Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரணயம்(காதல்) - மலையாள படம்

Featured Replies

நேற்று பிரணயம் என்கிற மலையாளப் படத்தை இரண்டாவது முறையாக பார்த்தேன். ஒரு பெண்ணுக்கும், இரு ஆண்களுக்குமான காதல் கதை. ஒருவருக்கு ஒருமுறைதான் காதல் வரும், ஒரே நேரத்தில் ஒருவர் மேல்தான் காதல் வரும் என்கிற வாதங்களை எல்லாம் படம் காலி செய்கிறது. முழுக்க முழுக்க பெண்ணின் பார்வையில் படம் நகர்வதும், மூவரின் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்ட விதமும் படத்தை அழகாக நகர்த்தியிருக்கிறது. ஜெயப்பிரதா, விவாகரத்து பெற்றுவிட்ட தன் முதல் கணவன் அனுபம் கெரை நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு எதேச்சையாக சந்திக்கிறார். அந்த அபார்ட்மெண்டில் இருக்கும் தன் மகன் குடும்பத்தோடு வசிக்க ஒரு மாதத்திற்கு முன்புதான் அங்கு வந்திருக்கிறார் அனுபம். ஜெயப்பிரதாவுக்கு தத்துவப் பேராசிரியரான மோகன்லாலோடு இரண்டாவது திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். திருமணமான அந்த மகளோடு தான் மோகன்லாலும், ஜெயப்பிரதாவும் தங்கியிருக்கிறார்கள். அனுபம் வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தங்கள் இரண்டரை வயது மகன் சுரேஷை தனியாக வளர்த்திருக்கிறார் என்பதறிந்து ஜெயப்பிரதாவுக்கு வேதனை வருகிறது. நாற்பது வருடங்களுக்கு பிறகு ஜெயப்பிரதாவை பார்த்த மகிழ்ச்சியில் அவரோடு இருப்பதையும், பேசுவதையும் விரும்புகிறார் அனுபம்கெர். கருத்து வேறுபாட்டால் பிரிந்த இருவரையும் ஜெயப்பிரதாவின் அப்பா திட்டமிட்டு பிரித்த கதை அவர்களுக்கு அப்போதுதான் தெரிய வருகிறது. இருவரும் பேசுவது அவர்களது பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை. ஆனால் மோகன்லால் ஜெயப்பிரதாவை புரிந்து கொள்கிறார். ஓய்வுபெற்ற தத்துவப் பேராசிரியரான அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீல்சேரில் அமர்ந்தபடி இருக்கிறார். ‘’மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள், நீ சந்தோஷமாக இரு’’ என்று மனைவியை ஆறுதல்படுத்துகிறார். மோகன்லாலும், ஜெயப்பிரதாவும் புதிதாக காதலிப்பவர்கள் போல் அவ்வளவு அன்யோன்யமாக இருப்பது படத்தில் அழகு. தினமும் மாலை நேரத்தில் அனுபம், மோகன்லால், ஜெயப்பிரதா மூவரும் சந்திக்கிறார்கள். அனுபமுக்கும், மோகன்லாலுக்கும் இடையே அழகான ஒரு நட்பு வருகிறது. அனுபமுடன் வாழ்ந்த வாழ்க்கை பற்றி ஜெயப்பிரதா சொல்வதையும், ஜெயப்பிரதா ஒரு சோம்பேறி என அனுபம் கிண்டல் அடிப்பதையும் வீல் சேரில் அமர்ந்தபடி ரசிக்கிறார் மோகன்லால். ஒருகாட்சியில் அனுபம் மனம் நெகிழ்ந்தபடி, ‘’நீங்க ரொம்ப லக்கி’’ என மோகன்லாலிடம் சொல்கிறார். மோகன்லாலும், ‘’கல்யாணமாகி பலவருஷம் இவ என்னோட பேசவேயில்லை. அவங்கப்பா தற்கொலை பண்ணிப்பேன்னு சொல்லித்தான் எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சார்’’ என ஜெயப்பிரதா பக்கமிருக்கும் நியாயத்தை சொல்கிறார். மூவரும் ஒருவருக்கொருவர் ஆழமாக நேசிக்கிறார்கள். ஆனால் அந்த அபார்ட்மெண்ட் முழுக்க அவர்களைப் பற்றி தவறாகச் சொல்வதாக பிள்ளைகள் சொல்கிறார்கள். ஜெயப்பிரதாவின் மகள் அவரிடம், ‘’ரெண்டு பேரோடயும் நீ வாழ்றதாவும், நீ பாஞ்சாலின்னும் ஊரே சிரிக்கிது’’ எனச் சொல்கிறார். ’’இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்த ஒருத்தரோடயும், ஸ்ட்ரோக் வந்து வீல்சேரில் இருக்கிறவரோடயும் நான் என்ன செய்துடப் போறேன்’’ என வெடித்து அழுகிறார் ஜெயப்பிரதா. அவரை நெஞ்சில் சாய்த்து முத்தமிட்டபடி, காதலின் மகத்துவம் குறித்து பேசுகிறார் மோகன்லால். இவர்களது நட்பு பிடிக்காமல், அனுபம் கெர் சொந்த ஊருக்குப் போவதே நல்லது என அவரது மகனும், மருமகளும் சொல்கிறார்கள். நீங்கள் ஒழுங்காக இருக்கவில்லை என்றால் நாங்கள் வேறு வீட்டிற்குப் போகிறோம் என மோகன்லால் ஜெயப்பிரதாவின் மகளும் மிரட்டுகிறார். அடுத்த காட்சியில் வீட்டில் இருந்து வெளியேறும் மூவரும் ஒரு நீண்ட பயணத்தை தொடங்குகிறார்கள். வழியெல்லாம் சிரிப்பும், கேலியும், கிண்டலும், மழையும், கடலும், காதலுமாக நகர்கிறது அந்தப் பயணம். பயணத்தில் ஒருநாள் மோகன்லாலுக்கு மீண்டும் ஸ்ட்ரோக் தாக்க அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கண்ணீரோடு அமர்ந்திருக்கும் ஜெயப்பிரதாவுக்கு அனுபம் கூடவே இருந்து ஆறுதல் சொல்கிறார். மோகன்லால் பிழைத்து விடுகிறார். அவர் மனைவியிடமும், அனுபமிடமும் மரணத்தின் மகத்துவம் பற்றிப் பேசுகிறார். ‘’ஒருவேளை நான் இறந்திருந்தாலும் கிரேஸ் (ஜெயப்பிரதா) தனியாக இல்லை. அவளை அச்சுதன் மேனன் (அனுபம் கெர்) பார்த்துக் கொள்வார்’’ என சிரிக்கிறார். நோயாளியை தொந்தரவு செய்ய வேண்டாம் என டாக்டர்கள் சொல்ல, வேறு ஒரு அறைக்கு ஓய்வெடுப்பதறாக அனுபமும், ஜெயப்பிரதாவும் செல்கிறார்கள். ஜெயப்பிரதா பற்றிய பழைய நினைவு ஒன்றை அனுபம் சொல்ல, ‘’நான் அதையெல்லாம் நினைப்பதே இல்லை. நீங்க அதிலேயே தான் வாழறீங்க” என்று பதில் சொல்கிறார் ஜெயப்பிரதா. ‘’புதுசா நினைக்க எனக்கு வேறு ஒண்ணும் இல்லையே”” என சிரித்தபடி சொல்லி ஜெயப்பிரதாவை அழவைக்கிறார் அனுபம். தன் மகனிடம் ஜெயப்பிரதா தவறு செய்யவில்லை என புரியவைத்து விட்டதாக அனுபம் சொல்லி போனில் மகனை அழைக்கிறார். ஏர்போர்ட்டில் இருந்து பேசும் மகன், ‘’உங்களோடும், அப்பாவோடும் ஒரே ஒருநாள் சேர்ந்து வாழவேண்டும்’’ என்கிற தன் ஆசையை சொல்லிவிட்டு, ‘’என் அப்பா எனக்காகத்தான் இப்படி தனிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்னு நினைச்சேன். இல்லை உங்களுக்காகத் தான் வாழ்ந்திருக்கார்” என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறான். மகன் தன்னைப் புரிந்து கொண்ட மகிழ்ச்சியில் மகனின் சேர்ந்திருக்கும் ஆசைபற்றி ஜெயப்பிரதா அனுபமிடம் சொல்கிறார். ‘’என் ஆசையும் அதுவே’’ என சொல்லி விட்டு ஜெயப்பிரதாவின் நெற்றியில் முத்தமிடுமிறார் அனுபம். அவரைக் கட்டியணைத்து கதறி அழுகிறார் ஜெயப்பிரதா. கொஞ்ச நேரத்தில் அப்படியே ஜெயப்பிரதா இறந்தும் விடுகிறார். கடைசி காட்சியில், மோகன்லால் வீல்சேரில் அமர்ந்திருக்க, அதைத் தள்ளியபடி வருகிறார் அனுபம்கெர். இருவரும் ஜெயப்பிரதாவின் கல்லறையில் மலர்களை வைப்பதோடு படம் முடிகிறது.. ஜெயப்பிரதா இறந்திருக்க வேண்டாம் என்றே தோன்றியது. ஆனால் அவர் உயிரோடு இருந்தால் மூவரும் சேர்ந்து வாழ்வதாக சொல்லியாக வேண்டும். அது எந்தளவுக்கு ஏற்கக்கூடியது என்ற கேள்வியும் வருகிறது. படத்தில் மோகன்லாலில் மனைவியாக இருந்து கொண்டு அனுபமிடம் அன்பு காட்டுவதில் ஜெயப்பிரதாவுக்கு எந்த உறுத்தலும் இல்லை.. இயல்பாக இருவரையும் நேசிக்கிறார். மூவரிலும் மனைவியையும், அவளது அனுபம் மீதான காதலையும் புரிந்து கொள்ளும் மேத்யூஸ் (மோகன்லால்) தான் வெகுவாக ஈர்க்கிறார்... நல்ல சினிமாவோ, புத்தகமோ நம்மை நெகிழ வைத்து வாழ்க்கையை, மனிதர்களை நேசிக்க வைக்க வேண்டும். அந்த இரண்டையும் இந்தப்படம் செய்கிறது... பிரணயம் (காதல்) இயக்குனர் : பிளெஸ்ஸி....

thanks priya thambi (via fb)

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளிகள் தான் இப்ப்டியான படங்களை தைரியமாக எடுப்பார்கள்...பதிவிற்கு நன்றி வீணா

மலையாளப் படங்கள் முன்பு நல்ல மாதிரித்தான் இருந்தன. இயல்பாக படமெடுப்பார்கள். பிறகு, தமிழ்/தெலுங்கு குப்பைகளைப் பார்த்து அவர்களும் தடம் மாறினார்கள்.

மூன்று திறமையான நடிகர்களை வைத்து நல்ல கதையை தந்துள்ளார்கள் போல் இருக்கிறது. என்ன முடிவு தான் சற்று இடிக்கிறது. இணையத்தில் கிடைத்தால் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

முன்பும் பாலசந்தர் இப்படித்தான் - பெண்களை முன்னிறுத்தி நல்ல கதைகளை படமாக்கி, சிலவேளைகளில் அந்தப் பெண்கள் தடம் மாறி போன பின்பு மீண்டும் வந்த போது, கதாநாயகர்கள் வாழ்க்கை கொடுக்கத் தயாரானாலும் பெண்களின் கதையை நல்ல விதமாக முடிக்க தயங்குவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.