Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிந்த சினிமா தெரியாத விசயம்.............

Featured Replies

சாவித்திரி படத்தில் நாரதர் வேடத்தில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி நடிக்க வேண்டும் என்றும், அதற்கு சம்பளம் 40 ஆயிரம் என்றும் அந்த படத்தை தயாரித்த ராயல் டாக்கீசார் விரும்பினார்கள்.

"ஆண் வேடத்தில் நடிப்பதா?" என்று முதலில் எம்.எஸ். தயங்கினாலும், "கல்கி" பத்திரிகைக்கு மூலதனம் தேவைப்பட்டதால் நாரதராக நடிக்க சம்மதித்தார்.

"சாவித்திரி" படமும் அமோக வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக, தனக்குக் கிடைத்த ரூ.40 ஆயிரத்தை "கல்கி" பத்திரிகை தொடங்க கணவரிடம் கொடுத்துவிட்டார் எம்.எஸ். அந்த அஸ்திவாரத்தின் மீது எழுந்ததுதான் "கல்கி" பத்திரிகை.

422729_171650219605232_153944858042435_188177_1115797071_n.jpg

நன்றி 'தெரிந்த சினிமா தெரியாத விசயம்' Facebook பக்கம்

Edited by நிழலி

  • தொடங்கியவர்

"பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக - நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக" - இந்த பாட்டை தன்னுடைய சொந்த கதையை வைத்துதான் கவிஞர் கண்ணதாசன் எழுதினார் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ????? ஆமாம். தன் நண்பரொருவர் வைத்திருந்த வெளிநாட்டுக்கார் மீது கண்ணதாசனுக்கு ஆசை. அந்த காரை விற்கிற முடிவில் நண்பர் இருக்கிறார் என்பதை கேள்விபட்டு அதை விலைக்கு வாங்க பேசியும் முடித்து விட்டார். மூன்றில் ஒரு பங்கு முதலில் தருவதாகவும் மீதத்தை கொஞ்சம் கொஞ்சமாக தருவதாகவும் முடிவானது.

இதனிடயே, கண்ணதாசனுக்கு ஊரைச்சுற்றி நிறைய கடன் இருப்பதாகவும் மீதம் பணம் பெறுவது கடினம் என்றும் அந்த கார் சொந்தக்காரரிடம் மற்றவர்கள் சொல்ல அவரும் மனம் மாறிவிட்டார்.மறுநாள் காலை தன் ஓட்டுனருடன் நண்பர் வீட்டுக்குச் கவிஞர் செல்ல, ‘அந்த காரை விற்க தனக்கு விருப்பமில்லை’ என்று கார் சொந்தக்காரர் கூறிவிட்டார்.

ஏமாற்றத்துடன், திரும்பிய கவிஞருக்கு, அன்று இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்த 'பணக்கார குடும்பம்' படத்துக்கு ஒரு சோகப்பாடல் எழுத வேண்டியிருந்தது. இந்த சம்பவம் மனதைக்குடைய, பல்லவியை இப்படி துவங்கினார்.... "பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக - நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக".

  • தொடங்கியவர்

சிகப்பு ரோஜாக்கள் தமிழ் திரை படங்களில் ஒரு வித்தியாசமான படம்..இந்த படத்தின் பாடல்கள் பேசப்பட்டதை விட படத்தின் பின்னனி இசை அப்போது அனைவராலும் பேசவும் ரசிக்கவும் பட்டது . அந்த பின்னனி இசை 3 நாட்களில் வெறும் ஐந்து இசைக்கலைஞர்கள் மட்டும் பங்கேற்க பத்தாயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டதாம் .

401103_169262569843997_153944858042435_183344_669178211_n.jpg

http://www.facebook.com/home.php#!/pages/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/153944858042435

  • தொடங்கியவர்

முகவரி - அஜித்தின் வெற்றி படங்களில் ஒன்று . ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகர் முரளி. பூமணி என்ற படத்தின் வெற்றிக்கு பின் முரளி தேவயானி நடிக்க இளையராஜா இசையில் "அறிமுகம்" என்ற பெயரில் இந்த படத்தின் பூஜை போட பட்டது . சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட

நடிகர் முரளி ஒப்பந்தமான " அறிமுகம்"...பின்னர் அஜீத்தின் "முகவரியாக" வெளிவந்து வெற்றி பெற்றது .

421768_172350559535198_153944858042435_191312_1503674373_n.jpg

  • தொடங்கியவர்

நடிகர் திலகம் சிவாஜி பற்றி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நிறைய பேசியிருப்பார். ஆனால், சிவாஜியுடனான தனது நெருக்கத்தை இதை விட அழுத்தமாக வேறு எதிலும் சொல்லி இருக்க மாட்டார் எம்.ஜி.ஆர் !

"என் மனைவியின் (சதானந்தவதி) மரணத்தின் போது யார் யாரெல்லாமோ வந்தார்கள். எனக்கு அழத்தோன்றவில்லை. அப்போது என் வீட்டிற்கு சிவாஜி வந்தபோதுதான் என்னையும் மீறி அழுகை வந்தது. அஸ்திவாரம் வெடிக்கும் அளவு என்பார்களே, அந்த அளவு அழுதேன். அன்று இறுதி வரை இருந்த சிவாஜி, என்றும் என்னுடன் இருப்பார்" - எம்.ஜி.ஆர்

417510_171148342988753_153944858042435_187057_1441963848_n.jpg

http://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/153944858042435

சுவாரசியமான தகவல்கள் நிழலி! தொடருங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.