Jump to content

விண் குப்பைகளை அகற்றுவதற்கான திட்டம்


Recommended Posts

விண் குப்பைகளை அகற்றுவதற்கான திட்டம்

வானத்தின் குப்பைகளை அள்ளுவதற்கு ஒரு திட்டத்தை சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.

வானில் கைவிடப்பட்டுக் கிடக்கும் செய்மதிகள், ராக்கட்டுக்களின் பாகங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு ஒரு இயந்திரத்தை உருவாக்குவதுதான் இந்த திட்டமாகும்.

விண்வெளியை துப்பரவு செய்வதற்கான இந்த இயந்திரம் ஒரு வேக்கூம் கிளீனர் மாதிரி செயற்படும்.

வான் குப்பைகளை அள்ள வேக்கூம் கிளீனருடன் சுவிஸ் வருவது குறித்து நிச்சயமாக பல நகைச்சுவை கருத்துக்கள் வரலாம்.

110902020443_sapcedebris304_afp.jpg

பூமியைச் சுற்றவுள்ள குப்பைகள் பற்றிய ஒரு சித்திரம்

ஆனால் இந்த விசயம் ஒன்றும் அவ்வளவு நகைச்சுவையான விசயம் அல்ல. இது மிகவும் முக்கியமான ஒரு விசயம்.

பல்லாயிரக் கணக்கான கைவிடப்பட்ட பொருட்கள் பூமியை சுற்றி வந்துகொண்டிருக்கிறன. சரியாக எவ்வளவு பொருட்கள் அவ்வாறு இருக்கின்றன என்று எவருக்கும் கணக்கு எதுவும் இதுவரை தெரியாது.

இவற்றில் பழைய செய்மதிகள், சர்வதேச வெண்வெளி ஆய்வு கூடத்தில் இருந்து வீசப்பட்ட பொருட்கள், விண் ஓடங்கள் ஆகியவை அடங்கும். இவை ஒரு மணி நேரத்துக்கு இருபத்தெட்டாயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

இந்த குப்பைகளும், துண்டுகளும் பூமியைச் சுற்றவரும் செய்மதிகளுக்கும், ஆட்கள் பயணிக்கும் விண் ஓடங்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

111022165453_rosat_304x171_dlr_nocredit.jpg

கைவிடப்பட்ட ஒரு செய்மதி

இவற்றில் பழைய செய்மதிகள், சர்வதேச வெண்வெளி ஆய்வு கூடத்தில் இருந்து வீசப்பட்ட பொருட்கள், விண் ஓடங்கள் ஆகியவை அடங்கும். இவை ஒரு மணி நேரத்துக்கு இருபத்தெட்டாயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

இந்த குப்பைகளும், துண்டுகளும் பூமியைச் சுற்றவரும் செய்மதிகளுக்கும், ஆட்கள் பயணிக்கும் விண் ஓடங்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

தற்போது இவற்றை அகற்றுவதற்காக லௌசானில் உள்ள ஈகோல் பொலிதெக்னிகில் உள்ள சுவிஸ் விண்வெளி மையம் றிமோட் காண்ட்ரோல் மூலம் இயக்கக் கூடிய ஒரு இயந்திரத்தை அறிவித்திருக்கிறது.

அந்த குப்பைகளை அங்கே பெருக்கியெடுத்து அவற்றை பூமிக்கு கொண்டுவரும் போதே எரியச் செல்வது ஒரு வழி. அல்லது அவற்றை அங்கிருந்து பூமிக்கு கொண்டு வந்து இங்கே அவற்றை எரிப்பது

இரண்டாவது வழி. இவை இரண்டு குறித்தும் தாம் ஆராய்வதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

பத்து மில்லியன் டாலர்கள் பெறுமதியான இந்த விண்வெளியை சுத்தம் செய்யும் திட்டம் இன்னமும் மூன்று முதல் ஐந்து வருடங்களில் ஆரம்பமாகும் என்று அந்த மையத்தின் இயக்குனர் வோல்க்கர் காஸ் கூறியுள்ளார்.

http://www.bbc.co.uk...acevacuum.shtml

Link to comment
Share on other sites

- இப்படியான குப்பைகள் வராதமாதிரி முதலிலேயே திட்டமிட்டு விண்வெளிக்கு கலங்களை அனுப்பினால் நல்லது.

- விண்வெளி குப்பைகளை நிலத்துக்குப்பைகளை விட இலகுவாக அகற்றலாம் போல உள்ளது.

Link to comment
Share on other sites

இதையும் கொஞ்சம் கவனியுங்கோ ...

என்னை பொறுத்தவரையில் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட தண்ணீர் மிக உச்சப்பட்ட மோசடி.

http://www.youtube.com/watch?v=FrAShtolieg

thanks:

the following image from : http://www.onlineeducation.net/bottled_water

water_full.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்றைய உலகில், மதத்தை வைத்து பிழைப்பவர்களும் அதை விற்று பிழைப்பவர்களுமுண்டு. மதத்தின் புனிதம், மனித நேயம் எல்லாம் மரணித்து வெகுகாலமாகிவிட்டது. இந்து தமிழர் கட்சி தலைவர், ராம ரவிக்குமார் கிறிஸ்தவர்களை சாடியிருக்கிறார். ஒன்று இவர்களின் லாப நோக்கு அல்லது நிர்வாக திறன் இன்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள தயாரில்லை. அங்கே முழங்கினால் இங்கே சச்சியர் வீட்டில் அடை மழைபெய்யும். கிறிஸ்தவர்களை வாங்கு வாங்கென்று வாங்குவார். ஆனால் தமிழக அரசு, இது ஒரு ஊர்ஜிதமற்ற குற்றச்சாட்டு என்றும் இவர்கள் கூறும் நிலையத்தில் கோவில் பிரசாதம் (லட்டு) செய்ய பொருட்கள் கொள்வனவு செய்வதில்லையென்றும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. 
    • அம்பாறையில் தேர்தல் நிலவரம்! அம்பாறை  மாவட்டத்தின்  திகாமடுல்ல  தேர்தல் தொகுதியில்  30 வீதம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அம்பாறை மாவட்டத்தில் 5,55,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 4 ஆசனங்களுக்காக 39 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளாகவும் பல சுயேட்சைகளாகவும் களமிறங்கி உள்ளனர். இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82,830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1,84,653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது” இவ்வாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தனது வாக்கினை விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400420
    • யாழில் தேர்தல் நிலவரம்! யாழ்ப்பாணத்தில் இன்று  மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400414
    • பின்னாலை... ரணில்,  காஸ் சிலிண்டருடன் சத்தமே  இல்லாமல்  போறார். . 😂 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.