Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதை மறப்பது? எப்படி மறப்பது? - தாயகத்தில் இருந்து இளங்கீரன்

Featured Replies

நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனை, மரணம் கொடுக்கக்காத்திருக்கும் போதும் எங்கள் உணர்வுகளை சாகடித்துவிட்டு நடக்கமுடியாது. யாரெல்லாம் எமக்கு மரணம் கொடுத்தார்களோ அவர்களெல்லாம் புனிதர்களாகி வந்தார்கள், நாங்கள் சிந்திய இரத்தம் உறையும் முன்னர் தாய் மண்ணை முத்தமிடுவதாய் கூறிக்கொண்டு எங்கள் இரத்தத்தை சுவை பார்த்தவர்கள் மீட்பர்களாய் மாறி எம்மோடு நின்றபோதும் நிச்சயமாக எங்கள் உணர்வுகளை சாகடித்து விட்டு எம்மால் நடக்கமுடியாது.

பூவோடு, காயும் துப்பாக்கிச் சன்னங்களால் கிழிக்கப்பட்டு வீசப்பட்டன, அந்தக் காமுகனின் தாய் வயதுப் பெண்ணும் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாளே. எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் இப்போதும் உயிரோடு இருக்கின்றது. நாம் பிரிந்து வாழ தமிழீழம் கேட்டதில் என்ன தவறிருக்க முடியும்? எது நடந்ததோ அது நன்றாகவே நடந்திருக்கின்றது. எது நடக்கவிருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று நகர்ந்துபோக எம்மால் முடியாது.

சனல்-4 தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் கணொளியை பார்த்து அழுது புலம்பாத தமிழன் ஈழத்தில் கிடையாது. குறைந்த பட்சம் ஐயோ போதும் நிறுத்தி விடுங்கள் என்று கத்திய குழந்தைகள் எத்தனை, பெண்கள் எத்தனை, என்னுடைய சகோதரன் இறப்பதாய் நினைக்கின்றேன், என்னுடைய சகோதரி வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாய் உள்ளம் கொதிக்கிறது. ஆனால் இன்றைக்கும் சிங்கள பௌத்த அரசாங்கம் கேட்கிறது, தமிழர்களுடைய தன்மானம் என்ன விலை? முள்ளிவாய்க்காலில் நாங்கள் செய்த வெறித்தனத்தை மறப்பதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள் என்று. ஒன்றை மட்டும் மறந்துபோனார்கள் அவர்கள். பெற்றது வலி மட்டுமல்ல, வடுவும்தான். அது தமிழன் என்றொரு இனம் வாழும்வரைக்கும் அழியாது வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதை தாயை, தந்தையை, பிள்ளையை, மனைவியை, கணவனைப் பறிகொடுத்தவர் மறப்பாரா? நடந்தது எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் என்ற வார்த்தையும், உயர்திய கைகளும், சிரித்த முகமும், நாங்கள் உங்கள் நண்பன் என்ற வார்தைகளும் முள்ளிவாய்க்காலில் தமிழன் சிந்திய இரத்தத்திற்கு ஈடாகுமா?

இன்றும் கூட தமிழர்கள் மீது புரிந்த வெறித்தனத்திற்கு மன்னிப்புக்கோர முடியாதவர்கள், வாழவேண்டிய பிள்ளைகள் கண்கள் கட்டப்பட்டு கோழைகள் கைகளில் உள்ள துப்பாக்கிகளால் கொல்லப்படுவது கண்டு மனம்வருந்த முடியாதவர்கள், எப்படி எங்கள் நண்பனாக முடியும்? எப்படி எங்கள் சகோதரனாக முடியும்? இதைக்கூட உணர்ந்து கொள்ள முடியாத மடையர்களாக தமிழர்கள் இருந்து விடுவர்கள் என்ற மமதைக்குத்தான் நாம் நல்லதொரு பாடத்தைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.

அடக்குமுறைக்கும் சிங்களத்தின் வெறித்தனத்திற்கும் அடங்கி அழுது, அழிந்துபோன தமிழன் என்றைக்கோ இறந்துபோனான். பின்னர் தமிழன் யார்? எப்படியானவன் என்று சொல்ல நீங்கள் இடித்து அழித்தாலும் எங்கள் மனங்களுக்குள் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்கள் சாட்சி. எத்தனையோ நடந்தது, ஆனால் இன்று வந்து நின்று கொண்டு நாங்கள் அன்றைக்கே சொன்னோம் இப்படித்தான் நடக்கும் என்று, பார்த்தீர்களா நடந்ததை என்று ஏளனம் செய்யும் தமிழன் என்று தங்களைச் சொல்லிக்கொள்வோரை நினைத்தால் உள்ளம் கொதிக்கின்றது.

அவர்களுக்குப் பின்னால் வால்பிடித்துக் கொண்டிருப்பவர்கள், தங்கள், கண்முன்னே துடித்துத் துடித்து இறந்தவர்கள், இறந்த பிள்ளையை தூக்கிப் புதைக்க முடியாமல் மணல்தரையில் விட்டு வந்தது, உடல் சிதறிப்போய் கிடந்த பிள்ளை என எமக்கு நடந்த கொடூரங்களை ஒரேயொரு முறை உங்கள் மனத்திரைக்கு எடுத்துப்பாருங்கள். அப்போதாவது சில பொய்முகங்கள் உங்களுக்குப் புரிகிறதா என்று பார்ப்போம்.

யார்? எவர் என்றே தெரியாமல், உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் பலர் தமிழன் காட்டுமிராண்டிகளால் படுகொலை செய்யப்படுவது கண்டு மனம் நொந்து கண்ணீர் விட்டழுதபோதும், இங்கு சிலர் ஏளனம் செய்வது உணர்த்துகின்றது. இவர்கள் உண்மையான, நியாயமான கொள்கையின் வழியில் நிற்பவர்கள் கிடையாது என்பதை, எப்போதெல்லாம் வலியவர்கள் தலையெடுக்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுடன் சேர்ந்து வாழும் ஒட்டுண்ணிகள் என்பதை.

வரலாற்றில் துரோகிகளாலும், கயவர்களாலும் சிதைக்கப்பட்டிருக்கும் தமிழனின் ஈழவிடுதலை எண்ணத்தை மீண்டும் மெருகூட்டவேண்டிய காலம் உருவாகி விட்டிருக்கின்றது. புலம்பெயர்ந்த மக்களே, தமிழக சொந்தங்களே, நாங்கள் முள்ளிவாய்க்காலில் சிந்திய இரத்தம் இன்னமும் உறையாமலிருக்கின்றது.

நீங்கள் உறையும் பனியிலும், கொளுத்தும் வெயிலிலும் நின்று எமக்காக போராடிக் கொண்டிருப்பதால். தாயகத்தை நேசிப்பவன் தாயகத்திற்காக வாழ்பவன் இன்னமும் உயிரோடு இருக்கிறான். புலம்பெயர் சொந்தங்களே, தமிழக உறவுகளே உரத்துக் குரல் கொடுங்கள்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.