Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடியரசுத் தலைவரின் உரையில் இலங்கை விவகாரத்தைச் சேர்க்க வலியுறுத்தி மாநிலங்களவையில் கொண்டு வந்த வாக்கெடுப்பில் திமுக பங்கேற்கவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புது தில்லி, மார்ச் 20: குடியரசுத் தலைவரின் உரையில் இலங்கை விவகாரத்தைச் சேர்க்க வலியுறுத்தி மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் செவ்வாய்க்கிழமை கொண்டு வந்த தீர்மானம் தோல்வியைத் தழுவியது.

இத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 6 வாக்குகளும், எதிராக 99 வாக்குகளும் பதிவாயின.

6 திருத்தங்கள்: குடியரசுத் தலைவர் உரையில் இலங்கை விவகாரத்தை சேர்க்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராஜா, அதிமுக உறுப்பினர் வா. மைத்ரேயன் ஆகியோர் சார்பில் 6 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

""இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, அந்தத் திருத்தங்களை உரையில் சேர்க்க வேண்டும்'' என வலியுறுத்தி டி. ராஜா தீர்மானம் கொண்டு வந்தார்.

இதே போல், அதிமுக உறுப்பினர் மைத்ரேயன், இலங்கைத் தமிழர்களை அந்நாட்டுப் படைகளிடம் இருந்து பாதுகாக்கத் தவறியது, இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுத் திட்டங்களைத் தெளிவுபடுத்துவது, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது பற்றி குறிப்பிடவில்லை என்பதால் அவற்றை குடியரசுத் தலைவர் உரையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார்.

காங்கிரஸ் எதிர்ப்பு: அப்போது அவையில் குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் பி.எஸ். ஞானதேசிகன், ""இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க விரும்புவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெளிவுபடுத்தி விட்டார். அதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வரும் தீர்மானம் தேவையற்றது'' என்று கூறினார்.

அவரை ஆமோதித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவும் பேசினார்.

""பிரதமரின் பதில் திருப்தியாக உள்ளது. மிகவும் நுட்பமான இந்த விஷயத்தில் உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினால், எந்த நோக்கத்துக்காக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோருகிறோமோ அது பலன் அளிக்காது போய் விடும்'' என்று திருச்சி சிவா கூறினார்.

ஆனால், ""அவை விதியின்படி குடியரசுத் தலைவர் உரையில் திருத்தம் கோரி ஒரே ஒரு உறுப்பினர் தீர்மானம் முன்மொழிந்தாலும் அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்'' என்று மாநிலங்களவை துணைத் தலைவர் ரகுமான் கான் தெரிவித்தார்.

இதையடுத்து வாக்கெடுப்புக்கான நடைமுறைகள் தொடங்கின.

திமுக பங்கேற்கவில்லை: இந்த நேரத்தில் திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் அவையில் இல்லை. தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பான பிரதமரின் விளக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி, இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர். இதனால், அவையில் மொத்தம் 105 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.

அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் திருத்தம் கோரிய தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், தீர்மானத்துக்கு ஆதரவாக 6 பேரும் 99 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதையடுத்து திருத்தம் கோரிய உறுப்பினர்களின் தீர்மானம் தோல்வி அடைந்ததாக மாநிலங்களவை துணைத் தலைவர் ரகுமான் கான் அறிவித்தார்.

- தினமணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.