Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார் அந்த “வைக்கோற் பட்டடை நாய்”? – செய்தி விமர்சனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Douglas-Devananda-100x100.jpg

அரசியல் தீர்வு ஒன்று கிடைத்துவிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் அரசியல் செய்யமுடியாது என்றும் அதனால்தான் அவர்கள் தீர்வினைப் பெறுவதில் அக்கறையில்லாமல் இருக்கின்றார்கள் என்றும் டக்ளஸ் அவர்கள் அண்மையில் தனது கருத்து ஒன்றினை வெளியிட்டிருந்தார். மக்களை ஒன்று திரட்டி அரசியல் ரீதியாக போராடி, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றினைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்தத் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கம் பெற்றதனையும், அப்படியொரு நிலையான – நீதியான தீர்வை சிங்கள அரசு வழங்குமானால் அதன்பின்னர் கூட்டமைப்பினர் அரசியல் செய்யவேண்டிய அவசியமில்லை என்பதைனையும் டக்ளஸ் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான வழியில் சென்று மக்களை ஒன்று திரட்டி, அது எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த இலக்கை நோக்கி கூட்டமைப்பு செல்லத் தவறினால் மக்கள் கூட்டமைப்பை தூக்கி எறிவார்கள் என்பதை கூட்டமைப்பின் உறுப்பினர்களும் புரிந்து கொளள்ளவேண்டிய நிலையில் உள்ளனர்.

தீர்வு கிடைத்துவிட்டால் உண்மையில் யாரால் அரசியல் செய்யமுடியாது என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். நிலையான தீர்வு தமிழ் மக்களுக்குத் தரப்பட்டால் அதன்பின்னர் அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகள் நிவர்த்திசெய்யப்படும். அபிவிருத்திப் பணிகள் சிரமமின்றி முன்னெடுக்கப்படும். அபிவிருத்தியையும் அத்தியாவசிய தேவைகளையும் வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தீர்வின் பின்னர் அரசியல் செய்வதற்கு கருத்துப்பொருளே அடியோடு இல்லாமல் போய்விடும். டக்ளஸ் சொல்வதுபோல் ‘வைக்கோற் பட்டடை நாய்” யார் என்பதை வடகிழக்கு மக்களுக்கு புரியாமல் இல்லை.

35 வருடகாலமாக தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிவருபவர் என தன்னைத்தானே மார்தட்டிக்கொள்ளும் டக்ளஸ் ஈழமக்களின் சுதந்திர விடிவிற்காக இதுவரை எதை செய்துகொடுத்திருக்கின்றார் என்பதுதான் எங்களின் கேள்வி. அதிலும் வேறு அவர் 15 வருடங்கள் ஆயுதம் தூக்கிப் போராடியவராம். அவரது ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழ்மக்கள் அவரை நினைவில் வைத்திருப்பது கடத்தல் மற்றும் கப்பம்கோரல் போன்றவற்றில் பெயர்போனமைதான்.

80களின் நடுப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் இராணுவத் தளபதியாக இருந்த நீங்கள் புகழ்பெற்ற ஏதாவது தாக்குதலில் சம்பந்தப்பட்டிருந்தீர்களா? ஆனால் புகழ்பெற்ற பல கொள்ளைகளில் உங்கள் பெயர் இன்றும் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. பலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சிபெற்ற சிலரில் டக்ளஸ் அவர்களும் ஒருவர். ஆனால் அந்தப் பயிற்சிகளையெல்லாம் அவர் தமிழர்களுக்கு எதிராகவே பயன்படுத்தியிருக்கின்றார். இன்றுவரை அவர் கடத்தல், மற்றும் கப்பம்கோரல்களை விடவில்லை என்பது விக்கிலீக்ஸின் தகவல்.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி இதுதான் உங்களின் அரசியல் சித்தாந்தம். ஆனால் வடக்கு கிழக்கை பிரிக்கும் போது நீங்கள் எதிர்த்து கருத்து எதனையும் தெரிவித்திருக்கவில்லை.

மகிந்த அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான சகல செயற்பாடுகளையும் கைகட்டி பேசா மடந்தைகளாக பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள். அதுதான் உங்களைப் போன்ற பல ‘நண்பர்”களை உருவாக்கித் தருமாறு யாழ். மத்திய கல்லூரியை மகிந்தர் கேட்டிருக்கின்றார்போல. இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாநிலத்தில் சுயாட்சி அதிகாரங்களைக் கேட்கும் போது நீங்கள் கேட்கின்றீர்கள் ஏன் இந்த அதிகாரங்கள்? உங்களின் அரசியல் இலக்கு அதுதான் என்பதை நீங்கள் மறந்துவிட்டு பேசுகின்றீர்களா அல்லது மகிந்த அரசிற்கு சேவகம் செய்கின்றீர்களா?

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத சுயாட்சி அதிகாரத்தை வைத்து ஸ்ரீதர் தியேட்டரில்தான் அரசியல் செய்யலாம். இப்போது தெரிகின்றதுதானே யார் இந்த ‘வைக்கோற் பட்டடை நாய்” என்று. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லையுண்டு. இதை தமிழ்மக்கள் டக்ளஸிற்கு புரிய வைப்பார்கள். வடக்கு கிழக்கு ஒன்றும் தமிழ்நாட்டின் சூளைமேடுயல்ல செய்துவிட்டு தப்பியோடுவதற்கு. தமிழிழம் காளைகள் பாயும் மேட்டுநிலம் என்பதனை டக்ளஸ் அவர்கள் விரைவில் புரிவார்.

http://www.saritham.com/?p=50849

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானத்தை இடுப்பில திறந்து வைச்சிறுக்கின்றவன் வாயில என்னத்தை கடை போடப் போறான்?

கடத்தல், கப்பம், கொலை, கொள்ளைகளில் மட்டும் தேர்ச்சி பெற்று இந்தியப் பயங்கரவாதிகளின் அரவணைப்பில் தமிழின விரோத அரசியல் நடாத்தும் டக்ளசுக்கு இவ்வளவு விளக்கமும் தேவையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.