Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'13 பிளஸ்' எனப்படுவது செனட் சபைதான்!

Featured Replies

'13 பிளஸ்' எனப்படுவது செனட் சபைதான்! - இந்தியாவுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அறிவிப்பு!!

சிறிலங்காவின் அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்துக்கு மேலாக (13+) என்று சொல்வது செனட் சபையைத் தான் என சிறிலங்கா அரசாங்கம் இன்று மீண்டும் தெரிவித்திருக்கின்றது.

சிறிலங்கா அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று வியாழக்கிழமை உரையாற்றிய சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, '13 பிளஸ் எனக் கூறப்படுவது செனட் சபையாகும். இது தொடர்பாக இந்தியாவுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது' எனக் குறிப்பிட்டார்.

13 பிளஸ் என்பது தொடர்பாக குழப்பான அறிக்கைகள் வந்து கொண்டிருப்பதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கோரியிருப்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே சிறிலங்காவின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார்.

'13 பிளஸ் என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் எந்தவிதமான குழப்பமும் இல்லை. 13 பிளஸ் என்பது செனட் சபைதான். இந்தியாவிடமும் இது தொடர்பாக நாம் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றோம்' எனவும் சிறிலங்காவின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

சிறிலங்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தன்னுடனான பேச்சுக்களின் போது அரசியலமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தத்துக்கும் மேலாகச் சென்று இன நெருக்கடிக்குத் தீர்வைக்வைக் காண்பதற்கு தான் தயாராக இருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=3cd63a77-f47b-48e5-a903-e4dec8397607

  • தொடங்கியவர்

அரசு 13+ஆல் பிளவுபடும்: ஐ.தே.க.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகத் தீர்வு என்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பச்சைகொடியைக் காட்டியுள்ளது.

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தமது கட்சி ஆவல் கொண்டிருப்பதாக சற்றுமுன் தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால் அதில் இணைந்து கொள்வது தொடர்பில் ஐ.தே.க. ஆராயும் என்றும் கூறினார்.

அத்துடன் அரசியல் தீர்வுக்குச் செல்ல அரசாங்கம் தயாராக இருக்கிறதா என்று கேள்வியெழுப்பிய கிரியெல்ல எம்.பி 13+ நிறைவேற்றினால் மஹிந்த அரசு பிளவுபடும் என்றும் தெரிவித்தார்.

ஆணைக்குழு அறிக்கையிலுள்ள ஒரு பரிந்துரையேனும் நிறைவேறவில்லை

சர்வதேச நாடுகளிலிருந்து எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக பதிலளிக்கப்படும் என்று அரசாங்கம் தம்பட்டம் அடித்தது.

எனினும் ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்து மாதங்கள் கடந்துள்ள போதிலும் அதன் ஒரு பரிந்துறையையேனும் அரசு நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.

http://www.alaikal.com/news/?p=95033

  • தொடங்கியவர்

அரசு 13+ஆல் பிளவுபடும்: ஐ.தே.க.

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தமது கட்சி ஆவல் கொண்டிருப்பதாக சற்றுமுன் தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால் அதில் இணைந்து கொள்வது தொடர்பில் ஐ.தே.க. ஆராயும் என்றும் கூறினார்.

பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பு அவசியம்! - தெரிவுக்குழு நிலைப்பாட்டிலும் மாற்றமில்லை!! - சுரேஸ்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் மூன்றாம் தரப்பு பங்குகொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இவ்விருதரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்துள்ள போதிலும், இப்பேச்சுவார்த்தைகளில் ஒரு அங்குல அளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் மூன்றாம் தரப்பின் பங்கு அவசியமாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வுகாண முடியாத கட்டத்தில் 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 2002ஆம் ஆண்டு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு நோர்வே சமாதான நடவடிக்கைகளில் மத்தியஸ்தம் வகித்தது. தற்போதும் அவ்வாறான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மூன்றாம் தரப்பின் அவசியம் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறியிருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன், அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் சிறிலங்கா அரசாங்கத்துடன் தாம் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டால் மட்டுமே அதில் கூட்டமைப்பு இணைந்து கொள்ளும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளுமாறு தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவது தொடர்பாகக் கேட்டபோதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

'நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பாக நாம் எமது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்துவிட்டோம். சிறிலங்கா அரசாங்கத் தரப்புடன் நாம் கடந்த ஒரு வருடமாக நடத்தும் பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு ஏற்பட்டால் மட்டும் அதனைப் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குக் கொண்டு சென்று விவாதிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். சிறிலங்கா அரசாங்கத்துடன் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்தவிதமான இணக்கப்பாடும் ஏற்பட்டுவிடவில்லை. இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கம் எம்மை அழைக்கின்றது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நாம் பங்கேற்க வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமான முறையில் எமக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை. எமது நிலைப்பாடு என்ன என்பதனை சிறிலங்கா அரசாங்கத்துக்கும், ஜனாதிபதிக்கும் தெளிவாக எடுத்துக் கூறியும் இருக்கின்றோம்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முதலில் ஒரு இணக்கப்பாடு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தோம். இருந்தபோதிலும் எமது நியாயப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் பரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை' என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=373b5caa-a6fb-4b12-a649-25a3ab2046aa

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.