Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆசியாவில் மாறிவரும் அரசியல் கணக்குகள்

Featured Replies

கிழக்கு மீதான அமெரிக்காவின் கவனயீர்ப்பு அலையானது ஒக்ரோபரில், "உலகின் கேந்திர மற்றும் பொருளாதார ஈர்ப்பு மையமானது கிழக்கு நோக்கி நகர்கின்றது" என அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் பிரகடனப்படுத்தியதிலிருந்து வெளிப்படையாகியுள்ளது.

இவ்வாறு livemint.com இணையத்தளத்தில் Yamini Lohia எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அக்கட்டுரையின் முழுவிபரமாவது,

தற்போது காற்று வீசிக்கொண்டிருக்கிறது, இதன் திசை தற்போது மாறிக்கொண்டிருக்கலாம். ஆசியா மீதான சீனாவின் செல்வாக்கானது முன்னர் நம்பியது போன்று சவாலற்ற விடயமாக இருக்கமாட்டாது என்பதையே அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சில நகர்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதாவது, சீனாவின் ஏக செல்வாக்கு அதிகம் காணப்படும் கிழக்காசியாவில் அதாவது பசுபிக் மாகடலை அண்டிய நாடுகளில் தனது அதிகாரத்தை அதிகரிப்பதில் முன்னர் தயக்கம் காட்டிய அமெரிக்காவின் தற்போதைய போக்கானது புதியதொரு பூகோள அரசியல் ஒழுங்கமைப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கிழக்கு மீதான அமெரிக்காவின் கவனயீர்ப்பு அலையானது ஒக்ரோபரில், "உலகின் கேந்திர மற்றும் பொருளாதார ஈர்ப்பு மையமானது கிழக்கு நோக்கி நகர்கின்றது" என அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் பிரகடனப்படுத்தியதிலிருந்து வெளிப்படையாகியுள்ளது.

இதன் பின் வந்த மாதங்களில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவுஸ்திரேலியாவிற்கு பயணம் செய்திருந்ததுடன், பசுபிக்கிற்கு அப்பாலான புதிய வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டிருந்ததார் ஆனால் இதில் சீனா உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

அத்துடன் புதிய இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்கான அறிவித்தலையும் அமெரிக்க அதிபர் மேற்கொண்டிருந்தார். ஆனால் அமெரிக்க கடற்படையினர் அதிகளவில் பசுபிக் மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியங்களில் குவிப்பதற்கான வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

அத்துடன் அமெரிக்காவில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு துறைக்கான நிதிநிலைக் குறைப்பானது ஆசியாவில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைகளையும் பாதிக்காது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது ஆசியாவின் அதிகரித்து வரும் அமெரிக்காவின் பொருளாதார நிலைப்பாட்டையே காட்டுவதுடன், சீனாவானது ஆசிய-பசுபிக் பிராந்தியங்களில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான விருப்பத்தை முறியடிப்பதை நோக்காகக் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

21ம் நூற்றாண்டில் சீனாவின் அதிகரித்துவரும் இராஜதந்திர நகர்வானது வியட்நாம், சிங்கப்பூர் போன்ற கிழக்காசிய நாடுகளும், அவுஸ்திரேலியா போன்ற பசுபிக் வலய நாடுகளும் வேறு பிராந்திய மற்றும் பூகோள செல்வாக்கு மிக்க அதிகார சக்திகளின் [அமெரிக்கா, இந்தியா போன்றவையும் உள்ளடங்குகின்றன] தயவை நாட நிர்ப்பந்தித்துள்ளது. அத்துடன் தமது பிராந்தியங்களில் சீனாவின் அதிகாரப் போக்கை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கும் வழிவகுத்துள்ளன.

இந்தியாவிற்கு விற்காமல் சீனாவிற்கு யுரேனியத்தை விற்பதில் உள்ளார்ந்த நோக்கம் உள்ளதாக அண்மையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது. அத்துடன் இந்தியாவிற்கு யுரேனியத்தை விற்பதை ஆரம்பிப்பதற்கான அளவீடுகளையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் பரிசோதித்துள்ளது.

யப்பான், இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகள் அமெரிக்காவுடன் ஆழமான இராணுவ உறவுகளைப் பலப்படுத்தியுள்ள அதேவேளையில் தென் சீனக்கடலில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளது.

சீனாவின் ஆதரவுடன் இராணுவ ஆட்சி மேற்கொள்ளப்பட்ட மியான்மார் கூட அமெரிக்காவுடன் சிறந்த உறவைப் பேண ஆரம்பித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் முதன் முதலாக மியான்மாரிற்கு கடந்த மாதம் சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க மூத்த அரசியல் அதிகாரியாக ஹிலாரி கிளின்ரன் உள்ளார்.

மியான்மாரில் கடந்த ஆறு மாதங்களாக அரசியற் சுதந்திரம், நேர்மைத்தன்மை என்பன அதிகம் இடம்பெற்றதன் விளைவாகவே அமெரிக்க இராஜாங்கச் செயலர் இங்கு பயணம் செய்திருந்தார்.

சீனாவானது அமெரிக்க உள்ளடங்கலான ஏனைய உலக நாடுகளுடன் தொடர்பைப் பேணுவதில் அதிகளவில் நம்பிக்கையுடன் உள்ளபோதிலும் கூட, அதன் சில முரண்பட்ட போக்கானது ஏனைய நாடுகளை ஓரங்கட்டச் செய்துள்ளது.

எடுத்துக்காட்டாக, 2009 ல் இடம்பெற்ற கொப்பன்கேகன் உச்சி மாநாட்டில், சீனாவானது காலநிலை மாற்றம் தொடர்பான சமரசத்தில் மேற்கொண்ட முரண்பட்ட நிலையானது ஐரோப்பிய நாடுகளையும் பிரேசில் உட்பட ஏனைய அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளையும் எரிச்சலடையச் செய்வதில் வெற்றிகண்டது.

சீனாவானது 2010 ல் இடம்பெற்ற Cheonan சம்பவத்தை தவறுதலாகக் கையாண்டது. [கப்பல் ஒன்றை மூழ்கடித்ததில் உண்மையில் வடகொரியா பொறுப்பாக இருந்தபோதும் தென்கொரியா மீதே பழிசுமத்தப்பட்டது. இது விடயத்தில் உண்மையைக் கண்டறிவதில் சீனா தவறிழைத்தது].

இவ்விடயமானது தென்கொரியா மற்றும் யப்பான் ஆகிய இரு நாடுகளையும் எரிச்சலடைய வைத்தது. இதன் பின்னர் இவ்விரு நாடுகளும் இணைந்து கடற்பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்காவுடன் மேற்கொண்டன.

இவ்வாறான விடயங்கள் சீனாவானது அதன் அயல் மற்றும் கூட்டணி நாடுகளுடன் உறவைப் பேணுவதில் பல கடினங்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதையே சுட்டிக்காட்டுகின்றன. அத்துடன் இந்நாடுகள் ஏற்கனவே தலாய்லாமா, திபெத், தாய்வான் போன்ற விடயங்களில் சீனாவால் மேற்கொள்ளப்படும் நகர்வுகள் தொடர்பாகவும் அதிருப்தியடைந்துள்ளன.

இந்நிலையில் சீனாவானது தனது பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் நடந்து கொள்ளும் பாங்கானது முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளதானது அதிர்ச்சி தரக்கூடிய விடயமல்ல. இதற்கும் மேலாக சில பசுபிக் வலய நாடுகள் அமெரிக்காவுடன் மிக நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்றன.

அவுஸ்திரேலியா, யப்பான், வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தமது இராணுவ உறவை இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக்கி வருகின்றன. இந்தியாவானது தற்போது சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, தென்கொரியா, சிங்கப்பூர் ஆகியவற்றுடன் மேற்கொண்டுள்ளது.

யப்பான், இந்தியா ஆகிய இரு நாடுகளும் தமக்கிடையிலான உறவைப் பலப்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன. கிழக்காசியாவின் கரையோர வலயத்துடன் இந்தியா தனது ஆதிக்கத்தை அதிகரிப்பதை விரும்பாத சீனாவிற்கு யப்பானுடனான இந்தியாவின் நெருக்கமான உறவானது பெரிதும் வரவேற்கப்படாத செய்தியாகவே உள்ளது.

சீனாவானது இராஜதந்திர ரீதியாக செல்வாக்குப் பெறுவதில் தனது பொருளாதார வலுவைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இது தனது இறுக்கமான போக்கை நெகிழ்ச்சிப்படுத்துவதிலேயே தற்போது அதிகம் முயற்சிக்கின்றது. அதாவது ஏனைய பல நாடுகள் சீனாவின் செல்வாக்கை எதிர்ப்பதை விரும்புவதாலேயே சீனாவும் தனது கடும்போக்கை குறைக்கவேண்டியுள்ளது.

சீனாவுடன் ஆசிய நாடுகள் சிறந்த பொருளாதார உறவைக் கட்டியெழுப்ப விரும்பும் அதேவேளையில் அதனுடன் சமநிலையைப் பேணுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபடும். அமெரிக்கா அல்லது இந்தியா தமது அதிகாரத்தைச் செலுத்துவதன் மூலம் சீனாவானது ஓரங்கட்டப்படக் கூடிய ஆபத்தை எதிர்நோக்கவில்லை. ஏனெனில் இவ்விரு நாடுகளைப் போலவே சீனாவும் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் பலத்தைக் கொண்டுள்ள நாடாக உள்ளது.

ஆனால் ஏனைய நாடுகளை அச்சுறுத்தி தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதை விட அந்நாடுகளுடன் சிறந்த தொடர்பைப் பேணி அதன் மூலம் தனது செல்வாக்கை எவ்வாறு நிலைநாட்டலாம் என்பது தொடர்பாக சீனா கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. சீனாவானது பூகோள – அரசியல் ரீதியாக முழுமையான அனுகூலத்தைப் பெறவேண்டுமாயின் சீனா இதனைக் கற்றுக் கொள்ளவேண்டியிருக்கும்.

இங்கே இந்தியாவிற்கும் ஒரு சந்தர்ப்பம் உள்ளது. சீனாவிற்கு ஆபத்தை உண்டுபண்ணக் கூடிய காரணிகளை ஆராய்ந்து அதன் அனுகூலங்களை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொள்வதுடன், ஏனைய ஆசிய நாடுகளுடன் சிறந்த உறவைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது விடயத்தில் இந்தியாவின் கிழக்கு நாடுகளை நோக்கிய கொள்கை வரவேற்கத்தக்க விடயமாகும். அத்துடன் சீனாவின் கடும்போக்கான சில வெளிநாட்டுக் கொள்கைக்குப் பொருத்தமான வேறு கோட்பாடுகளை இந்தியா அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும்.

யப்பான், அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுடனும் தற்போது பேணப்படாதுள்ள விடயங்களில் இந்தியா தொடர்பைப் பலப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடமுடியும். பசுபிக் வலயத்தில் எல்லையைக் கொண்டிராத இந்தியாவானது அமெரிக்கா, யப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து உச்சிமாநாடொன்றில் கலந்து கொள்வதுடன், ஆசிய –பசுபிக் பிராந்திய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக ஒபாமா நிர்வாகத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசியப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதற்காக அமெரிக்கா எவ்வாறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதற்கான பிறிதொரு சமிக்கையாகவே இது உள்ளது.

யப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் சீனாவின் செல்வாக்கைப் பரீட்சித்துப் பார்க்கின்றன. இதுவரை காலமும் சீனாவைத் தமது பிரதான வர்த்தகப் பங்காளியாக் கொண்டுள்ள ஆசிய நாடுகளுக்கு இந்தியாவானது ஒரு மாற்றுவழியாக இருக்க முடியும்.

அமெரிக்காவால் குறிப்பிடப்படும் 'இந்திய – பசுபிக்' உடன்பாடானது இப்பிராந்தியத்தில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளதையும், உபகண்டம் என்ற நிலையை விட ஆசியப் பிராந்தியத்தில் மிகப் பெரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய ஒரு நாடாக விளங்க வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தையும் பிரதிபலித்துக் காட்டுகின்றது.

http://www.puthinappalakai.com/view.php?20111216105216

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.