Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போட்டி நடைபயண நிகழ்வினைப் புறக்கணிப்பதற்கு பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்கள் முடிவு!

Featured Replies

தமிழ்த் தேசிய எழுச்சி தினமான மாவீரர் தினத்தைக் குழப்பும் நோக்குடனும், புலம்பெயர் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் நோக்குடனும் போட்டி மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்படுத்திப் புலம்பெயர் நாடுகள் எங்கும் குழப்பத்தை உருவாக்கிய அதே தமிழ்த் தேசியச் சிதைவுக் குழுக்கள் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள புலம்பெயர் தமிழர்களது பேரெழுச்சி நிகழ்வைக் குழப்பும் நோக்கோடு லண்டனிலிருந்து ஒரு நடை பயணத்தை ஆரம்பித்துள்ளன.

கடந்த வருட இறுதியில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது ஜெனிவா முருகதாசன் திடலில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து நடாத்திய பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வின்போது, இந்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறும் ஐ.நா.வின் மனித உரிமைகள் கூட்டத் தொடரிலும் புலம்பெயர் தமிழர்களது ஒன்றுபட்ட பேரெழுச்சி ஆர்ப்பாட்டத்தை நடாத்துவது என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு வலுச் சேர்க்கும் விதமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐ.நா. நோக்கிய தமிழினப் படுகொலைக்கு எதிரான நீதி கேட்கும் நடை பயணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலின்படி மாவீரர் தினத்தைச் சிதைக்க முற்பட்ட அதே தமிழ்த் தேசிய சிதைவுக் குழுக்கள் ஜெனிவா பேரெழுச்சியையும் குழப்பும் நோக்கில் லண்டனிலிருந்து ஒரு நடை பயணத்தையும், ஜெனிவா பேரெழுச்சிக்காகப் புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களால் நிர்ணயிக்கப்பட்ட மார்ச் 05 ஆம் திகதிக்கு முன்னதாக, பெப்ரவரி 27 ஆம் திகதி ஒரு ஆர்ப்பாட்டத்தையும் ஒழுங்கு செய்துள்ளார்கள்.

இந்தத் திட்டத்தின்படி, லண்டனிலிருந்து சனிக்கிழமை புறப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பின்கதவு உறுப்பினரும், தான் தெரிவு செய்யப்பட்ட விதம் பிழையானது என்று பகிரங்கமாகக் கடிதம் எழுதி, அதிலிருந்து விலகி, பின்னர் மீண்டும் பின்கதவு வழியாக நாடு கடந்த அரசாங்கத்தின் அங்கத்தவராக நுழைந்தவருமான ஜெய்சங்கர் முருகையா தலைமையிலான குழுவொன்று சனிக்கிழமை தமது ஜெனிவா நோக்கிய நடை பயணத்தை ஆரம்பித்துள்ளது.

நடை பயணத்தை மேற்கொள்பவர்களது நோக்கம் தமிழீழ மக்களுக்கும், தமிழீழ விடுதலைக்குமானதாக இருந்தால், அவர்கள் நிட்சயம் இந்த நடை பயணத்தை புலம்பெயர் தமிழ் மக்களது எழுச்சிப் போராட்டம் நடைபெறும் மார்ச் 05 ஆம் திகதியை இலக்காகக் கொண்டு மேற்கொண்டிருக்க வேண்டும். மாறாக, தமிழ் மக்களது பேரெழுச்சியைச் சிதைக்கவும், தமிழ் மக்களை இரண்டுபட வைக்கவும் மேற்கொள்ளும் சிங்கள தேசத்தின் சதி முயற்சிக்கு உடந்தையாகவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றது என்றே நம்பப்படுகின்றது.

புனிதமான தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பல சதிகளுடன் முள்ளிவாய்க்காலில் முறியடித்த சிங்கள ஆட்சியாளர்களது இலக்காக உள்ள புலம்பெயர் தமிழர்களது ஒன்றுபட்ட பலத்தினை முறியடிக்கும் முயற்சியினை மேற்கொள்ளும் தரப்பினர் அதனைக் கைவிடவேண்டும் எனவும், அந்த முயற்சிக்காக நடை பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழர்கள் ஈழத் தமிழர்களது அவல நிலையையும், மாவீரர்களது கனவையும், தேசியத் தலைவர் அவர்களது கட்டளைகளையும் கருத்தில் கொண்டு, மார்ச் மாதத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஆவேசமாக எழுச்சி கொள்ளும் மார்ச் 05 ஆம் திகதியைத் தமது நடை பயணத்தின் நிறைவு நாளாக அறிவிக்க வேண்டும் எனவும் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்கள் ஏகமனதாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைக்கான தமது கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் ஒன்றிணையத் தவறினால், லண்டனிலிருந்து நடைபயணம் மேற்கொள்ளும் ஜெண்சங்கர் முருகையா குழுவினரது பிரான்ஸ் வருகையைப் புறக்கணிப்பதாகவும், பாரிஸ் நகரில் அவர்களுக்கு வர்த்தகர்கள் சார்பில் வரவேற்பு அளிப்பதில்லை எனவும் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்கள் ஏகமனதாக முடிவு செய்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.