Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவின் வழியில் பல நாடுகள் நிலைப்பாட்டை மாற்றின

Featured Replies

இந்தியாவின் வழியில் பல நாடுகள் நிலைப்பாட்டை மாற்றின: ஜெனீவாவில் இலங்கை அதிகாரிகள் திணறல்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை விவகாரத்தில் லத்தின் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகள் பல, இந்தியாவின் வழியில் தமது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளன. இதனால் இப்பிரேரணையை தோற்கடிப்பதற்கு போதிய வாக்குகளைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை தூதுக்குழுவினர் தடுமாறுவதாக தெரியவருகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவம், கௌரம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்காலம் கிடைக்கவேண்டுமென்ற இந்தியாவின் நோக்கத்தை இப்பிரேரணை கொண்டிருந்தால் இப்பிரேணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க கடந்த திங்கட்கிழமை அறிவித்தார்.

இந்தியாவின் நிலைப்பாடானது தமது பிரச்சாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதுக்குழுவினர் கருதுகின்றனர்.

ஆபிரிக்கா, லத்தீன் அnமிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள பல நாடுகள் அமெரிக்காவின் இப்பிரேணைககு ஆதரவாக வாக்களிப்பதற்கு இப்போது தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.

இதேவேளை, இவ்விடயத்தை நிச்சயமில்லாத மொழிப்பிரயோகத்திற்கு உட்படுத்தாமல் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறுமாறு இந்தியாவை ராஜதந்திர ரீதியில் இலங்கை கோரியுள்ளது.

இந்தியாவின் கடைசிநேர தீர்மானத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைந்தபட்சம் மழுங்கச் செய்வதற்கான முயற்சிகளில் சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் பிரச்சாரம் செய்துவருவதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதுக்குழு அங்கத்தவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா இத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டபின் எமக்கு எப்படி ஆதரவளிக்க முடியும் என முன்னர் எம்மோடு இருந்த நாடுகள் பல கேட்கின்றன எனவும் தன்னை இனங்காட்ட விரும்பாத மேற்படி அதிகாரி தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38051-2012-03-21-19-07-56.html

  • தொடங்கியவர்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99679

புவிசார் அரசியல் சூழலை நன்றாக கவனித்து இலங்கை அதற்குள் புகுந்து விளையாட முனைந்தது. அதாவது சீனாவையும் ரஷ்யாவையும் இந்தியாவையும் மிகத்தந்திரமாகக் கையாள்வதன் மூலம் தனக்கெதிரான சர்வதேச நிகழ்ச்சி நிரல்களை உடைத்து விடலாம் என்று அரசாங்கம் நம்பியது. ஆனால் அந்த நம்பிக்கையில் இடி விழுந்தது போல இந்தியாவின் முடிவு அமைந்து விட்டது.

அதேவேளை, ஜெனிவா தீர்மானம் இலங்கைக்குப் பாதகமாக அமைந்தால் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையும் வெளிநாடுகளுடனான உறவுகளும் கடும் நெருக்கடிக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளன.

ஜெனீவா களத்தில் இலங்கை அரசு வெற்றி பெற்றாலும் சரி தோல்வியடைந்தாலும் சரி அசட்டையாக இருக்க முடியாது.

இலங்கை வெற்றிபெற்றால் இன்னும் வலுவான பொறியொன்றை வைக்க மேற்குலகம் முனையும். தோல்வியடைந்தால், அடுத்த கட்டம் குறித்த தீர்மானிக்க நாள் குறிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99679

புவிசார் அரசியல் சூழலை நன்றாக கவனித்து இலங்கை அதற்குள் புகுந்து விளையாட முனைந்தது. அதாவது சீனாவையும் ரஷ்யாவையும் இந்தியாவையும் மிகத்தந்திரமாகக் கையாள்வதன் மூலம் தனக்கெதிரான சர்வதேச நிகழ்ச்சி நிரல்களை உடைத்து விடலாம் என்று அரசாங்கம் நம்பியது. ஆனால் அந்த நம்பிக்கையில் இடி விழுந்தது போல இந்தியாவின் முடிவு அமைந்து விட்டது.

அதேவேளை, ஜெனிவா தீர்மானம் இலங்கைக்குப் பாதகமாக அமைந்தால் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையும் வெளிநாடுகளுடனான உறவுகளும் கடும் நெருக்கடிக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளன.

ஜெனீவா களத்தில் இலங்கை அரசு வெற்றி பெற்றாலும் சரி தோல்வியடைந்தாலும் சரி அசட்டையாக இருக்க முடியாது.

இலங்கை வெற்றிபெற்றால் இன்னும் வலுவான பொறியொன்றை வைக்க மேற்குலகம் முனையும். தோல்வியடைந்தால், அடுத்த கட்டம் குறித்த தீர்மானிக்க நாள் குறிக்கும்.

ஸ்ரீ லங்கா ஜெனோசைட் கூட்டத்திற்கு கேம் ஓவர். 

அங்க ஒரு பொறி முறையும் இல்லை.  கூட்டம் கூட்டமா படிப்பறிவில்லாத கூட்டத்தை இலஞ்ச பெட்டிகளோடு இறக்குவது இராச தந்திரம். 

மேற்கு மனித உரிமை ஆர்வலர்களின் பொறி ஸ்ரீ லங்கா ஜெனோசைட் கரடியை அமுக்கிவிட்டது. 

இலங்கை எதிரியாக இருந்தாலும் இந்தியாவின் நட்பு தான் அவர்கலை இந்த ஆட்டு ஆடுகிறது..........

அதே நேரம் அமெரிக்காவின் நடப்பாக இருந்தால் தனிநாடு தராவிட்டாலும் இவளவு மனிதௌரிமைகளை மீற விடமாட்டார்கள்

முள்ளிவாய்க்காலில் படுகொலைக்கு முழுக்க முழ்க்க இந்தியாவின் ஆதரவே காரனம் . அதை அமெரிக்கா செய்யவிட்டு விட்டு இப்போது இந்தியாவல் கூட இலங்கையை காப்பாற்ற முடியாத நிலைக்கு இந்தியாவை கூட்டிச் சென்றுள்ளது...... அமெரிக்கன் அமெரிக்கன் தான் இந்தியன் இந்தியன் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகூதா அண்ணா, இலைங்கை என்றால் எந்த நாடு சிறி லண்காவா, தமிழ் ஈழமா? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வழியில் பல நாடுகள் நிலைப்பாட்டை மாற்றின

எல்லாரும் நல்லா பார்த்துக்குங்க.. நானும் ரவுடிதான்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சமரசிங்க நேரடியாக சீனாவையும், கியூபாவையும் பாராட்டுகிறார்.கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிய முதல் யோசிக்க வேண்டுமாம்.

கியூபா பேச்சாளர் கூறுகிறார் 1983 ல் இருந்து 2009 வரை 40% மான ஆயுதத்தை இலங்கைக்கு வழங்கியவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல்.

  • தொடங்கியவர்

அகூதா அண்ணா, இலைங்கை என்றால் எந்த நாடு சிறி லண்காவா, தமிழ் ஈழமா?

இரண்டும் சேர்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏதோ எங்களுக்காக இந்தியா கொண்டுவந்த முயற்சி என்ற தோற்றப்பாட்டையே ஏற்படுத்துகின்றது.இந்திய வல்லரசு(?) என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் செயற்பா போன்றே இதுவும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.