Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் நவம்பர் 27 - மாவீரர் தினம்! - குமுதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29.jpg 14.12.11 மற்றவை

ழத் தமிழர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஒரு முக்கியமான நாள். மாவீரர் தினம்! அன்று, தமிழ் ஈழ விடுதலைக்காய் போராடி வீழ்ந்து விதைக்கப்பட்ட மாவீரர்கள் உறங்கும் கல்லறைத் தோட்டமான மாவீரர் துயிலும் இல்லங்களில் மொத்த ஈழ மக்களும் கூடுவார்கள். இந்த தினத்திற்கு இன்னொரு விசேஷம். அன்றுதான், சரியாக ஆறு மணி ஐந்தாவது நிமிடத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை ஆரம்பமாகும். இப்பொழுது, உரையாற்ற பிரபாகரனும் இல்லை மக்கள் அஞ்சலி செலுத்த மாவீரர் துயிலும் இல்லங்களும் இல்லை. எப்படி கழிந்தது இந்த வருட, மாவீரர் தினம்? சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு அன்று ஒரு விசிட் செய்தோம்.

கிளிநொச்சி, முழங்காவில், விசுவமடு, வடமராட்சி, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம், கொடிகாமம் என எல்லா இடங்களிலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் அடையாளமே இல்லாமல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி துயிலும் இல்லத்தை அழித்துவிட்டு, அதன் முன்பாக ஒரு காவலரண் அமைத்து இராணுவம் தங்கியிருக்கிறது. விசுவமடு துயிலும் இல்லம் இருந்த இடத்தின் அருகில் இராணுவம் பெரும் முகாமையும் கண்காணிப்பு நிலையத்தையும் அமைத்திருக்கிறது. வவுனிக்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிதைந்த மண்மேடாக இருக்கிறது. கோப்பாய் துயிலும் இல்லத்தை தரையோடு அழித்து யாழ் சிங்கள இராணுவ தலைமைச் செயலகம் அமைத்து அங்கு சிங்கள இராணுவம் தங்கியிருக்கிறது.

29a.jpg

இந்தப் பகுதிகளை தாண்டிச் செல்லும் பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் புதைக்கப்பட்ட இடத்தை இப்படி வன்மத்துடன் அழித்துள்ளார்களே என்று அழுதும் தொழுதும் செல்கிறார்கள்.

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தை தூரத்தில் நின்று ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனிடம் பேச்சுக் கொடுத்தோம். பெயரும் புகைப்படமும் வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் பேச ஆரம்பித்தார்.

“நான் கிளிநொச்சி இரத்தினபுரத்தைச் சேர்ந்தவன். என் அண்ணன் ஒரு போராளி. அவர் கடைசி யுத்தத்துக்கு முன்பே போரில் இறந்துவிட்டார். அவரது கல்லறை இந்த இல்லத்தில்தான் இருந்தது.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27-ல் சரியாக ஆறரை மணிக்கு பிரபாகரன் மாவீரர் தின பொதுச்சுடரை ஏற்றி வைப்பார். அந்த நேரம் அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் விளக்குகள் ஏற்றப்படும். தொடர்ந்து மாவீரர் நினைவுப் பாடல் ஒலிக்கும். வீழ்ந்த போராளிகளுக்காகவும் ஈழத்திற்காகவும் மக்கள் உருகித் தொழும் உணர்வு நெகிழும் காட்சிகளாய் இருக்கும். அன்றைய நாளில் முழு ஈழ மக்களும் மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி வந்து விடுவார்கள். சக போராளிகளும் பிள்ளைகளை ஈன்றப் பெற்றோர்களும் துயிலும் இல்லத்தில் கூடியிருப்பார்கள்.

2008-ம் ஆண்டு மாவீரர் தினத்தை ஈழ நிலத்தில் இறுதியாக புலிகள் கொண்டாடினார்கள். போர் மூண்டு கிளிநொச்சியை இராணுவம் பிடிப்பதற்காய் சுற்றி வளைத்திருந்த நேரத்தில் அந்த மாவீரர் தினம் நடந்தது.

2009 முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்திற்குப் பிறகு விடுதலைப் புலிகளையும் ஈழ மக்களையும் சிதைத்தது போலவே, மாவீரர் துயிலும் இல்லங்களையும் சிதைத்தது, சிங்கள இராணுவம். புலிகளையும் மக்களையும் சிதைத்ததை விடவும் இது ஒரு பயங்கரமான நடவடிக்கை.

மாவீரர் பண்டார வன்னியனின் சிலையோடு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்காய் ஈழத்தில் அமைக்கப்பட்ட சிலை முதல் தந்தை செல்வா வரை ஈழத் தமிழரின் அனைத்து நினைவுச் சின்னங்களையும் சிங்களப் படைகள் அழித்துவிட்டனர்’’ என்றார்.

இவை எல்லாவற்றையும் அழித்த பிறகும் மாவீரர் தினக் காலத்தில் ஈழத் தமிழ்ப் பகுதிகளில் உள்ள சிங்கள இராணுவம் அஞ்சுகிறது என்பதுதான் வேடிக்கை. இந்த வருடம் நவம்பர் தொடங்கியதும் வீடு வீடாகச் சென்று ‘மாவீரர் நாளைக் கொண்டாடக்கூடாது’ என்றும் ‘பொது இடங்களில் சுடர் ஏற்றக்கூடாது’ என்றும் ‘ஆலயங்களில் மணி ஒலி எழுப்பக் கூடாது’ என்றும் சிங்கள இராணுவம் எச்சரிந்திருந்தது. கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியது.

“ஆனால், இந்த எச்சரிக்கைகள் எல்லாவற்றையும் மீறி, மாவீரர் தினத்தை நினைவு கூரும் விதமாகவும் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தையும் கொண்டாடும் விதமாகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக அறிவிப்புப் பலகையில் சில துண்டுப் பிரசுரங்களை ஒட்டியிருந்தனர். மக்கள் எல்லோரும் வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள். மாவீரரின் தியாகமும் கனவும் நினைவு கூரப்பட்டது. இதுபற்றிக் கேள்விப்பட்டு வந்த சிங்கள இராணுவத்தினர் அறிவிப்புப் பலகையை அடித்து நொறுக்கினார்கள்’’ என்றார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர்.

புலிகள் சிதைக்கப்பட்டு, அவர்கள் கல்லறைகளும் உடைக்கப்பட்ட பிறகும் மாவீரர் தினம் மக்களால் கொண்டாடப்படுவதை சிங்கள அரசு பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கிறது; மீண்டும் போராளிகள் உருவாகிவிடுவார்களோ என்பதுதான் அந்த அச்சம்..

செய்தி, படங்கள்: இலங்கையிலிருந்து தீபச்செல்வன்

மீண்டும் போராளிகள் உருவாகிவிடுவார்களோ என்பதுதான் அந்த அச்சம்..

இன்னொரு ஆயுத போராட்டத்திற்கு இடம் வைக்காமல், இழந்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள்,மக்கள் ... நினைவுடன், நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை இந்த தலைமுறை எடுப்பதே நியாயமான தேவை !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.