Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்

Featured Replies

Geneva_Final.jpg

போராட உரிமையுண்டு அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்

Geneva_Final1.jpgநீதிக்கு முன் வருவதற்குத் தயங்கி நிற்கும் சிறிலங்கா அரசாங்கம். அதிலிருந்து தப்புவதற்காக தமிழ்மக்களைப் பயன்படுத்தலாமென நினைக்கின்றது.

ஆகவேதான் நீதிக்கெதிரான போராட்டங்களை அவர்கள் செய்து வருகின்றனர். அதற்காகத் தமிழரை மிரட்டி அழைக்கும் செயல் நாட்டில் நடக்கின்றது. தமிழ்மக்களை அழித்தவர்கள் தங்களைக் காப்பற்றத் தமிழரைத் துணைக்களைக்கின்றனர். இதனைப் புரிந்து கொள்ள வேண்டியபொறுப்பு தமிழ்மக்களுடையது.

எங்கள் தாயகத்தில் தமிழ்மக்கள் தங்களின் உரிமைக்காக எந்தவொரு போராட்டத்தையும் செய்வதற்கான சூழ்நிலையில்லாமல் இருக்கின்றார்கள். இது உலகத்திற்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்திருக்கும் உண்மையாகும். தமிழ்மக்கள் தங்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்கக் கூடிய ஒரே இடம் புலத்தில் தான் மையம் கொண்டுள்ளது. எனவே புலத்துவாழ் தமிழீழ மக்கள் தங்களின் பலத்தைக் காண்பிக்க வேண்டும். இன்றைய காலத் தேவையை உணர்ந்து மக்கள் அணிதிரளவில்லை என்றால் கடந்தகாலப் போராட்ட வரலாறு அர்த்தமற்றுப் போய்விடும்.

22அல்லது 23மார்ச் 2012 அன்று சிறிலங்காவின் விவகாரத்தை முற்படுத்தி ஐ.நா.வில் வாக்கெடுப்பொன்று நடைபெறவுள்ளதால் இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் போராட வேண்டும். வாக்கெடுப்பு நடைபெற வேண்டுமென வலியுறுத்துவதுடன் சிறிலங்கா மீது தமிழ் இன அழிப்புக் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஏற்று அவர்களிடம் விருப்பறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதனைச் சொல்வதற்கு ஒரு அறிக்கை மட்டும் விட்டால் போதுமா?

ஆகவே 21-22.03.2012 ஆகிய இருநாட்களும் ஜெனீவாவில் ஐ.நா.முன்றலில் காலை 8.00 மணிதொடக்கம் 17.00 மணிவரை துண்டுப்பிரசுர கவனயீர்ப்பும் 14.00 மணியிலிருந்து 17.00 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளதால் இதில் பெரும்திரளான மக்கள் கலந்து கொள்வது எதிர்காலத்தில் நல்லதொரு மாற்றம் வருவதற்குத் துணைபுரியும். எனவே மக்களே திரண்டு வாருங்கள் இது தமிழினத்தின் அரசியல் விடுதலையை வென்றெடுப்பதற்கான அழைப்பு.

இவ்வளவு நாளும் போராடி என்ன கண்டோம்? உலகம் எம்மைக் கடைக்கண்ணாலும் பார்க்கவில்லையே என்றெல்லாம் கேட்டவர்கள் அல்லவா நாம். அவர்கள் இன்று எம்மைப் பற்றிப் பேசுகின்றனர் தமிழர் நாம் பார்வையாளர்களாக ஆறஅமர உட்கார்ந்திருக்கலாமா?

என்றுமில்லாதவாறு தாய்த் தமிழகத்தில் இருந்து எமது தொப்புழ் கொடி உறவுகளின் ஒன்றுபட்ட இனஉணர்வினால் அனைத்துக் கட்சிகளும் இலங்கை அரசிற்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு அளித்தது போல் நாமும் ஐ.நா.முன்றலில் அணிதிரண்டு நீதி கேட்போம்.

இருநாட்களும் அனுமதி எடுக்கப்பட்டுள்ளது. இந்தநாளைப் பயன்படுத்துவது தமிழரின் பொறுப்பு. இந்தப் போராட்டம் வெறும் கவனயீர்ப்புப் போராட்டம் மட்டுமல்ல… காலம்கனிந்து வரும் காலத்தில்; காலமுணர்ந்து செய்யும் போராட்டம் சொந்தத் தேவைகளிற்கொல்லாம் விடுப்பெடுத்துப் பழகியவர் நாம். தன்னினத்தின் விடுதலைக்காக ஒரு நாள் விடுப்பெடுக்காரோ? உணர்வை மெதுவாகத் தட்டிப் பார்த்து ஓரணியில் திரள்வது நல்லதொரு அறுவடையைத் தரும். விடுதலையைப் பெற்று வாழும் காலத்தைச் சமைக்கப் புறப்படுவோம் முடியும் என எண்ணி முன்வருவோம் நினைத்தால் முடியும் நிமிர்ந்தெழுவோம் போராடுவோம் இலக்கை அடைவோம். அதற்காய் அணிதிரள்வோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்புக் குழு

swisstcc@gmail.com

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தகால அனுபவங்களை வைத்துப் பார்க்கிறபோது 1983 இனக்கலவரத்தைத் ஹொடர்ந்த அமைதியான மெளவுன ஊர்வங்கள் ஒன்றுகூடல்கள் போன்ற செயல்பாடுகள் மட்டுமே மேற்குலக அரங்கில் பயனுள்ளவை என்று தோன்றுகிறது.

.

அதன் பின்னர் இடம்பெற்ற துருக்கிய PKK பாணி பலத்தைக் காட்டும் அணிவகுப்புகள் பயன்படாது. அவை சர்வதேச சமூகத்தை மிரட்டுவதாக அர்த்தப் படலாம்.

அதிலும் சர்வதேச சமூகம் த்டை செய்த, போர்குற்ற சாட்டுக்கு முகம் கொடுக்கும் அமைப்புச் சின்னங்களோடு அணிவகுப்பது சர்வதேச சமூகத்தால் Black Mailing ஆகவே கொள்ளப் படும். அத்தகைய போர்குற்றம் சுமத்தப் பட்ட ஒருதரப்பு பலம்காட்டல்கள் இலங்கைக்கு அவகாசம் அளிக்கும் நிலையையை நோக்கி அமரிக்காவையும் மேற்க்கு நாடுகளையும் தள்ளுவதாக அமையக்கூடும்.மேலும் சிங்கள ஆர்ப்பாட்டக் காரர் தேடும் வெறுப்பை சமன் செய்வதாகவும் அமையும். எதிரி வன்முறையைத் தூண்டவும் கூடும்.

தமிழர் என்ற அடையாள்த்துடனான மெளன அணிவகுப்புகளைத்தவிர எனைய அணிதிரழல்கள் சாதகமான பலனைத் தரும் வாய்ப்பில்லை. தயவு செய்து அமைப்பாளர்கள் இதனைக் கவனத்தில் எடுக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலவரின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்தகால அனுபவங்களை வைத்துப் பார்க்கிறபோது 1983 இனக்கலவரத்தைத் ஹொடர்ந்த அமைதியான மெளவுன ஊர்வங்கள் ஒன்றுகூடல்கள் போன்ற செயல்பாடுகள் மட்டுமே மேற்குலக அரங்கில் பயனுள்ளவை என்று தோன்றுகிறது.

.

அதன் பின்னர் இடம்பெற்ற துருக்கிய PKK பாணி பலத்தைக் காட்டும் அணிவகுப்புகள் பயன்படாது. அவை சர்வதேச சமூகத்தை மிரட்டுவதாக அர்த்தப் படலாம்.

அதிலும் சர்வதேச சமூகம் த்டை செய்த, போர்குற்ற சாட்டுக்கு முகம் கொடுக்கும் அமைப்புச் சின்னங்களோடு அணிவகுப்பது சர்வதேச சமூகத்தால் Black Mailing ஆகவே கொள்ளப் படும். அத்தகைய போர்குற்றம் சுமத்தப் பட்ட ஒருதரப்பு பலம்காட்டல்கள் இலங்கைக்கு அவகாசம் அளிக்கும் நிலையையை நோக்கி அமரிக்காவையும் மேற்க்கு நாடுகளையும் தள்ளுவதாக அமையக்கூடும்.மேலும் சிங்கள ஆர்ப்பாட்டக் காரர் தேடும் வெறுப்பை சமன் செய்வதாகவும் அமையும். எதிரி வன்முறையைத் தூண்டவும் கூடும்.

தமிழர் என்ற அடையாள்த்துடனான மெளன அணிவகுப்புகளைத்தவிர எனைய அணிதிரழல்கள் சாதகமான பலனைத் தரும் வாய்ப்பில்லை. தயவு செய்து அமைப்பாளர்கள் இதனைக் கவனத்தில் எடுக்கவும்.

தமிழர் என்று அடையாளபடுத்த வேட்டியும் சட்டையும் அணீந்து வெறும் காலுடன் நடந்து சென்றால் போதுமா

?

புலவரின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன்

இந்த கருத்தை ஆமோதித்தால் புலவரும் நீங்களும் மட்டும்தான் நடக்கவேண்டி இருக்கும்

.அது ஊர்வலமாக இருக்காது வாக்கிங் போவதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்தகால அனுபவங்களை வைத்துப் பார்க்கிறபோது 1983 இனக்கலவரத்தைத் ஹொடர்ந்த அமைதியான மெளவுன ஊர்வங்கள் ஒன்றுகூடல்கள் போன்ற செயல்பாடுகள் மட்டுமே மேற்குலக அரங்கில் பயனுள்ளவை என்று தோன்றுகிறது.

.

அதன் பின்னர் இடம்பெற்ற துருக்கிய PKK பாணி பலத்தைக் காட்டும் அணிவகுப்புகள் பயன்படாது. அவை சர்வதேச சமூகத்தை மிரட்டுவதாக அர்த்தப் படலாம்.

அதிலும் சர்வதேச சமூகம் த்டை செய்த, போர்குற்ற சாட்டுக்கு முகம் கொடுக்கும் அமைப்புச் சின்னங்களோடு அணிவகுப்பது சர்வதேச சமூகத்தால் Black Mailing ஆகவே கொள்ளப் படும். அத்தகைய போர்குற்றம் சுமத்தப் பட்ட ஒருதரப்பு பலம்காட்டல்கள் இலங்கைக்கு அவகாசம் அளிக்கும் நிலையையை நோக்கி அமரிக்காவையும் மேற்க்கு நாடுகளையும் தள்ளுவதாக அமையக்கூடும்.மேலும் சிங்கள ஆர்ப்பாட்டக் காரர் தேடும் வெறுப்பை சமன் செய்வதாகவும் அமையும். எதிரி வன்முறையைத் தூண்டவும் கூடும்.

தமிழர் என்ற அடையாள்த்துடனான மெளன அணிவகுப்புகளைத்தவிர எனைய அணிதிரழல்கள் சாதகமான பலனைத் தரும் வாய்ப்பில்லை. தயவு செய்து அமைப்பாளர்கள் இதனைக் கவனத்தில் எடுக்கவும்.

அண்ணா,  நீங்கள் சொல்வதில் அர்த்தம் இருந்தாலும் நாம் நடத்தும் அரசியல் போராட்டம் மனித உரிமையை மூன்றாம் உலகில் காப்பாற்ற.  அது மேற்கின் அரசியலுடன் ஒத்துபோகும். 

நாம் சம்பளத்தை கூட சொல்லியோ,  ஒபாமாவை பதவி இறங்க சொல்லியோ சிறி லங்கா ஜெனோசைட் கூட்டம் போல் நடக்கவில்லையே?

எமது உறவுகள் கடுங்குளிரில் வேலையை விட்டு ரோட்டில் ஒப்பாரி வைத்திருக்காவிட்டால் ஈழத்தில் ஒரு தமிழரும் எஞ்சி இருக்கமாட்டார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.