Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமலஹாசனுக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி விசித்திரமான சிந்தனைகள் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கமலஹாசனுக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி விசித்திரமான சிந்தனைகள் ?

kamal-city-21.jpg?w=500

மனித குலம் தோன்றி எத்தனை ஆயிரம் ஆண்டுகள்

ஆயின என்றே யாராலும் சரியாகச் சொல்ல

முடியவில்லை.

காட்டுமிராண்டியாக, காடு மேடுகளிலும்,

மலைக்குகைகளிலும் விலங்குகளைப் போல் சுற்றித்

திரிந்த மனிதன் ஒரு வழியாக விவசாயம்

பண்ணத் தெரிந்து கொண்டு, நதிக்கரைகளில்

நிலையாகத் தங்கி வசிக்கத் துவங்கவே

பல்லாயிரம் ஆண்டுகளாயின.

கொஞ்சம் கொஞசமாக நாகரீகம் அடைந்து,

தனக்கென நிலம், நீர், இடம், பயிர், ஆடு மாடு

என்று சொத்து சேர்க்கத் துவங்கினான்.

யார் வேண்டுமானாலும் -

யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம்

என்பது போய், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று

தனக்குப் பிடித்த ஆண் -

பெண்ணுடன் சேர்ந்து இருக்க ஆரம்பித்தார்கள்.

பெண்களைச் சொந்தம் கொண்டாடியதால் தான் -

உறவு முறை துவங்கியது.

கணவன் – மனைவி என்கிற உறவு தோன்றியதால்

தான், அப்பா-அம்மா, மகன், மகள் என்கிற

உறவுகள் தோன்றின.

மனிதன் தனியாக இருந்த வரை சுயநலவாதியாகவே

இருந்தான். பசி, தாகம், இருப்பு, பாதுகாப்பு -

எல்லாம் தன்னைப் பொறுத்ததாக,

தனக்கென்று மட்டுமே தேடினான்.

அவனுக்கென்று ஒரு பெண் துணை வந்த பிறகு

தான் அவளுக்காகவும் சேர்த்து தேட ஆரம்பித்தான்,

அவளுக்காகவும் சேர்த்து உழைக்க ஆரம்பித்தான்.

அவர்களுக்கு சொந்தமாக குழந்தைகள் பிறந்தவுடன்

அந்த குழந்தைகளுக்காகவும் சேர்த்து

உழைக்க ஆரம்பித்தான். மனைவியையும்,

குழந்தைகளையும் பாதுகாக்கும் பொறுப்பையும்

சேர்த்து ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தான்.

தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டிருந்த

சுயநலவாதியாக இருந்த மனிதன் தனக்கென்று

ஒரு குடும்பம் ஏற்பட்ட பிறகு தான் மற்றவர்களுக்காகவும் -

கவலைப்பட ஆரம்பித்தான்.

சுயநலத்திலிருந்து – பொது நலம் பிறந்ததே

குடும்பம் என்று ஒன்று வந்ததால் தான்.

மனைவி, குழந்தைகள் வந்தவுடன், அவர்களின்

பாதுகாப்பிற்கான வழிமுறைகளைத் தேட ஆரம்பித்தான்.

கூட்டமாக, குழுக்களாக வசிக்க ஆரம்பித்தார்கள்.

கிராமங்கள் தோன்றின. அவர்கள் தங்கள்

பொதுநலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும்

சில சட்ட திட்டங்களையும், கட்டுப்பாடுகளையும்

ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களாகவே முன்வந்து

உருவாக்கிக் கொண்ட, ஏற்றுக் கொண்ட,

கட்டுப்பாடுகள் அவை.

ஒரே மாதிரி பழக்க வழக்கங்கள் உடைய

குடும்பங்களிடையே பெண் கொடுத்து பெண்

வாங்கும் திருமண பந்தங்களும், சமூகங்களும்

ஏற்பட்டன. திருமணம் செய்யக்கூடைய உறவுகள்

எவை -செய்யக்கூடாத உறவுமுறைகள் எவை என்று

தீர்மானிக்கப்பட்டன. அத்தை, மாமன், சித்தி,

சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, மைத்துனன்,

மைத்துனி – பங்காளி உறவுமுறைகள்

எல்லாம் ஏற்பட்டன.

நாகரீகம் வளர்ந்தது. சமுதாய முன்னேற்றங்கள்

ஏற்பட்டன. பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர

ஆரம்பித்தது.

பல தார வழக்கம் தொலந்தது.

அறியாப்பருவத்திலேயே “பால்ய விவாகம்”

செய்யும் பழக்கம் தொலைந்தது.

விதவைகள் மறுமணம செய்வது சகஜமாக

ஏற்கப்பட்டது.

பெண்களுக்கு கல்வி அவசியம் என்று உணரப்பட்டது.

பெண்களுக்கான வேலை வாய்ப்புகளும் நிறைய

உண்டாயின. திருமணத்தில் ஆண்களின்

விருப்பத்தை அறிவது போல் பெண்களின்

விருப்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க

ஆரம்பிக்கப்பட்டது.

தவிர்க்க முடியாத சமயங்களில்,

திருமண பந்தத்திலிருந்து விடுதலை பெற -

விவாகரத்து முறையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இவ்வாறு நாளுக்கு நாள் சமுதாய அமைப்பு

மேலும் மேலும் வலுப்பெறும் விதத்தில்,

வாழ்க்கை முறைகள் உருவெடுத்து, மனிதன்

அமைதியாகவும், உறவுகளுடன் சந்தோஷமாகவும்

வாழ்வதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்

இந்த காலத்தில் -

சமூகம் இன்னும் மேம்பாடு அடைவதற்கான வழியை

யோசிக்காமல் – விரும்பும் வகையில்

“செக்ஸ்” அனுபவிப்பது ஒன்று தான் வாழ்க்கையின்

ஒரே குறிக்கோள் என்பது போல் யோசித்தால் அதை

வக்கிர சிந்தனை என்று சொல்லாமல் வேறு

என்னவென்று சொல்வது ?

நடிகர் கமலஹாசன் மட்டும் அவ்வப்போது -

விசித்திரமான சிந்தனைகளை வெளிப்படுத்துகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் அவர் டெல்லியிலிருந்து

இயங்கும் ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு

அளித்த பேட்டியில் -

திருமணம் என்கிற உறவையே தான் ஏற்றுக்

கொள்வதில்லை என்றும் அது ஒரு தேவையில்லாத

பந்தம் என்றும் கூறி இருக்கிறார்.

தங்களுக்குப் பிடித்த ஆணும் பெண்ணும்

சேர்ந்து வாழ்வதற்கு யாருடைய அனுமதியோ,

எந்தவித கட்டுப்பாடோ தேவை இல்லை என்பதே

தன் கருத்து என்று கூறி இருக்கிறார்.

பேட்டியாளர் – இருந்தாலும் 2 முறை நீங்கள்

திருமணம் செய்திருக்கிறீர்களே என்று கேட்டதற்கு-

“மற்றவர்களைத் திருப்தி செய்வதற்காக நான் செய்த

மடத்தனமான காரியம் அது.

ஆனால் இதை செய்தால் அன்றி அவர்கள் என் உறவை

ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு முறையும் நான் திருமணம் செய்து கொண்டது

அவர்கள் எனக்கு தேவை என்பதற்காக நான்

செய்துகொண்ட ஒரு சமரசம் தான்”

“திருமண உறவு என்பது தொன்று தொட்டு வந்த

பழங்காலத்து வழக்கம். உன் திருமணம் தோல்வி

அடைந்து விட்டதால் ஏன் திருமணத்தையே

குறை கூறுகிறாய் என்று கேட்பவர்களுக்கு

நான் கூறிக்கொள்வேன் –

திருமணம் பழமையான முறையும் அல்ல –

பலமான உறவும் அல்ல.”

இந்த சிந்தனையில், பேச்சில் – எவ்வளவு வக்கிரம்

தெரிகிறது பாருங்கள்.

“திருமணம் என்கிற சடங்கை செய்யாவிட்டால்

அந்த பெண்கள் எனக்கு கிடைக்க மாட்டார்கள்

என்பதால் 2 முறை திருமணம் செய்து கொண்டேன் “

என்று கூறுகிறார். அதாவது இவருக்கு நம்பிக்கை

இல்லாவிட்டாலும், தான் விரும்பியதை அடைய

தனக்கு நம்பிக்கை இல்லாத காரியத்தை

செய்திருக்கிறார்.

திருமணம் பழமையான முறையும் அல்ல -

பலமான உறவும் அல்ல என்றும் கூறுகிறார்.

திருமணம் பழமையான முறை அல்ல என்று கூறுவது

எவ்வளவு தவறோ அதே அளவு தவறு தான்

பலமான உறவு அல்ல என்று கூறுவதும்.

இவரைப் போல் – நம்பிக்கை இல்லாமல்,

சுயநலத்திற்காக அதை ஒரு சடங்காகச்

செய்பவர்களுக்கு

அது பலமான உறவு அல்ல தான்.

மற்றபடி இந்த நாட்டில் 99.9 % பேர் அதை

ஒரு வலுவான, அவசியமான, பந்தமாகக் கருதி

நம்பிக்கையுடன் தான் ஏற்றுக்கொள்கிறார்கள்.

முக்கியமாக, பெண்கள் இதை மிகவும் பாதுகாப்பான

வாழ்க்கை முறையாகவே கருதுகிறார்கள்.

திருமண பந்தம் இல்லை என்றால் -

பிறகு சமுதாயத்தில் உறவு முறைகளுக்கு பாதுகாப்பு

எப்படி இருக்கும் ?

யார் வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும்,

எந்தவித பந்தமும் இல்லாமல் விரும்பும்போது

சேர்ந்து வாழலாம். விரும்பாத போது பிரிந்து வேறு

யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்

என்றால் -

அதன் பின் விளைவுகளுக்கு இவர் கூறும் தீர்வு என்ன ?

பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு யார்

பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள் ?

ஆண்களால் குழந்தைகளை

வளர்க்க முடியுமா ?

இல்லை – பிரிந்த பிறகு பெண் மட்டும் தனியாக

எப்படி குழந்தைகளை வளர்ப்பாள் ?

குழந்தைகளின் படிப்பு, ஆரோக்கியம், எதிர்காலம்

எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பு ?

குழந்தைகளை அப்படியே அநாதைகளாக

விட்டு விடலாமா ?

பொருளாதாரம் ஒரு முக்கியமான பிரச்சினை என்றாலும்,

குழந்தைகளுடன் வரும் பெண்ணை வேறு ஆண்

மகிழ்வுடன் ஏற்பானா ?

இப்படி எவ்வளவு முறை மாறி மாறி வாழ முடியும் ?

எத்தனை வயது வரை இப்படி வாழ முடியும் ?

45-50 வயதான பிறகு ?

யார் துணை சேரத்தயாராக இருப்பார்கள் ?

பின் – முதுமையில், தனிமை தான் வாழ்க்கையா ?

கணவன், மனைவி, அப்பா, அம்மா, மாமனார்,

மாமியார், அத்தை, மாமன், மைத்துனன், மைத்துனி

போன்ற உறவுமுறைகள் எல்லாம் காணாமல் போக

வேண்டியது தானா ? குடும்ப வாழ்வு தேவை இல்லாத

ஒன்றா ?

இவர் சொல்லும் ஆலோசனையைக் கேட்கப்போவதால்

கிடைக்கப் போகும் பயன் என்ன ?

(free sex என்பதைத் தவிர ?)

இதுகுறித்து முன்பொரு முறை நான் வலையில் எழுதினேன்.

பிறகு அவருக்கே கூட ஒரு மடல் எழுதினேன். பதில்

ஏதும் இல்லை.பதில் பெறும் அளவிற்கு நான் பெரிய

மனிதன் அல்ல. ஆனால், அவர் சொன்ன கருத்து

விவாதத்திற்கு வரும்போது – மேற்கொண்டு விளக்கம்

அளிப்பது அவர் கடமை, பொறுப்பு.

அண்மையில், இவரது அண்ணனாகப் பட்ட

(80 வயதைக் கடந்த ) திருவாளர்

சாருஹாசன் அவர்கள் கூட இதே போல் பேசியதே

இந்த இடுகையை எழுத என்னைத் தூண்டியது.

புகழ் பெற்ற மனிதர்களில் -

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதத்தில் சிறப்பான

திறமை இருக்கும்.

எவ்வளவோ துறைகளில் -

எதாவது ஒன்றில் !

அபூர்வமாக வெகு சிலருக்கு -

ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளிலும் கூட.

கமலஹாசன் ஒரு நல்ல கலைஞர்.

அவர் சார்ந்த துறையில் அவருக்கு நிறைய

அனுபவம் இருக்கிறது. அது பற்றிய விஷயங்களில்

அபிப்பிராயம் கூற நல்ல தகுதியும்

இருக்கிறது.

ஆனால் -

சமுதாயத்தைப் பற்றி, பல்லாயிரம் ஆண்டுகளாக

மக்கள் வாழ்ந்து வரும் முறையை பற்றி -

ஒருவர், முற்றிலும் விரோதமான,

எதிர்மறையான கருத்து

ஒன்றைக் கூறும்போது -

அதை சமூகத்திற்கு பரிந்துரை செய்ய தனக்கு

என்ன தகுதி இருக்கிறது என்று யோசிக்க வேண்டாமா ?

எந்த ஒரு விஷயத்தையும் பாராட்டுவதற்கோ,

புகழ்வதற்கோ – எந்தவித விசேஷ தகுதியும்

வேண்டியதில்லை.

ஆனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக

நடைமுறையில் இருந்து வரும் சமுதாய

வழிமுறைகளைக் குறை சொல்வது என்றால் -

அதற்கான சில தகுதிகள் அவசியம் தேவை.

குறைந்த பட்சம் தான் அதை ஏன் குறை கூறுகிறோம்,

எதனால் அதை குறை என்று கருதுகிறோம்,

அவற்றைப் போக்குவதற்கான மாற்று வழிகள் என்ன

என்பதைப் பற்றியும் யோசிக்க வேண்டும். தான் கூறும்

யோசனைகளையொட்டி எழும் கேள்விகளுக்கு

பதில் அளிக்கவும், விவாதங்களில் கலந்து

கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

அவரது பேட்டியைத் தொடர்ந்து எழுப்பப்படும்

கேள்விகளுக்கு கமலஹாசன் விளக்கம் அளிக்க

முன் வர வேண்டும் - அது தான் நேர்மையான

அணுகுமுறை.

————————————————————————

இதை அடுத்து நான் அண்மையில் பார்க்க நேரிட்ட

ஒரு விளம்பரத்தை அப்படியே எடுத்து கீழே போடுகிறேன்.

நான் இதைப்பற்றி விமரிசனம் எதுவும் எழுதப்

போவதில்லை.

இந்த ரியல் எஸ்டேட் பிசினஸை செய்வது

கமலஹாசனா அல்லது அவரது பெயரைப் பயன்படுத்திக்

கொண்டு வேறு கம்பெனிகள் எதாவது செய்கின்றனவா

என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவரது

பெரிய அண்ணன் சாருஹாசன்

இந்த விளம்பரத்தில் அடிக்கடி பங்கெடுக்கிறார்.

இதில் உள்ள வாசகங்கள் அத்தனையும்

அப்படியே விளம்பரத்தில் வந்துள்ளன -

(இதில் targeted prospective buyers -

என்று விளம்பரதாரர்கள் எதிர்பார்ப்பது -

கமலஹாசனின் ரசிகர்களைத் தான். அந்த ரசிகர்களைப்

பற்றி அவர்கள் எந்த அளவிற்கு எடை போட்டிருக்கிறார்கள்

என்பது விளம்பர வாசகங்களைப் பாரத்தால் விளங்கும் !)

kamal-city-4.jpg?w=500

Madras City Properties.com

presents Dr. Kamal Haasan Highway City

Madras City Properties.com உங்கள்

முதலீட்டின்சிறந்த நண்பன்

நம்ம Madras City Properties.com

பெருமையுடன்வழங்கும் Dr. Kamal Haasan

Highway City,

திண்டிவனம்.

நம்ம கமல் ஹாசன் Sir க்கு உலகம்

முழுவதும் fans

இருப்பதால்தான்

அவருக்கு உலக நாயகன் என்கிற பட்டத்தை

குடுத்திருகாங்க , உலகம் முழுக்க போற்றபடும்

கமல் sir க்கு Madras City Properties.com

கோடிகணக்கான Fans சார்பாக இவங்களோட

அடுத்த landmark

project எ dedicate

பண்ணிருக்காங்க. …..

…..Dr . Kamal Haasan Highway City,

அவருக்காக அவருடைய 50 வருட

திரைவாழ்க்கைக்கும், சமுக

சேவைக்கும்

நம்ம MCP.com ஓட tribute. இது மட்டும்

இல்லைங்க இந்த Kamal Haasan Highway

City ல

இருக்கிற streets எல்லாம் நம்ம kamal sir

அவரோட success

க்கு காரணமாக இருந்தவங்களுகும்.

இப்போ இருக்கிறவர்களுக்கும்

dedicate பண்ணி இருக்காரு.

திர. கமல் Sir dedicate பன்னிர்க்ரவங்க்ள

சில பெர்யர்கள்

1. சிவாஜி கணேசன்

2. கே.பாலசந்தர்

3. பாலமுரளிக்ருஷ்ணா

4. ஸ்ருதி ஹாசன்

5. crazy மோகன்

6. எ.வி மெய்யப்பன்

7. கௌதமி

8. அக்ஷரா ஹாசன்

9. ஆர். சி. ஷக்தி

10. எல். வி பிரசாத்

11. சுப்பலக்ஷ்மி ஹாசன்

12. கே தங்கப்பன்

13. D. ஸ்ரீனிவாசன்

14. ராஜலக்ஷ்மி ஸ்ரீனிவாசன்

15. சாரு ஹாசன்

16. சந்திர ஹாசன்

17. நளினி ரகு

18. தஞ்சை நடராஜன்

19. அனந்து

20. K தங்கப்பன்

Dr. kamal Haasan Highway City

இது சென்னையிலிருந்து Pondicherry

செல்லும் National

Highway இல்

அமைந்து உள்ளது .இங்க ஒரு Sq. Ft. ஓட

விலை வெறும் Rs. 175/ -மட்டுமே.

நம்ம site க்கு பக்கதில உள்ள ஊர்கள் நு

பார்த்தால்

Pondycherry, Thiruvannamalai,

Kanchipuram,

VIllupuram, Marakanam மற்றும் Cuddalore.

இங்கிருந்து

pondycherryபக்கத்திலேயே இருப்பதால்

basic facilities, அதாவதுschools,

colleges,

hospitals,banks, supermarkets,

transport

facilities,

வேலை வாய்ப்புகள் எதையுமே நினைச்சுகவலை பட

வேண்டியது

இல்லை.

இது chennai to pondy செல்லும்

national highway ல இருப்பது மட்டும்இல்லாம

tourist

spot ஆன,

pondicherryum மற்றும் கோவில் நகரமான

திருவண்ணாமலையும்

அருகில்இருப்பதால் இங்க land ஓட

appreciation valueஉயர்ந்துகிட்டு இருப்பதை

கண்கூடாக பார்க்கலாம்.

……. இந்த Madras Recreation Club,

RCI என்கிற ஒரு organisation ஓட

tie-up பண்ணியிருக்காங்க . இதனால

இவங்க 4500 resorts

ல 100 countries ல

30 years க்கு holiday facilities

பண்ணி தராங்க.

இந்த offer அ நீங்க foreign trips

இல்ல domestic

holidays

plan பண்றப்ப ரொம்ப useful ஆ இருக்கும்.

உங்கள் முதலீட்டின் சிறந்த நண்பன் Madras

City Properties.Com உங்களோட

investment safe & Secure எஇருக்கணும் நா

Madras City

Properties.com ஓட இந்தlandmark

project ல

invest பண்ணுங்க.

http://vimarisanam.wordpress.com/2012/02/09/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/#comment-2307

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.