Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. இந்தியா இதை இன்று முறியடிக்கும். பேசாமல் மரியாதையாக தானே மட்டையடியை தெரிவு செய்திருக்கலாம்.
  3. எண்பது வீதமான எம்மவர்களும், ஊடகம் நடத்துபவர்களும்.... நேரில் பார்த்த மாதிரி... போதை வஸ்து கடத்துபவன். வாள் வெட்டுக்காரன், மாட்டு கள்ளன் என்றெல்லாம் எழுதி பொலிஸ்காரனுக்கு வக்காலத்து வாங்குவதைப் பார்க்க... அனுரா கட்சியின் அனுதாபிகள் போல் தெரிகின்றது. ஸ்ரீலங்கா பொலிஸ், இராணுவம் சொல்வதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு.. கொல்லப் பட்ட அந்தச் சிறுவன் மீது அபாண்டமாக பழி சுமத்திக் கொண்டிருப்பதை பார்க்க... தமிழர் மத்தியில் உண்மையான செய்திகளை எதிர்பார்ப்பது கடினம் போலுள்ளது.
  4. Today
  5. அப்ப‌டித் தான் நானும் நினைத்தேன் க‌ந்த‌ப்பு அண்ணா😄😁 ஆனால் விளையாட்டில் ந‌ல்ல‌ மாஜிக் ந‌ட‌ந்து விட்ட‌து இன்று யாரும் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம் நேபால் இப்ப‌டி ப‌டு தோல்வி அடையும் என்று....................................... நேபால் என‌க்கு முத‌ல் முட்டைய‌ த‌ந்து விட்ட‌து இன்றையான் ப‌ரிட்சை தோல்வி ஹா ஹா......................................
  6. பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டது அமெரிக்கா - பாக். அமைச்சர் கவாஜா ஆசிப் 11 Feb, 2026 | 03:23 PM அமெரிக்கா தனது மூலோபாயத் தேவைகளுக்காக பாகிஸ்தானை பயன்படுத்திக்கொண்டு, பின்னர், கழிவறை டிஷ்யூ பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கடந்த கால பயங்கரவாதத்தை தாக்குதலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாக ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களில் பாகிஸ்தான் பங்கேற்றது தவறு. அது மதக் கடமையால் தூண்டப்பட்டது அல்ல, மாறாக அப்போதைய இராணுவ ஆட்சியாளர்களான ஜியா-உல்-ஹக், முஷாரப் அமெரிக்காவின் ஆதரவைப் பெறச் செய்த தந்திரம் என்றும் அவர் கூறினார். இன்று பாகிஸ்தான் சந்தித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளின் எதிரொலி என மேலும் அவர் தெரிவித்தார். கடந்த 6ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், தாக்குதலுக்கு காரணமான தற்கொலைக்குண்டுதாரி என அடையாளம் காணப்பட்ட யாசிர் என்பவர் குறித்த தாக்குதலுக்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என கூறப்பட்டது. அதனையடுத்து, பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பயங்கரவாதத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது மேற்கண்டவாறு பேசிய அமைச்சர் ஆசிப், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து பாகுபாடின்றி செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/238392
  7. இங்கிலாந்துடன் நேபாளம் விளையாடிய விளையாட்டினை பார்த்து இன்று நேபாளம் இலகுவாக வெல்லும் என நினைத்தேன்
  8. 'தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது' - ஆட்சியில் பங்கு குறித்த ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்வினை என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 11 பிப்ரவரி 2026 வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் 'ஆட்சியில் பங்கு' என காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர் தொடர்ந்து கோரிவரும் நிலையில் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் எனக் கூறி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியினர் 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என தொடர்ந்து கோரிவரும் நிலையில், சென்னையில் ஊடகம் ஒன்று நடத்திய மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'கூட்டணி ஆட்சி கிடையாது' என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கும் வகையில் கருத்தைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் தாமதமாகி வருவதில் காங்கிரஸ் அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில், முதலமைச்சரின் இந்தக் கருத்து வந்து சேர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தி.மு.க. கூட்டணி அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போதுவரை கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் துவங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளை நடத்த தமிழக காங்கிரஸ் கட்சிக்கான பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனாலும் அதற்குப் பிறகும் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் ஏதும் துவங்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இந்நிலையில், கடந்த டிசம்பர் 22ஆம் தேதியன்று ஊடகம் ஒன்றிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், "எங்கள் கட்சியின் சார்பில் வாக்குறுதிகளை கட்சியின் தலைவர்கள் வழங்குவார்கள். இதனை நிறைவேற்றுவதற்கு ஆட்சியில் பங்கு பெறுவது அவசியம்" என்று குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆட்சியிலும் பங்கு தரவேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சியின் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பியான மாணிக்கம் தாகூர், புரொஃபஷனல் காங்கிரசைச் சேர்ந்த பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோரும் வலியுறுத்த ஆரம்பித்தனர். பட மூலாதாரம்,@mkstalin/X டெல்லியில் கூட்டம் இதற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் ஏற்கனவே 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' எனக் கூறிவந்ததால், அக்கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கலாமோ என்ற யூகங்கள் எழுந்தன. இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலையில், இதுகுறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது ஜனநாயகன் படம் வெளியாக எவ்வளவு நாட்கள் ஆகலாம்? தயாரிப்பு நிறுவனம் முன்னுள்ள ஒரே வாய்ப்பு 500 வீரர்களுடன் அக்பரின் பெரும் படையை எதிர்க்கத் துணிந்தெழுந்த ராணி துர்காவதி 'வங்கதேசத்தவர்' என்ற புகாரில் கைதாகும் தொழிலாளர்கள்: கோவை, திருப்பூர் ஜவுளி தொழில்களில் என்ன நடக்கிறது? ரூ.100 கோதுமை திருடியதாக 45 ஆண்டுக்கு முந்தைய வழக்கில் ஒருவர் கைது - என்ன நடந்தது? End of அதிகம் படிக்கப்பட்டது இதெல்லாம் நடந்து பல நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தைகள் துவங்கவேயில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ப. சிதம்பரம், மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கு.செல்வப்பெருந்தகை கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் துவங்காதது தொடர்பாக காங்கிரசின் வருத்தத்தை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டார். "தொகுதி பங்கீடு குறித்து பேச முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாகக் குழுவை அமைக்க வேண்டும். விரைவில் தேர்தல் உடன்பாட்டை எட்ட வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தவும் வேட்பாளர் தேர்வுகளைச் செய்யவும் எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படும். கடைசி நேரத்தில் அறிவித்தால் குழப்பம்தான் வரும். தி.மு.க பேச்சு வார்த்தையைத் தாமதப்படுத்துவதால் தொண்டர்கள் மத்தியில் வருத்தம் உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,K.Selvaperunthagai/FB படக்குறிப்பு,செல்வப்பெருந்தகை (கோப்புப் படம்) கு. செல்வப்பெருந்தகையின் இந்தப் பேச்சுக்கு விளைவு இருந்தது. செவ்வாய்க்கிழமையன்று இரவில், கூட்டணிப் பேச்சு வார்த்தை தொடர்பாக அறிக்கை ஒன்றை தி.மு.க. வெளியிட்டது. "வரும் 17ஆம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. கழகத் தலைவர் அவர்களால் விரைவில் அமைக்கப்படவுள்ள தி.மு.க-வின் தொகுதிப் பங்கீட்டுக் குழு, சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் தோழமைக் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் ஈடுபடும்" என்று அந்த அறிக்கை கூறியது. இதற்கு அடுத்த நாள் சென்னையில் ஊடகம் ஒன்று நடத்திய மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணி ஆட்சி கிடையாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தார். காங்கிரசுடனான கூட்டணி குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த முதலமைச்சர், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது எனத் தெரிவித்திருக்கிறார். "(காங்கிரசுடன்) கூட்டணி நிச்சயமாக நன்றாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பதைப் போல இல்லை. ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் (காங்கிரசுக்கும்) தெரியும். இடையில் ஏதாவது பிரச்னை ஏற்படுத்தலாம் என நினைப்பவர்கள் திட்டமிட்டு சதி செய்கிறார்கள். நாங்களும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவர்களும் கவலைப்படவில்லை." என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே, தி.மு.க-வின் சில அமைச்சர்கள் கூட்டணி ஆட்சி தி.மு.கவுக்கு ஏற்புடையதல்ல எனக் கூறிவிட்ட நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் எதிர்வினை பட மூலாதாரம்,Manickam Tagore / Facebook படக்குறிப்பு,மாணிக்கம் தாகூர் அடுத்தது கூட்டணி ஆட்சிதான் என காங்கிரஸ் கட்சிக்குள் தொடர்ந்து குரல் எழுப்பிவந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், உடனடியாக இதற்கு எதிர்வினையாற்றினார்கள். விருதுநகர் தொகுதியின் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பியான மாணிக்கம் தாகூர், "மக்கள் முடிவு செய்வார்கள் கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006இல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தவறு" என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்கரவர்த்தியும் எதிர்வினையாற்றினார். "மற்ற மாநிலங்கள் அனைத்தும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும்போது, தமிழ்நாட்டின் 'தனித்தன்மை' என்ற காரணத்தைக் கூறி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுப்பது ஏன்? மற்ற இந்தியர்களைப் போலவே, தமிழ்நாட்டு மக்களுக்கும் கூட்டணி ஆட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை" என்று குறிப்பிட்டார். கூட்டணி ஆட்சி என்பதை முதல்வர் மறுத்துவிட்ட நிலையில் இனி காங்கிரஸ் இதனைத் தொடர்ந்து வலியுறுத்துமா? "அதனை இப்போது வெளியில் சொல்ல முடியாது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பவர்கள் அந்தத் தருணத்தில் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பார்கள்" என பெயர் சொல்ல விரும்பாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான கு. செல்வப்பெருந்தகை மிகக் கவனமாகவே இந்தக் கேள்விக்குப் பதிலளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்கள் தலைமையும் தமிழ்நாட்டுத் தலைமையும் சேர்ந்து பேசி இதற்கு ஒரு தீர்வைக் காண்பார்கள். எல்லோரும் அவரவர் கருத்தைச் சொல்வார்கள். முடிவு செய்ய வேண்டியது, தேசியத் தலைமையும் தமிழ்நாட்டுத் தலைமையும்தான். ஊடகங்களில் யூகங்களை உருவாக்காதீர்கள்" என்று கூறி இந்த விவகாரத்திற்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். பட மூலாதாரம்,Praveen Chakravarty/Facebook படக்குறிப்பு,பிரவீண் சக்கரவர்த்தி ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை இது குறித்து பேசாதபோது மாநில அளவில் சிலர் சொல்லும் கருத்துகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். "2006ல் தவறு செய்துவிட்டோம் என மாணிக்கம் தாகூர் நினைத்தால், அவர் அதனை காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் கேட்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள் இரண்டு, மூன்று பேர்தான் இதுபோல பேசிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, கூடுதல் இடங்களைக் கேட்பது நியாயமானதுதான். தேர்தல் முடிவுகள் வரும்போது எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அப்போதுகூட ஆட்சியில் பங்கு கேட்கலாம். ஆனால், தேர்தலுக்கு முன்பே இப்படிக் கேட்பது சரியல்ல. தி.மு.க. தனிப் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்பார்கள்?" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். தி.மு.கவைப் பொறுத்தவரை 22ஆம் தேதிதான் பேச்சுவார்த்தைகளைத் துவங்கவிருக்கிறார்கள். இந்த நிலையில், முதல்வரின் பேச்சு ஆழம் பார்ப்பதற்காக சொல்லப்பட்ட கருத்து என்று கருதுவதாகச் சொல்கிறார் ப்ரியன். "காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை யாரும் எதையும் சொல்ல முடியும். கேரளாவில் காங்கிரஸின் கொள்கைக்கே மாறுபட்ட கருத்தையெல்லாம் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் கூட்டணியைப் பற்றி ஆளாளுக்கு ஒவ்வொன்றைச் சொல்கிறார்கள். காங்கிரசின் பக்கம் இருந்து பார்க்கும்போது இதுபோன்ற அழுத்தம் நல்லதுதான். கூடுதல் இடங்களைப் பெற உதவலாம். ஆனால், முதல்வர் இது குறித்து தெளிவுபடுத்திய பிறகும் இதைச் சொல்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமளிக்கிறது" என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன். தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் ராகுல் காந்தியும் சந்தித்தபோது அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்பட்டதாகத் தெரியவில்லை என்கிறார் அவர். திமுக கூறுவது என்ன? ஆனால், தனித்து ஆட்சி என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. "கூட்டணி ஆட்சி வேண்டுமென்றால் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் என எல்லாக் கட்சிகளும் தனியாக நிற்க வேண்டும். மக்கள் யாருக்கு எவ்வளவு இடங்களை அளிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். எந்தக் கட்சிக்கும் தனியாக பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், மற்ற கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம். ஆனால், நாம் ஒரே கூட்டணியாக இணைந்து நின்று, அந்த கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியை ஆட்சியில் அமர்த்த வாக்குக் கேட்கிறோம். அம்மாதிரி சூழலில், கூட்டணி ஆட்சி என்று கேட்டால் எப்படி?" என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன். 2006ஆம் ஆண்டில் காங்கிரஸ் தவறுசெய்துவிட்டதாக மாணிக்கம் தாகூர் சொல்வது குறித்துக் கேட்டபோது, அந்தக் கருத்து சரியானதல்ல என்கிறார் அவர். "2006ஆம் ஆண்டில் தி.மு.க 128 இடங்களில் போட்டியிட்டது. மற்ற இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்தத் தருணத்திலேயே தனித்துப் பெரும்பான்மை பெறுவது கடினம் என்பது தி.மு.க-வுக்குத் தெரியும். இருந்தபோதும் தி.மு.க. ஆட்சியமைக்க வாக்களியுங்கள் என்றுதான் பிரச்சாரம் நடந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 163 இடங்கள் கிடைத்தன. ஆகவே அது தி.மு.க. ஆட்சியமைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட இடங்கள்தான். கூட்டணி ஆட்சி அமையட்டும் என்று கொடுத்தது அல்ல. அப்போது காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டாலும் இடதுசாரிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுடன் அந்த ஆட்சி நீடித்திருக்கும்" என்று அவர் கூறுகிறார். "தற்போதைய காலகட்டத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த அலையும் இல்லாவிட்டால் ஒரே ஒரு கட்சி மட்டும் தனித்துப் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது கடினம்" என்று கூறும் ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன், தமிழ்நாட்டில் எப்போதுமே மக்கள் ஒரே கட்சியின் ஆட்சிக்காகத்தான் வாக்களிக்கிறார்கள்" என்கிறார். எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன? பட மூலாதாரம்,X/Edappadi K Palaniswami படக்குறிப்பு,கோப்புப் படம் இந்நிலையில், 'கூட்டணி ஆட்சி' குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக- என்டிஏ கூட்டணியில் இந்தப் பிரச்னை இல்லையென்றும்", "அதிமுக தான் ஆட்சியமைக்கும்" என்றும் கூறினார். இன்று (பிப்ரவரி 11) தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர் "இது திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் உள்ள கூட்டணி பிரச்னை. இதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால், முதலமைச்சர் பேசியதற்கு உடனடியாக ஒரு காங்கிரஸ் தலைவரிடமிருந்து எதிர்வினை வருகிறது. இது அங்கு ஒரு குழப்பமான சூழல் நிலவுவதைப் பார்க்க முடிகிறது" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் கூட்டணியில் இந்தக் குழப்பம் இல்லை, அதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெளிவுபடுத்திவிட்டார். அதிமுக- தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும், அதிமுக ஆட்சியமைக்கும், நான்தான் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர், இதெல்லாம் முன்பே தெரிவிக்கப்பட்டதுதான்" என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp9mz528zxgo
  9. இத்தாலி அணிக்கு பெரிய‌ வாழ்த்துக்க‌ள்.......................
  10. மொஸ்கா சகோதரர்கள் தூள் கிளப்பிவிட்டார்கள்।😁
  11. பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சிறுவனின் சடலத்துடன் போராடிய உறவுகள்! Published By: Digital Desk 3 12 Feb, 2026 | 02:16 PM யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை (12) வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து "பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது" என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது உடலம் நவாலி இந்து மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்படுகிறது. https://www.virakesari.lk/article/238471
  12. முதலாவது இப்ப ஞாபகம் வருகிறது...நல்ல விளக்கம் நன்றி ....இரண்டாவது விடுமுறைக்கு நான் கனடாவில்
  13. இத்தாலி சகோதரர்கள் இருவரும் 50 அடித்து இருக்கிறார்கள்.
  14. வணிகக் கப்பல் பாதுகாப்பு சேவைகள் மூலம் 4 மாதங்களில் 598,250 அமெரிக்க டாலர் ஈட்டிய இலங்கை கடற்படை Published By: Vishnu 12 Feb, 2026 | 04:06 AM மேலும், இலங்கை கடற்படை ஏற்கனவே கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்குத் தேவையான பௌதீக மற்றும் மனித வளங்களைக் கொண்டிருப்பதால், கடற்படையால் குறைந்தபட்ச கூடுதல் செலவில் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கை சேவைகளை வழங்குவதை விரிவுபடுத்த முடிந்தது. தனியார் நிறுவனங்கள் தொடர்பான முந்தைய இயக்க முறைமையின் கீழ், தேசிய நலனுக்காக மிகக் குறைந்த வருவாய் மட்டுமே ஈட்டப்பட்டது, மேலும் புதிய செயல்படுத்தலுடன், முழு வருவாயும் அந்நியச் செலாவணியாக ஒருங்கிணைந்த நிதிக்கு வரவு வைக்கப்படுகிறது. 2009 செப்டம்பர் 10, அன்று, வணிகக் கப்பல்களுக்கு (கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள்) பாதுகாப்பு வழங்கும் ஆயுதமேந்திய காவலர்களுக்கான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் உபகரணங்களை சேமிக்கும் பணியை கடற்படை தொடங்கியது, மேலும் சரியான நேரத்தில் அறிவுறுத்தல்களின் பேரில், இந்த நடவடிக்கைகள் தனியார் பங்குதாரர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டன. சேவைகளை வழங்குவதற்காக உள்ளூர் நாணயத்தில் கடற்படைக்கு மிகச் சிறிய தொகை செலுத்தப்பட்டது, மேலும் அந்த பங்குதாரர்கள் மொத்த வருவாயில் மிகக் குறைந்த தொகையை உள்ளூர் நாணயத்தில் அரசாங்கத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, கடற்படை 2025 அக்டோபர் 03 முதல் 2026 பிப்ரவரி 08 வரை 323 கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, இதன் மூலம் கடற்படை நேரடியாக ஈட்டிய 598,250.00 அமெரிக்க டாலர் அந்நிய செலாவணி வருவாயை தேசிய நலன் மற்றும் பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடிந்தது. மேலும், இலங்கை கடற்படையின் மேற்பார்வை மற்றும் பாதுகாப்பின் கீழ் வெளிநாட்டு தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் உள்ளூர் பிரதிநிதிகளால் வழங்கப்படும் வாகனங்கள் அல்லது கப்பல்களைப் பயன்படுத்தி, இலங்கை கடற்படையின் ஆயுதக் கிடங்குகளில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களை சேமித்து வைப்பதற்கும், செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப அத்தகைய துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களை கொண்டு செல்வதற்கும் வசதியாக, இலங்கை கடற்படையுடன் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களின் உள்ளூர் பிரதிநிதிகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவது பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வையின் கீழ் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகிறது. https://www.virakesari.lk/article/238432
  15. சிறியர் தண்ணியடி விட்டாச்சு என்டார் ஆனால் இங்கை என்ன என்டால்.😄
  16. டிரம்பை சந்தித்த இஸ்ரேல் பிரதமர்; இரான் பற்றி விவாதிக்கப்பட்டது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நெதன்யாகுவின் இந்த பயணம், டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு அவர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் ஆறாவது பயணமாகும் கட்டுரை தகவல் டேனியல் புஷ் பிபிசி நியூஸ் 12 பிப்ரவரி 2026, 07:58 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்பின் போது, இரான் உடனான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகக் கூறினார். இருப்பினும், அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இரான் மீது தான் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் டிரம்ப் எச்சரித்தார். மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், இரானின் அணு ஆயுதத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையிலும் இரு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். இரானின் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவது மட்டுமின்றி, அதன் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் ஹமாஸ், ஹெஸ்பொலா போன்ற குழுக்களுக்கான அதன் ஆதரவைத் துண்டிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தை முன்னெடுக்குமாறு நெதன்யாகு டிரம்ப்பை வற்புறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்குப் பதில் நடவடிக்கையாக தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தத் தயாராக இருப்பதாக இரான் பரிந்துரைத்துள்ளது, ஆனால் பிற கோரிக்கைகளை நிராகரித்துள்ளது. வெள்ளை மாளிகை சந்திப்பிற்கு முன்னதாக, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தனது நாடு 'அவர்களின் அதிகப்படியான கோரிக்கைகளுக்குப் பணியாது' என்று எச்சரித்தார். நெதன்யாகுவின் இந்த பயணம், டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு அவர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் ஆறாவது பயணமாகும் - இது மற்ற உலகத் தலைவர்களை விட அதிகமாகும். இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் இரு தலைவர்களும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வழக்கத்திற்கு மாறாக அமைதியான சந்திப்பில் பேசினர். இதில் நெதன்யாகு கேமராக்களின் பார்வையில் படாமல் ஒரு பக்கவாட்டு நுழைவாயில் வழியாக அழைத்து வரப்பட்டார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு டிரம்ப் அவருடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை. இது தொடர்பாக 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்ட டிரம்ப், தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு "மிகவும் நன்றாக" இருந்தது என்று கூறினார். "இரானுடன் ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதைப் பார்க்க பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்று நான் வலியுறுத்தியதைத் தவிர, தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை" என்று அவர் குறிப்பிட்டார். ஓர் ஒப்பந்தமே தனது "விருப்பம்" என்றும், ஆனால் அப்படி ஒன்றை எட்ட முடியாவிட்டால் "அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கும்" என்றும் அவர் கூறினார். இஸ்ரேல் கூறியது என்ன? பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் தேவைகள் குறித்து தலைவர்கள் விவாதித்ததாகவும், அவர்களது "நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் உறவை" தொடர ஒப்புக்கொண்டதாகவும் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. டிரம்பிற்கு நெருக்கமானவராக இருக்கும் நெதன்யாகு, இஸ்ரேலுக்கு இரான் ஒரு இருப்பு ரீதியான பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக நீண்டகாலமாக வாதிட்டு வருகிறார், பிராந்தியத்தில் இரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறார். செவ்வாயன்று வாஷிங்டன் வந்தடைந்த பிறகு, நெதன்யாகு டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரைச் சந்தித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) அவர்கள் இரானுடன் நடத்திய "முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் குறித்த சமீபத்திய தகவல்களை" இருவரும் வழங்கியதாக இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தம் பற்றி டிரம்ப் என்ன கூறினார்? அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது ராணுவ இருப்பை அதிகரித்து வரும் வேளையில் நெதன்யாகுவின் பயணம் அமைந்துள்ளது. அணுசக்தி திட்டம் குறித்து ஒப்பந்தத்தை எட்டத் தவறினால் மற்றும் போராட்டக்காரர்களைக் கொல்வதை நிறுத்தத் தவறினால் தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். செவ்வாயன்று, மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவை அனுப்புவது குறித்து தான் "யோசித்து" வருவதாக டிரம்ப் கூறினார். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட வெகுஜனப் போராட்டங்களுக்கு எதிரான இரான் அரசாங்கத்தின் அடக்குமுறையை நிறுத்துவதற்காக, இரான் மீது தாக்குதல் நடத்துவதாக டிரம்ப் அச்சுறுத்தியதையடுத்து, கடந்த மாதம் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழு அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டது. "எங்களிடம் அங்கு சென்று கொண்டிருக்கும் ஒரு கடற்படை உள்ளது, மற்றொன்றும் செல்லக்கூடும்," என்று டிரம்ப் ஆக்ஸியோஸுக்கு (Axios) அளித்த பேட்டியில் கூறினார். "இரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு விரும்புகிறது. ஒரு இராஜதந்திர தீர்வு இன்னும் சாத்தியமே" என்றும் அவர் கூறினார். அதேபோல, ஒரு நல்ல ஒப்பந்தம் என்றால் "அணு ஆயுதங்கள் இல்லை, ஏவுகணைகள் இல்லை" என்று பொருள் என டிரம்ப் 'ஃபாக்ஸ் பிசினஸ்' நிறுவனத்திடம் கூறினார். பட மூலாதாரம்,Iranian Presidency/WANA/Handout via REUTERS படக்குறிப்பு,இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், "அதிகப்படியான கோரிக்கைகளுக்கு அடிபணிய மாட்டோம்" என்று எச்சரித்தார். இரானின் நிலைப்பாடு புதனன்று தெஹ்ரானில் இரானின் இஸ்லாமியப் புரட்சியின் 47-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் பேரணியில் பெசெஷ்கியன் ஆற்றிய உரையில், "எங்கள் இரான் ஆக்கிரமிப்புக்கு முன்னால் பணியாது, ஆனால் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிம்மதியை நிலைநாட்ட அண்டை நாடுகளுடன் முழு பலத்துடன் உரையாடலைத் தொடர்கிறோம்" எனக் கூறினார். தனது நாடு "அணு ஆயுதங்களைப் பெற முயலவில்லை" என்பதையும் இரான் அதிபர் மீண்டும் வலியுறுத்தினார். "இதை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம் மற்றும் எந்தவொரு சரிபார்ப்புக்கும் தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார். அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், இரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் உரிமையை தங்கள் நாடு கொண்டுள்ளது என்று இஸ்ரேலிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். டிரம்புடனான உறவை பயன்படுத்துவாரா நெதன்யாகு? இஸ்ரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்புக் கவலைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான ஒரு பரந்த அமெரிக்க-இரான் ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கு, டிரம்புடனான தனது உறவைப் பயன்படுத்துமாறு தனது அரசாங்கத்தில் உள்ள தீவிர வலதுசாரி கூட்டாளிகளின் அழுத்தத்தில் நெதன்யாகு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். "இரான் உடனான ஓர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான அவசரத்தில், இரானின் ஏவுகணைத் திட்டம் அல்லது சில குழுக்களுக்கான அதன் ஆதரவு அல்லது அதன் அணுசக்தி திட்டத்தின் சில பகுதிகளை தக்கவைத்துக்கொள்ளும் வகையிலான ஓர் ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ஏற்றுக்கொள்வார் என்று இஸ்ரேல் கவலைப்படுகிறது," என்று ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு சேவைப் பள்ளியின் பேராசிரியர் டேனியல் பைமன் கூறினார். "டிரம்பின் அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட முடிவை விட ஒரு ஒப்பந்தத்தையே அதிகம் விரும்புகிறது என்பது இஸ்ரேலின் கவலையாக உள்ளது" என பைமன் கூறுகிறார். கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய 12 நாள் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, இரான் தலைவர்கள் இப்போது பலவீனமான நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்போது இரானிய அணுசக்தி மற்றும் ராணுவ தளங்கள் குண்டுவீசித் தகர்க்கப்பட்டன. "இரான் ஆட்சி இன்று உண்மையிலேயே பலவீனமாக உள்ளது," என்று கடற்படை முதுகலை பள்ளியின் பேராசிரியரும் மத்திய கிழக்கு அரசியல் நிபுணருமான முகமது ஹபீஸ் கூறுகிறார். "அமெரிக்காவும் இஸ்ரேலும் அனைத்தும் தங்களுக்கு சாதகமாக இருப்பதாக உணர்கிறார்கள். இரான் பின்தங்கிய நிலையில் உள்ளது, அவர்களால் இந்த அதிகபட்ச கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்." என்று ஹபீஸ் கூறுகிறார். பெரிய மோதலை டிரம்ப் விரும்புவாரா? டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் இரான் உடனான ஒபாமா காலத்து அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் மற்றும் இரானின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த தடைகளை மீண்டும் அமல்படுத்தினார். இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையிலான போருக்கு முன்னதாக ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்காக கடந்த ஆண்டு நிர்வாகம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியது. சமீபத்திய வாரங்களில் கடுமையான உரையாடல்கள் இருந்தபோதிலும், இரு நாடுகளால் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்ட முடியாவிட்டால் கூட, இரானுடன் ஒரு நேரடி ராணுவ மோதலைத் தவிர்க்க டிரம்ப் விரும்பலாம் என்று முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். "தேர்தல் ஆண்டிற்குள் நுழையும் போது இரானுடன் ஒரு பெரிய ராணுவ மோதலை டிரம்ப் விரும்புவார் என்று நான் நினைக்கவில்லை. இரான் மக்களுக்கும் அது தெரியும் என்று நான் நினைக்கிறேன்" என்று இராக் மற்றும் துருக்கிக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஜேம்ஸ் ஜெஃப்ரி கூறினார். அடுத்த கட்டத்தில் காஸா ஒப்பந்தம் காஸாவில் தங்களது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தை அமல்படுத்துமாறு டிரம்ப் நிர்வாகம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸை வலியுறுத்தி வரும் வேளையில் இந்த பயணமும் அமைந்துள்ளது. புதனன்று, டிரம்பின் 'அமைதி வாரியத்தின்' (Board of Peace) உறுப்பினராக கையெழுத்திடுவதற்காக நெதன்யாகு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், "வரலாற்றில் அதிபர் டிரம்ப்பை விடச் சிறந்த நண்பர் இஸ்ரேலுக்கு இருந்ததில்லை" என்றார். "அதிபர் டிரம்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க காஸா அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், மத்திய கிழக்கில் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தவும் எங்களது கூட்டாளியான இஸ்ரேலுடன் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்," என்று செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி கூறினார். இஸ்ரேலுக்குள் 7 அக்டோபர் 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலால் தொடங்கிய இரண்டு ஆண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு வர, கடந்த அக்டோபரில் இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. அந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் 71,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தின் முதல் கட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து இஸ்ரேலும் ஹமாஸும் ஒருவரையொருவர் அடிக்கடி போர்நிறுத்த மீறல்கள் செய்ததாகக் குற்றம் சாட்டி வருகின்றன. ஹமாஸ் ஆயுதங்களை கைவிட வேண்டும், காஸாவிலிருந்து இஸ்ரேலிய ராணுவப் படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுதல் மற்றும் கடலோரப் பகுதியின் புனரமைப்பு ஆகியவற்றைக் கோரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்திற்கு நகர்வதில் இரு தரப்பினரும் அதிக முன்னேற்றம் அடையவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn87gvm42eyo
  17. கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: சேவைகள் இடைநிறுத்தம்! Feb 12, 2026 - 01:04 PM கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கணினி அமைப்பு மீண்டும் வழமைக்குத் திரும்பியவுடன் இந்தச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர். தற்போது கணினி அமைப்பை மீண்டும் சீர்செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmlj576880005356nzo74yx4g
  18. நேபால் ப‌டு தோல்வி அடைய‌ போகுது நேபால் அணி இர‌ண்டிலும் சுத‌ப்ப‌ல் ப‌ந்து வீச்சில் அதிக‌ சுத‌ப்ப‌ல்.....................
  19. நேபாளம் 123 ஓட்டங்களுக்கு சகலவிக்கேற்றுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது.
  20. நேபால் தோக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு....................
  21. மெட்டா வோ அல்லது வேறு எந்த நிறுவனமோ இப்படி சொல்வதத்திற்கு அருகதையற்றவர்கள். ஏனெனில் , சீன பீறுவனமான ஹுவாவேயை அமெரிக்கா அரசு கான் அசுரர் வளர்ச்சி காரணாமாக, அமெரிக்க நிறுவணங்களுக்கு போட்டியை அகற்றுவதத்திற்கு அழிக்க , முடக்க முனைந்தபோது எதிர்ப்பு காட்டாமல், ஆமோதித்த அமெரிக்கா நிருணங்கள்.
  22. வாகனம் ஒழுங்காகவே நிறுத்தப்பட்டிருக்கிறது. வாகனம் நிறுத்தப்பட்டபின் துப்பாக்கிச்சூடு நடந்ததா என்கிற சந்தேகமும் எழுகிறது. வாகனம் நிறுத்தாமல் சென்றிருந்தால் வாகனத்தின் சில்லுகளுக்கு சூடு நடத்தி வாகனத்தை நிறுத்தியிருக்கலாம். ஆனால் சாரதியை இலக்கு வைத்து வேண்டுமென்றே சூடு நடத்தியிருக்கிறார்கள். துருப்பிடித்த வாள், மற்றொன்று பிடியற்ற கத்திபோல் தெரிகிறது, அதுவும் கதவுக்கருகில் சாதாரணமாக கிடக்கிறது. மரணத்தை ஏற்படுத்தி அதன்பின் சான்றுகளை சோடித்துள்ளனர். குறிப்பிட்ட பொலிஸாருக்கு போதைப்பொருள் பரிசோதனை நடத்தியிருக்க வேண்டும். கொல்லப்பட்டவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகவும், உடன் சென்ற மற்றுமொருவர் போதைப்பொருள் பரிசோதனையில் உட்கொண்டிருப்பது பரிசோதனையில் வெளிவந்ததாகவும், குறிப்பிட்டளவு போதைப்பொருளை வாகனத்திலிருந்து கைப்பற்றியதாகவும் போலீசார் முதலில் அறிவித்திருந்தனர், பின்னர் வேறு விதமாக சோடித்துள்ளனர். எதற்காக இத்தனை குழப்பமான வெளிப்படுத்தல்கள்? தங்களுக்கு வேண்டுமென்றால் போலீசார் மாத்தையா சலாம் போடுவார்கள், எது வேண்டுமானாலும் செய்யலாம் போலீசார் கண்டுகொள்ளவே மாட்டார்கள். எப்போ வரவு குறைகிறதோ அப்போ இல்லாத குற்றத்தை சுமத்தி சுடுவார்கள். போலீஸ், இராணுவம் பாம்பு போன்றவர்கள் பாலாய் வார்த்து தேனாய் ஊற்றினாலும் ஒருநாள் துப்பாக்கியை அவர்களுக்கு எதிராக உயர்த்துவார்கள்.
  23. இவரும் ஒரு தோற்றுப்போன ஜனாதிபதியே. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம். எல்லோரும் அனுராவுக்கு பாடம் எடுக்கிறார்கள், ஆனால் அவர்கள் யாரும் அரசியலில் சித்தியடைந்தவர்களல்லர். அப்படியாயின் அனுராவின் கையில் ஜானாதிபதி பதவி சென்றிருக்க வாய்ப்பேயில்லை.
  24. தாங்களே கும்பலாக செய்தி என்ற பெயரில் உருட்டுகளும் செய்தி திரிப்புகளையும் தங்களுக்கு விருப்பமான் தலைப்புகளை இட்டு யுரூப், ரிக்ரொக், ஃபேஸ் புக் என்று சமூக ஊடகங்களில் பதிவேற்றுவது. பின்னர் அதையே கொண்டுவந்து ஆதாரம் என்பது. இப்பவ்வும் அந்தப் பழைய நினைப்பில். 😂
  25. பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் கைது February 12, 2026 11:53 am பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் நகரில் 19 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் 21 வயது இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாம்ப்ஷயர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாம் திகதி சவுத்தாம்ப்டன் நகர மையத்தின் பாலிகான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இந்தக் குற்றம் குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைந்து செயல்பட்ட ஹாம்ப்ஷயர் பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் வியான் சுரேந்திரநாதன் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் வகுப்பு ‘ஏ’ போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாலியல் செயல்பாடுகளுக்காக ஒருவரை முடக்கவோ அல்லது மயக்கமடையச் செய்யவோ இந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸ் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது பொலிஸ் பாதுகாப்பு மற்றும் உதவியின் கீழ் இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த இளம் சந்தேக நபர் சவுத்தாம்ப்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹாம்ப்ஷயர் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். https://oruvan.com/sri-lankan-tamil-youth-arrested-in-britain-on-sexual-abuse-charges/
  26. 105 ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் இல‌ங்கை அணி வெற்றி....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.