Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் செல்ல சிறிலங்கா அரசிடம் அனுமதி கோருவேன் - அப்துல் கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

apjkalam1.jpg

இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று பார்வையிடுவதற்கு ஒழுங்குகளை செய்து தரும்படி சிறிலங்கா அரசிடம் கோரப் போவதாக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு அவர் நேற்றிரவு கொழும்பை வந்தடைந்தார்.

கொழும்பு புறப்பட முன்னர் அவர் இந்திய ஊடகங்களுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

"யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களையும், இந்துக் கல்லூரி மாணவர்களையும் சந்திக்கவுள்ளேன்.

அத்துடன் அங்குள்ள புலமையாளர்கள், நிபுணர்கள், பொதுமக்களை சந்திப்பதையிட்டு நிச்சயமாக மிகவும் மகிழ்ச்சிடைகிறேன்.

2020இல் இந்தியாவை ஆற்றலுள்ள நாடாக மாற்றுவதற்கான திட்டம் குறித்த எமது அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த அனுபவங்களை சிறிலங்கா மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

மும்மொழிக் கல்வித் திட்டத்தின் மூலம் சிறிலங்காவை மீளக்கட்டியெழுப்ப நல்லதொரு வாய்ப்பாக அமையும்.

இந்தியாவில் பலமொழிகள், பல கலாசாரங்கள் இருந்த போதிலும், ஜனநாயகம் எல்லா மக்களுக்கும் சமஉரிமையை உறுதி செய்கிறது. அதன் மூலம் அமைதியான வாழ்வை உறுதிப்படுத்த முடியும்.

சிறிலங்காவில் இருதரப்பு தலைவர்களையும் சந்தித்து பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவது குறித்த பேசவுள்ளேன். இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு செல்வதற்கு ஒழுங்குகளை செய்து தரும்படி சிறிலங்கா அரசிடம் கோரவுள்ளேன்.

சிறிலங்காவுக்கான இந்தப் பயணம் அமைதியை ஊக்குவிப்பதற்கானது. இதனை சிலர் விமர்சித்தாலும் அது அவர்களின் ஜனநாயக உரிமை.

போர்கள் மோசமான நிலைமைகளையே கொண்டு வந்துள்ளன. தமது மகன்களையே தந்தைமார் புதைத்துள்ளனர்.

எந்தப் பிரச்சினைக்கும் போர் மூலம் தீர்வு காணமுடியாது. மோதல்களுக்கான தீர்வாக எந்தவொரு போரும் அமையவில்லை.

போருக்குப் பிந்திய நம்பிக்கையை, உண்மையை, நம்பகத்தன்மை கட்டியெழுப்ப வேண்டியது சிறிலங்காவின் தேவை.“ என்றும் அப்துல் கலாம் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinapp...?20120121105412

  • கருத்துக்கள உறவுகள்

apjkalam1.jpg

இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று பார்வையிடுவதற்கு ஒழுங்குகளை செய்து தரும்படி சிறிலங்கா அரசிடம் கோரப் போவதாக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு அவர் நேற்றிரவு கொழும்பை வந்தடைந்தார்.

கொழும்பு புறப்பட முன்னர் அவர் இந்திய ஊடகங்களுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

"யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களையும், இந்துக் கல்லூரி மாணவர்களையும் சந்திக்கவுள்ளேன்.

அத்துடன் அங்குள்ள புலமையாளர்கள், நிபுணர்கள், பொதுமக்களை சந்திப்பதையிட்டு நிச்சயமாக மிகவும் மகிழ்ச்சிடைகிறேன்.

2020இல் இந்தியாவை ஆற்றலுள்ள நாடாக மாற்றுவதற்கான திட்டம் குறித்த எமது அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த அனுபவங்களை சிறிலங்கா மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

மும்மொழிக் கல்வித் திட்டத்தின் மூலம் சிறிலங்காவை மீளக்கட்டியெழுப்ப நல்லதொரு வாய்ப்பாக அமையும்.

இந்தியாவில் பலமொழிகள், பல கலாசாரங்கள் இருந்த போதிலும், ஜனநாயகம் எல்லா மக்களுக்கும் சமஉரிமையை உறுதி செய்கிறது. அதன் மூலம் அமைதியான வாழ்வை உறுதிப்படுத்த முடியும்.

சிறிலங்காவில் இருதரப்பு தலைவர்களையும் சந்தித்து பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவது குறித்த பேசவுள்ளேன். இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு செல்வதற்கு ஒழுங்குகளை செய்து தரும்படி சிறிலங்கா அரசிடம் கோரவுள்ளேன்.

சிறிலங்காவுக்கான இந்தப் பயணம் அமைதியை ஊக்குவிப்பதற்கானது. இதனை சிலர் விமர்சித்தாலும் அது அவர்களின் ஜனநாயக உரிமை.

போர்கள் மோசமான நிலைமைகளையே கொண்டு வந்துள்ளன. தமது மகன்களையே தந்தைமார் புதைத்துள்ளனர்.

எந்தப் பிரச்சினைக்கும் போர் மூலம் தீர்வு காணமுடியாது. மோதல்களுக்கான தீர்வாக எந்தவொரு போரும் அமையவில்லை.

போருக்குப் பிந்திய நம்பிக்கையை, உண்மையை, நம்பகத்தன்மை கட்டியெழுப்ப வேண்டியது சிறிலங்காவின் தேவை.“ என்றும் அப்துல் கலாம் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinapp...?20120121105412

அப்ப ஐயா அணுகுண்டு செய்தது ..............

ஜெனனாயகமாக எல்லா மக்களும் அதை பிச்சு பிச்சு சாப்பிடவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்கள் தயாரிக்கப்படுவது போர் புரிவதற்கு மட்டுமல்ல. ஆயுதங்கள் போர் புரிவதற்கான நோக்கத்துக்காக மட்டுமே என்று இருந்தால், இன்றைய அணு வல்லரசுகள் எவையும் ஏன் அணு ஆயுதங்களை போர்க்களங்களில் இன்று பயன்படுத்துவதில்லை என்பதையும் அமெரிக்க ரசிய வல்லரசுகள் அணுவாயுதங்களை ஏன் அழித்து வருகின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுதங்கள் தயாரிக்கப்படுவது போர் புரிவதற்கு மட்டுமல்ல. ஆயுதங்கள் போர் புரிவதற்கான நோக்கத்துக்காக மட்டுமே என்று இருந்தால், இன்றைய அணு வல்லரசுகள் எவையும் ஏன் அணு ஆயுதங்களை போர்க்களங்களில் இன்று பயன்படுத்துவதில்லை என்பதையும் அமெரிக்க ரசிய வல்லரசுகள் அணுவாயுதங்களை ஏன் அழித்து வருகின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜனநாயகம், மேலை நாடுகளில் மக்களுக்கு கொடுக்கும் அதே பயனை இந்தியாவில் கொடுக்க வில்லையே ஏன்? அது தனிமனித இலாபத்துக்கு நாட்டை சுடுகாடாக்கிக் கொண்டிருக்கின்றதே!

அணுஆயுதம் மிரட்டுவதற்கான ஆயுதமே அன்றி பயன்படுத்தி யுத்தம் செய்வதற்க்கான சூழல் இன்று இல்லை!

கோவணம் கட்ட வேண்டிய இடத்திலேயே துணியே இல்லாதவன், கையுறை வாங்கி என்ன பந்தா காட்டப் போறான்? இந்தியா, இது வரை எந்த இடத்தில் தன்னுடைய வெளிவிவகார செயற்பாட்டில் தன் போராண்மையை வெளிப்படுதி இருக்கின்றது. ஒவ்வொரு விடயத்திலும் கல்லெடுக்க ஓடும் பெட்டைநாயாய்த் தான் தன்னை நிரூபித்திருக்கின்றது. கடலிலே அதன் மக்களை கொன்று குவித்தால் என்ன? மும்பேயில் குண்டு வெடித்தால் என்ன? பாகிஸ்தான். சீனா ஆக்கிரமித்த இடங்களை திருப்ப மீட்டுத்தான் இருக்கின்றதா? இந்த நாட்டிற்கு இராணுவமே என்ன கேடு என்று கேட்க வேண்டிய நிலையில்? அணுகுண்டு வேறா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னைச் சுற்றி உள்ள அனைத்து நாடுகள் மீதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்த ஒரு பிராந்தியப் பயங்கரவாதம், தன் கூலியான இந்தக் கலாம் ஊடு அமைதி போதிக்கின்றது!

கலாமின் வார்தைகளில் ஆயிரம் உண்மை இருக்கலாம், இருந்தும் என்ன? சாத்தான் வேதம் ஓதினால் என்ன? சாத்தானின் கூலி வேதம் ஓதினால் என்ன? இரண்டும் ஒன்றுதானே!

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்கள் தயாரிக்கப்படுவது போர் புரிவதற்கு மட்டுமல்ல. ஆயுதங்கள் போர் புரிவதற்கான நோக்கத்துக்காக மட்டுமே என்று இருந்தால், இன்றைய அணு வல்லரசுகள் எவையும் ஏன் அணு ஆயுதங்களை போர்க்களங்களில் இன்று பயன்படுத்துவதில்லை என்பதையும் அமெரிக்க ரசிய வல்லரசுகள் அணுவாயுதங்களை ஏன் அழித்து வருகின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுடைய பல கருத்துக்களை நான் ஊன்றி வாசிப்பதுண்டு அதில் பல உண்மைகள் இருக்கும்.

கோவிக்க வேண்டாம். மேலே எழுதியதில் நீங்கள் எதோ எழுதியுள்ளீர்கள் என்று மட்டுமே தெரியு உண்ணுமே விளங்கல.

ஆயுதங்கள் தயாரிக்கப்படுவது போர் புரிவதற்கு மட்டுமல்ல. ஆயுதங்கள் போர் புரிவதற்கான நோக்கத்துக்காக மட்டுமே என்று இருந்தால், இன்றைய அணு வல்லரசுகள் எவையும் ஏன் அணு ஆயுதங்களை போர்க்களங்களில் இன்று பயன்படுத்துவதில்லை என்பதையும் அமெரிக்க ரசிய வல்லரசுகள் அணுவாயுதங்களை ஏன் அழித்து வருகின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்கா அணுக்குண்டை இரண்டு தடவைகள் பாவித்தது. ரூசியா ஆப்கானிஸ்த்தானிலும் அமெரிக்கா வியட்நாமிலும் தகாத தடை செய்யப்பட்டாயுதங்களை பாவித்தன. இது அவர்களின் போரின் போது நேர்மையற்ற தனமையைக்காட்டுகிறது. அதாவது தாங்கள் அணு ஆயுதத்தை பாவிக்க போவதில்லை மாதிரி நடந்து கொண்டாலும் நம்ப இயலாது. கியுபா சங்கடத்தின் பொது இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களை ஏவியிருக்க கூடிய நிலமை ஏற்பட்டது. குருசேவ் உண்மையை உணர்ந்து தவறைத் திருத்தி விட்டர்.

வட கொறியா தென் கொறியா மீது பாவிக்காது என்பதை சொல்ல முடியாது. ஈரான் நம்பத்தகாத நாடு.

பாகிஸ்தான், சீனா, இந்தியா தம்மைதான் அணுவாயுத தாகுதலால் பாதுகாத்துக் கொள்ள முடியாத நாடுகள், அதை உபயோகிப்பதில் முந்தும் சந்தர்பம் இருக்கு. இஸ்ரேலுக்கு அணு ஆயுதத்திடமிருந்து தன்னைத்தான் காக்க முடியுமென்றாலும், தான் தாக்குப்பட்டால் கட்டாயம் எதிரிகள் மீது பாவிக்கும்.

அன்றைய நாள் இரண்டு அணுக்குண்டுகள் யப்பானை அடி பணிய வைக்க போதுமானவையாக இருந்தன. இன்றைய குண்டுகளில் நூறு அமெரிக்காவை அடி அல்லது ரூசியாவை (நாட்டை முழுதாக அழித்து) அடி பணிய வைக்க மிச்சா மிச்சம். ஆயுத குறைப்புக்கு முன் இந்த இரு நாடுகளும் தலா 50,000 அணுத்தலைகளுக்கு கிட்ட வைத்திருந்திருக்கலாம். அந்த தொகை அணுவாயுதத்தால் யுத்தமொன்றில் என்ன பலன் என்பதை விளங்க வைக்க முடியாது போனால் அவை மேலதிக பயத்தை உண்டாக்க மாட்டா. இப்படி செய்து ஒருவரை ஒருவர் முட்டாள்களாக்காமல் இருக்கத்தான் ஆயுதக் குறைப்பு. அணு ஆயுதக்குறைப்பு இந்த இரு நாடுகளுக்கும் மட்டுமே.

.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.