Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அகதியை நாடு கடத்த அவுஸ்ரேலிய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

detention-au.jpg

தமிழ் அகதி ஒருவரை சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதை அவுஸ்ரேலிய உயர் நீதிமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

அதேவேளை, மற்றொரு தமிழ் அகதியை இன்று சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எமில் என்ற தமிழ் அகதியின் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து நேற்று சிறலங்காவுக்கு கட்டாயமாக திருப்பி அனுப்பப்படவிருந்தார்.

சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், நாடு கடத்துவதை இடைநிறுத்தக் கோரி சட்டவாளர்கள் சமர்ப்பித்த அவசர மனுவொன்றை அடுத்தே இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்தவாரம் இரு தமிழ் அகதிகளினது நாடு கடத்தலுக்கு எதிரான சமஸ்டி மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களும் நிராகரிக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், முறையான விசாரணை நடத்தப்படும் வரை எமில் நாடுகடத்தப்படக் கூடாது என்று அவுஸ்ரேலிய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

அதேவேளை இன்று நாடு கடத்தப்படவுள்ள மற்றொருவரான விதுரன் என்ற அகதியின் மனுவையும் சமஸ்டி நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தது.

அவரது சார்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதனால் இன்று அவரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை நிறுத்துவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

விதுரனின் நாடு கடத்தலை தடுப்பதற்கு சட்டரீதியான முட்டுக்கட்டைகள் ஏதும் இல்லை என்று நேற்று அவுஸ்ரேலிய குடிவரவு அதிகாரிகள் கூறியிருந்தனர்.

“விசாரணைகளில் இவர்கள் இருவரும் அகதிகள் அல்ல என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்புவதில் எந்த முட்டுக்கட்டைகளும் கிடையாது. எனவே கூடிய விரைவில் இவர்கள் திருப்பி அனுப்பப்படுவர்“ என்று குடிவரவுத் திணைக்களப் பெண் பேச்சாளர் கூறியிருந்தார்.

37 வயதான எமில் படகு மூலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்ரேலியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடுகடத்தலுக்கு எதிராக போராட்டம்

இதற்கிடையே, நேற்று எமிலை நாடுகடத்தும் நோக்கில் பேர்த் விமான நிலையத்துக்கு கொண்டு செல்ல முயன்ற போது, அந்த வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பேர்த் குடிவரவுத் தடுப்பு முகாமின் முன்பாக அகதிகளுக்கான சட்டவாளர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

நாடு கடத்தப்படவுள்ள அகதியை கொண்டு சென்றதாக நம்பப்படும் வாகனம் ஒன்றை சுமார் ஒரு டசினுக்கும் அதிகமான போராட்டக்காரர்கள் வழிமறித்து போராட்டம் நடத்தியதாக அகதிகள் உரிமைக்கான நடவடிக்கை வலையமைப்பின் பேச்சாளர் அலெக்சிஸ் வசிலே தெரிவித்துள்ளார்.

ஆனால் சித்திரவதை மற்றும் உளநல ஆற்றுப்படுத்தலுக்காக அகதித் தஞ்சம் கோரிய நபர் ஒருவரைக் கொண்டு சென்றை வாகனத்தை நிறுத்துவதிலேயே போராட்டக்காரர்கள் வெற்றி பெற்றதாக குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

58 அகதிகளுடன் மற்றொரு படகு

இதற்கிடையே, நேற்றிரவு அவுஸ்ரேலியா நோக்கிய வந்த அகதிகள் படகு ஒன்று அவுஸ்ரேலிய கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளது.

அஸ்மோர் தீவுக்கு வடமேற்கே கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் படகில் 4 படகோட்டிகள் உள்ளிட்ட 58 அகதிகள் இருந்தனர்.

இவர்கள் முதற்கட்ட விசாரணைகள் மற்றும் மருத்துவ, பாதுகாப்பு சோதனைகளின் பின்னர் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில் அவுஸ்ரேலியா வந்துள்ள 8வது அகதிகள் படகு இதுவாகும்.

http://www.tamilthai...newsite/?p=1538

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.