Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு கிழக்கிலிருந்து 2012 இல் இராணுவத்தை முற்றாக விலக்குக!

Featured Replies

வடக்கு கிழக்கிலிருந்து 2012 இல் இராணுவத்தை முற்றாக விலக்குக!

ஆசிய மனிதவுரிமை ஆணையம் கோரிக்கை

வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவத்தை முற்றாக விலக்கி, சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிசெய்தல், போரால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் புனர்வாழ்வளித்தல், நீதியின் முன் நிறுத்தப்படாது இருக்கும் அனைத்து கைதிகளையும் விடுதலை செய்தல், மற்றும் அனைத்து மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்தும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளப்படல் என்பன புதிய ஆண்டில் சிறிலங்காவில் நிறைவேற்றவேண்டிய மாற்றங்கள் பற்றிய எமது குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு ஆசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்டின் எதிர்பார்ப்புகளும் விருப்பங்களும் என்ற தலைப்பில் சிறிலங்காவில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள பல்வேறு எதிர்பார்ப்புகளில் வடக்கு கிழக்கு மக்கள் குறித்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆணையம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

புதிய ஆண்டு, கடந்து செல்லும் 2011 ஐப் போல் இருக்கக்கூடாது என்பதே சிறிலங்காவில் அனைவரதும் எதிர்பார்ப்பாகும். அரசியல் ஸ்திரமின்மையால் ஏற்படும் பாதுகாப்பின்மையும் சட்டம் மற்றும் நீதி பரிபாலனத்தில் இப்பாதுகாப்பின்மை ஏற்படுத்திவரும் விளைவுகளையும் கடந்த பல ஆண்டுகளாகவே மக்கள் எதிர்கொண்டு வந்தனர். இழந்துபோன அதிகாரத்தை இப் புதிய ஆண்டில் மீளப் பெறவேண்டும் என்பதே மக்களின் விருப்பாக உள்ளது என மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

1978 ம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத்தை நீக்க வேண்டுமென்ற நீண்டகால விருப்பம் இந்த ஆண்டில் நிறைவேறவேண்டும் என்பதே அனேக மக்களதும் விருப்பம் எனவும் இந்த மாற்றம் மக்களுக்கு பல பலாபலன்களை அளிக்கும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆணையத்தின் எதிர்பார்ப்புகளாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள்:

ஆட்சி அதிகாரம் ஒரே மனிதரிடம் குவிந்து கிடப்பதை மாற்றி சட்டத்தின் ஆட்சி தொடர்வதற்கு இடமளித்தல்.

ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் நீதி பரிபாலனம் இருப்பதை மாற்றி அதனை சுயாதீனமாக இயங்குவற்கு அனுமதித்தல்.

ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் சட்டமா அதிபர் திணைக்களம் இருப்பதை மாற்றி அதனை சுயாதீனமாக தனது கடமைகளை நிறைவேற்ற அனுமதித்தல்.

ஜனாதிபதியின் கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது செயற்படாது இருக்கும் காவற்துறையை சட்ட நடைமுறைகளின்படி காவற்துறை உயரதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயற்பட அனுமதித்தல்

அரச நிர்வாகத் துறை, தேர்தல் ஆணையம் போன்ற பொது நிறுவனங்களை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டலும் அவற்றை சுயாதீனமாக இயங்க அனுமதித்தலும்

இலஞ்ச ஊழலைத் தடுக்க முடியாது இயங்கும் இலஞ்ச எதிர்ப்புத் திணைக்களத்தை தேவையான அதிகாரங்களையும் வசதிகளையும் வழங்கி சுயாதீனமாக இயங்க அனுமதித்தல். இவற்றின் அதிகாரிகளை பொலிஸ் திணைக்களத்திலிருந்து தெரிவு செய்வதைத் தவிர்த்தல்

கொலைகள், கடத்தல்கள், காணாமற் போதல்கள், பாலியல் வல்லுறவுகள் மற்றும் கடுமையான குற்றச் செயல்களுக்கு காரணமானவற்றை உடனடியாக நிறுத்துதல்

தற்போது அதிகாரம் படைத்த அரசியல்வாதிகளதும் அரச நிறுவனங்களதும் ஒத்தாசையுடன் பரவிவரும் போதைப்பொருள் விற்பனையைத் தடுத்தல்.

அதிரடிப்படை போன்றவற்றின் வரம்புமீறிய அதிகாரங்களை இல்லாதொழித்தலும் அவற்றை உயர் பொலிஸ் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவருதலும்

சகல மாகாணங்களிலும் சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடுவதைத் தடுத்தலும் அவற்றை காவற்துறையின் கைகளில் ஒப்படைத்தலும்

இன, மத, பால் வேறுபாடுகளின்றி சட்டத்தின் முன் அனைத்து மக்களையும் சமமாக நடத்துவதன் மூலம் ஜனநாயகம் செயற்படுவதை உறுதி செய்தல்

ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் கடத்தல், பயமுறுத்தல், கொலை போன்றவற்றை நிறுத்தி பத்திரிகைகள் சுயாதீனமாக செயற்படுவதற்கு அனுமதித்தல்

ஐக்கிய நாடுகள் சபையால் அரசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டபடி காவற்துறையில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகளை முடிவுக்கு கொண்டுவருதல்

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்தலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தலும்.

வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவத்தை விலக்கி சிறுபான்மை மக்களில் உரிமைகளை உறுதிசெய்தல். போரால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் புனர்வாழ்வளித்தல். நீதியின் முன் நிறுத்தப்படாது இருக்கும் அனைத்து கைதிகளையும் விடுதலை செய்தல். மற்றும் அனைத்து மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்தும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளப்படல்.

இவையே ஆசிய மனித உரிமை ஆணையம் முன்வைத்துள்ள குறைந்தபட்ட எதிர்பார்ப்புகள் என இக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=61ad9273-7cf1-4974-97bb-e127db54247e

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.