Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேரளத்தை நோக்கி திரண்ட 50,000 விவசாயிகள், கண்டதும் சுட உத்தரவு எல்லையில் பெரும் பதட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைப் பெரியாறு அணை விவாகரத்தில் கேரள கட்சிகளின் பிரச்சாரம் தமிழகத்தில் கேரள எல்லையோர மக்களை உசுப்பி விட்டுள்ளது. நேற்று திடீரென திரண்ட கம்பம் பகுதி விவசாயிகள் குமுளியை முற்றுகையிடப் போவதாக திரண்டனர். இத்தனைக்கும் போலீசார் 144 தடையுத்தரவு போட்டிருந்தனர். இந்த தடையையும் மீறி திரண்ட விவசாயிகள் போலீசாரின் தடையையும் மீறி எல்லையை நோக்கிச் சென்றனர். இந்த பேரளி நேற்று நடந்தது பதறிப்போன போலீசார் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் தெரிவித்ததோடு ,மேலதிக போலீசாரோடு சேர்ந்து மக்களை கேரள எல்லையை நெருங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். பின்னர் பேரணியாகச் சென்ற மக்களுடன் தேமாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி, தென்மண்டல ஐஜி ராஜேஸ்தாஸ் ஆகியோர் சமாதானப்படுத்தினர்.பின்னர் மக்கள் கிளம்பிச் சென்றனர்.

அத்து மீறினால் கண்டதும் சுட உத்தரவு கேரள காவல்துறை.

...........................................................................................................

குமுளி எல்லையில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்தால் கண்டதும் சுடுமாறு இடுக்கி மாவட்ட காவல்தூறை கண்காணிப்பாளர் ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்டவர்கள் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறி்த்து கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த குமுளிக்கு சென்றனர். அவர்கள் தமிழக போலீசார் தடுத்து நிறுத்தியும் அவர்கள் குமுளிக்குள் செல்ல முயன்றதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மத்தியப்படைகள் குவிப்பு இன்றும் பேரணி.

.......................................................................

இந்நிலையில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் கேரளாவில் பிரமாண்ட மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்றும் கேரள தமிழக எல்லைக் கிராமங்களான ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, கோகிலாபுரம், கே.கே.பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் பெரும் ஊர்வலமாக கிளம்பியுள்ளனர். விவசாயிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் என கிட்டத்தட்ட 15,000 பேர் மோட்டார்சைக்கிள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கிளம்பியுள்ளதால் பெரும் பதட்டம் காணப்படுகிறது. இரு மாநிலங்களுக்கிடையிலான உறவுகள் அடியோடு முறிந்து போயுள்ள நிலையில் கடந்த பல நாட்களாக மலையாளிகளால் நடத்தப்படும் வணிக நிறுவனங்கள் தமிழகத்தின் பெருமபாலான இடங்களில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எல்லையோரப்பகுதிகளில் மத்தியப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் எழுச்சி பாராட்டத்தக்கது..! ஏன் இந்த ஆதரவு மீனவர்களுக்கு இல்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் எழுச்சி பாராட்டத்தக்கது..! ஏன் இந்த ஆதரவு மீனவர்களுக்கு இல்லை?

எனக்கும் உங்களைப்போல் இந்தக்கேள்வியுள்ளது

நான் நினைக்கின்றேன் மீனவரின் பிரச்சனைக்கு ஊடகங்களின் பங்களிப்பு பெரியளவில் இல்லை அது ஒரு காரணமாக இருக்கலாம்.

மீனவர்கள் ஒடுக்கப்பட்ட ஜாதி என ஆழும் வர்க்கம் (இந்தியாவை பொறுத்தளவில்நினைப்பதினால்) இதற்க்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இதற்க்கான விடை சம்மந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்.

மக்கள் எழுச்சி பாராட்டத்தக்கது..! ஏன் இந்த ஆதரவு மீனவர்களுக்கு இல்லை?

காரணம் ரொம்ப சிம்பிளு.....!

அந்த மக்கள் எழுச்சி மாநிலங்களுக்கிடைல!

மீனவர்களுக்காக யாராச்சும் ,,,, உணர்ச்சி வசப்பட்டா...

அது சொரிலங்காவுக்கு, சொரிஞ்சு விடுற மத்திய அரசு பிரச்சினை!

இந்த அளவிற்கு மீனவர்களுக்கு சார்பா யாரும் மத்திய அரசுக்கு ,, எதிராபோன்னா...

பலானது பலது நடக்குமே...

* புலிகளூக்கு கடத்தப்பட்ட வெடிமருந்துகள் கைப்பற்றப்படும்...

* இலங்கை யுத்ததிலிருந்து தப்பி வந்த புலிகளுக்கு சப்போர்ட் பண்ணீனதால,, கரையோர மக்கள் கைது செய்யப்படுவார்கள்!

* அதுவும் இல்லைன்னா.. மும்பைல இருந்து,, தமிழகம்வரை. எந்த தடங்கலே இல்லாம , சைக்கிளுக்கு போடுற ஈயகுண்டுகளோட வந்த லாரி ,, திடீர்னு, இந்திய”விஷேட” உளவுதுறையால், துறைமுகத்தில வைத்து கைப்பற்றப்படும்...

* 80 km வேகத்துல போகுற ,, அதிவேக ரயிலு(?) தடத்தில்,,,, விடுதலைபுலிகள் சதியால்,,, தண்டவாளஙகளில் ..விரிசல் ஏற்படுத்தப்படும்...

*அப்புறம் ...கரையோரங்களில காரணமே இல்லாம பாதுகாப்பு அதிகரிக்கப்படும்!

அதுவும் வேலைக்கு ஆகல்லைன்னா,,,

சட்டம் ஒழுங்கு ,புட்டுகிச்சுன்னு,,, ஆட்சி கலைக்கப்படும்! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/BIp4E7Q3X3g

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.