Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லாதவரை இப்படியான பிரச்சினைகள் வந்துகொண்டேதான் இருக்கும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைப் பெரியாறும் இலங்கை ஊடகங்களும் இளைய தளபதியும்

இந்த பதிவிற்குள் போவதற்கு முன்னர் இவற்றை ஒரு தடவை படியுங்கள்

தமிழக மக்கள் துடிக்கிறார்கள்! ஈழத்தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்?

முல்லைப்பெரியார் அணை உடையாமல் இருக்க நாஞ்சில்மனோ'வின் ஆலோசனை...!!!

முல்லைப் பெரியாறு - ஒரு கேள்வி பதில் தொகுப்பு! , ஓ பக்கங்கள், ஞாநி

தமிழ் மக்கள் என்றால் எல்லாருக்கும் ஒரு எடுப்பார் கைப்பிள்ளையாக போய்விட்டார்களோ என்னமோ? எல்லா பக்கத்தாலும் அடி வாங்குகிறோம். வீரம் வீரம் என்று கூச்சலிடுகிறோம், நாம் வீரர்கள் என்று மார் தட்டுகிறோம். ஆனால் அடுத்தவன் குட்டும்போது குனிந்து மடங்கி விழுந்தே போகிறோம். ஆக வீரம் என்பது எம்மை பொறுத்தவரை வரலாற்று புத்தகங்களோடேயே மூடிவைக்கப்படும் வார்த்தையாகிவிட்டது.

periyar.jpg

அடுத்தவருக்கு என்ன நடந்தால் நமக்கு என்ன என்ற நிலைதான் எல்லாரிடத்திலும். இலங்கை பிரச்சினையிலும் நடந்தது இதுதான். ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்துவிட்டு நிலமை கைமீறிச்சென்ற பின்னர் எல்லோரும் சேர்ந்து நின்றபோதும் பலனில்லை.

இப்போது அதே பிரச்சினையைத்தான் தமிழகத்திலும் எதிர்நோக்குகின்றோம். ஆரம்பத்திலேயே எல்லோரும் ஒருமித்து குரல்கொடுக்காவிட்டால், பிரச்சினை எம் கை மீறி சென்ற பின்னர் கூப்பாடு போட்டு பலனில்லை.

சிதறுண்ட இனமாக தமிழன் இருக்கும்வரை அவனும் பிரச்சினைகளுக்காக இணைந்து போராடப்போவதில்லை, மற்றவர்களும் தமிழனை அடிப்பதை நிறுத்தப்போவதில்லை. தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லாதவரை இப்படியான பிரச்சினைகள் வந்துகொண்டேதான் இருக்கும்.

சரி தலைப்பின் படி இன்றைய முல்லைப்பெரியாறு பிரச்சினையில் ஈழத்தமிழரின் நிலை என்ன?

மனம்விட்டு உண்மையை சொல்லவேண்டும் என்றால் பெரும்பாலான மக்களுக்கு தமிழகத்தில் அப்படி ஒரு பிரச்சினை இருப்பதே தெரியவில்லை. அறிந்த ஒருசிலர் கூட அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை.

விஜய், அஜித் படங்கள் வரும்போது தியேட்டர்களில் நின்று அடிபட்டு நான்கு ஐந்து தடவை படம் பார்க்க நேரம் இருக்கும் எமக்கு, எம் உறவுகளுக்காக குரல் கொடுக்க நேரம் இல்லை. தமிழக தொலைக்காட்சி சீரியல்களிலேயே மூழ்கி கிடந்து மாமியும் மருமகளும் அடிபடுவதை நாள்பூராக பேசுபவர்கள், அம் மக்களின் பிரச்சினைகள் பற்றிய நிகழ்ச்சி தொகுப்புக்கள் ஒளிபரப்பாகும்போது மட்டும் எழுந்து போய்விடுகிறோம்.

எமக்கு பிரச்சினை என்றவுடன் “எம் தொப்புள்கொடி உறவுகள் நீங்கள்.. நீங்கள்தான் எங்களுக்கு உதவவேண்டும் என்று மன்றாடிவிட்டு இன்று அவர்களுக்கு பிரச்சினை என்றவுடன் அந்த தொப்புள்கொடியை அறுத்து எறிந்துவிட்டோமா?

ஈழ ஊடகங்களின் நிலை

இந்த விடயத்தில் மக்களை குறைசொல்லமுடியாததற்கு காரணம் இன்னமும் முல்லைப்பெரியாறு விடயம் ஈழ மக்களை முழுமையாக சென்றடையவில்லை.

இலங்கை தமிழ் ஊடகங்களை பொறுத்தவரை சினிமா, கிரிக்கெட் இற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் கால் பங்கையேனும் முல்லைப்பெரியாறு விடயத்திற்கு கொடுக்கவில்லை. இந்த விடயத்தில் அவர்களின் பங்களிப்பு எந்த அளவில் இருக்கின்றதென்றால், முல்லைப்பெரியாறு விடயம் ஓர் செய்தியாக ஊடகங்களில் இடம்பெறும் அளவிற்கு மட்டுமே உள்ளது

தமிழக ஊடகங்கள் ஈழப்பிரச்சினை விடயத்திற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்தன என்பது எம் எல்லோருக்கும் தெரிந்ததே. அதனால்தான் ஈழ மக்களுக்கு ஆதரவாக அத்தனை தமிழக மக்களையும் ஒன்றுதிரட்டி குரல்கொடுக்கமுடிந்தது. ஆனால் அதே முக்கியத்துவத்தை முல்லைப்பெரியாறு விடயத்தில் இலங்கை ஊடகங்கள் கொடுக்கவில்லை என்பது வேதனையான உண்மை.

இப்பிரச்சினை பற்றி அறிந்ததும் மேலும் தெரிந்துகொள்ள சில பத்திரிகைகளை வாங்கி புரட்டி பார்த்தேன். சினிமா கிசுகிசுக்களை மாத்திரம்தான் படிக்கமுடிந்தது. சினிமாவிற்கு இரண்டு பர்க்கம் ஒதுக்கியிருக்கும் பத்திரிகைகள் அதில் ஆகக்குறைந்தது அரை பக்கத்தையேனும், ஒரு நாளைக்கு மாத்திரம் என்றாலும் ஒதுக்கவில்லை.

”ஈழத்தமிழரை கைவிட்ட தமிழகம்” என்று பக்கம் பக்கமாக கட்டுரை வரைந்த பத்திரிகைகள் கூட எங்கோ ஓர் மூலையில் சிறிய செய்தியாக போட்டதோடு அந்த விடயத்தை கைவிட்டுவிட்டன. தொலைக்காட்சிகள், வானொலிகள் எல்லாவற்றின் நிலையும் இதுதான்.

மூத்த பத்திரிகையாளர்கள்/ எல்லோருக்கும் முன்னோடியாக இருக்கவேண்டியவர்கள் கூட இப்படியான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிரதிகள் விற்பனை போட்டியில் தமக்குள் மோதிக்கொள்கிறார்கள் ( இது பற்றி கதைப்பதற்கு இது இடமல்ல என்பதால் இதை வேறு ஓர் பதிவில் விரிவாக பார்ப்போம்)

எம் உறவுகளுக்கு பிரச்சினை வரும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. இலங்கை உறவுகளே. விழித்தெழுங்கள். எமது ஒருமித்த ஆதரவை தமிழக மக்களுக்கு வழங்குவோம்

நாளைய வரலாற்றில் எம் மீது கறை படிந்துவிடக்கூடாது.

இளைய தளபதி விஜயின் நிலைப்பாடு

<a href="

http://4.bp.blogspot.com/-zvH7B7Bqac0/TuTzvD5i01I/AAAAAAAAA_E/m5XrG1FcbQs/s1600/vijay26.jpg" imageanchor="1" style="text-decoration: none; color: rgb(21, 72, 118); margin-left: 1em; margin-right: 1em; ">vijay26.jpg

நான் ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்த்த விடயம், கட்டாயம் இந்த பிரச்சினை தொடர்பாக விஜய் குரல் கொடுப்பார் என்பதே. ஆனால் இன்னமும் அது நடந்தபாடாக இல்லை. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நடிகர் சங்கத்துடன் இணைந்து போராடியும் தனியாக உண்ணாவிரதம் இருந்தும் தன் எதிர்ப்பை வெளிக்காட்டியவர் முல்லைப்பெரியாறு விடயத்தில் ஒரு வார்த்தையை கூட விடவில்லை.

இப்போது மௌனம் சாதிப்பதன் மூலம் ஈழத்தமிழருக்காக குரல்கொடுத்ததுகூட போலியானது என்பதை வெளிப்படுத்திவிட்டார் நம் தளபதி. காரணம் என்னவென்றால் ஈழத்தமிழர் பிரச்சினையில் சம்மந்தப்பட்டது சிங்களவர். அவர்களால் தனக்கு இலாபநட்டம் இல்லை என்பதால் தைரியமாக குரல்கொடுத்தார். ஆனால் விஜய்க்கு தமிழகத்துக்கு அடுத்தபடியாக அதிகமான ரசிகர்கள் இருப்பது கேரளாவில்தான். இவ்வளவு ஏன் விஜய்க்கு சிலைகூட வைத்து தமிழக ரசிகர்களைவிட ஒரு படி மேலே நிற்கும் ரசிகர்கள் கேரளாவில்தான் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கெதிராக குரல்கொடுத்து தனது வியாபாரத்தை கெடுக்கும் எண்ணம் விஜய்க்கு இல்லை.

தான் ஒரு 100% வியாபாரி என்பதை நிரூபித்துவிட்டார் விஜய். அரசியல்ல நல்ல எதிர்காலம் இருக்கப்பா...

விரைவில் இது பற்றிய விரிவான அலசல்.. http://www.tamilaathi.com

http://www.sirakuhal.com/2011/12/blog-post_12.html

கேரள எல்லையில்... தமிழக மக்கள்

Edited by akootha

கொஞ்ச காலத்துக்கு முன் ரசனி ரசனி எண்டு சொன்னாங்கோ இப்ப விசை விசை எண்டு சொல்லுறாங்கோ , கருனாவாலும் ஜெயலலிதாவலும் செய்ய முடியாததை விசையால் எப்படி செய்யலாம்?

இன்னும் சினிமா நடிகர் சங்கமோ அல்லது சினிமா சார்ந்த எந்தச் சங்கமோ இது பற்றி பேச ஆரம்பிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச காலத்துக்கு முன் ரசனி ரசனி எண்டு சொன்னாங்கோ இப்ப விசை விசை எண்டு சொல்லுறாங்கோ , கருனாவாலும் ஜெயலலிதாவலும் செய்ய முடியாததை விசையால் எப்படி செய்யலாம்?

இன்னும் சினிமா நடிகர் சங்கமோ அல்லது சினிமா சார்ந்த எந்தச் சங்கமோ இது பற்றி பேச ஆரம்பிக்கவில்லை.

ஏன் என்றால் சினிமாகாரர்களில் கணிசமானளவு மலையாளிகள் இருப்பதனால் :icon_mrgreen:

ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும் மொத்தத்தில் இவர்கள் கருத்துகளை பெரிதாக எடுக்கமுடியாது என்னெனில் இவர்கள் நடிகர்கள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.