Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடங்குளம் அணு மின் திட்ட எதிர்ப்பாளர்கள் மீதான தாக்குதல்! - பழ.நெடுமாறன், ராமதாஸ், வைகோ கண்டனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

koodankulam-010212-150.jpg

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கூடங்குளம் அணு மின் திட்ட எதிர்ப்பாளர்கள் தாக்கப்பட்டதற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நிபுணர் குழுவுடன் பேச சென்றவர்களை இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தாக்கியவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

http://youtu.be/O4vXXWxIFH8

அணு உலை குறித்த மக்களின் நியாயமான அச்சத்திற்கு மதச் சாயம் பூசி திசைதிருப்பி குழப்ப இந்து முன்னணி முயற்சிக்கிறது. ஜனநாயக சக்திகள் அனைத்தும் இதற்கு எதிராக அணி திரள வேண்டும் என கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டம் நடத்தி வரும் உதயகுமார் உள்ளிட்டோரை ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தாக்குவதற்கு ஏற்கெனவே பல முறை முயற்சி நடந்துள்ளது. பாதுகாப்பு கேட்டிருந்தும் போராட்டக் குழுவினர் மீது தாக்குதல் நடந்திருப்பதால் மாவட்ட நிர்வாகம், காவல் துறை அதிகாரிகள் மீதும் ஐயம் ஏற்படுகிறது.

கூடங்குளம் பிரச்னை தொடர்பாக மத்திய குழுவுடன் பேச மாநில அரசு அமைத்த குழுவினர் மீது தாக்குதல் நடந்திருப்பதால், இதை தமிழக அரசுக்கு எதிரான தாக்குதலாகக் கருதி, தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையை மத மோதலாக மாற்ற மதவாத சக்திகள் முயற்சிக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. எந்தப் பிரச்னையிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதைப் பேசித் தீர்ப்பதுதான் சரியானதாக இருக்கும். மாறாக வன்முறை மூலம் தீர்வு காண்பது முறையற்றது என கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக உரிமைகளின்படி போராடி வரும் அணு மின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தினரைக் கொலை செய்யும் நோக்கத்தோடு வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அணுஉலைக்கு எதிரான போராட்டத்தையோ, ஜனநாயக உரிமைகளையோ வன்முறைகளின் மூலம் ஒருபோதும் அடக்கிவிட முடியாது. முன்னிலும் பன்மடங்கு ஆவேசத்துடன் போராட்டம் வீறுகொண்டு எழும் என கூறியுள்ளார்

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

"தவறு செய்யும் தினமலர்" - தினமலர் சிந்திக்குமா?

அனைத்து நாளிதழிலும் 'கூடங்குளம் அணுமின் நிலைய ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் மோதல்' என்ற விதத்தில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் தினமலரில் 'அணு உலை எதிர்ப்பாளர்கள் வன்முறை' என்ற விதத்தில் இன்று தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளது அதை சற்று விரிவாக பார்க்கலாம்.

தினமணியில் இந்த சம்பவம் குறித்து இடம் பெற்றிருக்கும் செய்தியின் தலைப்பு எந்த விதத்தில் உள்ளது என்று பாருங்கள்.

அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதான தாக்குதல்: நெடுமாறன்,வைகோ, ராமதாஸ் கண்டனம்"

தினத்தந்தியில் இந்த சம்பவம் குறித்து நடுநிலயுடம் இடம்பெற்றிருக்கும் தலைப்பு செய்தியை பாருங்கள்

"நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அணுமின் நிலைய ஆதரவாளர்கள் -எதிர்ப்பாளர்கள் மோதல் அடி - தடி பேச்சுவார்த்தை ரத்து"

மேலும் தினத்தந்தி செய்திகள்

"வன்முறையின் மூலமாக கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்க முடியாது வைகோ அறிக்கை"

"கூடங்குளம் போராட்ட குழுவினர் மீது தாக்குதல் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்"

மற்ற நாளிதழ் மற்றும் தொலைகாட்சி அனைத்திலும் இவ்வாறு செய்தி இடம் பெற்றிருக்க தின மலரின் தலைப்பு செய்தியை பாருங்கள்

gallerye_233203513_396657.jpg

கூடங்குளம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த விடாமல் ரகளை! கும்பலாக வந்து உதயகுமார் கோஷ்டியினர் அடிதடி என்ற விதத்தில் தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளனர்.

தினமலருக்கு அணு உலையை எதிர்த்து போராட்டம் நடத்துவது பிடிக்க வில்லை என்றால் அதை காரண காரியங்களுடன் ஆசிரியர் பக்கத்தில் கட்டுரையாக வெளியிடுவதுதான் பத்திரிகை தர்மம். அதை விடுத்து ஒரு சம்பவத்தை நடு நிலையுடன் வெளியிடாமல் தமது விருப்பம் போல் செய்தியை திரித்து பொய்யாக வெளியிடுவது என்பது எந்த விதத்தில் பத்திரிகை தர்மமாகும்.

மக்களே சிந்திக்க மாட்டீர்களா? இப்படி பட்ட நாளிதழ் நமக்கு தேவையா? இவர்களுடைய கருத்தை மக்கள் மீது திணிக்க இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. செய்திகளை செய்திகளாக மட்டும் வெளியிடுங்க அதை விடுத்து உங்கள் கருத்தை செய்தி என்ற பெயரில் மக்கள் மீது திக்க முயலாதீர்கள். தொடர்ந்து இதுப்போல செய்து வந்தீர்கள் என்றால் உங்கள் முகத்திரை கிழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

இனியாவது நல்ல முறையில் செய்திகளை தர முயலுங்கள் காசு கொடுத்து நாளிதழ் வாங்கும் மக்களுக்கு உண்மையை கொடுக்க முயலுங்கள். இல்லை என்றால் தினமலர் நாளிதழை மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்து விடுவார்கள் இது குறித்து "தினமலர் சிந்திக்குமா?"

http://kalamarudur.b.../blog-post.html

Edited by கந்தப்பு

ஜனநாயகம் தெரியாத இந்திய ஜனநாயகக் காட்டுமிராண்டிகளின் தாக்குதல் கண்டிக்கப் படவேண்டியதே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.