Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நினைப்பது கிடைக்கவில்லை என்பதால் கிடைப்பதை எடுப்போம் என்பதற்கு இது விளையாட்டு பொருள் அல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைப்பது கிடைக்கவில்லை என்பதால் கிடைப்பதை எடுப்போம் என்பதற்கு இது விளையாட்டு பொருள் அல்ல . இது ஒரு இனத்தின் இருப்புக்கான விடுதலைப் போராட்டம் . - ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி

கடந்த வாரங்களாக பல்வேறு இணையதளங்களில் தலைப்பு செய்திகளாக வாசிக்கப்படும் விடையம் :" ஐ நா மனிதவுரிமை சபையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எடுக்கின்றது , எடுத்திருக்கின்றது" என்பதே . நீதி வேண்டி போராடும் அனைத்து தமிழ் மக்களும் இச் செய்திகளை வாசிக்கும் பொழுது மகிழ்ச்சி அடைகின்றனர் . ஆனால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் தீர்மானத்தில் என்ன உள்ளடக்கி இருக்கின்றது என்பதை தெளிவாக உற்று நோக்குவோமானால் அதில் ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்களை கண் மூடித்தனமாய் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசு தம்மை தாமே விசாரணை செய்வதாக உருவாக்கிய ராஜதந்திர முறையில் கூறப்படும் "நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை " அதாவது கொலைகாரன் தன்னையும் தனக்கு உதவியாக இருந்த சகாக்களையும் காப்பாற்ற தானே எழுதிய தீர்ப்பே / பரிந்துரைகளே அங்கெ காணப்படுகின்றது . அவ் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சொல்லியே அமெரிக்காவின் தீர்மானம் அடிப்படையாக அமைகின்றது .இதுவே "இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எடுத்திருக்கும் " தீர்மானம் " ஆகும் .

இலங்கை அரசின்" நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை " பல்வேறு சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களாலும் , பல்வேறு நாட்டு அரசியல் கட்சிகளாலும் , அரசியல் பிரமுகர்களாலும் நிராகரிக்கப்பட்டு , அவர்களால் சர்வதேச சுஜாதீன விசாரணை ஒன்றே வலியுறுத்தப்படுகின்றது . அத்தோடு நிலத்திலும் புலத்திலும் ஈழத்தமிழ் மக்கள் இலங்கை அரசின் அறிக்கையை உள்ளடக்கத்தின் அப்பால் முற்றாக நிராகரித்தார்கள் .

அதன் அடிப்படையில் பல்வேறு தமிழ் அமைப்புகள் தமது அரசியல் வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுத்தார்கள் . ஐ நா முன்றலில் ஈகைச்சுடர் முருகதாஸ் திடலில் பல்லாயிரக்கணக்கான ஐரோப்பிய புலம்பெயர் தமிழ் மக்கள் திரண்டு அனைத்துலக சுஜாதீன விசாரணையை வலியுறுத்தி தமது குரலை ஓங்கி ஒலிக்க செய்தார்கள் .

ஆனால் தற்போது ஒரு சில தமிழ் அமைப்புகள் அமெரிக்காவின் தீர்மானத்தை ( இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை உள்ளடக்கி அமைந்திருக்கும் ) வரவேற்பதாக அறிவித்துள்ளார்கள் . அதாவது ஆகக் குறைந்தளவு போர்குற்ற விசாரைணையை கூட உள்ளடக்கி எழுதப் படாத அமெரிக்காவின் சுஜநலம் கருதி கொண்ட அறிக்கை ஈழத்தமிழர்களின் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்பையும் அத்தோடு ஈழத்தமிழர்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி பெறுவதற்கான சுதந்திரத்தையும் குழி தோண்டி புதைப்பதாகவே கருதவேண்டும் .

ஆரம்பத்தில் இருந்து அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட இலங்கை அரசின் அறிக்கை அமெரிக்காவின் தீர்மானத்தால் அங்கீகாரத்தை பெறுகின்றது . இன்றுவரை எவ்வித தயக்கமும் அல்லாமல் தமது விடுதலை அவாவை தமிழ் மக்கள் நிலத்தில் தெரியப்படுத்தி உள்ளார்கள் . தமிழ் சிவில் சமூகம் இதை ஆவணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி உள்ளது.

மக்கள் ஆணையை ஏற்று இன்றுவரை எந்தவொரு சர்வதேச வல்லரசு நாடுகளின் சுயநல விருப்புக்கும் சிக்காமல் தமது சுதந்திர தமிழீழத்தை அடைவதற்கு தமது நீதியான உண்மையான நேர்மையான விடுதலைப் போராட்டத்தையே ஈழத்தமிழர்கள் நடாத்துகின்றார்கள் . எந்தவொரு வரலாற்றிலும் இடம்பெறாத உன்னதமான போராட்டமே ஈழத்தமிழர்களின் போராட்டம் . அதற்காகவே தமது உயிர்களை முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் அர்ப்பணித்தார்கள் , அதன் ஊடாக தமது உன்னத லெட்சியத்தை உயிர்வாழ வைத்தார்கள் .

அந்த உன்னத லெட்சியத்தை அடைவதற்கே உலகத் தமிழ் மக்கள் தமது ஆணையையும் ஆதரவையும் கொடுத்தார்கள் .

அரசியல் செய்யவேண்டும், சர்வதேசம் எம்முடன் பேசவேண்டும் என்ற காரணத்தால் நாம் உண்மைகளை மறைக்க முடியாது, அநீதியை ஏற்கமுடியாது .அதன் பொருட்டு பின்விளைவுகளை ஆராயாமல் அவசரமாக எடுக்கப்படும் முடிவுகள் ஈழத்தமிழர்களின் விடுதலைப் பேரவாவை சவப்பெட்டிக்குள் தள்ளிவிடும்.

நினைப்பது கிடைக்கவில்லை என்பதால் கிடைப்பதை எடுப்போம் என்பதற்கு இது விளையாட்டு பொருள் அல்ல . இது ஒரு இனத்தின் இருப்புக்கான விடுதலைப் போராட்டம் .

எமது நியாயமான ஐந்து அம்சக் கோரிக்கைகளையும் எந்தவொரு விட்டுக்கொடுப்பும் அல்லாமல் அவற்றின் மீதான உடனடி

நடவடிக்கைகளையும் கோரி மீளவும் ஐக்கிய நாடுகள் அவையின் முன்வைக்கின்றோம்.

1. பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும்

தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட

அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில்

விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2. சிறீலங்கா தடுத்துவைத்துள்ள தமிழ் அரசியற் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு

வழங்கப்பட்டு, விடுதலை செய்யப்படவேண்டும்.

3. தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள்

சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை

வெளியேற்றப்பட்டு, இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

4. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ

மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை

(அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

5. தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில்

ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு

நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில்

கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

http://www.pathivu.com/news/20262/57//d,article_full.aspx

--

Edited by Vily

அன்று பரமனுக்கு பாண்டியன் அடித்தான் இன்று தமிழனுக்கு புத்தபிக்கு அடிக்கிறார்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-09 09:22:01| யாழ்ப்பாணம்]

அமெரிக்காவும் அந்த ஆண்டவனும் பார்த்துக் கொள்ளட்டும் எங்களால் எதுவும் முடியாது. எல்லாவற்றையும் இழந்து உறவுகளைப்பறி கொடுத்து நடமாடும் மனித உடலங்களாக மட்டுமே நாங்கள். இதுதான் எங்கள் ஈழத்தமிழர்களின் சமகால நிலைமை.

தேவையாயின் தேர்தல் காலத்தில் எங்களை நாங்களே உசுப்பேத்தி வாக்களிப்பு நிலையம் சென்று ஒரு புள்ளடியை போட்டுவிட்டு வருவோம். எங்கள் புள்ளடியில் வென்றவர்களுக்கு பெர்மிட் கார் கிடைக்கும். கனத்த சம்பளம் கிடைக்கும். நாலாண்டுகளை தாக்காட்டிவிட்டால், பென்சனுக்கும் பஞ்சமில்லை. அதனால் ஜெனிவா போனால் பதவி போகும் என்ற பயம். பதவியை தந்தவர்களுக்காகப் பதவி போனாலும் பரவாயில்லை என்று நினைப்பதற்கு யாரும் இலர்.

நிலைமை இப்படியிருக்கையில், உங்களுக்கு என்ன குறையென்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். என்ன செய்ய முடியும்?

குறிகாட்டுவானில் வைத்து ஒரு பெளத்தபிக்கு தமிழ் இளைஞன் ஒருவரை தாக்குகிறார். அதனை கடற்படையினர் நின்று வேடிக்கை பார்க்கின்றார்கள். தமிழ் இளைஞனுக்கு புத்தபிக்கு அடித்தது போன்று, அந்தணச் சிவாச்சாரியார் ஒருவர் சிங்கள இளைஞனுக்கு அடித்திருந்தால் அல்லது அருட்திரு அடிகளார் ஒருவர் சிங்களவரை தாக்கியிருந்தால் நாலாம்மாடியில் வைத்து நறுக்கியிருப்பார்கள். ஆனால் புத்தபிக்கு தமிழ் இளைஞனை தமிழ் மண்ணில் வைத்து அடித்தபோது அதனைக்கண்டு கொள்வதற்கோ சம்பிரதாயத்திற் கேனும் கண்டிப்பதற்கோ ஆளில்லை.

என்ன செய்வது! அன்று பிட்டுக்கு மண் சுமந்த பரமனை பாண்டிய மன்னன் அடித்தான். இன்று பெளத்தபிக்கு தமிழ் இளைஞனை அடிக்கின்றார். அடிவேண்டி சீவியம் நடத்துவதுதான் எங்கள் தலைவிதியயன்றாகிவிட்டது. பரவாயில்லை. அந்தப் பரமேஸ்வரனுக்கு பாண்டியன் அடித்த அடிபாரில் உள்ள அத்தனை மாந்தரின் முதுகிலும் விழுந்ததாகப் திருவிளையாடல் புராணம் பேசுகின்றது. அதுபோல, பெளத்த பிக்கு குறிகாட்டுவானில் வைத்து தமிழ் இளைஞனுக்கு அடித்த அடி என்றோ ஒருநாள் பெளத்தபீடத்தில் இடியாக விழும். பாண்டியன் தான் செய்த தவறை அன்று உணர்ந்தது போல பெளத்தபிக்குவும் என்றோ ஒருநாள் உணர்வார். அப்போது மன்னிப்புக் கேட்பார். தூரம் அதிகம் இல்லை.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27517

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.