Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்ற "படலைக்குப் படலை" நாடகக்குழுவினர் அவுஸ்திரெலியா(சிட்னி, மெல்பேர்ண்) மண்ணில் முதன்முதலாக வழங்கும் நகைச்சுவை நாடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
vanavilposterfeb11.jpg

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மாலை 3 மணியளவில் பலத்த இடியுடன் கூடிய மழை. தொடர்ந்து 2 மணித்தியாலம் பெய்தது.

அத்துடன் சிட்னியில் இன்னுமொரு அமைப்பு இராப்போசன நிகழ்வு ஒன்றினை நேற்று இரவு நடாத்தினார்கள். அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தெரிந்தவர், நண்பர்களை நேரிலோ, தொலைபேசியிலோ பேசி நுளைவுச்சீட்டினை விற்றுவிட்டார்கள். இதனால் தான் படலைக்குப் படலைக்கு ஒரு 300 பேர் மட்டுமே பார்வையாளர்களாக வந்திருந்தார்கள். அதுவும் ஞாயிற்றுக்கிழமை. மறு நாள் பெரும்பாலான சிட்னி தமிழர்களுக்கு வேலை. வீட்டில சன் தொலைக்காட்சி அழுகினி நாடங்களைப் பார்க்கும் எம்மவர்களுக்கு படலைக்குப் படலையின் அருமை எங்கே தெரியப்போகிறது. என்றாலும் நானும் படலைக்குப் படலையினைக் கண்டு இரசித்த இரசிகர்களுள் ஒருவர்.

3 நாடகங்கள். படலைக்குப் படலையின் நாயகன் சாரங்கன் சிலவருடங்களுக்கு முன்பே பிரான்சில் இருந்து சிட்னிக்கு குடிபெயர்ந்து சிட்னிவாசியாகி விட்டார். சாரங்கனின் அம்மாவாக நடிப்பவரும், சாரங்கனின் மைத்துனராக நடிக்கும் 'மன்மதனும்' பிரான்சில் இருந்து வந்து இந்த நாடகங்களில் நடித்தார்கள். சாரங்கனின் மனைவியாக நடிப்பவருக்கு உரிய நேரத்தில் விசா அவுஸ்திரெலியா வர கிடைக்கவில்லை. அதே போல அங்கிளாக நடிப்பவருக்கும் அவுஸ்திரெலியாவுக்கு வர முடியவில்லை. இக்கலைஞர்கள் இல்லாதது கவலையான விடயமாக இருந்தாலும், உள்ளூர் கலைஞர்களும் சிறப்பாக நடித்தார்கள். முதல் 3 நாடகங்களையும் பார்த்தவர்கள் இரசித்து சிரித்தாலும் குறிப்பாக கடைசி நாடகத்தினைப் பார்த்து வயிரு முட்டச் சிரித்தவர்கள் அதிகம். நிகழ்ச்சியில் 3 நாடகங்களைவிட இசை நிகழ்வும் நடைபெற்றது.

மெல்பேர்ன் கலைஞர் தெய்வீகன் பாடிய தாயகத்துப்பாடலான 'அந்த ஆலமரம் நெஞ்சிலை நிறைஞ்சிருக்கு.அந்த மாமரம் தான் உள்ளத்தில் கலந்திருக்கு' என்ற பாடல் தாயக நினைவினை மீண்ட வழி செய்தது. இந்த சிறந்த நிகழ்ச்சியினை சிட்னியில் தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

படலைக்கு படலை நாடகத்தை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். நன்றாக இருக்கும்.

இவ்வளவு தூரம் வந்தவர்களுக்கு, மூன்னூறு ஆட்கள் தான்... நாடகம் பார்க்க வந்திருந்தார்கள் என்னும் போது... எம்மை நினைக்க கவலையாய் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

படலைக்குப் படலை நானும் பார்க்கிறனான்..! அங்கிளாக நடிப்பவருக்கு நல்ல திறமை உள்ளது..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் முன்பு சிகரம் தொலைக்காட்சியில் படலைக்குப் படலை வந்தது. அக்காலத்தில் தான் சிட்னியில் சன் தொலைக்காட்சியும் கால் பதித்தது. எங்கட லூசுச் சனங்கள் சன் தொலைக்காட்சிகே அதிக ஆதரவு தந்தார்கள். அவர்களுக்கு படலைக்குப் படலையின் அருமை தெரியவில்லை. என்றாலும் தொடர்ந்து படலைக்குப் படலை எத்தனை முறை சிட்னிக்கு வந்தாலும் நான் ஆதரிப்பேன். எங்கட கலைஞர்களை நாங்கள் ஆதரிக்காமல் சிங்களவான ஆதரிப்பது???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.