அவர் சொத்துகளை வாங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.alaikal.com/news/?p=89483

ஆத்துக்காறிதான் போட்டுக்குடுத்து ஆப்பு வச்சிட்டா போல இருக்கு.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.