Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா குறித்த அச்சுறுத்தலும், ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும்!

Featured Replies

தமிழ்த் தேசிய தளத்தின் கள நிலமை, அமைவிட பிராந்திய நிலமை, நாடுகளது நலன்சார் நிலமை குறித்த புரிந்துணர்வுக் குறைபாட்டுடனேயே பலர் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசி வருகின்றார்கள். எழுதியும் வருகின்றார்கள்.

விடுதலைப் புலிகளது போர்க் களம் மௌனிக்க வைக்கப்பட்டதன் பின்னர், விடுதலைப் புலிகளது வெற்றிக்குப் பின்னே அணி வகுத்த பலரும், இப்போது சர்வதேச அரசியல் குறித்து சோதிடம் சொல்லும் ஆசான்களாக மாற்றமெடுத்து வருகின்றனர். தமக்குத் தெரிந்த ஒற்றைப் பாதையிலேயே தமிழீழத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கியுள்ளர்கள்.

சிங்கள தேசத்தை அனுசரித்துப் போவதன் மூலம் ஈழத் தமிழர் நலனைப் பேணுவது என்று ஒரு சாராரும், இந்தியாவைத் தழுவுவதன் மூலம் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கலாம் என்று ஒரு சாராரும், மேற்குலகின் மூலமான நகர்வே தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று ஒரு சாராரும், இன்னொரு ஆயுதப் போராட்டம் மூலமாகவே தமிழீழத்தை மீட்க முடியும் என்று ஒரு சாராரும், விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்பைச் சிதைப்பதன் மூலம் தமது நலன்சார் அரசியலை நிலை நிறுத்தலாம் என்று ஒரு சாராருமாகத் தமிழ் மக்களிடம் தமக்குத் தெரிந்த சாத்திரம் சொல்லப் புறப்பட்டுள்ளார்கள்.

சிங்கள தேசத்தை அனுசரித்துப் போய், தமிழர்களது நலன் பேணுதல் என்ற கருத்துருவாக்கத்தின் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. சாட்சாத் கே.பி. அவர்களும், அவரது குழுவினருமேதான். அவர்களது சிங்களத்தை அனுசரித்தல் என்பது, கே.பி.யினது உயிர் வாழ்தலிலும், அவரது குழுவினரது வளம் சார்ததிலும் தங்கி உள்ளது என்பது தமிழ் மக்களுக்கு அதிகப்படியாகத் தெரிந்த விடயம். அவர்கள், தமது நலன் சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றுவதன் பொருட்டு, தமிழர்களது உயிர் நாடிக்கும் தீ வைக்க முயன்றவர்கள். மாவீரர் தினத்தையே அரசியலுக்காகப் பிளந்து சிதைக்க முயன்றவர்கள். ஜெனிவா போர்க்களத்தையும் சிதைக்கும் சிங்கள நோக்கத்தை அரங்கேற்றத் துடிப்பவர்கள். இதற்கும் மேல் சென்று அவர்களை விமர்சிப்பது காகம் கறுப்பு என்று நிரூபிக்க முயல்வது போன்றது.

இதற்கு அடுத்தபடியான இந்திய சிந்தனாவாதிகளது இலக்கு என்பது ஈழத் தமிழினத்தை இன்னும் பல தசாப்தங்கள் அழிவுக்குள் நிரந்தரப்படுத்துவதாகவே உள்ளது என்பதால், இது குறித்து நாம் சற்று ஆழமாகப் பார்ப்பதற்கு முயல வேண்டும். ஒரு ஆபத்தான் கருத்தியலைத் தமிழ் மக்களுக்கு அச்சப்படுத்துதல் மூலம் ஏற்க வைப்பது அபத்தமானது. மிகக் குறைந்த அளவிலான உளவியல் பலத்தைத் தக்கவைத்துள்ள ஈழத் தமிழர்கள்கூட, தாம் சிங்களத்திடமிருந்து விடுபட வேண்டும் என்ற கருத்தை, இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்க சிந்தனையுடன் இணைத்துப் பார்ப்பதில்லை. அது இந்திய தாசர்களது பணி மட்டுமே.

கடந்த காலங்களில், இந்தியாவின் அரவணைப்பையும், மிரட்டல்களையும், தரையிறக்கத்தையும், தாண்டவத்தையும் நன்றாகப் பார்த்த தமிழீழ மக்களுக்கு இந்தியா குறித்த சரியான புரிந்துணர்வு உள்ளது. யானை அழகானது. பிரமாண்டமானது. அதற்கு, தும்பிக்கை என்ற தனித்துவமும், தந்தம் என்ற பலமும் இருக்கிறது என்பதால் அதை ஆசையுடன் தழுவ நினைப்பதும் ஆபத்து. அதனைச் சீண்டிக் கோபம் கொள்ள வைப்பதும் ஆபத்து என்பதை ஈழத் தமிழர்கள் நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளார்கள். அந்த இந்தியா என்ற பிரமாண்டத்தைக் காட்டி, அச்சப்படுத்துவது மூலம் ஈழத் தமிழர்களது நலன்களை இந்தியாவின் காலடியில் கொட்டுவது போன்ற அபத்தமான செயல் வேறு எதுவும் கிடையாது.

அதற்காக இந்தியாவுடன் நாங்கள் முரண்படுவது என்ற அர்த்தம் கொள்ள முடியாது. இந்தியாவை இந்தியாவாகப் புரிந்து கொள்வதன் மூலம், ஈழத் தமிழர்களது தனித்துவத்தை நிலைநாட்டுவதில் எந்த இந்திய எதிர்ப்புணர்வும் கிடையாது.

சிறிலங்காவைப் போலவே, இந்தியாவும் எங்களது அயல்நாடு. அதனுடன், இருதரப்பு நலன் சார்ந்த நல்லுறவு அவசியம் என்பதை ஈழத் தமிழர்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளார்கள். அதைவிடவும் மேலாக, இந்தியாவில் எங்களது தொப்பிள் கொடி உறவுகளான எட்டுக் கோடி தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்ற உரிமைத் தொடர்பும் இந்தியாவுடனான ஈழத் தமிழர்களது உறவை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன், தமிழீழ விடுதலைக்குச் சாத்தியமான நகர்வுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இந்தியா குறித்த ஒரு புள்ளிவிபரத் தகவலைக் காமெடியாக 'வல்லரசா... சிரிக்காதீங்க சார்!' என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்ட்டர் என்ற தமிழக இதழ் இந்த வாரத்தில் பதிவு செய்திருந்தது. அதனைப் படித்துவிட்டு, இந்த ஆய்வுக்குள் தொடர்ந்து செல்வது பயனுள்ளதாக இருக்கும்.

'விரைவில் இந்தியா வல்லரசாகும்' என வாய்ப்பந்தல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் நமது அரசியல்வாதிகள். உண்மை என்ன?

இந்திய மக்கள் தொகையில் 21 சதவிகிதத்தினர் ஊட்டச்சத்து குறைவானவர்கள். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 44 சதவீதக் குழந்தைகள் எடை குறைந்தவர்கள். ஏழு சதவிகிதக் குழந்தைகள் ஐந்து வயதுக்குள்ளாகவே இறக்கின்றார்கள். 'அகில உலக உணவுக் கொள்கை அமைப்பு' அளித்த புள்ளிவிபரப்படி, இந்தியாவில் 21.3 கோடி பேர் பசி, பட்டினி, சத்துக் குறைவால் வாடுகின்றார்கள். அது மட்டுமல்ல, இந்தியாவில் 23 சதவிகித திருமணமான ஆண்களும், 52 சதவிகித திருமணமான பெண்களும், 72 சதவிகித குழந்தைகளும் 'ரத்த சோகை'யால் கஷ்டப்படுகிறார்கள். இக்குறைபாடுகளுள்ள 80 நாடுகளில், இந்தியா 67 வது(!) இடத்தில் உள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால் சூடான், வடகொரியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளைவிட இந்தியா மோசமாக உள்ளது.

அண்ணே சொல்லுங்க... நாம வல்லரசா? என்று திருச்சி சம்பத்குமாரி கேட்டுள்ளார்.

இது இந்தியாவைக் கேலி பண்ணும் விடயமாக எடுத்துக் கொள்ளப்படாமல், இந்தியா குறித்த தேவையற்ற அச்சங்களைத் தவிர்ப்பதற்காகவே தரப்பட்டுள்ளது. இதனை உங்களது ஆலோசனைக்கு விட்டு, இந்த ஆய்வினைத் தொடர்வோம்! காத்திருங்கள்...

- சிவகுரு பாலச்சந்திரன்

மக்கள் பிரதிநிதி

www.tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.