Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறது அரசு – அறியாமல்(லா) செய்தி வெளியிட்டது உதயன்?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

uthayan_logo1-150x120.gif

போர்க்குற்றம் தொடர்பிலான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சில படையினர் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருக்கின்ற அரசாங்கம் அவர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளையும்மேற்கொள்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டுவருகின்றது. குற்றச்சாட்டுக்களுக்கான தண்டனைகள் வழங்குவதாக அறிவிக்கப்படும் போது கடும்போக்கு சிங்கள இனவாதிகள் அதற்கான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று முற்கூட்டியே அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது.

இந் நிலையில் இந்தவிடயத்திற்கமைய தண்டனைக்கான முயற்சி மேற்கொள்ளப்படும் போது அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பர் என்ற விடயத்தினை தமிழ்த் தேசியப் பத்திரிகைகளாக சொல்லிக்கொள்கின்ற உதயன், சுடரொளி ஊடாக அரச தரப்பு கசியவிட்டிருக்கின்றது. குறித்த செய்தியின் ஊடாக அரசாங்கத்தின் தந்திரோபாய நகர்வு மிகத் துல்லியமாக வெளிப்படுவதை அவதானிக்கலாம்..

இது தொடர்பில் இன்றைய உதயன் பத்திரிகை வெளியிட்டிருக்கின்ற செய்தியின் முழுவிபரம் வருமாறு,

படையினருக்கு தண்டனையா? அமைச்சர்கள் போர்க் கொடி; மக்களைத் திரட்டி வீதியில் இறங்குவதற்கு முயற்சி

போர்க்குற்றம் புரிந்தனர் என இனங்காணப்படும் இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அரசின் உத்தேச யோசனைக்கு கடும்போக்குக் கொள்கையுடைய அமைச்சர்கள் சிலர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர் என நம்பகரமாகத் தெரியவருகிறது.அரச தலைமையுடன் இந்த விவகாரம் தொடர்பில் நேரடியாகப் பேச்சு நடத்தவுள்ள இந்த அமைச்சர்கள் இதன்போது, தமது உறுதியான நிலைப்பாட்டை ஆணித்தரமாக எடுத்துரைப்பர் எனக் கூறப்படுகிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகி அதன் உள்ளடக்கங்கள் கசிய ஆரம்பித்துள்ள நிலையில், கொழும்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளை, அரச தரப்புக்குள் கருத்து முரண்பாடுகளும் உருவாக ஆரம்பித்துள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் பேரினவாதச் சக்திகள் வீதியில் இறங்கி மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன. இந்த விடயங்கள் குறித்து இரகசியப் பேச்சுகளும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

படைத்தரப்பினர் எதிர்நோக்கவுள்ள ஆபத்துக் குறித்து உள்ளூர அறிந்துவைத்துள்ள அந்த அமைச்சர்கள், தங்களது மதத் தலைவர்கள், கடும்போக்குடைய சிங்கள அமைப்புகள் உட்பட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு இதுவிடயம் தொடர்பில் விரிவான விளக்கமொன்றை அளிக்கவும் முடிவுசெய்துள்ளனர் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

தாய் நாட்டை மீட்டெடுத்த இராணுவத்தினருக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் வேண்டாம் என்ற உறுதியான தகவலை தேரர்கள், நாட்டுப்பற்றுள்ள அமைப்புகள் ஊடாகவும் அரச தலைமைக்கு உறுதிபட அறிவிப்பதற்கு மிகவும் சூட்சுமமான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அறியமுடிகின்றது.

கடந்தகால சம்பவங்கள் குறித்த ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த நல்லிணக்க ஆணைக்குழு, கடந்த 20ஆம் திகதி ஜனாதிபதியிடம் குறித்த அறிக்கையைக் கையளித்தது. அந்த அறிக்கை பகிரங்கமாவதற்கு முன்னர் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய சில தகவல்கள் கசிந்துள்ளன.

அதனடிப்படையில் படைத்தரப்பு போர்க் குற்றத்தில் ஈடுபட்டது என்ற விடயத்தை உறுதிப்படுத்திய நல்லிணக்க ஆணைக்குழு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது என அறியமுடிகின்றது. படிப்பினைக்கான ஆணைக் குழுவின் அறிக்கை வெளியாகி அந்த அறிக்கை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றில் கருத்து வெளிட்ட பாதுகாப்புச் செயலாளர், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியாகக் கூறினார்.

அதுமட்டுமின்றி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியின்போது, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் நடவடிக்கை உறுதி என்ற விடயத்தை தெரிவித்திருந்தார். சர்வதேச அழுத்தங்களை குறைத்துக் கொள்வதற்கும், சர்வதேசத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் போர்க்குற்றம் இழைத்தோருக்கு தண்டனை உறுதி என்ற விடயம் ஏறத்தாள உறுதியாகியுள்ளது.

ஆரம்பம் முதலே போரை ஆதரித்து படையினரை பெருமைப்படுத்தி கருத்துகளை வெளியிட்ட கடும்போக்குடைய அமைச்சர்கள் படையினருக்கு எதிராக நடவடிக்கை என்ற விடயம் அறிந்ததும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் கடும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர். அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகள் குறித்து அவர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது.

http://www.saritham.com/?p=42400

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி.... ஐ. நா. அமைதிபணிக்கு போன ஸ்ரீ லங்கா ஜெனோசைட் இராணுவம் நூற்றி எட்டு பேர் சேர்ந்து பதின்மூன்று வயது சிறுமிகளை எல்லாம் கற்பழித்தார்களே?

அதற்கு ஏதாவது தண்டனை யாருக்காவது கிடைத்ததா?

இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கொண்டு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.