Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேண்டாம் இந்த விபரீத புத்தி, வாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்!

Featured Replies

உலகின் சின்னஞ்சிறிய தேசிய இனங்கள்கூடத் தங்களது சுதந்திர நாளை, தேசிய நாளைக் கொண்டாடிவரும் இன்றைய நிலையில் 10 கோடி தமிழர்கள் நிலமற்றவர்களாக, உரிமையற்றவர்களாக ஏங்கித் தவிக்கின்றார்கள்.

வரலாறுகள் எங்களுக்கான ஆட்சி எல்லைகளையும், அதனை ஆட்சி செய்த மன்னர்களது பெருமைகளையும் பதிவு செய்துள்ளபோதும், தமிழர்களாகிய நாம் இன்னமும் அடிமை வாழ்வுக்குள் புதையுண்டு போய், வாழ்விழந்து கிடக்கின்றோம். புதிய வரலாறு எழுதப் புறப்பட்ட விடுதலைப் புலிகளது போர்க் களத்தைக் காப்பாற்றவும், ஈழத் தமிழர்கள்மீதான இன அழிப்பினை இன்றுவரை தடுத்து நிறுத்த முடியாதவர்களாகவும் பிளவுண்டு போயுள்ளோம். எமக்கு நாமே பூட்டிக்கொண்ட அடிமை விலங்கை நாம் தகர்த்தெறிய முடியாதவர்களாகக் கட்டுண்டு போயுள்ளோம்.

முள்ளிவாய்க்காலின் பின்னர் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இதுவே விதி என்ற மனப்பான்மை உருவாகி வருகின்றது. அவர்கள் மனங்களில், இனி எதுவும் முடியாது என்ற கருத்துக்கள் விதைக்கப்படுகின்றது. புலம்பெயர் தமிழ்த் தளங்களின் இணக்கமற்ற நிலைப்பாடு அவர்களது மனங்களை இறுக்கி வருகின்றது. எதிரியின் சூழ்ச்சிக்கு இரையாகும் நிலைக்குப் புலம்பெயர் தமிழர்கள் தள்ளப்பட்டு வருகின்றார்கள்.

சிங்கள இனத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக உள்ளன. சிங்கள தேசிய தளத்தில் அவர்கள் எப்போதும் ஒன்றிணைந்தே பயணிக்கின்றார்கள். தமிழர்களுக்கெதிரான சதிகளிலும், போர்களிலும் அவர்கள் அத்தனைபேரும் மத, அரசியல் வேறுபாடுகளின்றி ஒற்றைக் களத்தில் நின்று ஈழத் தமிழர்களை அழித்து முடித்தார்கள்.

முள்ளிவாய்க்கால் முடிவு வரை ஈழத் தமிழினத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட இரக்கமில்லாத யுத்தத்திற்கு அவர்கள் அத்தனை பேரும் ஆதரவு வழங்கினார்கள். மூன்று இலட்சம் மக்களைப் பலிகொண்ட தமிழீழ விடுதலைப் போரில், இறுதி மூன்று நாட்களில் மட்டும் நாற்பதாயிரம் மக்கள் பலி கொள்ளப்பட்டதாக ஐ.நா. ஒப்புக்கொண்டுள்ளது. அந்தக் கொடூரமான கணங்களைக் கூட சிங்களத்தின் வெற்றியாக ஒன்று சேர்ந்து கொண்டாடுகின்றார்கள்.

தமிழீழ மக்களும் தங்கள் அரசியல் வெளிக்குள் எதிரி நுழைந்துவிடக் கூடாது என்ற காரணத்தால் தமது மனங்களைக் கொன்றுவிட்டு, தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்துத் தமது பலத்தை ஒருமுகப்படுத்தியுள்ளார்கள்.

ஆனால், புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் எதிரி புகுந்து விளையாடும் அளவிற்கு நாங்கள் எமக்கான தளத்தில் இடைவெளிகளை ஏற்படுத்தி வருகின்றோம். கருணாநிதி பாணி அரசியலுக்குள் சகதி விளையாட்டு விளையாடுகின்றோம். ஒருவர் காலை ஒருவர் வாரும் தருணத்திற்காகக் காத்திருக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால்வரை ஒன்றாகப் பயணித்த புலம்பெயர் தமிழர்களைப் பிளவுபட வைப்பதிலும், அணி சார்ந்து நிற்க வைப்பதிலும் நாங்கள் திறமையாகப் பணியாற்றியுள்ளோம். ஈழத் தமிழர்கள் அவலங்கள் எங்கள் அரசியல் வாழ்வுக்கான மூலாதாரமாக மாறிவிட்டது. எது எப்படிப் போனாலும், எதிரணி பலம்பெற்றுவிடக் கூடாது என்பதில் நாம் குறியாக இருந்து, தமிழ்த் தேசிய தளங்களைச் சிதைத்து, சிங்கள இனவாதிகளின் மனங்களைக் குளிர வைக்கின்றோம்.

மாவீரர் நாளைக் குறி வைத்து அடித்தோம். ஜெனிவா போர்க்களத்தைச் சிதைக்க முடிவு செய்தோம். தமிழ்த் தேசிய விடுதலைக்கான நடை பயணத்தைக்கூட அரசியல் செய்தோம். அதையும் குழப்புவதற்காகப் போட்டி நடை பயணம்கூடச் செய்கின்றோம். இவையெல்லாம் தமிழீழ விடுதலைக்காகவா…? தமிழ் மண்ணை மீட்பதற்காகவா…? இல்லவே இல்லை.

பிரபாகரன் கட்டி வைத்த கோட்டைக்குக் கன்னக்கோல் வைக்கப்படுகின்றது. அதனைப் புரிந்து கொள்ள நாம் அதிக தூரம் செல்லத் தேவையில்லை. பாரிசிலுள்ள சிறிலங்காவுக்கான தூதரகத்தின் முன்பாக உணர்வுள்ள தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு போராட்டம் நடாத்தினார்கள். பெப்ரவரி 04 ஐ, ஈழத் தமிழர்களது கரி நாளாகவும், துயரத்தின் நாளாகவும் அறிவித்து, ஈழத் தமிழர்களது உணர்வுகளை இந்த தேசத்து மக்களுக்கு எடுத்துச் சொல்லும் போராட்டம். சிங்களத்தின் சுதந்திர நாளைத் தமிழர்கள் நிராகரித்து நடாத்திய போராட்டம் இது. இதில், அணி சார்பு அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது.

ஆனாலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ருத்திரா அணி சார்பிலோ, தமிழ்த் தேசிய தளத்தைக் கைப்பற்ற முயற்சித்து, முடியாத காரணத்தால் ‘தமிழர் நடுவம்’ என்ற பெயரில் உருவான குழு சார்பாகவோ அந்தப் போர்க் களத்தில் யாரும் பங்கேற்கவில்லை. அப்படியானால், இவர்கள் யாருக்காகப் போராடுகின்றார்கள்? யாரோடு நின்று போராடுகின்றார்கள்? இதனைப் புரிந்து கொள்வதற்கு அனைவராலும் முடியும்.

தமிழீழ விடுதலையை இலக்காகக் கொண்ட எவரும், அந்த இலக்கு நோக்கிய போர்க் களத்திலிருந்து விலகி நிற்க முடியாது. எங்கள் தேசியத் தலைவரது கட்டளைப்படி, எங்கள் தேசத்தை மீட்டெடுக்கும் போராட்டத்திலிருந்து யாரும் தள்ளி நிற்க முடியாது.

வேண்டாம் இந்த விபரீத புத்தி. வாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். நிச்சயம் தமிழீழம் மலரும். தமிழீழக் கனவோடு, அந்த மண்ணுக்காய் மரணித்த அத்தனை ஆத்மாக்களும் உங்களையும், எங்களையும் வாழ்த்தும்!

- தமிழ்ச்செல்வன்

www.aaivuu.wordpress.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒற்றுமையே பலம் மிகுந்த ஆயுதம். அந்த ஆயுதம் தமிழன் கையில் கிடைக்கும் வரை விடிவு கனவு. சிங்கள அரசாங்கம் ஜெ. ஆர் காலந்தொட்டு தங்கள் நகர்வுகளை தொடர்ச்சியாக நகர்த்தி வந்து சர்வதேசத்தின் பலவீனத்தைத் தங்களுக்குப் பலமாக்கினார்கள் என்பதே உண்மை. அவர்களை மோடய என்று நினைத்ததே தமிழன் செய்த முட்டாள் தப்பு. இன்றைய உலகில் சிங்கள அரசாங்கத்தின் இராஜதந்திரம் மிகவும் சிறந்ததாக எடுத்துக்கொண்டு தான் நாங்கள் ஈழத்தை நோக்கிய பயணத்தில் செல்லவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இது ரொம்ப நல்ல கட்டுரை :D

  • கருத்துக்கள உறவுகள்

இது ரொம்ப நல்ல கட்டுரை :D

உங்கள் கருத்து முக்கியம் புரட்சி

ஏனென்றால் தமிழரில் முக்கால் பங்குக்கு உரித்தானவர்கள் நீங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.