Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளைப் பற்றி இப்போது அதிகம் பேசத் தொடங்கியுள்ளது யார்?

Featured Replies

விடுதலைப் புலிகளைப் பற்றி இப்போது அதிகம் பேசத் தொடங்கியுள்ளது யார்? என்று ஒரு ஆய்வை நடத்தினால் அதற்கான பதில் தமிழ் மக்களாக இருக்க முடியாது. 2009 மே மாதம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகள் பற்றிய பேச்சு தமிழ் மக்களிடையே குறைந்து போய்விட்டது.

ஆனால் அரசாங்கமோ புலிகளை மறக்கச் செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டே, அவர்களை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

இப்போது எதற்கெடுத்தாலும் விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட்டுப் பேசுகின்ற வழக்கம் அரசாங்கத்தின் முக்கிய தலைமைகளுக்கு வந்திருக்கிறது.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட்டுப் பேசத் தொடங்கியுள்ளது அரசாங்கம். கடந்தவாரம் அலரி மாளிகையில் ஊடக ஆசியர்களைச் சந்தித்துப் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பேச்சுகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விடுதலைப் புலிகள் போன்றே செயற்படுவதாகவும், ஈழக்கனவை விட்டு அவர்கள் விலகவில்லை என்றும் கூறியிருந்தார்.

அதேபோன்று, கடந்தவாரம் நாடாளுமன்றக் கட்டடத்தில் ஊடக ஆசியர்களைச் சந்தித்த பஷில் ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளை விட கூட்டமைப்பு மோசமாக நடந்து கொள்வதாக கூறியுள்ளார்.

பேச்சுகளின் போது கூட்டமைப்பு கடைப்பிடிக்கின்ற இறுக்கத்தினால் மட்டும் இந்தக் கருத்து அரசதரப்பிடம் இருந்து வரவில்லை.

அரச தரப்பு எந்தக் காலகட்டத்தில் எதைப் பற்றி அதிகமாகப் பேசுகிறதோ அந்த விடயத்தில் அதிக அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கிறது என்பதே அர்த்தம்.

இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் விடுதலைப் புலிகளையும் ஒப்பிடுவதில் இருந்து அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடயத்தில் அதிக அழுத்தங்களைச் சந்திக்கிறது என்றே அர்த்தம்.

2001 இல் ரணில் விக்கிரமசிங்க அரசுடன் விடுதலைப் புலிகள் பேச்சுகளை ஆரம்பித்த போது அமைதித்தீர்வு குறித்து அதிகமான எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனுமேயே இருந்தனர்.

பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் தம்மை சர்வதேச வலைப்பின்னல் ஒன்றுக்குள் சிக்கவைக்க முனைவதை உணர்ந்து கொண்ட பின்னர் தான் புலிகள் அதற்குள் இருந்து வெளியேற முனைந்தனர்.

2005 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி விடுவார் என்ற நிலை உருவானபோது அதைத் தடுப்பதற்காகவே தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்தனர்.

ரணில் அல்லது மஹிந்த ராஜபக்ஷ என்ற தெரிவுப் பிரச்சினை வந்தபோது சாட்சிக்காரனை விட சண்டைக்காரனே மேல் என்ற முடிவுக்கு வந்தது புலிகள் இயக்கம் அதாவது ரணில் இரகசியமாக சந்தடியின்றி செய்வதை மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையாக செய்வார் என்பதே புலிகளின் கணிப்பாக இருத்தது.

அதாவது பேச்சுகள் என்று இழுபறிப் பட்டு அழிந்து போவதை விட சண்டை ஒன்றுக்குச் செல்வது மேலானது என்று கருதியது புலிகள் இயக்கம்.

இதனால் ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்க தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது ரணில் மஹிந்த என்ற இரண்டு தெரிவுகளுக்குள் புலிகள் சிக்கியது போன்ற நிலை இப்போது அரசுக்கு வந்துள்ளது.

அதாவது கூட்டமைப்பை விட புலிகள் பரவாயில்லை என்பது போல அரசு கருத்து வெளியிடுகிறது.

இப்போது புலிகள் இல்லாது போய்விட்டாலும் கூட, கூட்டமைப்பை அவர்களுடன் ஒப்பிடுவது சிக்கல் நிலையில் அரசு இருப்பதன் வெளிப்பாடு என்றே கூறலாம்.

கூட்டமைப்பு விடயத்தில் அரசாங்கம் புலிகளை விட மோசமானவர்களாக வெளிப்படுத்துவதானது, தனியே பேச்சுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல.

கூட்டமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள், நகர்வுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

பேச்சுகளும் எந்த இணக்கப்பாடும் இன்றியே நடந்து கொண்டிருக்கின்றன.இதுவரை சுமார் 20 தடவைகள் சந்தித்துப் பேசியாயிற்று. ஆனால் எந்தவொரு விடயத்திலேனும் இணக்கப்பாடு உருவாகவில்லை.

சந்திப்புகள் நடப்பதும் இணக்கமின்றி முடிவதும் தான் வழக்கமாகி விட்டது. அரசாங்கமோ ஒரு வட்டதை விட்டு வெளியே வரும் மனப்பாங்கில் இல்லை.

அப்படி வருவதானாலும் தனியே தாமாக வருவதை விரும்பவில்லை. ஆனால் கூட்டமைப்போ அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்தால் தான் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறது.

இதனால் இருதரப்பும் சந்திப்பதும், பேசுவதும் இணக்கமின்றிக் கலைவதுமாக காலம் கரைகிறது. இந்தப் பேச்சுகளில் இணக்கம் காணப்பட்டாலும் சரி, இணக்கம் காணப்படாது போனாலும் சரி பேச்சுகள் நடக்க வேண்டும் என்பதே அனைத்துலக சமூகத்தினது கருத்து.

அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுத்து வரும் சர்வதேச சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசியே ஆக வேண்டும் என்கிறது. அது போலவே, கூட்டமைக்குக்கும் அழுத்தம் கொடுக்கிறது.

இதனால் தான் இந்தப் பேச்சுகள் எப்படி இழுபறிப்பட்டாலும் தொடர்கின்றன. இந்தப் பேச்சுகளில் இருந்து விலக்கி கூட்டமைப்பை தெரிவுக்குழு என்ற ஆடுகளத்துக்குள் கொண்டு போய்விட்டால் தாம் தப்பிக் கொள்ளலாம் என்று நினைக்கிறது அரசாங்கம்.

ஆனால் கூட்டமைப்பு அதற்கு ஒத்துழைக்கத் தயாராக இல்லை. பிடியைத் தன்பக்கத்தில் வைத்துக் கொண்டு அரசிடம் கொடுக்காமல் நழுவிக் கொள்கிறது. தம்முடன் நடத்தப்படும் பேச்சுகளில் எட்டப்படும் இணக்கப்பாட்டைத் தெரிவுக் குழுவிடம் கொண்டு போய் விவாதிக்கலாம் என்கிறது கூட்டமைப்பு.

முன்னர் ஒப்புக்கொண்ட அரசாங்கம் இப்போது அதற்குத் தயாராக இல்லை. காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வதற்கும் வடக்கு கிழக்கு இணைப்புக்கும் அரசாங்கம் தயாரில்லை.

ஆனால் இவற்றை விட்டுக் கொடுக்க முடியாது, இவை இல்லாமல் தீர்வு சாத்தியமில்லை என்கிறது கூட்டமைப்பு. இந்த இழுபறி தான் அரசாங்கத்துக்குப் பெரிதும் நெருக்கடியாக உள்ளது.

கூட்டமைப்பு தானாகவே பேச்சுகளில் இருந்து விலகிச் சென்று விட்டால் முன்னர் புலிகள் மீது போட்டது போன்று, எல்லாப் பழியையும் கூட்டமைப்பின் மீதே போட்டு விடலாம்.

ஆனால் கூட்டமைப்பு அதையும் செய்வதாக இல்லை, அதேநேரம் அரசின் இழுப்புக்கெல்லாம் இழுபட்டுப் போவதாகவும் இல்லை.

இது தான் அரசின் விசனங்களுக்குக் காரணம். இப்போது நடக்கின்ற பேச்சுகளில் இணக்கப்பாடு வருகிறதோ இல்லையோ, அரசாங்கத்தை ஆட்டி வைக்கின்ற ஒன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறியுள்ளது.

இதனால் தான் கூட்டமைப்பை விடப் புலிகள் பரவாயில்லை என்கிறது அரசாங்கம்.

புலிகள் பேச்சுகளை முறித்துக் கொண்டால் சண்டைக்குத் தான் போவார்கள். சரி சண்டையில் பார்த்துக் கொள்வோம் என்று அரச தரப்பினால் ஒதுங்க முடிந்தது.

புலிகளுக்கு இருந்தது போன்ற வசதி, அதாவது பேச்சுகள் முறிந்தால் சண்டைக்குப் போகின்ற வசதி கூட்டமைப்புக்கு இல்லை.

அதேவேளை, புலிகளைப் போல, கூட்டமைப்பை பேச்சுகளை விட்டுத் துரத்தி விட்டால் அரசுக்கும் வேறு கதி இல்லை.

இருதரப்புமே பேசியே ஆகவேண்டும் என்ற கட்டத்துக்குள் நிற்பதால் தான் இத்தனை இழுபறி. இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும் விடயத்தில் எந்த முன்னேற்றம் எட்டப்படாது போனாலும், கூட்டமைப்பு விடயத்தில் அரசாங்கம் போட்டிருந்த கணக்குகளை அது பொய்யாகி விட்டது.

இதனால் தான் கூட்டமைப்பை புலிகள் போல செயற்படுவதாகவும், அவர்களை விட மோசமாக செயற்படுவதாகவும் அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளது. அடுத்து கூட்டமைப்பு சர்வதேச அளவில் மேற்கொள்ளத் தொடங்கியுள்ள நகர்வுகளும் அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கின்றன.

விடுதலைப் புலிகளிடம் இருந்து அரசாங்கம் இதுபோன்ற நெருக்கடியைச் சந்திக்கவில்லை. காரணம், சர்வதேச சமூகம் அவர்களுக்குச் சார்பாக இருக்கவில்லை.

ஆனால், கூட்டமைப்பு சொல்வதை சர்வதேச சமூகம் நம்புகின்றது, ஏற்கிறது. அது அரசுக்கு மற்றொரு நெருக்கடி.

இதனால் தான் கூட்டமைப்புடன் பேசிக் கொண்டே, தம்முடன் பேச வருமாறும் கேட்கிறது அரசாங்கம். இது ஒரு விசித்திரமான அழைப்பு.

கூட்டமைப்பின் பல நகர்வுகள் குறித்து தமிழ் மக்களிடையே, குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தவே செய்கிறது.

இருந்தாலும், அரசுக்கு கூட்டமைப்பு கொடுக்கின்ற வித்தியாசமான அழுத்தம் தான் ஆட்சியில் உள்ள தலைவர்களுக்கு சதா கனவில் வந்து பயறுத்துகிறது, ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் என்று எல்லோருமே கூட்டமைப்பைத் தான் குறிவைக்கிறார்கள்.

இதிலிருந்தே அரசுக்கு உள்ள கலக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்றைப் பெற்றுத் தர முடிகிறதோ இல்லையோ, அரச தரப்பை நிம்மதியாக இருக்க விடவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

http://akkinikkunchu.com/new/index.php

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட்டுப் பேசத் தொடங்கியுள்ளது அரசாங்கம். கடந்தவாரம் அலரி மாளிகையில் ஊடக ஆசியர்களைச் சந்தித்துப் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பேச்சுகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விடுதலைப் புலிகள் போன்றே செயற்படுவதாகவும், ஈழக்கனவை விட்டு அவர்கள் விலகவில்லை என்றும் கூறியிருந்தார்.

இது உண்மையில் கூட்டமைப்பின் செயல்பாடு என்பதை விட தமிழ் மக்கள் உருமைக்கான செயல்பாடு இந்த உருமைக்காகத்தான் தமிழ் ஈழ விடுதலை புலிகள் போராடினார்கள் அதற்காகத்தான் பல ஆயிரம் வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள் இதப்புரியாது கூட்டமைப்பும் புலிகள் கேட்டதையே கேட்கின்றார்கள் என்பது சிறு பிள்ளைத்தனமாது.

புலிகளுக்கு இருந்தது போன்ற வசதி, அதாவது பேச்சுகள் முறிந்தால் சண்டைக்குப் போகின்ற வசதி கூட்டமைப்புக்கு இல்லை.

ஆனால் புலம்பெயர் தமிழர்கள் பலவேறு வழிகளில் அழுத்தம் கொடுக்கலாம். அமெரிக்கா உட்பட பலவேறு நாடுகளில் போர்குற்ற வழக்குகள், மேற்குலகத்தை பொருளாதார தடையை அமுல்படுத்த கோரல், புலம்பெயர் மக்கள் சிங்கள பொருட்களை/சேவைகளை புறக்கணித்தல்.. எனப்பல்வேறு வழிகள் மூலம் தொடரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.