Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து ஒன்றுபடும் நேரம் வந்துவிட்டது; நான் கட்டிய வீட்டுக்குள் வர வெட்கம் எதற்கு? ஆனந்தசங்கரி

Featured Replies

காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து ஒன்றுபடும் நேரம் வந்துவிட்டது; நான் கட்டிய வீட்டுக்குள் வர வெட்கம் எதற்கு? வவுனியா கருத்தரங்கில் ஆனந்தசங்கரி

காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து நாம் அனைவரும் ஒன்று பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான் கட்டிய வீடு. எனது வீட்டுக்குள் வர நான் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு உரிமையுடன் கூறினார் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி.

நேற்று முன்தினம் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற சமகால அரசியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஆனந்தசங்கரி இப்படிக் கூறினார்.

வன்னி மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகளும் ஒன்றாக கலந்துகொண்டன.

இந்த நிகழ்வில் மேற்படி கட்சிகளின் தலைவர்களான சம்பந்தன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா ஆகியோரும் உரையாற்றினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சரவணபவன், சுமந்திரன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றி ஆனந்தசங்கரி மேலும் கூறியதாவது:

நாம் பிரிந்து நின்று எதனையும் சாதித்துவிடப் போவதில்லை. பட்டம் பதவிகள் தேவையில்லை. நமது தேவை தமிழன் தமிழனாக தலை நிமிர்ந்து வாழ வேண்டும். நமது பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். நமக்காக, நமது விடிவுக்காக சேவையாற்றி தலைவர்கள் உயிர் நீத்த தியாகிகள் ஆகியோரின் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டுமெனில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் சங்கரி.

சர்வதேசத்தின் கண்கள் திறந்து விட்டன - சித்தார்த்தன்

இதுவரை காலமும் பாராமுகமாக இருந்த சர்வதேச சமூகம் இப்பொழுது நம் பக்கம் பார்வை திருப்பியுள்ளது. இது நமது போராட்டங்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே அமைந்துள்ளது. ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் ஒரு பிரேரணையாக முன்மொழியப்படவுள்ளது.

இலங்கை அரசும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாம் விரோதங்களை மறந்து ஓர் அணியில் செயற்படவேண்டும் தமிழ் மக்களின் சக்தியை வெளிப்படுத்த இது ஒரு நல்ல தருணம் என்றார் சித்தார்த்தன்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=40595845421592404

  • தொடங்கியவர்

ஆனந்த சங்கரியார் பல தமிழர் பாதகமான செயல்களை புலிகள் பலமாக இருந்தகாலத்தில் செய்திருந்தார். இன்று கருவேப்பிலை மாதிரி சிங்களம் அவரைப்பாவித்து முடித்துவிட்டது.

இன்று ஒற்றுமை படவேண்டும் என்கிறார், நல்ல விடயம்.

இவரில் இருந்து தேவானதாவும், கருணாவும், பிள்ளையானும் பாடம் படிக்கவேண்டும்.

தமிழர் பிரிந்து இருப்பது இதுவரையும் ஒரு கொள்கையின் மூலமும் எந்த வெற்றியும் கிடையாதிருப்பது முதல் காரணம். இப்போது கூட்டமைப்பின் கொள்கைகள் சரி போலப் பலருக்கு தெரியத்தொடங்கலாம். புலிகள் சில வெற்றிகளை ஈட்டிய போது 'பெடியள்" என்று அழைக்கப்பட்டு ஆதரவு கொடுக்கப் பட்டது. அவர்கள் பேச்சு வார்த்தைகள் என்று போய் முனேற்றங்கள் தேக்க நிலையடைய சுயநலமி கருணா முதலில் உடைத்துக்கொண்டு போனான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் பிரிந்து இருப்பது இதுவரையும் ஒரு கொள்கையின் மூலமும் எந்த வெற்றியும் கிடையாதிருப்பது முதல் காரணம். இப்போது கூட்டமைப்பின் கொள்கைகள் சரி போலப் பலருக்கு தெரியத்தொடங்கலாம். புலிகள் சில வெற்றிகளை ஈட்டிய போது 'பெடியள்" என்று அழைக்கப்பட்டு ஆதரவு கொடுக்கப் பட்டது. அவர்கள் பேச்சு வார்த்தைகள் என்று போய் முனேற்றங்கள் தேக்க நிலையடைய சுயநலமி கருணா முதலில் உடைத்துக்கொண்டு போனான்.

நலமி கருணா இல்லை. கலவி கருணா.  

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிய வீடு, எப்போதோ விலை போய் விட்டது!

உங்களுக்கும் 'வெட்கம்' வருமா? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்த சங்கரியார் பல தமிழர் பாதகமான செயல்களை புலிகள் பலமாக இருந்தகாலத்தில் செய்திருந்தார். இன்று கருவேப்பிலை மாதிரி சிங்களம் அவரைப்பாவித்து முடித்துவிட்டது.

இன்று ஒற்றுமை படவேண்டும் என்கிறார், நல்ல விடயம்.

இவரில் இருந்து தேவானதாவும், கருணாவும், பிள்ளையானும் பாடம் படிக்கவேண்டும்.

தன் எதிரியின் வீட்டைக் கொழுத்துவதற்கு கூலிக்கு ஆள்த்தேவைப்படும் அறிவித்தல் முன் மொழியப்படும் போது, வரிசையில் நிற்பதற்கும் பலர் இருப்பார்கள். இந்தத் தரத்தில் இருப்பவர்களை கலப்பதால் அமைப்பின் பண்புதான் தரத்தில் தாழும்!

பொருட்களை ஈவதால் கயவரின் திருட்டுக்குணம் கெடும் என்று நினைப்பது தவறு,

மானம் என்ற ஒன்றையே துறந்த இவர்களிடம் நியாயம் எப்போதாவது வாழும் என்று நினைப்பதே தவறு!

இந்திய அதிகாரத்தின் செல்வாக்கே கூட்டணிக்குள் சங்கரியை நுளைத்தது. மக்களாதரவு இல்லாதவரை கூட்டணி இணைத்து அழகுபார்க்க என்ன தேவை உள்ளது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.