Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களத்தை இழந்துவரும் இந்தியாவும், புலத்தில் குறிவைக்கப்படும் ஈழத் தமிழர்களுக்கான போராட்டங்களும்!

Featured Replies

பெப்ரவரி 2, 2012

unbenaala.jpg

ஈழத் தமிழர் குறித்த இந்தியாவின் வகிபாகம் குறைந்து செல்கின்றது. சீனாவுடனான நெருக்கத் திகிலில் ஈழத் தமிழர்களது விடயத்தில் இந்தியா விரும்பினாலும், சிறிலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாத நிலையில் உள்ளது.

ஆனால், தமிழர் தளம் தன் கையை விட்டுப் போய்விட்டால், சிங்கள தேசத்தை மிரட்டும் ஒரே அஸ்திரமும் இல்லாமல், சிறிலங்கா ஊடான சீனாவின் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் ஈழத் தமிழர்கள் மீது கரிசனை கொள்வதாகப் பாவனை செய்கின்றது.

இந்தியாவின் முழு வடிவத்தையும் புரிந்து கொண்ட ஈழத் தமிழர்கள் இந்தியாவை நம்புவதற்குத் தயாராக இல்லாத நிலையில், ஈழத் தமிழர்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தமிழகத்தில் கொந்தளிப்பை அதிகரித்து வருகின்றது. கருணாநிதி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட நிலையில், ஈழத் தமிழர் விடயத்தில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களது கரிசனை தமிழகத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களது கரங்களைப் பலப்படுத்தி வருகின்றது.

அண்மையில், தமிழ்த் தேசிய உணர்வாளர்களது வேண்டுகோளை அடுத்து தமிழக அரச கூட்டுறவு நிறுவனங்களில் முன் வரிசையில் சிறிலங்காவின் உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களது விடயத்தில் தமிழக அரசும், தமிழக மக்களும் அக்கறை செலுத்திவரும் நிலையில் சிறிலங்காவுக்குச் சார்பான நகர்வுகளைச் சர்வதேச தளங்களில் தொடர்வது இந்திய மத்திய அரசுக்குப் பெரும் சங்கடங்களை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே, ஈழத் தமிழர் விடயத்திலும், தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படைகளின் தாக்குதல்கள் 500 இற்கும் மேற்பட்டவர்களைப் பலி கொண்டும், தொடரும் நிலையிலும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள்மீது அதிருப்தி கொண்டிருந்த தமிழகத்தில் கூடங்களம் அணு மின் நிலைய விவகாரமும், முல்லைப் பெரியாறு அணை விவகாரமும் பெரும் புயலாக மாறும் அபாயத்தை அடைந்துள்ளது.

தெற்காசியப் பிராந்திய வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இந்தியாவும், சீனாவும் இலங்கைத் தீவைத் தமது ஆடுகளமாக மாற்றியுள்ளன. இந்திய மத்திய அரசின் தவறான வெளிநாட்டுக் கொள்கையினால் சிறிலங்கா அரசு சீனா பக்கம் அதிகமாகச் சாய்ந்து வருவதைத் தடுக்க முடியாத நிலை இந்தியாவுக்கு உருவாகியுள்ளது. ஆசிய பிராந்தியத்தின் பலப் பரீட்சையில் மட்டுமல்லாமல், பொருளாதார நலன்களுக்கான போட்டியிலும் சீனாவே முன்னிடம் வகித்து வருவதால், இந்தியா மேற்குலகை அனுசரித்தே நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஈழத் தமிழர்கள் விடயத்திலும் இந்தியா மேற்குலகின் வியூகங்களுக்கு மாறாகத் தனது தப்புத் தாளத்தைத் தொடர முடியாத இக்கட்டான நிலையில் உள்ளது. இதனால், ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் அனைத்துலக குற்றச்சாட்டுக்களிலிருந்து சிறிலங்காவைக் காப்பாற்றும் நிலையைத் தொடரமுடியாத நிலையில் இந்தியா உள்ளது. இதனை, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவை டெல்லிக்கு அழைத்து, இந்திய அரசு தனது கையறு நிலையைப் புரிய வைத்துள்ளது.

டெல்லியில் நடாத்தப்பட்ட இரு தரப்பு ஆலோசனைகளின்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் ஜெனிவா மாநாட்டுக்கு முன்னதாக சிறி லங்காவின் அமைச்சர்களும், ராஜதந்திரிகளும் மேற்குலக நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

சிங்கள ஆட்சியாளர்களது அத்தனை முகங்களையும் புரிந்து வைத்துள்ள மேற்குலகும், அமெரிக்காவும் சிறிலங்கா தெரிவிக்கும் மொட்டைத்தலை நியாயங்களை ஏற்குமா? அந்த நம்பிக்கையில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் தொடர்ந்தும் சிறிலங்கா அரசு மீது மென்போக்கைக் கடைப்பிடிக்குமா? என்பதைப் புலம்பெயர் தமிழர்களது எழுச்சியே தீர்மானிக்கப் போகின்றது.

இதனால், எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி தமிழ்த் தேசிய தளத்தினால் ஜெனிவா முருகதாசன் திடலில் நடாத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டப் பேரெழுச்சியைக் குழப்புவதற்கும், தடுப்பதற்கும் சிறிலங்கா அரசு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த மக்கள் எழுச்சியை இரண்டாக உடைப்பதில் சிங்கள ஆட்சியாளர்கள் ஓரளவு சாத்தியப்பாட்டை எட்டியிருந்தாலும், அது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்குமா? என்பது கேள்விக் குறியே.

- சிவகுரு பாலச்சந்திரன்

மக்கள் பிரதிநிதி – பாரிஸ்

Flyer-Jan-2012.jpg

Thanks.. www.aaivuu.wordpress.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.