Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போருக்குப்பின் செம்மறி ஆட்டுக்குட்டம் போல நடத்தப்படும் யாழ் மக்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போருக்குப்பின் செம்மறி ஆட்டுக்குட்டம் போல நடத்தப்படும் யாழ் மக்கள்.

சிங்களம் போரில் வெற்றியடைந்தபின் தமிழர்களின் நலன்கள் யாவும் சிறிது சிறிதாகப் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தழிழர் பகுதியில் இராணுவக்கெடுபிடிகளுக்குப்பயந்து பி. ப. 6மணிக்குப்பின் மக்கள் வீட்டிற்குள் முடங்கும் காட்சிதான் காணமுடிகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக காய்திறந்தால் அடுத்தநாள் பிணமாகும் மக்கள். இப்படியான நிலையில் தானுண்டு தன்பாடுண்டு என்று மக்கள் சாப்பிடுவதும் தங்கள் கடமைகளை முடித்து உறங்குவதுமாகத் தான் வாழ்கின்றார்கள். எப்படி இருக்கின்றீர்கள் என்றால் தங்கள் மனத்தாங்கலை உள்ளே புதைத்துவிட்டு நன்ஙாக இருக்கின்றோம் என்று வெளிப்படையாகச் சொல்வார்கள். ஏனென்றால் கேட்பவன் யார் என்று அவர்களால் ஊகிக்க முடியாது. ஏதோ வாழ்ந்தால் மட்டும் போதும் என்று வாழும் மக்களாகத்தான் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இருககின்றார்கள்.

அப்துல்காலம் யாழ் சென்றபோதெல்லாம் மக்களால் மனம் திறந்து பேசமுடியவில்லை. இந்த அளவிற்கு அவர்களின் மனநிலை உள்ளதென்பதை அப்துல்காலாம் யாழ் மக்கள் வெளியில் சிரித்தாலும் அவர்களின் மனதில் 'துன்பரேகை" ஓடுகின்றது. என்று ஒரு சொல்லில் சொல்லிவிட்டார்.

இப்போது மக்கள் தங்களுக்கு நடந்த் 'ஆறாவடு" அவலங்களை மறந்து அரசிற்கு ஆதரவாகக் கொடி பிடிப்பது என்பது சாத்தியமா? அரசாங்கம் வா கொடி பிடி என்றால் பிடிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையே உள்ளதால் மக்களின் நிலை செம்மறிஆட்டு நிலைதான். இந்த ஆர்பாட்டங்களை எல்லாம் சர்வதேசம் நம்புமா? தமிழ் மக்கள் பிரச்சனையை வாய்திறந்து சொல்லமுடிவதில்லை என்பதே யதார்த்தம். அரசாங்கம் தமிழ் மக்களை ஆடு மேய்ப்பது போல் மேய்க்கின்றது. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் கண்மூடி, வாய்பொத்தி, நடைப்பிணம் போல் தான் வாழ்கின்றார்கள்.

முன்பு சட்டமே தெரியாத சட்டத்தரணி அமிர்தலிங்கம், தற்போது சட்டமே தெரியாத சட்டத்தரணி சம்பந்தன் போன்றவர்கள் செய்யும் அரைவேக்காட்டு ஜனநாயக அரசியல் தான் இந்த நிலைக்குக் காரணம்.

தம்மை ஜனநாயகவாதிகள் என்று அடையாளம் கட்டாத புலிகளை, அவர்கள் ஜனநாயக முறைகளை மதிக்கவில்லை என்று அனைவரிடம் உளறித்திரிந்த போக்கிரி சம்பந்தன், ஜனநாயகவாதியாக தன்னை காட்டிக்கொண்டு தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்கும் ஈனப்பிறவி என்பதனை நிரூபித்துள்ளா...

இத்தகைய சூழ்நிலைகளில் தலைவர் பிரபாகரன் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் முடிவுகளை எடுத்த வரலாறே இல்லை எனலாம்! அதே நேரம், குழப்பகரமான சூழ்நிலைகளில் அவர் ஒரு முடிவை வைத்தால் அது எல்லாராலும் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கும்.

முதலில் ஆயுத, பின்னர் அரசியல்-ஆயுத அமைப்பாக பலம் பெற்ற புலிகள், தம்மை ஒருபோதும் ஜனநாயாகவாதிகள் என்று மார்தட்டாத போதும், உள்ளே பேணிவந்த மிக உயர்ந்த ஜனநாயக பொறிமுறையானது - ஏனைய ஜனநாயகவாதிகளின் போலியான ஜனநாயகத்துடன் துளியும் ஒப்பிட முடியாதது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்பு சட்டமே தெரியாத சட்டத்தரணி அமிர்தலிங்கம், தற்போது சட்டமே தெரியாத சட்டத்தரணி சம்பந்தன் போன்றவர்கள் செய்யும் அரைவேக்காட்டு ஜனநாயக அரசியல் தான் இந்த நிலைக்குக் காரணம்.

தம்மை ஜனநாயகவாதிகள் என்று அடையாளம் கட்டாத புலிகளை, அவர்கள் ஜனநாயக முறைகளை மதிக்கவில்லை என்று அனைவரிடம் உளறித்திரிந்த போக்கிரி சம்பந்தன், ஜனநாயகவாதியாக தன்னை காட்டிக்கொண்டு தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்கும் ஈனப்பிறவி என்பதனை நிரூபித்துள்ளா...

இத்தகைய சூழ்நிலைகளில் தலைவர் பிரபாகரன் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் முடிவுகளை எடுத்த வரலாறே இல்லை எனலாம்! அதே நேரம், குழப்பகரமான சூழ்நிலைகளில் அவர் ஒரு முடிவை வைத்தால் அது எல்லாராலும் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கும்.

முதலில் ஆயுத, பின்னர் அரசியல்-ஆயுத அமைப்பாக பலம் பெற்ற புலிகள், தம்மை ஒருபோதும் ஜனநாயாகவாதிகள் என்று மார்தட்டாத போதும், உள்ளே பேணிவந்த மிக உயர்ந்த ஜனநாயக பொறிமுறையானது - ஏனைய ஜனநாயகவாதிகளின் போலியான ஜனநாயகத்துடன் துளியும் ஒப்பிட முடியாதது.

அமுதான கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.